தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மறுபடியும் கருணாநிதியின் சாணக்கியதனமே வெல்லும்

கருணாநிதியின் தொடர் வெற்றி

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்படுவதை பார்த்து தமிழக தமிழர்கள் பொங்கி எழும்போது அதை திட்டமிட்டு திசை திருப்பி தான் ஒரு அரசியல் சாணக்கியன் என்பதை நிருபித்தார் கருணாநிதி.ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படும்போது கூட, இது  தமிழக மக்களுக்கு   ஒரு சிக்கலே(பிரச்சனை) அல்ல என்று கூறி, நாய்க்கு எலும்பு துண்டை போடுவதை போல இலவச திட்டங்கள் அளித்து, தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மக்களின் நாடி துடிப்பை சரியாக அறிந்து வைத்திருந்தார் கருணாநிதி.மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்கும் போதெல்லாம் மனித சங்கிலி போராட்டம்,  உறுபினர்கள் ராஜினாமா.ஒரு நாள் உண்ணாவிரதம் என்று கூறி தினம் ஒரு நாடகம் அரங்கேற்றியவர் கருணாநிதி.   தமிழ்  இனத்தை இத்தாலிக்கு தாரை  வார்த்து கொடுத்து தான் ஒரு இந்தியன் என்று மார் தட்டி கொண்டவர் கருணாநிதி.
 
தமிழ் இனம் அழிந்தது மக்கள் அடிமையாக ஆக்கப்பட்டார்கள். காப்பாற்றுவான் என்று எண்ணிய தலைவனின் கயமை தனத்தை தமிழ் மக்கள்  உணர்ந்தனர். உலக தமிழர்களின் கண்கள் திறந்தது. தமிழர்களின் தலைவன் என்று போற்றி புகழ்ந்த அவர்களது வாயால் கருணாநிதியை தமிழின துரோகி என்று முத்திரை குத்தினர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் அப்போதைக்கு  தோற்றது.இன்று அந்த முத்திரையை கிழிதெறிந்து தன்னை நல்லவன் போல் உலக மக்களுக்கு காட்டி கொள்ள கருணாநிதி கண்டுபிடித்ததுதான் உலக தமிழ் செம்மொழி மாநாடு.  மொழிக்கு உயிர் கொடுப்பது அம மொழியை பேசும் மனிதர்கள் உயிருடன்  வாழும் வரை தமிழனை அழித்துவிட்டு தமிழுக்கு உயிர் கொடுக்க போகிறாராம் கருணாநிதி. தமிழனை அழித்துவிட்டு தமிழை  வாழவைக்க போகிறாராம் கருணாநிதி . இதை    கேட்க ஒரு மந்தை   கூட்டம் உலகம் முழுவதிலும் இருந்து ஒன்று கூட போகிறது தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டு  தமிழனை மறக்க போகிறது.செம்மொழி மாநாட்டில் தமிழுக்கு அழகு சேர்கிறேன் என்று கூறி கருணாநிதி விடும் எழுத்து சீர்மை   அறிக்கையை கண்டு உலக தமிழர்கள், இதுதான் சரி இன்று ஒரு கூட்டமும், இது சரியல்ல என்று ஒரு கூட்டமும், மேடை கட்டி  பேசும். ஈழத்தில் தமிழன் செத்து மடிவதை கண்டும் காணாமல் இருந்த தமிழர்கள்  கூட்டம் , இன்று    தமிழன் இல்லையேல் உயிரற்று போகும் தமிழுக்காக உயிர் போகும் வரை கத்தி கொண்டிருப்பர்.

அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் தமிழின துரோகி கருணாநிதி என்று முத்திரை குத்தியதை மக்கள் மறந்து, தமிழனை கொன்றவன் என்பதையும் மறந்து, மறுபடியும் கருணாநிதியை வெல்ல வைப்பர். தமிழனை கொன்று இன துரோகியானவர் தமிழை கொண்டு தமிழின தலைவராக போகிறார்.மறுபடியும் கருணாநிதியின் சாணக்கியதனமே வெல்லும்

தமிழை சீர்மை படுத்துவதை விட்டு விட்டு தமிழனை சீர்மை  படுத்துவோம்தமிழில் களை எடுப்பதை விட்டு விட்டு தமிழின துரோகிகளை களை எடுப்போம்

                         "நாளைய தமிழினத்தின் எதிகாலம் "நாம் தமிழர்" நம் கையில்"
                        " நாம் தமிழராய் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் தமிழீழத்தை"

 
என் அறிவுக்கு எட்டிய சிற்சில ஆலோசனைகள் இவை .

 
இரு   தமிழனாக             இரு.   இரு  உணர்வுள்ள    தமிழனாக  இரு

இரு   தமிழினத்தை        காக்க  உயிர்   கொடுக்கும்   தமிழனாக  இரு
 
எழு   தமிழின                  துரோகிகளை  அழிக்கும்   நெருப்பாய் எழு.

எழு   தமிழனை               தமிழனாக  மாற்றுவதற்கு  எழு .