மரணதண்டனையை ஒழித்திடு .
ஊமை விழிகளை பொசுக்கியவளுக்கு வீர வணக்கம் (பகலவன் கவிதை)
மரணதண்டனையை ஒழித்திடு .
இனியும் என்ன செய்ய போகிறோம் ! – பகலவன் கவிதை
என் கோழை தமிழினமே!
சக தமிழன் மாண்டதை
வேடிக்கை பார்த்த இனமாகி போனோம் !
பிரித்தானிய ஒற்றுமையையும்
தமிழ்நாட்டில் சாகடித்த இனமாகி போனோம்!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
ஓட்டு பொறுக்கிகளின்
காலிலும் விழுந்து விட்டோம்!
ஊழல் மன்னர்களின்
ஆட்சியையும் கண்டு விட்டோம் !
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
இருந்த கொஞ்சம் மொழி உணர்வும்
சொரணை அற்று போனது!
பிறந்த குழந்தையும் ஆங்கிலத்தின்
சுவை கண்டு விட்டது!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
வஞ்சகம் தலைவிரித்தாட
நஞ்சையும் புஞ்சையும் காய்ந்தாட
ஓட்டு பொறுக்கிகள்
தமிழனின் உணர்வையும் உடமைகளயும் சூறையாட
இனியும் மிஞ்சி இருப்பது
உணர்வாளன் என்னும் கோமணம் மட்டுமே!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
பாலாற்றில் மணலும் இல்லை,
தட்டி கேட்க நாதியும் இல்லை,
முல்லை பெரியாற்றில் மானமும் இல்லை,
தட்டி கேட்க சொரணையும் இல்லை!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
பிஞ்சுகளின் இதயத்தை அமில குண்டுகள் சூறையாட
வஞ்சகங்கள் நம் இனத்தை கிழித்து பார்த்து விட்டது!
இலவசங்கள் நம் கண்ணை மறைத்தது
ஊமை விழிகளும் கண் கலங்க மறுத்தது
தமிழக மினவன் குருதியை
பரிசாக கொடுக்கிறது இல்லாத இறையாண்மை!
இனியும் என்ன செய்ய போகிறோம்
என் கோழை தமிழினமே!
இன்னுமா புரியவில்லை
புலியாய் வாழ்ந்த தமிழனமே!
இதோ தமிழனுக்கான இன்னொரு வாய்ப்பு!
இணைந்தெழு புதிதாய் பிறந்தெழு!
பகைவனை ஓங்கி அடிக்க உயர்வாய் எழு,
வஞ்சகனை அரசியல் சாட்டையால் அடிக்க விழித்தெழு!
இனமாய் எழு,இனத்தின் ஒற்றுமையே உறுதி என எழு!
தமிழனின் குருதியில் பங்கு போட்டவன்
வோட்டு கேட்க வருவான் .
பணிவாய் பேசாதே புயலாய் பாய்ந்தெழு!
சிறுத்தையாய் எழு சீண்டி பார்த்தவனை சிதைக்க எழு!
வீரமாய் எழு,விவேகம் கொண்டவனாய் எழு!
தனமானமாய் எழு, தன இனத்தின் மானமே பெரிது என எழு!
தமிழின விரோதியின் மணிமகுடத்தை
பிடுங்கி எரிய புலியாய் எழு !
இன விரோதியை துண்டாட எழு !
இனமும் மொழியும் உயிர் என பொங்கிஎழு!
என்றும் நமக்கான நாடு உண்டு என்று சிலிர்த்தெழு !
கோழையாய் இருந்து
அடிமையாய் வாழ்ந்தது போதும்!
ஒற்றுமையாய் இருந்து
அடிமை சங்கலியை உடைத்தெறிவோம்!
அண்ணன் முத்துகுமாருக்கு என வீரவணக்கத்தை தெருவித்து கொண்டு
விடைபெறுகிறேன்……….
