தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தார் அடுத்த முதல்வர் அன்புமணி-காடுவெட்டி குரு

திமுகவிலும், அதிமுகவிலும் ஒரு வன்னியர் கூட இருக்கக் கூடாது. அத்தனை பேரும் அங்கிருந்து விலகிட வேண்டும். அனைத்து வன்னியர்களும் பாமகவுக்கே வாக்களித்தால் அடுத்தமுதல்வர் அன்புமணிதான் என்பதில் சந்தேகம் இல்லை என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அழைப்பு விடுத்துள்ளார்.

சீர்காழியை அடுத்த பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மனைவியார் சரஸ்வதி அம்மாள் தலைமையில் நடந்தது. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, வன்னிய சங்க தலைவர் குரு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, பசுமை தாயகம் தலைவரும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காடுவெட்டி குரு பேசுகையில்,

தமிழகத்திலேயே மிகப்பெரிய ஜாதி வன்னிய ஜாதி. ஆனால் இன்று ஒடுக்கபட்டு அரசியல் கட்சியிடம் கையேந்தும் நிலை உள்ளது. 2 கோடி வன்னியர்கள் ராமதாஸ் தலைமையில் அணி திரள வேண்டும்.

1952ல் இருந்து நம் வன்னிய மக்களுக்கு கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அனைவரும் சாதி சங்கம் வைக்கும்போது வன்னியர் சங்கம் வைத்தால் தப்பா? எனவே எந்த வன்னியனும் தி.மு.க., அ.தி.மு.க. என எந்த கட்சியிலும் இருக்கக் கூடாது.

வன்னியர் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு என்று முடிவு எடுத்தால் அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றார் குரு.

பதிவு செய்தவர்: பாண்டியன்
பதிவு செய்தது: 19 Jul 2010 8:51 pm
அன்பு தமிழ் மக்களே நன்கு சிந்திப்போம் .நம் இந்திய தமிழ் மக்களை ஒரு அயல் நாடு 500 பேருக்கு மேல் சுட்டு கொன்று விட்டான் இந்திய தமிழன் கோடிகணக்கான சொத்து சேத படுதபடுள்ளது.தேசத்தின் மீதும் தேச மக்கள் மீதும் மிகுந்த அன்பு பாசம் நேசம் உள்ளவன் தான் .நீ என் இந்திய தமிழ் மக்களை கொன்றால் நான் உன் நாடு காரனை கொள்வேன் என்று கூறுவது தேசத்தின் பாதுகாவலர் மக்கள் ரட்சகன் கூறுவது .அப்படி கூறியவனுக்கு தேசிய பாதுகப்பு சட்டம் ஒரு ஆண்டு சிறை சிந்தி .தேச மக்கள் சாவதை தடுக்காமல் வேடிக்கை பார்பவருக்கு தங்க கிரீடம்

பதிவு செய்தவர்: இறை அடிமை
பதிவு செய்தது: 19 Jul 2010 8:50 pm
அங்கும் இங்கும் குடும்பம் ஒன்றே எங்கள் குடும்பம் மரம் வெட்டுவோம் ரோட்டில் போடுவோம் வாகனம் எரிப்போம் அதனால் சின்ன ஐயாவே முதல்வரகிடுங்க -காடு(மரம்) வெட்டி

பதிவு செய்தவர்: சாமி
பதிவு செய்தது: 19 Jul 2010 8:41 pm
நானும் ஒரு வன்னியன் தான் ஆனால் இவன CM ஆக்கினா இவன் பொண்டாடிட்டி உள்துறை மந்திரி ஆயிடுவாள் குரு அவளுக்கு காலு கழுவுவான் ஏண்டா......தமிழ் நாடு என்ன உங்கப்பன்வீட்டு சொத்தா?

பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 19 Jul 2010 8:03 pm
ஜாதி சங்கம் வச்ச தப்பான்னு கேட்கறீங்க. ஆனா ஏன் பாட்டாளி மக்கள் கட்சின்னு போய் சொல்றீங்க. வன்னியர் கட்சின்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே. மற்ற கட்சிக்காரன் யாரும் ஒட்டுபோடமாட்டான்.

பதிவு செய்தவர்: ஜாதி வெறியன்
பதிவு செய்தது: 19 Jul 2010 7:25 pm
தமிழ்நாடு மக்கள் ஒன்று இனைந்தல் நீங்க எல்லாம் "deadbody".

பதிவு செய்தவர்: கடலூர்
பதிவு செய்தது: 19 Jul 2010 7:20 pm
வன்னியர்கள் முதலில் உங்களை நம்புகிறார்களா என்று உறுதி செய்து விட்டு இது போன்ற சவாலெல்லாம் விடுங்கள். மரம் வெட்டி ராமதாசை விட காட்டையே வெட்டும் குருவை நம்பி எத்தனை வன்னியர்கள் வரப்போகிறார்கள் என்பதாவது தெரியுமா? இப்படி மாற்றி மாற்றி சொறிந்து விட்டுக்கொண்டிருந்தால் பாமக நிறுவனர் பாமக வை நிறுவனமாக மாற்றிவிடுவார். குருவை அதில் ஜி எம்மாக வைப்பார் அதில் சந்தேகம் இல்லை.

