தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலகின் கவனத்தை ஈர்த்த பிரித்தானியாவே! உன்னை போற்றுகின்றோம்!! வணங்குகின்றோம்!!!


உலகின் கண்களும் காதுகளும் கடந்த சில நாட்களாக பிரித்தானியா என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டை நோக்கியே இருந்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் அங்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள்.

அதற்கு அடுத்த காரணிகளாக அமைந்தவை பிரிட்டன் அரசாங்கமும் அங்கிருந்து ஒளிபரப்பாகும் சனல்-4 தொலைக்காட்சிச் சேவையுமே ஆகும்.

ஈழத்தமிழர்கள் மீதான கொடிதான நாகரீகமற்ற யுத்தத்தை ஏவிவிட்டு லட்சக்கணக்கான பொது மக்களையும் போராளிகளையும் கொன்றழித்ததுடன், உலகெங்கும் இருந்து பெற்ற கபடத்தனமான உதவிகள் மூலம் சதி செய்து விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் விடுதலை இயக்கத்தை அழித்துவிட்ட மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த அந்த விடயமே உலகை அந்த நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது என்று கூறலாம்.

இலங்கைக்கு எதிராக மட்டுமல்ல அந்த நாட்டின் ஜனாபதியாக முடிசூட்டிக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவிற்கும் எதிராக உலகெங்கும் உள்ள மனிதநேயமிக்க அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பான மனுக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் குழுவால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மகிந்த பிரித்தானியாவிற்கு விஜயத்தை ஆரம்பித்தார்.

ஏற்கெனவே திட்டமிட்டது போல பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அங்கு இயங்கிவரும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வழிநடத்தப்பட்டு மகிந்தாவின் வருகை தொடர்பான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்து படுகொலை புரிந்த அந்த பாதகனை பிரித்தானியாவில் வைத்து கைது செய்யும்படி அந்த நாட்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் மகிந்த அந்த நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்யவுள்ளதைப்பற்றியும் அவர்கள் முன்னறிவித்தல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பிரித்தானியாவிற்கு பயணம் செய்தார் மகிந்த. யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் விமான நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மகிந்தவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் மிகவும் நிதானமாக தங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்காக நமது பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் மக்களை உலகத் தமிழர்கள் பாராட்டுகின்றார்கள். பாராட்டுகள் அந்த மக்களுக்கு மட்டுமல்ல.

இன்னும் இருக்கின்றார்கள் இருவர் பாராட்டுக்கள் பெறுவதற்கு. முதலாமவர் பிரித்தானிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை பாராட்டுவதற்கு காரணம். நியாமான போராட்டத்தை விமான நிலையத்தில் விருந்தினர் பகுதியில் நடத்துவதற்கு அனுமதியளித்த அந்த அரசாங்கத்தையும் அதனோடு இணைந்த பொலிஸ் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

அடுத்தவர் யாரென்றால், சனல் -4 என்ற ஆங்கில மொழி மூலமான துணிகரமான தொலைகாட்சிச் சேவை.. இந்தச் சேவையில் தான் கடந்த சில நாட்களாக இலங்கை அரசாங்கம் தனது காடைச்; சிப்பாய்கள் மூலம் கட்டவிழ்த்து விட்ட கொலைவெறி ஆட்டத்தையும் அதனோடு ஒத்த போர்க் குற்றங்களையும் மிகவும் தெளிவான முறையில் ஒளிபரப்பி வருகின்றமை நமது மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. மேற்படி சனல்-4 தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பி வரும் கொடூரமான காட்சிகள் மூலம் உலகம் இலங்கை அரசின் கொடிதான போர்க்குற்றங்களை நேரடியாகக் காண்பது போன்ற ஒரு சாட்சியத்தைப் பெற்றுக் கொண்டது என்றே கூறவேண்டும்.

இவ்வாறு உலகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் நியாயவிரும்பிகளை பிரித்தானிய இந்த வாரம் நன்கு கவர்ந்துள்ளது. அங்கு மகிந்தவிற்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் மிகவும் பலனளித்துள்ளன என்பதையே உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தனக்கு எதிரான பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை அறிந்த மகிந்த இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார். அதனை அறிந்த பிரித்தானியாவின் தமிழ் இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர் என்பதும் அங்கிருந்து கிடைத்த செய்தியாக அமைகின்றது.

பிரித்தானியாவில் மகிந்த மூக்குடைந்து போனது தொடர்பான தாக்கம் இலங்கையில் நன்கு பாதித்துள்ளது என்றே கூறவேண்டும். ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இலங்கையில் மிகுந்த கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டு மகிந்த தனது உரை ரத்து செய்யப்பட்டது குறித்து தான் மிகுந்த கவலை அடைவதாகவும் ஆனாலும் வேறு ஒரு மேடையில் விரைவில் தனது எண்ணங்களை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை அவருக்கு ஏற்பட்ட தோல்வியாகவே நாம் கருதலாம்.

அடுத்தது பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்கும் முகமாக பிரித்தானியாவில் முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து தனது நாட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் மகிந்த. இன்றைய நாள் தினசரிகளில் அந்த படங்கள் பிரசுரமாகியுள்ளன. பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு அமைச்சரோடு மகிந்த நின்று எடுத்த புகைப்படமே பெரிதாக அங்கு பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் மகிந்த மீதான பரிதாபமான பார்வையே ஏற்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் தனது சொந்த அண்ணராம் மனோ கணேசனை தவிக்க விட்டுவிட்டு மகிந்தவின் அரசாங்கத்தோடு சேர்ந்து அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் இணைந்து கொண்ட பிரபா கணேசன் இன்றைய பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஜனாபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்கள் என்று "குறை" சொல்லியிருக்கின்றார். கேவலம் ஒரு பிரதி அமைச்சர் பதவியை எதிர்பாத்து கொடிதான போர்க்குற்றங்கள் செய்த மகிந்தவின் கால்களைப் பிடித்தபடி உள்ள பிரபா கணேசன் புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களுக்கான காரணங்களை நன்கு அறிந்து கொண்டும் இவ்வாறு அறிக்கை விடுவது என்பது பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற விடயங்கள் எந்தளவிற்கு இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதையே நன்கு தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு பார்க்கும்போது பிரித்தானியா என்ற அந்த உன்னத நாட்டையும் அதனோடு இணைந்த அனைவரையும் ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமி;ழ் மக்களாகிய நாம் வாழ்த்த வேண்டும் வணங்கவேண்டும்.

தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்த்துறை!

ஓக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள் மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு இடியென இறங்கியது தமிழ் மக்களின் போராட்டம் அவர் தங்கியிருந்த விடுதி அருகே நடைபெற இருக்கிறதெனும் செய்தி அதை அடுத்து இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.

அதனை அறிந்த இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்த்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர்.

அனைத்துப்பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்த்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.

அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கம் நாம் எவ்விதத்திலும் தடங்கள் ஏற்படுத்த மாட்டோம் எமது நோக்கம் மகிந்தவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாம் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்த்துறையின் பாதுகாப்போடு தூதுவராலயத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தொருவொன்றில் இருந்து மகிந்தவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

அதற்கிடையில் இன்று காலையில் பிரித்தனியாவில் உள்ள சிங்களவர்கள் என்ன செய்கின்றார்கள் என மகிந்த கடிந்துகொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக 15 முதல் 25 வரையான சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் தமிழர்கள் வரத்தொடங்க இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனார்கள் சிங்களவர்கள்.