நன்றியுடன்
பகலவன்
வீரம் விளைந்த மண்ணில் - மாவீரர் நாள் கவிதை - பகலவன்
வீரம் விளைந்த மண்ணில் - மாவீரர் நாள் கவிதை - பகலவன்
வீரம் விளைந்த மண்ணில்
விதையாகி போனவர்களின் சரித்திரத்தை
ஒரு நிமிடம் மரியாதையை செலுத்த வந்திருக்கும்
நாளைய விழுதுகளுக்கு எனது வணக்கம்!
அண்டை நாட்டு அகதிகளாயினும்
எம்நாட்டு வீரத்தை பாருக்கு
உரக்க சொல்பவர்கள் நாம்,
வீழ்ந்தது ஆலமரம் ,நொறுங்கியது அதன் வேர்!
என கூறும் அனைவருக்கும் உரக்க சொல்வோம்!
அங்கே நடபட்டிருப்பது பல ஆயிரம் விழுதுகள் என!
எமக்கும் உரிமை உண்டு என கூறும்
நம் நாக்கை அவன் அறுப்பாயின்
உனக்கு உரிமையே இல்லை என
அவன் நாக்கை நாம் அறுப்போம் !
எத்தனை எத்தனை தியாகம்
எம் இன சரித்திரத்தில் !
தோழர்களே நாம் மண்ணாகி போகவில்லை!
நாளைய சரித்திரம் ஆக போகிறோம்!
ஜாதி ,மதம் என் கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம்!
தமிழனின் குருதியில் கலந்து போன கட்சியையும்
கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம் !
ஒரு இனத்தின் விடியலை
பல தியகங்களோடு தொடங்கி உள்ளோம்!
சூதும் வாதும் எம் இனத்தை சுழ்ந்திருக்கலாம்
பகைமையும் முள்வேலியும் எம் மக்களை சுழந்திருக்கலாம்
எவை எவை யாயினும் நமக்கு பயம் கூடாது!
மூன்று லட்சம் சிங்களவனை
வெறும் நாற்ப்பதாயிரம் போராளிகளோடு
கட்டி ஆண்டவர்கள்தான் நாம் !
தமிழ் நாட்டு கவிஞன் கொஞ்சம்
சன்மானத்துக்கு அடிமை பட்டவன் தான் !
இதற்கு ஒன்றும் நான் விதி விலக்கல்ல!
என்றாலும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!
எம் இனத்தை அழிக்க தந்தி அடித்தவனின்
தலைக்கு உங்கள் கவிதை மகுடத்தை சூட்டாதிர்கள்!
நம் இனத்தின் வீரத்தை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த
மாவிரர்களுக்கு அந்த மகுடத்தை சூட்டுங்கள்!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
வாழ நினைப்பவன் என் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் என் மீதி தமிழன்
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடுகிறது!
உலக தமிழினமே விழித்து கொள்
நாம் பிரிவினைவாதிகள் இல்லை!
நமக்கான உரிமைகளை பெற நினைப்பவர்கள்!
நமக்கான பூமியை பெற நினைப்பவர்கள்
கழனிகளையும் நிலபுலன்களையும் எங்கோ விட்டு விட்டு
ஓடித்திரிகிறார்கள் அகதியாய்!
உன் சக தமிழன் அடிமை என்றால்
நாம் என்ன எஜமானிகளா!
என் வீரமிக்க இனமே இவ்வுலகத்தை
அசைத்து பார்க்க விரும்புவர்கள் இல்லை நாம்!
நாம் பிறந்து வளர்ந்த மண்ணில் உறவுகளோடு
ஆசையாய் பழகி வாழ விரும்புவர்கள் நாம்!
எம் மாவிரர்களே எமக்காக போர்வாளை
தூக்கியவர்கள் நீங்கள்
எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்
எம்மை கட்டுபடுத்த நினைத்தாலும்
பாடம் புகட்டியவ்ர்கள் நீங்கள்!
பயமும் தயக்கமும் இன்றி பயணிக்கிறோம்
எம் இனத்தின் விடியலை நோக்கி
நீங்கள் காட்டிய பாதையில்
வீரமும் தியாகமும் மிக்க பூமியை மீட்டெடுப்போம்!
