தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

என் நினைவுகளை எடுத்துப்போனாய்...



உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....

என் உயிரில் பாதி உன்னிடமும்
மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும் பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருந்தேன்....

நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...

நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்த்தது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டு இருக்கையில்...

நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது...

....பகலவன்....