எதையாவது எப்படியாவது சாதிப்பேன் என பிரித்தானியா வந்திறங்கிய மகிந்தவுக்கு அவமானம் மேல் அவமானமே மிச்சமானது இனி மகிந்தவுக்கு பிரித்தானியா சீ சீ இந்தப் பழம் புளிக்குமே!.















ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி: இலங்கை அரசின் வெளிவராத கோரமுகம்





ஊடகவியலாளராகவும், நடனக் கலைஞராகவும் செயற்பட்ட இசைப்பிரியா இராணுவத்திடம் சிக்கி, கேணல் ரவிப்பிரியவின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவிபுரிந்தது கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் எமது தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதில் வருபவரே இசைப்பிரியா



இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே
“ இறுதிக்கட்டப் போரின் போது சிறீலங்கா இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட சிறீலங்கா படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்”
என்ற விடயம் அடங்கிய செய்தி உடனடியாக ஊடகங்களுக்கு பரப்பப்பட்டது.

இச்செய்தி நிராயுதபாணியாக நின்ற ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்க அவரை ஒரு ஆயுததாரியாக்க எதிரியால் திட்டமிடப்பட்ட பரப்புரை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக அவதானித்தால் அவர் ஒரு நிராயுதபாணி என்பதை உறுதிப்படுத்த முடியும்.

அதனாலேயே இந்தச்செய்தியில் திருத்தத்தைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனைய ஊடகங்களையும் எதிரியின் திட்டமிட்ட சதித்திட்டத்தை கவனத்தில் கொண்டு வெளிவிடப்படும் ஒவ்வொரு செய்திகளையும் முழுமையான செய்திப்பகுப்பாய்வு செய்து கொள்ளுமாறு ஏனைய இணையத்தளங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

அவசியம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

money வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு தம்மாத்தூண்டு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று வாழ்நாள் கனவை நிறைவேற்ற துடியாய் துடித்து, வங்கிப் படியேறினால், மாத சம்பளம் வாங்கும் அந்த மகாஜனத்தின் நம்பிக்கை எல்லாம் ஒரே நொடியில் பொய்த்துப் போய், அந்த சிறிய குடும்பத்தின் தலைவனின் குட்டிக் கோட்டை நொறுங்கியும் விடுகிறது.


காரணம், சொந்த வீடு வாங்கும் அளவுக்கு அவனுக்கு எந்த கதியும் இல்லை என்பதை, ஒரு வங்கி அதிகாரி நிர்ணயித்து விடுகிறார். அவர்கள் வைத்தது தான் சட்டம். வீடு வாங்குவதாகட்டும், கல்விக்கடன் தருவதாகட்டும், ஏன், அவசர தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் பர்சனல் லோனாகட்டும், நடுத்தர வர்க்கத்துக்கு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா? 'உங்களுக்கு நிரந்தர வேலை இல்லையே... வங்கியில் போடப்படும் சம்பளம் போதுமானதாக இல்லையே... என்பது தான்.


வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதில் மாதாமாதம் சம்பளப்பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் சேமித்து, பத்தாம் தேதிக்குள், வாடகை, கரன்ட் பில், மளிகை பில், பேப்பர் பில், கடன் இருந்தால் அதன் தவணைத் தொகை என்றெல்லாம் கணக்கிட்டு, போதாக்குறைக்கு பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு என பிக்சட் டெபாசிட்டிலும் சொற்ப பணத்தை முதலீடு செய்து விட்டு, பத்தாம் தேததிக்கு பின் 'அப்பாடா... என்று திருப்தி அடைவது தான் மாத சம்பளம் வாங்கும், நடுத் தர வர்க்கத்தினரின் வாழ்க்கை.


ஆனால், இவர்களுக்கு கடனுதவி திட்டங்களை அரசு போட்டாலும், அதிகாரிகள் அதில் மண்ணைப் போட்டு விடுவது தான் இதுவரை நடந்து வருகிறது. அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த வங்கி அதிகாரிகள் இன்னொரு பக்கம், 'வலுத்தவர்களுக்கு வாரியிறைக்கும் பணியையும் செய்கின்றனர். சாலையில் லாரியை கைகாட்டி, ஐந்து ரூபாய் வாங்கும் டிராபிக் போலீசை தான் உங்களுக்கு தெரியும். கோட் சூட் போட்டுக்கொண்டு ஏசி அறைக்குள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது பற்றி இதுவரை யாரும் வெளிக்கொண்டு வரவும் இல்லை; வெளியே தெரியவும் இல்லை.


அரசு வீட்டுக்கடன் அமைப்பின் உயர் அதிகாரி சிக்கியது தான் பலருக்கும் பெரும் அதிர்ச்சி. அதோடு, அரிச்சந்திர வங்கி அதிகாரிகளின் தோலும் உரிக்கப்பட்டு விட்டது சி.பி.ஐ.யால். இவர்கள் செய்தது தான் என்ன என்று இன்னமும் கூட இந்த மகாஜனங்களுக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு  கேடித்தனத்தையும் கோட்டு சூட்டால் மூடி செய்துள்ளனர் இந்த 'ஹானஸ்ட் பிரபுக்கள்.


குறிப்பிட்ட நிதி ஆலோசனை நிறுவனத்தின் மூலம், நிதி நிறுவனங்களுக்கும், பில்டர்களுக்கும் மறைமுகமாக பல கோடிகளை கடனாக அள்ளித் தந்துள்ளனர். இதற்கு இவர்கள் பெற்றுக் கொண்டது, இந்த நிறுவனங்கள் போட்ட  பல லட்சம் லஞ்சப்பிச்சையும், கேளிக்கை சமாச்சாரங்களும்.


1. அர்ஷத் மேத்தா & 4,000 கோடி ரூபாய்
2. கேத்தன் பரேக் & 2,000 கோடி ரூபாய்
3. ஐபிஎல் மோசடி & 1,200 கோடி ரூபாய்
4. ஹவாலா மோசடி& 500 கோடி ரூபாய்
5. லாலு கால்நடை தீவன ஊழல் & 900 கோடி ரூபாய்
6. சத்யம் ஊழல் & 14,000 கோடி ரூபாய்
7. டெல்ஜி முத்திரைத்தாள் மோசடி & 20,000 கோடி ரூபாய்
8. காமன்வெல்த் போட்டி ஊழல் & 70,000 கோடி ரூபாய்


இந்த ஊழல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில், இப்போது வீட்டுவசதி லஞ்ச ஊழலும் சேர்ந்து விட்டது.


மணி மேட்டர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற நிதி ஆலோசனை நிறுவனம் மும்பையில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் பிற அரசுடமை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொடுக்கும் Ôஇடைத்தரகர் சேவைÕ செய்து வந்தது. கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப இதற்கு கமிஷன் தொகையை வாரி வழங்கும். கடன் பெற தகுதி இல்லாத பெரிய நிறுவனங்கள்கூட வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது என்றால் வங்கி அதிகாரிகளை அந்த அளவுக்கு கவனித்துள்ளது.


வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் பெரும் தொகையை கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுத் தரும். கடன் வாங்கிக் கொடுத்ததற்கு பெரும் தொகையை கமிஷன் பெற்றுக் கொள்ளும். இந்த முறையில்தான் லஞ்சம், ஊழல் நடந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் இடைத்தரகர் செயல்பாட்டின் மூலம் ணீ1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: எல்.ஐ.சி. செயலாளர் (முதலீடு) நரேஷ் கே.சோப்ரா, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர், பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஆர்.என். தயாள், மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் சர்மா, இதே நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சுரேஷ் கட்டானி, சஞ்சய் சர்மா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் வெங்கோப குஜ்ஜால் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் தர பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், எல்.ஐ.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உட்பட பல அரசு வங்களின் உயர் அதிகாரிகள் இடைத்தரகராக செயல்பட்ட மணி மேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஜலந்தர், டெல்லி மற்றும் மும்பையில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 5 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


ஹவுசிங் கடன் முறைகேடு தொடர்பாக வங்கி, எல்.ஐ.சி. உயர் அதிகாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடன் முறைகேடு விவகாரம் நிதி மோசடி அல்ல. இது லஞ்சம், ஊழல் தொடர்பானது என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. பூர்வாங்க விசாரணையில் இது லஞ்சம், ஊழல் சம்பந்தப்பட்டதுதான் என்று சிபிஐயின் சிறப்பு இயக்குனர் பல்விந்தர் சிங் தெரிவித்தார்.


எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்தி, கடந்த 24ம் தேதி பங்கு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு சந்தையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு மதிப்பு 18.32 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு மதிப்பு 8.02 சதவீதம், மணி மேட்டர்ஸ் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் குறைந்தது. மணி மேட்டர்ஸ் பங்குகளை பெரிய அளவில் முதலீட்டாளர்கள் விற்றனர்.


சிபிஐ பிடியில் சிக்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர் குர்கான், புறநகர் பகுதியில் பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். பிளாட் விலையில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும், தேவையான பணத்தையும் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ணீ45 லட்சம் லஞ்சமாக நாயர் பெற்றுள்ளார்.


இதற்காக, டி.பி. ரியாலிட்டி, பாஷ்மினா லிமிடெட், மந்திரி ரியாலிட்டி, சிங்ருன் லிமிடெட், என்டர்டெய்ன்மென்ட் வேர்ல்டு, இந்தூர் சிட்டி டெசரர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் பெற உதவியுள்ளார். சிபிஐயின் இந்த குற்றச்சாட்டை நாயரின் வக்கீல் மறுத்துள்ளார். நாயர் நிறுவனத்தின் தலைவர் தான், கடன் தொகையை அவர் நேரடியாக அனுமதிப்பது இல்லை. ஒரு கமிட்டிதான் கடன் தொகையை அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார்.


மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பொதுமேலாளர் பி.என்.தயாள் ணீ25 லட்சத்தை ராஜேஷிடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதற்காக அஷாபுரா மினிசெம் நிறுவனம் பெரும் தொகையை கடன் பெற உதவியுள்ளார். பிஜிஆரின் 200 கோடி மின் திட்டத்துக்கும் ஓபிஜி குழுமத்தின் ணீ300 கோடி திட்டத்துக்கும் உதவி செய்வதாக ராஜேஷிடம் தயாள் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.


இதேபோல், எல்.ஐ.சி.யின் செயலாளர் (முதலீடு) கே.சோப்ரா ணீ16 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அடானி, ஜே.பி. ஹைட்ரோ, ஜே.எஸ்.டபிள்யு. பவர், ராலிங்கர், பான்டலூன், அடலைட், எம்டெக் ஆகிய நிறுவனங்களுடன் எல்.ஐ.சி.யின் தொடர்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்களை மணி மேட்டர்ஸ் நிறுவனத்துக்கு சோப்ரா தந்துள்ளார்.


லாவாசா நிறுவனம் கடன் பெற சாதகமாக செயல்பட மும்பை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) 30 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதேபோல், புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் பாங்க்கின் துணை பொது மேலாளர் வெங்கோபா குஜ்ஜால் 20 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராஜேஷின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ணீ50 கோடி கடன் பெற உதவி செய்துள்ளார். இவ்வாறு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐயின் வக்கீல் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

தலையங்கம் :கனி மொழி , ரத்தன் டாட்டா , ராசாத்தி அம்மாள் , ராசா கூட்டணி - ரத்தன் டாட்டா என்றொரு பித்தலாட்டக்காரன் ?


கீழே வந்துள்ள இன்றைய செய்தியை பாருங்கள் . இவர்தான் சென்னையில் இயங்கும் வோல்டாஸ் அலுவலக கட்டிடத்தை , ராசாத்தி அம்மையாருக்கு  வாங்கி கொடுத்து அதற்க்கு பதில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக கூடாது என்று காய் நகர்த்தி வெற்றி கண்டவர் . (2009)






ராசாத்தி அம்மையாருக்கு இவர் கொடுத்த , கையூட்டு ,உறுதி மதிப்பு ஊழலில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பெரும் . (கட்டிடம் மற்றும் கட்டபோகும் கட்டிட இடங்கள் உட்பட).






இந்த லஞ்ச பணத்தை கொடுத்துதான் நீர ராடியாவின் பித்தலாட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தவர் ரத்தன் டாட்டா.






இதற்க்கு , ராசாத்தி அம்மையாருக்கு மட்டும் 600  கோடி ரூபாய் கொடுத்துள்ளார் , நீரா ராடியாவிர்க்கு அறுவது கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ராசாவிற்க்கு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.   ஆனால் அதற்கும் கட்டாயம் ஒரு  தொலை பேசி பதிவு வெளியில் வரும் , அல்லது இப்போது மத்திய அரசு வைத்து கொண்டு அதை மறைக்கலாம்.




இது தகவல் தொழில் நுட்பம் என்ற ஒரு மத்திய அரசின் துறைக்கு டாட்டா கொடுத்த லஞ்சம் . இது எல்லாம் போக , டாட்டா எங்கெங்கெல்லாம் தொழில் செய்கிறாரோ அந்த அனைத்து துறைகளையும் மத்திய அரசு சரியாக விசாரிக்குமானால், டாட்டா வினால் மட்டும் இந்தியாவிற்கு  எந்த அளவிற்கு  நட்டம் என்பதை நாம்  கணக்கிடலாம்.






இப்படி TATA விற்கு  சாதகமாய் ஒரு அமைச்சர் என்றால் , ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாய் எத்தனை அமைச்சர்கள் எத்தனை வேலைகளை இப்படி முடித்து கொடுதுள்ளார்களோ ?





இப்படி எத்தனை துறை அமைச்சர்கள் , அவரவர்களிற்கு ஏற்ற  அல்ல்லது அவர்களிற்கு சாதகமாய் லஞ்சம் கொடுக்கும் தொழில் அதிபர்களிற்கு இந்தியாவை அடகு வைத்துள்ளார்களோ ?





