தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வாய்தா வாங்கும் ஜெயலலிதா - துணை முதல்வர் போராட்டம் அறிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 13
ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின்
நடவடிக்கைகளால் தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது.


மக்களைத் தொடர்ந்து அவமதித்து வரும் அவருடைய போக்கினை திமுக இளைஞர் அணி
சுட்டிக் காட்ட விழைகிறது. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு
எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்
ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மாவட்ட இளைஞர் அணியின்
அமைப்பாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையிலும்
இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.