தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஈழப் போரில் மரணமடைந்த குழந்தை நினைவாக



குலம் தழைக்க பிறந்தவன்
அவனுக்கும் உண்டு
தாய் தந்தை தாத்தா பாட்டி
அத்தை மாமா.....


தினசரி நிகழும் விவாதம்
இவன் யார் சாயலென்று.....

எத்தனயோ உண்டு
செல்ல பெயர்கள் அவனுக்கும்....

அவன் "ம்மா" உச்சரித்த நாள்
திருவிழா அவர்களுக்கு.....

தலை சிதைந்து போன இவ்வுடலில்
இன்று அடையாளங்கள் ஏதுமில்லை
இவன் ஆண் குழந்தை
என்பதை தவிர....

நன்றி - சபிதா பேகம்