இதில் ஒரு கேள்வி வரும் , தயாநிதி மாறன் அமைச்சராக வந்திருந்தால் டாட்டாவின் பித்தலாட்டம் எடுபடாதே ? என்று .






தயாநிதி மாறன் வந்திருந்தால்,  மாறன் குடும்பமே நேரடியாக இந்த தொழிலை செய்திருக்கும். குடும்ப தொழிலாக  2g  மாறி இருக்கும்.





இங்கு தலைப்பிற்கு வருவோம் , இதே டாட்டா  ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது,  பத்து வருடங்களிற்கு முன்னர் , விமான துறை சேவையை துவங்க முற்சித்தாராம் ஆனால் அப்போது விமான துறை அமைச்சராக இருந்த ஒருவர் 12  கோடி ரூபாய் கேட்டதால் , லஞ்சம் கொடுத்து தமது  நிறுவனம் அப்படி தொழிலை துவக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் விமான துறையில் டாட்டா இறங்குவதையே தவிர்த்ததாகவும் சொன்னார்.







அப்பப்ப எப்படிப்பட்ட பெரிய புளுகு வார்த்தைகள் அது..  12  கோடி கொடுக்க மறுத்த டாட்டா ஏன் ராசாத்தி அம்மாளுக்கு 600  கோடி ரூபாயை கொடுத்துள்ளார் ?





எப்படி இவரின் 12  கோடி லஞ்ச வார்த்தைகளை நம்புவது ?   அது  பொய்யாக இருக்கும் என்று சொல்ல வில்லை . அதுவும் உண்மையாகத்தான் இருக்கும் ஆனால்  அதை சொன்ன டாடா உத்தமன் இல்லை என்பதை ஒரு மாததிக்குள் இன்னொரு நிகழ்வு வந்து நிரூபித்துள்ளது.






இந்தியா தொழில் அதிபர்களின் பிடியில்தாம் உள்ளது என்பதை இந்த ஊழல் நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றன. அதனால்தாம் அரசியலில் இறங்கும் ஒருவனும் தொழில் அதிபராக ஆசைபடுகிறானோ?







படிக்க வேண்டிய செய்தி இங்கே , படியுங்கள் வாசகர்களே :




New Delhi, Nov 29


Mr Ratan Tata, Chairman of Tata Group, on Monday moved the Supreme Court claiming that his right to privacy was violated due to the leakage of his alleged discussions with corporate lobbyist Ms Niira Radia and others. Mr Tata demanded a probe into the leakage of the tapes allegedly containing his conversations, adding it should be ensured that there is no further leakage of tapes, if any, with the Government.






Ms Radia's public relations firm has been handling corporate communications for the Tata Group. The conversations, already reported by a section of the media, allegedly also relate to the 2G spectrum allocation imbroglio. Mr Tata is being represented by the law firm Karanjawala & Co and senior advocate Mr Harish Salve. The petition referred to the Fundamental Rights guaranteed by the Constitution, including an individual's right to privacy, and said this right of Mr Tata had been violated.





POINTS OF PETITION



Mr Tata did not object to telephone tapping if it was solely for investigation into irregularities, but said no private conversation in these tapes should be made public.


Though the petition said Mr Tata does not intend to `quarrel' with the Government, it added that using the alleged conversations other than for investigations was wrong.


The petition, which sought to make the Union of India a respondent in the matter, said it was the Government's responsibility to ensure that the citizens' right to privacy was not violated. The petition referred to the guidelines laid down by the apex court in the Peoples' Union for Civil Liberties (PUCL) case where it was observed that telephone tapping amounts to a serious invasion of an individual's privacy and is susceptible to abuse.


The petition also cited the PUCL case to say that such evidence should be destroyed after six months of completion of investigations. Sources in Karanjawala & Co confirmed that the petition was filed in the apex court, but declined to share a copy or its contents saying the court may object to the petition being out in the public domain even before it has applied its mind to it. However, the sources confirmed that the contents on the same lines. The matter is likely to come up for hearing on Tuesday.



CPIL RETALIATES



Meanwhile, Supreme Court advocate Mr Prashant Bhushan told Business Line that his client the NGO Centre for Public Interest Litigation (CPIL) would file a petition to intervene in the matter stating that there is no breach of privacy in the case as the public interest far outweighs the privacy angle. He said even according to the Right to Information Act, such information cannot be withheld if the public interest is greater than someone's right to privacy. He said even if a person has deliberately leaked out such information, he/she should be considered a whistleblower.

வீரம் விளைந்த மண்ணில் - மாவீரர் நாள் கவிதை - பகலவன்

வீரம் விளைந்த மண்ணில்  - மாவீரர் நாள் கவிதை  - பகலவன்


வீரம் விளைந்த மண்ணில்

விதையாகி போனவர்களின் சரித்திரத்தை

ஒரு நிமிடம் மரியாதையை செலுத்த வந்திருக்கும்

நாளைய விழுதுகளுக்கு எனது வணக்கம்!

 

அண்டை நாட்டு அகதிகளாயினும்

எம்நாட்டு வீரத்தை பாருக்கு

உரக்க சொல்பவர்கள் நாம்,

 

வீழ்ந்தது ஆலமரம் ,நொறுங்கியது அதன் வேர்!

என கூறும் அனைவருக்கும் உரக்க சொல்வோம்!

அங்கே நடபட்டிருப்பது பல ஆயிரம் விழுதுகள் என!

 

எமக்கும் உரிமை உண்டு என கூறும்

நம் நாக்கை அவன் அறுப்பாயின்

உனக்கு உரிமையே இல்லை என

அவன் நாக்கை நாம் அறுப்போம் !

 

எத்தனை எத்தனை தியாகம்

எம் இன சரித்திரத்தில் !

தோழர்களே நாம் மண்ணாகி போகவில்லை!

நாளைய சரித்திரம் ஆக போகிறோம்!

ஜாதி ,மதம் என் கடந்து  நாம் இங்கே கூடி உள்ளோம்!

தமிழனின் குருதியில் கலந்து போன கட்சியையும்

கடந்து நாம் இங்கே கூடி உள்ளோம் !

ஒரு இனத்தின் விடியலை

பல தியகங்களோடு தொடங்கி உள்ளோம்!

 

சூதும் வாதும் எம் இனத்தை சுழ்ந்திருக்கலாம்

பகைமையும் முள்வேலியும் எம் மக்களை சுழந்திருக்கலாம்

எவை எவை யாயினும் நமக்கு பயம் கூடாது!

மூன்று லட்சம் சிங்களவனை

வெறும் நாற்ப்பதாயிரம் போராளிகளோடு

கட்டி ஆண்டவர்கள்தான் நாம் !

 

தமிழ் நாட்டு கவிஞன் கொஞ்சம்

சன்மானத்துக்கு அடிமை பட்டவன் தான் !

இதற்கு ஒன்றும் நான் விதி விலக்கல்ல!

என்றாலும் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்!

எம் இனத்தை அழிக்க தந்தி அடித்தவனின்

தலைக்கு உங்கள் கவிதை மகுடத்தை சூட்டாதிர்கள்!

நம் இனத்தின் வீரத்தை இவ்வுலகுக்கு எடுத்துரைத்த

மாவிரர்களுக்கு அந்த மகுடத்தை சூட்டுங்கள்!


