தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உணர்வற்றவர்களுக்கு மட்டும்!-கவிதை



உறவுகளின் ரத்த
வாடையா மூக்கை மூடிக் கொள்வோம்;

அழுகுரலா
காதை அடைத்துக் கொள்வோம்;

கதறுகிறார்களா
அங்கே நோக்க மறுப்போம்;

ஈழம் பற்றி பேச்சா
தூரே விலகுவோம்..

வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால்
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!

உணர்வற்றவர்களுக்கு மட்டும்

நன்றி - வித்யாசாகர்