தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருணாஸ் சிங்களவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துப் பாடல் : சிங்கள வானொலியில் நேரடி ஒலிபரப்பு

சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த, ரய்னர் சில்வா என்ற சிங்களவரும், பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் சூரியன் எப்.எம்யின் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த கருணாஸ், தமிழன உணர்வாளர்களின் எதிர்ப்பால் கொழும்பு செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தாலும் சிங்களனிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.

நேற்றைய சிங்கள சூரியன் எப்.எம். நிகழ்ச்சி ஒன்றில் கருணாசும் அவரது மனைவி கிரேஸ் கருணாசும் தாங்கள் இருவரும் இலங்கை வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து, சிங்களவர்களுக்கு திரைப்பட வாழ்த்து பாடல் ஒன்றை பாடி உள்ளனர், அது நேரடியாக ஒளிபரப்ப பட்டுள்ளது.  

இவர்களது இத்தகைய செயல் உலக தமிழர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது.