தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருணாநிதி பேசுவதை கேளுங்கள் முட்டாள்களே… …





கருணாநிதி பேசுவதையும், கடிதமாகவும், கேள்வி பதில் அறிக்கைகளாகவும், அவராகவே இலக்கியம் என்று கருதிக் கொண்டு எழுதும் கவிதைகளாகவும் கொட்டப்படும் விஷமத்தனமான உளறல்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தி ஊடகங்களும், உங்கள் முகத்தில் அறைவது போல கொண்டு வந்து சேர்த்தே தீரும்.

கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள், கட்டண கழிப்பிடத்தை திறந்து வைத்தாலும், அது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிடப்படும். கருணாநிதி பெங்களுரில் உள்ள மகள் செல்வி வீட்டுக்குச் சென்று தனக்கு மிகவும் பிடித்த நாட்டுக் கோழியை விரும்பி உண்டதை செய்தியாக நக்கீரன் வெளியிடுகிறது.

தேவைக்கு அதிகமாக, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், சமூகம் அங்கீகரித்திருக்கம் ஒழுக்க கோட்பாடுகளை மீறி, நெருக்கடியின் காரணமாக இரண்டாவது திருமணம் செய்து, அக்குடும்பத்தை மக்கள் வரிப்பணத்தில் பராமரித்து வரும் சிஐடி காலனிக்கு கருணாநிதி இரண்டு நாட்கள் செல்லவில்லை என்றால் அதையும் செய்தியாக வெளியிடும் ஊடகங்கள் இருக்கின்றன.

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தின் செய்திகள் அவர்களுக்கு பொழுது போக்கு. ஆனால் லட்சக்கணக்கான தமிழக மக்கள், தங்களின் பிரச்சினைகள் செய்தியாக வேண்டும் என்று தவம் இருக்கிறார்கள்.


ஆனால் இந்த ஊடகங்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த ஊடகங்களின் கவனத்தை திருப்பவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தான் அவ்வப்போது, ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், கருத்தரங்கங்களும் நடத்த முனைகிறார்கள்.

உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ, கருத்தரங்கமோ, எதுவாக இருந்தாலும், அதை நடத்துவதில் எத்தனை சிரமம் என்பது அந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மட்டுமே அறிவார்கள்.

நிகழ்ச்சிக்கு இடத்தை தேர்வு செய்வதில் இருந்து, அந்நிகழ்ச்சிக்கு துண்டறிக்கை தயார் செய்வது, போஸ்டர் தயார் செய்வது, மைக் ஏற்பாடு செய்வது, விழாவுக்கு வருபவர்களுக்கு தேநீர் அல்லது மதிய உணவு ஏற்பாடு செய்வது, பேச்சாளர்களை அழைப்பது, அழைப்புக் கடிதம் கொடுப்பது, போலீஸ் அனுமதி பெறுவது என்று ஒரு நிகழ்ச்சியினுள் பொதிந்திருக்கும் பணிகள் ஏராளம். இப்படி எல்லா ஏற்பாடுகளையும், ஒரு பொது தேவைக்காகவும், பரந்து பட்ட உழைப்பாளி மக்களின் தேவைகளுக்காகவும், சமூக ஆர்வம் உள்ள அனைவரும் செய்தே வருகிறார்கள்.


இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தவுடன் நிகழ்ச்சி நடக்கும் நாளன்று காலையில் காவல்துறை, உங்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அனுமதி மறுக்கும் கடிதத்தை வழங்கினால் எப்படி இருக்கும் ?


கடந்த வாரத்தில் மட்டும் இது போன்ற மூன்று நிகழ்வுகள். முதல் நிகழ்வு. ஈழத் தமிழர்களை, தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி வதை முகாம்களுக்குள் அடைத்து வைப்பதை எதிர்த்து 13.03.2010 அன்று மாலை சென்னை மெமொரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்ட நிலையில் முதல் நாள் இரவு, அனுமதி மறுக்கப் பட்ட கடிதத்தை காவல்துறை வழங்கியது.

