தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

யாதுமானவள்

http://www.womeninlondon.org.uk/images/globegif.gif



ஈன்றெடுத்த அன்னையாய்,
மழலை கை பிரியா தங்கையாய்,
அன்பை சுமந்த தோழியாய்,
மரணத்தின் வாசல் வரை மனைவியாய்,
இன்னும் எத்தனை எத்தனை முகங்கள்,

அனைவரின் இல்லத்திலும்
அன்பின் உறவாய் அம்மா,

எல்லோருக்கும் கிடைக்காத
பிஞ்சு விரல் உறவாய் தங்கை,

அனைவரின் வாழ்விலும்
நட்பின் உறவாய் தோழி,

வாழ்வின் விளும்பு வரை
மகிழ்ச்சியின் உறவாய் மனைவி,

மாதராய் பிறப்பதற்கே நல்ல மகத்துவம்
புரிதல் வேண்டும் என்ற
ஒரு மொழியை கூறிய கவிஞ்சனின்
வரிகளுக்கு உறவாய் பெண்ணியம்..

நீ பிறந்த பின் குடி கொள்வதோ
குப்பை தொட்டி எனலாம்,
உன் பெண்ணியம் தொட்டது
என்னவோ விண்ணை எனலாம்!

வேலைக்கு போகும் அவசரத்திலும்
ஒற்றை ரோசாவை பறித்து
படக்கென்று தலையில் சூடி செல்வாளே அம்மா!

புளிய மரக்கிளையில் கிளிஞ்சல்கள் ஆட
சுள்ளிகள் பொறுக்குவாளே தங்கை,

மார்கழி மாத குளிரில் பளிச்சென்ற முகம்கொண்டு
கோலத்தை செதுக்குவாளே எதிர்வீட்டு பெண்!

தான் கருவுற்றதை முதலில்
உற்றவனிடம் சொல்வதா!இல்லை
மாமியாரிடம் சொல்வதா என
சிக்கித் தவிப்பாளே மருமகள்!

தெரு முனையில் சின்னஞ்சிறு
மழலைகளுடன் பாவாடை சொருகி
பாண்டி ஆடுவளே முறைப்பெண்!

விடியற்காலை எழுந்து தலை குளித்து
ஈர கூந்தலை துண்டுடன் சுற்றி
கணவனிடம் நேரமாயிற்று
எழுந்துருங்கள் என்பாளே மனைவி,

இத்தனை உணர்வுகளுக்கும்
உறவாய் பெண்ணியம்,

புன்னைகையோடு அழுதாலும்
போலியாய் அழுதாலும்
வலியோடு அழுதாலும்
குழாய் திறந்த மாதிரி
கண்ணீர் வடிப்பாளே
அப்பொழுதும் பெண்ணியம்,

கருவை உயிராக ஈன்றெடுக்க
மரணத்தின் வாசல் வரை சென்று
வெளியேறும் உதிரம் படிந்த சிசுவை
பார்த்து பெருமூச்சி விடுவாளே
அப்பொழுதும் பெண்ணியம் !

இன்னும் எத்தனை எத்தனை
இடங்களில் பெண்ணியம் தெரிந்தாலும்
அதன் உலக அழகு என்னவோ ஒரு தருணம்தான்!

தலை முடி நரைக்க
ஊன்று கோலுடன்
அன்பாய் சிரிக்கையில் கிழவி ஆனாலும்
உலகி அழகியாக தெரிவளே பாட்டி!

பெண்ணியத்தை வாழ்த்த
வார்த்தை வரவில்லை!
மகளிர்தின மார்ச் 8 க்கு
இன்னும் விடியலும் வரவில்லை!
பெண்ணியத்தை போதையாய்
சித்தரிக்கும் சினிமா காயவர்களின்
எண்ணங்களுக்கும் புத்தி வரவில்லை!
பெண்ணியத்தை நினைக்கையில்
வார்த்தை வரவில்லை!
வந்தது என்னவோ வலி மட்டுமே!

பெண்ணியத்தை காப்போம்!
பெண்ணியத்தை மதிப்போம்!
பெண்ணியத்தை உயர்த்துவோம்!

மகளிர் தின வாழ்த்துக்களுடன்
....பகலவன்....