தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திராவிட நாட்டு வாழ்த்து - பாவேந்தரின் வைர வரிகள்

திராவிட நாட்டு வாழ்த்து

 

சீருடைய நாட்டு - தம்பி

 திராவிட நன்னாடு

 

பேருடைய நாடு - தம்பி

 பெருந்திராவிடந்தான்

 

ஓர் கடவுள் உண்டு - தம்பி

 உண்மை கண்ட நாட்டில்

 

பேரும் அதற்கில்லை - தம்பி

 பெண்டும் அதற்கில்லை

 

தேரும் அதற்கில்லை - தம்பி

 சேயும் அதற்கில்லை

 

ஆரும் அதன் மக்கள் - அது

 அத்தனைக்கும் வித்து

 

உலதுரு தெய்வம் - அதற்

 குருவ மில்லை தம்பி

 

அல்லி வைத்த ஆப்பி - தம்பி

 அதிற் கடவுளில்லை

 

குள்ளமில்லை தெய்வம் - அது

 கோவில்களில் இல்லை

 

தெள்ளு பொடி பூசும் - தம்பி

 சிவன் கடவுளல்ல

 

(அறுபதுடன் ஒன்று) தம்பி

 அரி கடவுளல்ல

 

அறுமுகமும் அல்ல - தம்பி

 ஐங் கையனும் அல்ல

 

அறு சமயம் சொல்லும் - தம்பி

 அது கடவுள் அல்ல

 

பிற மதத்தில் இல்லை - அந்தப்

 பெரிய பொருள் தம்பி

 

திராவிடர்கள் முன்னே - தம்பி

 தெரிந்துணர்ந்த உண்மை

 

ஒரு மதமும் வேண்டாம் - தம்பி

 உண்மை உடையார்க்கே

 

பெரு மதங்கள் என்னும் - அந்தப்

 பேய் பிடிக்க வேண்டாம்

 

திருட்டுக் குருமாரின் - கெட்ட

 செயலை ஒப்ப வேண்டாம்!

 

காணிக்கைகள் ஒட்டி - நீ

 கண்கலங்க வேண்டாம்!

 

ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி

 (எழுபதுடன்) வாழி!

 

தோணியினில் ஏற்றி - நல்ல

 சொர்க்கம் சேர்க்க மாட்டார்

 

நாண மற்ற பேச்சை - நீ

 நம்ம வேண்டாம் தம்பி

 

சாதியில்லை தம்பி - மக்கள்

 தாழ் வுயர்வுமில்லை

 

                           - பாவேந்தர்