வீரத்தோடும் தன்மானத்தோடும்

வாழ நினைப்பவன் என் ஈழ தமிழன்

இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்

வாழ மறுப்பவன் என் மீதி தமிழன்

 

காலங்கள் உருண்டோடி போகிறது

எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!

அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது

எழுச்சிகளும் நொறுக்கபடுகிறது!

 

உலக தமிழினமே விழித்து கொள்

நாம் பிரிவினைவாதிகள் இல்லை!

நமக்கான உரிமைகளை பெற நினைப்பவர்கள்!

நமக்கான பூமியை பெற நினைப்பவர்கள்

 

கழனிகளையும் நிலபுலன்களையும் எங்கோ விட்டு விட்டு

ஓடித்திரிகிறார்கள் அகதியாய்!

உன் சக தமிழன் அடிமை என்றால்

நாம் என்ன எஜமானிகளா!

 

என் வீரமிக்க இனமே இவ்வுலகத்தை

அசைத்து பார்க்க விரும்புவர்கள் இல்லை நாம்!

நாம் பிறந்து வளர்ந்த மண்ணில் உறவுகளோடு

ஆசையாய் பழகி வாழ விரும்புவர்கள் நாம்!

 

எம் மாவிரர்களே எமக்காக போர்வாளை

தூக்கியவர்கள் நீங்கள்

எத்தனை எத்தனை சூழ்ச்சிகள்

எம்மை கட்டுபடுத்த நினைத்தாலும்

பாடம் புகட்டியவ்ர்கள் நீங்கள்!

 

பயமும் தயக்கமும் இன்றி பயணிக்கிறோம்

எம் இனத்தின் விடியலை நோக்கி

நீங்கள் காட்டிய பாதையில்

வீரமும் தியாகமும் மிக்க பூமியை மீட்டெடுப்போம்!

 

உங்கள் தியாகம் அளவற்றது

உங்கள் வீரம் பெரு மதிப்பு மிக்கது

தமிழன் தன்மானத்தோடு வாழ

கற்று கொடுத்தவர்கள் நீங்கள்!

 

 

பயணிக்கிறோம் எம் இனத்தின் விடியலை எடுத்துரைக்க !

பயணிக்கிறோம் வீரமிக்க சரித்திரத்தை உருவாக்க !

 

பொருத்து போதும் தமிழா !

வீழ்ந்தாலும் மாய்ந்தாலும்

எம் பூமியை நாம் இழக்க மாட்டோம்

 

இம் மாவீரர்களின் தியாகம் நமக்கு துணை நிற்கும்!

வஞ்சகம் நம்மை கண்டு பயம் கொள்ளட்டும்!

 

வீரத்தோடும் தன்மானத்தோடும்

எம் இனத்தை கட்டி எழுப்பிய

எம் தலைவனுக்கும் மாவீரர்களுக்கும்

தலை வணங்கி விடை பெறுகிறான் இந்த பகலவன்......

 

நன்றி

வணக்கம்

பகலவன்

ஈழத்தில் இறுதி யுத்த நாளில் - ஊடுருப்பு போர் நடந்தது எப்படி ?

மாவீரர் வாரத்தில் படிக்க வேண்டிய தியாக செயல்கள் :

ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

 

தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

 

சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து, கடுமையான இழப்புக்களை எமது தரப்பு சந்தித்த போதும் போராளிகளின் மனஉறுதியும், வீரமும் எதிரியை எதிர்த்து போரிட வைத்ததோடு, அவனை முன்னே நகரவிடாது தடுத்தும் வைத்திருந்தது.

 

இந்நிலை தொடருமானால் நாம் இன்னும் பலத்த இழப்புக்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும் என்பதை உணர்ந்த தலைமை களத்திற்கேற்ப முடிவெடுத்துச் செயற்பட முனைந்தது.

 

முன்னேறி வரும் எதிரியை சற்றே பின்தள்ள வேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டது. இதற்காக களமுனையின் நிலையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமை குறைந்த ஆளணியுடன் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தக் கூடியவாறான தாக்குதல் ஒன்றை நடாத்தி, வன்னியின் களமுனையின் போக்கையும் தமிழரின் விதியையும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் தயாரானது.

 

மீண்டும் சிங்களத்தையும் அதற்கு உதவி புரியும் உலக வல்லரசுகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காக தாக்குதல் திட்டம் இரண்டாக வகுக்கப்பட்டது.

 

1. முன்னேறி வரும் எதிரிக்கு ஊடறுப்புத்தாக்குதல் மூலம் பெரும் இழப்பைக் கொடுத்து, படையணிகள் பல கோணங்களில் முன்னேறுதல்.

2. சிங்களத்தின் குகைக்குள் சென்று கரும்புலிகளின் சிறப்புப் பிரிவு பெரும் அழித்தொழிப்பு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.

 

ஊடறுப்புப் தாக்குதலுக்கான பொறுப்பை எமது மூத்த தளபதிகளில் ஒருவரான 55 இடம் ஒப்படைக்கப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பை விசேட தாக்குதல் தளபதி ஒருவர் பொறுப்பெடுத்தார்.

 

அதற்காக கொமாண்டோ கரும்புலிகள் அணியிலிருந்து 26 பேர் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அணித்தலைமையாக பெண்போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

 

முதலாவதாக ஊடறுப்பு அணி தாக்குதலைத் தொடங்க வேண்டும். சண்டை குறித்த இலக்கினை அடைந்ததும் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான அணியை தாக்குதல் இலக்கு நோக்கி நகர்த்துதல். இதுதான் திட்டம்.

 

ஊடறுப்பு தாக்குதலுக்கான நடவடிக்கையினை 55 உடன் தளபதி லோரன்ஸ் அவர்களும் களத்தில் இறக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல களமுனைத் தளபதிகள் ஒன்றுகூடி அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமையப்போகும் இந்த முதல் கட்டத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் அணி தயார் செய்யப்பட்டது. தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கென அணிகள், தமது நகர்விற்காகக் காத்திருந்தனர்;.

 

மார்ச் மாதத்தின் மாலைப் பொழுதொன்றில் தொடர் விமானத் தாக்குதலுக்கும், எதிரியின் சற்றலைட் கண்காணிப்புக்கும் மண்ணைத் தூவிவிட்டு புலிகளின் தாக்குதல்அணிகளும், முதன்மைத் தளபதிகளும் சாலைப்பகுதியிலிருந்த சிறப்புப் பாசறையில் ஒன்றுகூடினர். தாக்குதலுக்கு பொறுப்பாகவிருந்த தளபதி 55 தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தத் தொடங்கினார்;.

 

"இந்தச் சண்டைதான் எங்கட தலைவிதியை மாற்றி எதிரிக்கு தலையிடி கொடுக்கிறதாய் இருக்கும்;. எனவே அதற்கான திட்டமும் கடுமையான பயிற்சியும் உங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் உறுதியோட உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இலக்கைத் தாக்கியழிக்கிறதில உறுதியோட செயற்படவேணும். மற்றது நாங்கள் இப்ப செய்யப் போற ஊடறுப்புத் தாக்குதல் தான் சிறப்புக் கொமோண்டோக்காரரை அவையின்ர இலக்கை நோக்கிச் செல்ல பாதையெடுத்துக் கொடுக்கப் போகுது. எனவே எல்லாருடைய முழுப்பங்களிப்பும்தான் எமது வெற்றியைத் தீர்மானிக்கப்போகுது. இரவு குறித்த நேரத்தில நகர்வை மேற்கொள்ளக் கூடியவாறு ஆயத்தமாகுங்கோ. அதற்கான ஒழுங்கை தளபதி லோறன்ஸ் மேற்கொள்வார். இனி நீங்கள் உங்களுக்குரிய இடங்களுக்குப் போங்கோ."