உங்கள் தியாகம் அளவற்றது
உங்கள் வீரம் பெரு மதிப்பு மிக்கது
தமிழன் தன்மானத்தோடு வாழ
கற்று கொடுத்தவர்கள் நீங்கள்!
பயணிக்கிறோம் எம் இனத்தின் விடியலை எடுத்துரைக்க !
பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !
பொருத்து போதும் தமிழா !
வீழ்ந்தாலும் மாய்ந்தாலும்
எம் பூமியை நாம் இழக்க மாட்டோம்
இம் மாவீரர்களின் தியாகம் நமக்கு துணை நிற்கும்!
வஞ்சகம் நம்மை கண்டு பயம் கொள்ளட்டும்!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
எம் இனத்தை கட்டி எழுப்பிய
எம் தலைவனுக்கும் மாவீரர்களுக்கும்
தலை வணங்கி விடை பெறுகிறான் இந்த பகலவன்......
நன்றி
வணக்கம்
பகலவன்
வீரத்தமிழனே இருந்தது போதும் மடத்தமிழனாய்!
தமிழ் வாழ்கிறதாம் - பகலவன் கவிதை.
தமிழ் நாடு அழிய...
இவன் வாழ்கிறான்
மாநாடு நடத்துகிறானாம்
தமிழை அழிக்க....
கொடநாடு போகிறாளாம்
கன்னடத்து அம்மா.
இனம் அழிய பார்த்தோம்
அரசியல் நாடகத்தை...
தன்மானம் ஒழிய பார்க்கிறோம்
மானாட மயிலாட .
மாநாடு வேண்டுமாம்
செம்மொழி தமிழ் வாழ...
திராவிடம் வேண்டுமாம்
இவன் பரம்பரை வாழ.
பாரத ரத்னா வேண்டுமாம்
இவன் துரோகங்கள்வாழ...
இலவசம், மயக்கம்கொடுப்பானாம்,
தமிழன் சோம்பேறியாய்வாழ.
தமிழைத்தேடுகிறேன்
செம்மொழி- தமிழைத் தேடுகிறேன்!
தமிழனைத்தேடுகிறேன்,
தன்மானத்தமிழனைத் தேடுகிறேன்,
கட்சிக்குச் சொந்தக்காரன்
பாதித்தமிழன் !
சாதிக்குச்சொந்தக்காரன்
மீதித்தமிழன்.
அகர முதல எழுத்தெல்லாம்
தமிழனின் வாழ்வேடு ;
அதைப் புரிந்துகொள்ளாதவரை
நீதான் தமிழனே ! தமிழுக்குச்சாபக்கேடு.
தமிழனின் துரோகத்தின்
பட்டியல் நீண்டுபோக...
தமிழனின் வீரத்தின்பட்டியல்
குருடாகிப்போனது.
தமிழ் வாழ்கிறதாம்
முல்லையில் அரசியல்விளையாட !
தமிழ் நடனம்ஆடுகிறதாம்
“டாஸ்மாக்”கில் குடிகாரத்தமிழன்ஆட.
தமிழ் வாழ்கிறதாம்,
பாலாற்றில் தெலுங்கன் மணலைஅள்ள !
தமிழினம் ஒளிர்கிறதாம்,
தமிழன் அகதியாய் உலகம் திரிய.
வந்தாரை வாழவைத்தானாம்,
வந்தவனெல்லாம் ஏறிமிதிக்க !
இந்தியஅன்னையை வாழ்த்துகிறானாம்,
தமிழகமீனவனை ஏறிநசுக்க.
ஆம்! எங்கும் தமிழ்நாடுவாழ்கிறது,
தமிழ் அழிய ....
இவன் வாழ்கிறான்,
தமிழினம் அழிய !!!
....பகலவன்....