பதிவு செய்தவர்: மனோரமா
பதிவு செய்தது: 19 Jul 2010 7:15 pm
உங்க மருத்துவர் மீசை வைச்ச ஆம்புளையா, இருந்தா நெஞ்சுல மஞ்சா சோறு இருக்குற ஆம்புளையா இருந்தா, எந்த கட்சியோடும் கூட்டடணி வைக்காமல் தேர்தலில் போட்டி போடுற தைரியம் இருந்தா, தனியா நிக்க சொல்லு. மச்சான் கீழ விழுந்தா, மீசையில மட்டும் மண் ஒட்டாது., உடம்பு பூராவும் ஓட்டும். அந்த முக்குல உட்கார்ந்து பிச்சை எடுக்குற நாய் என்ன பேச்சு பேசுது. பல்லை நல்லா விளக்கிட்டு உட்கார்ந்துக்கோ.

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 19 Jul 2010 7:09 pm
வன்னியர் சங்கம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, அதனைப் பாட்டாளிமக்கள் கட்சி என்றாக்கி, இப்போது குரங்கு கணக்காக, மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு, இரு கழகங்களிடமும் கையேந்திக் கொண்டிருப்பது, ஒட்டுமொத்த வன்னிய சமுதாயமே மற்ற கட்சிகளிடம் கைஎந்துவதாகக் கூறுவது, வன்னிய மக்கள் அனைவரையுமே அவமதிப்பதற்கு ஒப்பானது. அன்புமணி முதல்வரானால், மருத்துவருக்கு சவுக்கடி கொடுக்க பலரும் தயாராவர் என்பது உண்மை.

பதிவு செய்தவர்: பொது மக்கள்
பதிவு செய்தது: 19 Jul 2010 7:00 pm
அப்போ நீ ஜாதி கட்சித்தலைவன் என்கிற பட்ச்சத்தில், உனக்கு வெற்றி கிடைத்தால், மற்ற ஜாதியினரின் வாழ்வு என்னவாகும், முதலில் பொதுவாழ்க்கை அல்லது அரசியலுக்கு வந்தால் ஜாதி பற்றி பேசக்கூடாது, இந்த அடிப்படையே இன்னும் உனக்கு தெரியவும் இல்லை புரியவும் இல்லை, திரும்ப மரம் வெட்டியே உன் மீதி வாழ்க்கையை கழிக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 19 Jul 2010 5:52 pm
அண்ணே கவலையே படாதிங்க !..நமக்கு தமிழ் நாடெல்லாம் சரிபட்டு வராது ! பெருசா எதாவது யோசிங்க ? PM அகனுமின்னு யோசித்தான் தமிழ் நாட்டில CM மாவது ஆகமுடியும் . எடுத்த உடனே cm levalukku யோசிச்சா ? நமது சிந்தனை எல்லாம் உயரனும் ! இன்னும் சொல்ல போனால் நம்ம சாதி நனைச்ச ஒபாமா வ விரட்டி விட்டுட்டு அய்யா வ அமெரிகாவின் ஜனாதிபதி யா ஆக்கிடலாம் .சும்மா எத்தன நாளைக்குதான் தமிழ் நாட்டையே கட்டிக்கிட்டு பொழுத ஓட்டுறது ... எல்ல தொலை நோக்கு பார்வையோட செயல்படவேண்டும் ok.......o..k


பதிவு செய்தவர்: மனிதம்
பதிவு செய்தது: 19 Jul 2010 5:41 pm
ஜாதியை வைத்து அரசியல் செய்யும் இந்த தரம் கேட்ட மனிதர்களை என்னவென்று சொல்வது. இவர்களை ஆட்சியில் உட்க்கார வைத்தால் நிச்சயம் இவர்களின் ஜாதிக்கு மட்டுமே அனைத்திலும் முன்னுரிமை கொடுப்பார்கள். இவனை போட்ரு ஜாதியை வைத்து பிச்சை எடுப்பவனை நாடு வீதியில் கொளுத்த வேண்டும்.

பதிவு செய்தவர்: ப்ரியா
பதிவு செய்தது: 19 Jul 2010 5:22 pm
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று அன்றே தேசிய கவி பாரதியார் எழுதி வைத்து விட்டு போய் விட்டார். ஆனால் இவர்கள் என்ன???????? எப்பதான் திருந்துவீர்கள்? தமிழ் நாட்டில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் தற்பொழுது; ஜாதி, மதம் நியூஸ் இனி மீடியாக்களில் போட கூடாது. ஜாதி பற்றி பேசினால் தண்டன கொடுக்க வேண்டும். மதம் அது அவர் அவர் சொந்த விடயம்; ஆத்மா திருப்திக்காக; நாம் நமக்குள்ளே கடவுளுக்கும் நமக்கும் மட்டும் தான் இருக்க வேண்டும். இதற்க்கு விளம்பரம் தேவ இல்லை.

பதிவு செய்தவர்: குமரன்
பதிவு செய்தது: 19 Jul 2010 5:20 pm
அடுத்து கவுண்டர்,ஐயர்,செட்டியார்,முதலியார்,மற்றும் அனைத்து பிரிவினரும் பிரிந்து வந்து அவரவர் சாதிக்காரர்களை முதல்வர் ஆக்குங்கள், எல்லோருமே முதல்வர் ஆகிவிடலாம்

பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 19 Jul 2010 5:13 pm
ஏன் பிரதமர் ஆகா கூட வரலாம். ஏன் அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகலாம். போடா வெண்ணை. அய்யாவை முதலில் உருபடிய ஒரு கட்சியில் இருக்க சொல்லு

பதிவு செய்தவர்: S R Ganth
பதிவு செய்தது: 19 Jul 2010 5:09 pm
இப்படி பிரிஞ்சு இருந்துதான் ஒரு கூட்டமே ஈழத்தில் அழிந்தது. குரு, காட்டை வெட்டியது போதும் தமிழினத்தை வெட்டாதே.