 

என்றவாறு ஏனைய தளபதிகளுடன் அவர் பின்கள வேலைகளை நகர்தச் சென்ற பின், போராளிகள் ஒவ்வொருவரும் தமது சக தோழர்களுடன் கதைத்தபடி இரவு நகர்வதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்;.

 

இருள் என்ற கறுப்புப் போர்வை மூடத் தொடங்கிய போது தாக்குதல் அணிகளின் நகர்வும் ஆரம்பித்தது. ஊடறுப்புத் தாக்குதல்களுக்கான அணிகள் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறு சிறு பிளாற்றூன்களாகப் பிரிந்து தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்தன. இதே வேளையில் சிறப்புக் கொமோண்டோ அணியும் நகரத் தொடங்கியது. ஊடறுப்பு அணிகளில் ஒரு பகுதி சிறப்பு அணிக்கான பாதையைத் திறப்பதிலும், அவர்களிற்கான காப்பை வழங்குவதிலும் ஈடுபட்டன. சிறப்பணிகள் எல்லையைக் கடக்க, ஊடறுப்பு அணிகள் விசுவமடுப் பகுதியில் அமைந்திருந்த படைத்தளத்தின் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டன.

 

இத் தாக்குதலின் போது எதிரிக்கு பெருமளவு படைச் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த ஆட்லறிகளைக் கைப்பற்றி, எதிரியின் ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கி எம்மவர்கள் எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். தாக்குதலின் தீவிரத்தால் எதிரி நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்தி சிறப்பணிகள் தமது இலக்கை நோக்கி விரையத்தொடங்கினர்.


ஊடறுப்பு அணிகளின் தாக்குதலை முகம் கொடுக்க புதிய படையினர் வருவிக்கப்பட்டு, எமது ஊடறுப்பு அணி பெட்டி வடிவத்தில் முற்றுகையிடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் தாக்குதலை வழிநடத்திய முன்னணித் தளபதிகள் விழுப்புண் அடைகின்றனர்.

 

எது நடந்த போதும் பின்வாங்க சிறிதளவும் விருப்பம் இன்றிப் போராளிகள் ஓர்மத்துடன் சண்டையிட்டவண்ணம் இருந்தனர். உக்கிரமான சண்டையால் இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. 'இனி அங்கே நின்று அதிகளவான போராளிகளை இழக்க வேண்டாம் முற்றுகையை உடைத்து பின்வாருங்கள்' என்ற தலைமையின் உத்தரவிற்கமைய ஊடறுப்பு அணி தளம் திரும்புகின்றது.
உள்நுழைந்த அழித்தெழிப்பிற்கான சிறப்பு அணிகள் கட்டளைப்பீடத்துடன் தொடர்பினை மேற்கொண்டபடி நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பத்து நாட்களின் பின்னர் அவர்களுக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. நகர்வின் போது இவர்கள் வைத்திருந்த செய்மதித் தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தமையால் அதுவும் செயற்படாமல் போய்விட்டது. எனவே இவர்களுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

 

சிறப்பு அணியின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக கட்டளைப்பீடத்தால் மூன்று முதன்மைப் போராளிகள், அவ்வணி நகர்ந்து சென்ற பாதையூடாக எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பணியின் தொடர்பை எடுப்பதற்கு தேடியலைந்து முடியாது போக, குறிப்பிட்ட நாட்களின் பின்பு பின்தளத்தினை நோக்கி நகர்ந்து வந்து தகவல்களைக் கொடுக்கும்போது ஏற்பட்ட சம்பவமொன்றில் மூவரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள நேரிட்டது.

 

சிறப்பு அணியின் தாக்குதல் திட்டமே எமது தலைவிதியை மாற்றியமைக்க வல்லமை மிக்கதாக இருந்தமையால் அதனது தொடர்பை எடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாட்டுக்கு வெளியேயுள்ள பல வளங்களைப் பயன்படுத்தி அணியுடனான தொடர்பை ஏற்படுத்த பல முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

சில தினங்களின் பின்னர் மாற்று ஆதரவு ஆற்றல்களைப் பயன்படுத்தி 'வோக்கி' மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது சிறப்பு அணியினரை உற்சாகத்துடனும், வேகத்துடனும் நகர உதவியது. நகர்ந்து கொண்டிருந்த சிறப்பணிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்; தங்களுக்கு நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்திருந்தனர்.

 

இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் வோக்கியல் இனி தொடர்பு கொள்வது கஸ்ரமாக இருக்கும் நாங்கள் தரப்பட்ட வேலையை முடிப்போம் என்று கூறியபடி அணி நகரத் தொடங்கியது. இதன் பின்னர் அணிக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு இருக்கவில்லை தமக்குத் தரப்பட்ட இலக்கை அழிக்கவேண்டும் என்று தாக்குதல் அணி ஒருபக்கமும்,
இனி எப்படித் தொடர்பினை மேற்கொள்ளலாம்? எனவும் அதற்கான மாற்று ஒழுங்குகளைச் செய்தபடி கட்டளைப்பீடமும்.

 

26 பேர் கொண்ட சிறப்பு அணியில் ஒரேயொரு பெண்போராளி மட்டுமே மே மாதம் 2ம் நாள் தன்தளத்திற்கு வந்து தனது போராளித் தோழர்களைச் சந்திக்கிறார்…………..

 

அப்படி என்றால் ஏனைய 25 பேரும் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?

 

முற்று முழுதாக உண்மைச்சம்பவங்களுடன் களத்திற்கு திரும்பிய போராளியின் சாட்சியங்களுடன் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும்.
எத்தனையோ தியாகங்கள்!

 

எத்தனையோ அர்ப்பணிப்புகள்!

இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!

தம்மை ஆகுதியாக்கியவர்கள்!

 

இவர்களின் வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.