யாதுமானவள்

மழலை கை பிரியா தங்கையாய்,
அன்பை சுமந்த தோழியாய்,
மரணத்தின் வாசல் வரை மனைவியாய்,
இன்னும் எத்தனை எத்தனை முகங்கள்,
அனைவரின் இல்லத்திலும்
அன்பின் உறவாய் அம்மா,
எல்லோருக்கும் கிடைக்காத
பிஞ்சு விரல் உறவாய் தங்கை,
அனைவரின் வாழ்விலும்
நட்பின் உறவாய் தோழி,
வாழ்வின் விளும்பு வரை
மகிழ்ச்சியின் உறவாய் மனைவி,
மாதராய் பிறப்பதற்கே நல்ல மகத்துவம்
புரிதல் வேண்டும் என்ற
ஒரு மொழியை கூறிய கவிஞ்சனின்
வரிகளுக்கு உறவாய் பெண்ணியம்..
நீ பிறந்த பின் குடி கொள்வதோ
குப்பை தொட்டி எனலாம்,
உன் பெண்ணியம் தொட்டது
என்னவோ விண்ணை எனலாம்!
வேலைக்கு போகும் அவசரத்திலும்
ஒற்றை ரோசாவை பறித்து
படக்கென்று தலையில் சூடி செல்வாளே அம்மா!
புளிய மரக்கிளையில் கிளிஞ்சல்கள் ஆட
சுள்ளிகள் பொறுக்குவாளே தங்கை,
மார்கழி மாத குளிரில் பளிச்சென்ற முகம்கொண்டு
கோலத்தை செதுக்குவாளே எதிர்வீட்டு பெண்!
தான் கருவுற்றதை முதலில்
உற்றவனிடம் சொல்வதா!இல்லை
மாமியாரிடம் சொல்வதா என
சிக்கித் தவிப்பாளே மருமகள்!
தெரு முனையில் சின்னஞ்சிறு
மழலைகளுடன் பாவாடை சொருகி
பாண்டி ஆடுவளே முறைப்பெண்!
விடியற்காலை எழுந்து தலை குளித்து
ஈர கூந்தலை துண்டுடன் சுற்றி
கணவனிடம் நேரமாயிற்று
எழுந்துருங்கள் என்பாளே மனைவி,
இத்தனை உணர்வுகளுக்கும்
உறவாய் பெண்ணியம்,
புன்னைகையோடு அழுதாலும்
போலியாய் அழுதாலும்
வலியோடு அழுதாலும்
குழாய் திறந்த மாதிரி
கண்ணீர் வடிப்பாளே
அப்பொழுதும் பெண்ணியம்,
கருவை உயிராக ஈன்றெடுக்க
மரணத்தின் வாசல் வரை சென்று
வெளியேறும் உதிரம் படிந்த சிசுவை
பார்த்து பெருமூச்சி விடுவாளே
அப்பொழுதும் பெண்ணியம் !
இன்னும் எத்தனை எத்தனை
இடங்களில் பெண்ணியம் தெரிந்தாலும்
அதன் உலக அழகு என்னவோ ஒரு தருணம்தான்!
தலை முடி நரைக்க
ஊன்று கோலுடன்
அன்பாய் சிரிக்கையில் கிழவி ஆனாலும்
உலகி அழகியாக தெரிவளே பாட்டி!
பெண்ணியத்தை வாழ்த்த
வார்த்தை வரவில்லை!
மகளிர்தின மார்ச் 8 க்கு
இன்னும் விடியலும் வரவில்லை!
பெண்ணியத்தை போதையாய்
சித்தரிக்கும் சினிமா காயவர்களின்
எண்ணங்களுக்கும் புத்தி வரவில்லை!
பெண்ணியத்தை நினைக்கையில்
வார்த்தை வரவில்லை!
வந்தது என்னவோ வலி மட்டுமே!
பெண்ணியத்தை காப்போம்!
பெண்ணியத்தை மதிப்போம்!
பெண்ணியத்தை உயர்த்துவோம்!
மகளிர் தின வாழ்த்துக்களுடன்
பகலவனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
தமிழன் வாழ்ந்த வரலாறு
தரணிக்கெல்லாம் தகராறு;
பொங்கலோ பொங்கல்!