அடுத்த நிகழ்வு, சென்னையில் குடிசைப் பகுதி மக்களை சென்னை நகரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் சென்னையை விட்டு அவர்களை விரட்டியடிக்க திட்டமிட்டு அரசு நடத்தும் அராஜக நடவடிக்கைகளை கண்டித்து, உண்ணாவிரதம் இருக்க திட்டமிடப்பட்டு, விழாவுக்கு சீமான், திருமாவளவன் போன்றோரை அழைத்து, எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப் பட்டு நிகழ்ச்சி தொடங்கும் நாளன்று காலை, நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது, காவல்துறை அனுமதி மறுக்கப் பட்டது என்ற கடிதத்தை கொடுத்தது. நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடங்கள் இருக்கும் போது அனுமதி மறுத்தால் என்ன செய்வீர்கள் ? விழா தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியிடச் சென்ற தோழர் உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது காவல்துறை.

மூன்றாவது நிகழ்வு. சேலத்தில் காவல்துறையின் சித்திரவதைகளுக்கும், வன்முறைகளுக்கும், போலி மோதல் படுகொலைகளுக்கும் எதிராக இன்று (செவ்வாய்) நடைபெற இருந்தது. சேலம் சுபிக்ஷா அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருந்த கருத்தரங்கில் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், ப.பா மோகன், புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிகழ்ச்சிக்காக ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆராய்ச்சி செய்து காவல்துறையின் சித்திரவதை மற்றும் அராஜகங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை புகழேந்தி தயார் செய்து, சென்னையிலிருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார்.


சுபிக்ஷா அரங்க உரிமையாளரை மிரட்டி, அரங்கை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விட்டது காவல்துறை என்று இன்று காலை தொலைபேசி வாயிலாக தகவல் தெரிந்தது.

நியாயமான ஜனநாயக வழியிலான போராட்டங்கள் எதையுமே நடத்த விடாமல் காவல்துறை இப்படி தடுப்பது கருணாநிதிக்கு தெரியாமலா நடக்கிறது என்கிறீர்கள் ? அப்படி தெரியாமல் நடந்தாலும், இப்படிப்பட்ட பொறுக்கி காவல்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு செயலிழந்த முதலமைச்சர் எதற்கு நமக்கு ?

உண்மை என்னவென்றால், கருணாநிதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது, மக்களின் நிலை என்னவென்பதெல்லாம் பற்றி துளியும் அக்கறை இல்லை.

இருந்தால் ஒரு முதல்வர், பிரியாணி பொட்டலம் விநியோகித்துக் கொண்டிருக்கும் அவலத்தை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? உழைப்பாளி மக்களின் உழைப்பை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப் படுவதை சவுக்கு வரவேற்கவே செய்கிறது என்றாலும், இந்தப் பிரியாணி பொட்டலத்தை வழங்க, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அவசியமா ?

இதில் கலந்து கொண்ட இன்னொரு பெரும்புள்ளி, இந்து ராம். கருணாநிதியிடம் “இந்நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டனவே” என்று கேட்டதற்கு, பாட்டுக்கு இந்தி நன்று, ஆனால் நாட்டுக்கு தேவையில்லை என்று பதில் அளித்து, அதை தலைப்புச் செய்தியாகவும் ஆக்கிய கருணாநிதியை என்னவென்று சொல்வீர்கள்.


கருணாநிதியை திட்டி, விமர்சித்து பதிவு எழுதுவதற்கு சவுக்குக்கே சலிப்பு ஏற்பட்டாலும் என்ன செய்வது, மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே…

கருணாநிதி கக்கூஸ் போனாலும் அது செய்தியாக வேண்டும். அதை நாம் படிக்க வேண்டும். ஆனால் உழைப்பாளி மக்களின் பிரச்சினைகளைப் பற்றி யாரும் எங்கேயும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் ஒரு அவல நிலை என்றுதான் மாறப்போகிறதோ.. ..


கருணாநிதியின் குடும்பம் பல துண்டுகளாக உடைந்து சிதறி, திமுக என்ற கட்சியும் பல்வேறு துண்டுகளாக சிதறி, கருணாநிதி மனம் புழுங்க வேண்டும், கண்ணீர் விட வேண்டும் என்று சவுக்கு சபிக்கிறது.

சவுக்குக்கு சாபங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும், கையறு நிலையில் மனம் அங்கலாய்ப்பதை வேறு என்ன சொல்லி ஆற்றுவது ?

சவுக்கு