இன படுகொலை - அவசர வேண்டு கோள்

இன படுகொலை - அவசர வேண்டு கோள்

(மின் அஞ்சலில் நமக்கு வந்தது)

இந்திய எழுத்தாளரும், மனித உரிமைச்செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் அவர்கள்  ஏப்ரல் 2009இலேயே சரியாக இனங்கண்டு கூறியதுபோல் இலங்கையில் நடந்தது  "எல்லாத் தமிழர்களுக்கும் எதிரான இனவெறிப்போர்" ஆகும்.அப்போது இடம்பெற்ற தமிழின அழிப்பு,போர்க்குற்றங்கள்,மனிதத்ற்கு எதிரான குற்றங்கள் எல்லாம் ஐ.நா. அமைப்புகளாலும் ஆதிக்கசக்திகளாலும் மூடிமறைக்கப்பட்டு,புறக்கணிக்கப்படுகின்றன. இத்தகைய நிலையில் மெல்லிய ஓர் ஒளிக்கீற்றாகத் தென்படுவதுதான் ஐ.நா.செயலாளர்  நியமித்துள்ள மூவர் கொண்ட நிபுணர்குழு.அதன் தலைவரான Marzuki தருச்மன் [இந்தோனேசியாவின் சட்டவாளர்நாயகம்] முன்பு இலங்கைக்கான International இண்டேபெண்டேன்ட்  Group of Eminent Persons [ IIGEP ] உறுப்பினராக இருந்தவர்.இலங்கையில் நீதிநியாயம் இல்லை, மனிதஉரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்பதையெல்லாம் அப்போதே  தெரிந்துகொண்டவர்.இப்போது அக்குழுவினர் நமது சாட்சியங்களை எதிர்வரும் டிசெம்பர்   15ந்திகதிக்கு முன்பாக அனுப்பும்படி அறிவித்திருக்கிறார்கள்.
panelofexpertsregistr y@un.org This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .


இவர்கள் ஆலோசனைகூறும் குழுவினரேயொழிய விசாரணைநடத்தும் குழுவினர் அல்ல. எனவே இப்போது நாம் செய்யக்கூடியது இவர்களிடம் சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழுவை ஐ.நா. அமைத்து பூரணமானவிசாரணையை மேற்கொள்ளவேண்டுமென வற்புறுத்தவேண்டும்.அதற்கான ஆலோசனையை இவர்கள் வழங்கவேண்டுமெனவற்புறுத்தவேண்டும்.அப்படிச்செய்யத் தூண்டுவதற்கு தமிழர்களாகிய நாம் பெரும்பெரும் எண்ணிக்கையான மின்னஞ்சல்களை அனுப்பவேண்டும்.சர்வதேசவிசாரணைக்கானவற்புறுத்தல்கள் பலபலஆயிரங்களாக அமையின் அதற்கான ஆலோசனைவழங்கும்  நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படும்.உலகில் எட்டுக்கோடி தமிழர்கள் இருப்பதாகக்கூறப்படுகிறது.அதில் சிறுபகுதியினர் செயற்பட்டாலேயே அது நிறைவேறிவிடும்.


இந்தப் பெருமுயற்சியில் இளைஞர்கள்,முதியவர்கள் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும். மின்னஞ்சல் வசதியுள்ள புலம்பெயர்தமிழர்கள்,மேற்குநாடுகளில் வாழ்வோர்,தமிழ்நாடு, மலேசியா,சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வோர் எல்லாரும் பங்குகொள்ளலாம்.எமது துன்பங்களைத்தெரிந்த தமிழரல்லாத வேற்றினமக்களும் இந்த வேண்டுகோளை முன்வைக்கலாம்.ஏனெனில் பொருத்தமான விசாரணை மேற்கொள்வதுஐ.நா.வின் அடிப்படையான ஆரம்பக்கடமை; அதை எவரும் வற்புறுத்தலாம்.மேலும் நமது கருத்துகளை ஆங்கிலத்தில்மட்டுமல்லாது பிரெஞ்சு,யேர்மன் போன்ற முக்கிய ஐரோப்பிய மொழிகளில் அனுப்பினால் அவர்கள் அதனை மொழிபெயர்த்து அறிந்து கொள்வார்கள்;அது அவர்களின் கடமை.

உங்களுடைய கருத்துகளை பக்கம்பக்கமாக எழுதவேண்டும் என்பதல்ல.சில வரிகளில்  எழுதியும் அனுப்பலாம்.மொழியறிவு குறைவானவர்களுக்கு கூடிய அறிவுள்ளோர் உதவி செய்யலாம். மாதிரிக் கடிதங்களைத் தயாரித்துக்கொடுக்கலாம்.


நடைபெற்றபோரின்போது தமிழ்மக்கள் பாரியதுன்பங்களையும்,அழிவுகளையும்  அனுபவித்தார்கள். அவற்றை விசாரித்து தமிழ்மக்களுக்கு தேவையான நீதியை வழங்க சுதந்திரமான சர்வதேசவிசாரணைக்குழு அவசியம்.இலங்கைஅரசு நியமிக்கும் எந்தக்குழுவும் வழமைபோல் காலத்தை இழுத்தடிக்கும் கண்துடைப்பு வேலையாகவே அமையும். எனவே  நீதிவழங்க பக்கச்சார்பற்ற சர்வதேசவிசாரணை அவசியம் என்பதை எல்லோரும்  வற்புறுத்தவேண்டும்; அது மிகமுக்கியமானது.



சம்பந்தப்பட்ட சாட்சியமளிப்பதற்கான அறிவித்தலின் ஆங்கில-தமிழ் வடிவத்தை இணைப்பு[Link] 1யும்,அவர்களின் உத்தியோகபூர்வஅறிவிப்பை இணைப்பு 2யும் 'கிளிக்' செய்து பார்க்கலாம்.அவற்றிற்குக்கீழே 'தமிழ்நெற்' இணையத்தளத்திலும்,பிற இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திக்கட்டுரைகளுக்கான இணைப்புகள் தரப்-பட்டுள்ளன. அவற்றைக் 'கிளிக்' செய்து நீங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல்களுக்கான கருத்துகளையும்,மேற்கோள்வாசகங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.மனித உரிமைகள்காப்பகம் [ HRW ], சர்வதேசமன்னிப்புச்சபை [ AI ], சர்வதேச நெருக்கடிக்கான குழு[ ICG ] என்பன பலஅறிக்கைகள் மூலம் சிறப்பான,தெளிவான கருத்துகளை முன்வைத்துள்ளன;அவற்றைப் படித்து நாம் பயன்படுத்தலாம்.


இந்தமின்னஞ்சலின் பிரதிகளை உங்கள் உறவினர்கள்,நண்பர்கள்,அறிமுகமானவர்கள், வேற்றினத்தவர்கள் என எல்லோருக்கும் அனுப்புங்கள்.வேறுநாடுகளில்வாழ்பவர்களுக்கும்அனுப்புங்கள்.நமக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சிறியவாய்ப்பை எல்லோரும் தவறாது  பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்ளுங்கள்! நமது ஈழதேசவிடுதலைக்காக தமது இனிய உயிர்களை ஈகம்செய்த மாவீரச்செல்வங்களை நினைவுகூரும் இந்தமாதத்தில் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியின் ஓர்அம்சமாக இந்தப்பணியை மேற்கொள்வோம். அதற்காக எல்லோரையும் தூண்டுங்கள்! மிக்கநன்றிகள்; வணக்கங்கள்.


Chronology:
04.08.10  The Elders' Statement: Sri Lanka, truely terrifying
24.05.09  Marie Colvin:Tigers begged me to broker surrender
01.04.09  Arundhati Roy: It is a racist war on all Tamils
Photos showing the tragic plight of Tamil civilians

Comments  

நான் அரபு நாட்டில் வாழும் ஒரு தமிழன் ,என் ரத்த சொந்தங்களுக்கு நடந்த கொடுமை கண்டு மனம் வெம்பி வெம்பி புழுங்கி கொண்டு வாழ்கிறேன்.என் மக்கள் சிந்திய ஓவரு துளி ரத்தத்திற்கும் இந்த உலகம் பதில் சொல்லிய ஆகா வேண்டும்.எல்லா உயிர்க்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு,கொடுங்கோல ன் தண்டிக்கப்பட வேண்டும். தப்பி விடவே கூடாது கூடாது கூடாது ,என் கடைசி மூச்சி உள்ள வரை நான் போராடுவேன் இது சத்தியம் சத்தியம்

ஒரு வோட்டுக்கு நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்


தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது

"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."


இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).



ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.



என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.



திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.


( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)

ஊழல்களின் ராஜா - ராஜா செய்த ஊழல்

ஊழல்களின்  ராஜா - ராஜா செய்த ஊழல்  (படித்ததில் அதிர்ந்தது )

இது தினமலரின் இன்றைய செய்தி

இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

 

சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.

 

சாதாரண மக்களும் திகைப்பு: "ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை, ஸ்வான், யுனிடெக், எஸ்.டெல்' என, மீடியாக்களில் அடிக்கடி கூறப்படுவதை, ஏதோ வேற்றுக் கிரக மக்கள் பேசும் மொழி யோ என, நினைத்து, இந்த விவகாரத்தை பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கூட, 1.76 லட்சம் கோடி ரூபாய் என, பேச்சு எழுந்ததுமே, ஒரு கணம் திகிலடித்து, அதிர்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியுள்ளனர். எங்கு முறைகேடு நடந்தது, எப்படி நடந்தது என்பது போன்ற விவகாரங்கள் எல்லாம் புரியவில்லை என்றாலும், மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொண்டுள்ளனர்.

 

ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் மூலம், இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயையும் யாருடைய பாக்கெட்டிற்கோ, போய் விட்டதாக அர்த்தம் இல்லை. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட, நிதி அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் கிடைக்காமல் போய் விட்டது என்பது தான், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் குற்றச்சாட்டு. தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, இந்த வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்றும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமங்கள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், யார், யார் லாபம் அடைந்தனரோ அவர்கள் தான் ஊழல் செய்தவர்கள். இதற்காக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவர்கள் எவ்வளவு லாபம் பெற்றனரோ, அந்த தொகை தான் ஊழல் தொகை. அது, சாதாரண தொகையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக கூற முடியும்.

 

மூன்று ஆண்டுக்கு முன்பே கசிந்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தாலும், மூன்று ஆண்டுக்கு முன்பே, இதுகுறித்து அரசல், புரசலாக மர்மங்கள் கசியத் துவங்கி விட்டன. போதிய இடைவெளிகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும், அப்போது யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய விஷயங்கள் வெளியில் கசியத் துவங்கியதும் தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

 

பலமுனை தாக்குதல்: பா.ஜ., - இடதுசாரி கட்சிகள், அ.தி.முக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்தன. மறுபக்கம், மீடியாக்கள் அடிக்கடி இதுகுறித்த செய்திகளை வெளியிட்டவாறு இருந்தன. மற்றொரு பக்கம், தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக, தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை சமாளிப்பதற்காக சி.பி.ஐ., விசாரணை, பொது கணக்கு குழு ஆய்வு என, அரசு சார்பில் எவ்வளவோ சமாளிப்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

 

மற்றொரு பக்கம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, "ராஜா விவகாரத்தில் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு தரத் தயார்' என, சமயம் பார்த்து அரசியல் காய் நகர்த்தினார். சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. அனைத்து பக்கங்களிலும் இருந்து வந்த பலமுனை தாக்குதலில் மத்திய அரசு நிலைகுலைந்து போனது. வேறு வழியில்லாமல், இறுதிக் கட்ட நடவடிக்கையாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ராஜாவுக்கு உத்தரவு வந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையை பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படி தான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை'என, அடம்பிடித்த ராஜா, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார்.

 

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை: ராஜா ராஜினாமாவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என, நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாய், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையும் இதில் உருட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்தது என்? என, பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால், காங்கிரஸ் மேலிடம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் பதவியும் ஊசாலாடிக் கொண்டிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

 

தொலைத் தொடர்பு ஆணையத்தின் அதிரடி: இதுவரை மவுனம் காத்து வந்த தொலைத் தொடர்பு ஆணையமும் (டிராய்) தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2008ல் புதிதாக நுழைந்து, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 62 லைசென்சுகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. "டிராய்' அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவை நடத்துவதற்காக அனுமதி பெற்ற எடிசலாட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். யுனிடெக் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிநார் நிறுவனத்துக்கு எட்டு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஷியாம் குரூப்பிற்கு பத்து மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பத்து உரிமங்கள், லூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 19 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

 

டிராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.என்ன செய்யப் போகிறது சி.பி.ஐ., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து வாங்கிக் கொண்ட வெறுப்பில் இருக்கிறது சி.பி.ஐ., தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகி விட்டது. எனவே, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். முறைகேட்டுக்கு துணை நின்ற அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., வலைவிரிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.

 

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : சி.ஏ.ஜி., அறிக்கை கூறுவது என்ன?

 

* கடந்த 2008ல் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 645 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

* ஏல முறைக்கு பதிலாக, முதலில் வருபவர்களுக்கே ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டுள்ளது.

 

* உரிமம் கோரிய 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதிய நிதி மூலதனத்தை பெற்றிருக்கவில்லை. இவற்றில் 45 நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் கோருவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை.

 

* சில நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 

* மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு துறை (டிராய்) விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

 

* சில தனியார் நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்குவதிலும் வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை.

 

* உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. ஸ்வான் நிறுவனம், தனது 45 சதவீத பங்குகளை "எடிசலாட்'என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. யுனிடெக் நிறுவனம், தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.

 

* உரிமம் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றதால், பெரிய அளவில் பயன் அடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 

* உரிமம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.

 

* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

 

* அனுபவம் இல்லாத "ஸ்வான்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

 

* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்க கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.

 

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

 

1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?

 

* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.

 

* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.

 

* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.

 

* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.

 

* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.

 

இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:

 

1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

 

2. சர்க்கரை ஊழல் 650 கோடி

 

3. போபர்ஸ் ஊழல் 65 கோடி

 

4. ஹவாலா ஊழல் 65 கோடி

 

5. எம்.பி., டிரேடிங் 32 கோடி

 

6. உர ஊழல் 133 கோடி

 

7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

 

8. இந்தியன் வங்கி 1,336 கோடி

 

9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

 

10. நில ஊழல் (பீகார்) 400 கோடி

 

11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

 

12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!


ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் 'பாதந்தாங்கிகள்' (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். "கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு" என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், "இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்" என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!",  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் "சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய "கருவறை நுழைவு போராட்டத்தின்" வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

"தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!"

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் 'கைப்புள்ள கதைபோல்' 'கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!' என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது "அயோத்தி அல்ல", தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் 'பாதந்தாங்கிகள்' (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். "கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு" என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், "இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்" என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

"மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!",  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் "சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய "கருவறை நுழைவு போராட்டத்தின்" வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

"தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!"

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் 'கைப்புள்ள கதைபோல்' 'கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!' என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது "அயோத்தி அல்ல", தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!