ஆறு போகம் வெளஞ்ச மண்ணில்
வீரமெங்கே போச்சிதோங்க
பொங்கலோ பொங்கல்!
நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது
வயித்து பொழப்பு நடக்கலையே
பொங்கலோ பொங்கல்!
தமிழன் தானே ஆளுறான்
தமிழன் தானே சாகுறான்
கேட்க நாதி ஒண்ணுமில்லே
பொங்கலோ பொங்கல்!
பழைய கந்த கொளுத்தல
பானை கூட வாங்கல
கேஸ் ஸ்டவ்வு நெருப்புல கலாச்சாரம் எரியுதே
பொங்கலோ பொங்கல்!
காலம் மாறி போச்சிடா
விதியை நம்பும் வாழ்க்கைடா
இளைஞனெல்லாம் தூங்குறானே
பொங்கலோ பொங்கல்!
கரும்பு பாக்கெட் பையில
மஞ்ச கொத்து கிடைக்கல
மாடு கழுவி வணங்கலடா
பொங்கலோ பொங்கல்!
ஏறு புடுச்சி உழுவுல
வயல கூட காணல
ஈர வயிறும் காயலடா
பொங்கலோ பொங்கல்!
ஏழை வாழ்வு மாறலை
ஜாதி வெறி ஒழியல
தமிழன் ஓட்டம் நிக்கலடா
பொங்கலோ பொங்கல்!
ஈழ தமிழ் நாட்டுல -
ரத்த ஆறு ஓடுது
ரத்த ஆறு ஓடுது
முள்ளுக் கம்பி மேல தான்
பிள்ளைகுட்டி சாகுது
லிட்டர் பாட்டில் தண்ணில
தமிழன் குடும்பம் குளிக்குது
லச்சம் லச்சம் உயிருடா
போன இடம் தெரியலடா
பொங்கலோ பொங்கல்!
சிங்களந்தான் ஆளுறான்
சீனன் கூட ஆடுறான்
இந்தியாவின் துரோகத்தில
ஈழத் தமிழன் சாகுறான்
மெத்தனமா கும்பிடுவோம்
மொத்தப் பேரும் ஒழிஞ்சிடுவோம்
உலக படம் வரையும் பொது
தமிழனை தான் தேடிடுவோம்
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!!
பகலவன்
என் பேனாவும் உனக்காக கண்ணீர் சிந்தியது...

நினைவுகளுடன்
கண்ணீரோடு
நான் கண் விழித்தேன்
என் பேனாவும்
உனக்காக
கண்ணீர் (இங்க்) சிந்தியது
இந்த கவிதையாக என் பேனாவுக்கும்
தெரிகிறது என் உள் உணர்வுகள்.
எப்போது வேண்டுமானாலும்
எழுந்து போவதற்கான அவகாசத்திற்காய்- நீ
எப்போதும் காத்திருக்கும் ஆசையோடு நான்...
தவிர்த்துவிடக்கூடிய வாய்ப்புகளோடு-நீ
தவித்த நெஞ்சத்தோடு-நான்
நினைவுகளுடன்
நானும் என் பேனாவும்
....பகலவன்....
நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....

முத்தமிட்டால் கூட
வெட்கப்படுகிறாய்...
மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்
நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...
நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை பொறுக்குகிறாய்
என் மனமெல்லாம் வாசனைகள்
சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்
நான் மர நிழலில் ஒதுங்கும்போது
நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்
ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்
அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....
உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்
உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை
சுவாசித்தபடி...
கனவுகள் சுகமானவை-வரும்
எல்லா கனவுகளிலும் நீ
பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்
சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...
....பகலவன்....
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....
என் உயிரில் பாதி உன்னிடமும்
மீதியை உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும் பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருந்தேன்....
நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...
நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...
என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்த்தது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டு இருக்கையில்...
நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....
நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது...







