தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தினமலர் எப்படி ஒரு உண்மையை பொய்யாக்குகிறது ?

தினமலரின் இப்படி ஒரு செய்தி
பள்ளிக் குழந்தைகளை போருக்கு அனுப்பும் புலிகள்: ஆனையிறவு போர்க்களத்தில்

இதில் உண்மை என்னவென்றால் சிறிலங்கா ராணுவத்தின் எறிகணை தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் பலி என்று போட வேண்டிய செய்தியை எப்படி மாற்றுகிறார்கள் பாருங்கள்.

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களின் மேல், திட்டமிட்டு எறிகணை ஏவி அவர்களை அழித்தது மட்டுமில்லாமல், அந்த செய்தியை இது போன்ற கயவர்களின் துணையோடு எப்படி மாற்றி பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள். பன்னியுடன் வம்புக்கு போவதால் யாருக்கு லாபம் என்று முந்தைய பதிவில் கற்பழிப்பு பதிவருக்கு எதிராக நான் சொன்னது நினைவிற்கு வருகிறது. இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குதே இவனுங்க பண்ற அநியாயங்கள், அட்டூழியங்களை பார்க்க்கும் போது. அதுவும் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் பண்ணும் கொடுமைகளை தாங்க முடிவதில்லையே.

தமிழ் மக்களை எப்படி திசை திருப்புகிறார்கள் பாருங்கள். இவனுங்க கதைகள் எல்லாம் இப்போது இந்த உலகில் எடுபடாது என்று தெரிந்திருந்தும் இன்னும் ஏமாற்றி கொண்டிருக்கிறானே, இவனை உதைக்க வேண்டாமா. தமிழனால் வயிறு கழுவி கொண்டு தமிழனுக்கே ஆப்பு வைக்கும் இவனை எப்படி உதைத்தாலும் தகும்.

இவைகள் ஏன், எதற்கு, இப்படி செய்கின்றன என நாம் பலமுறை எழுதியாகி விட்டது.

இவனுங்கள் எல்லாம் திருந்தா ஜென்மங்கள். தமிழரை அழிப்பதற்கு வந்த பரதேசிகள். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும்'.