தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சம்பிராதயமான மூன்றாவது கடிதம் எழுதும் மூன்றாவது நபர் !

தலையங்கம் :



முதல் நபர் முதல்வர் கருணாநிதி .



இரண்டாவது நபர் அவருக்கு பதில் எழுதிய பழனியப்பன் சிதம்பரம்.
மூன்றாவது நபர் இப்போது தங்கபாலு .



இனி நாலாவது நபராக இந்த பட்டியலில் சேரப்போகிறவர் , தங்கபாலுவிற்கு,  பதில் அளிக்கபோகும் மன்மோகன் சிங்க்.



இந்த மூன்றாவது கடிதம் கிட்டத்தட்ட 900 பேர் இறந்த பிறகுதான் எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.



மத்தியில் இவர்களது கட்சிதான் ஆளும் கட்சி, மாநிலத்தில் இவர்கள் கூட்டணிதான் ஆளும் கட்சி.


இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்த பொழுது , இலங்கை நாட்டின் 'இறையாண்மை' யில் தலையிட முடியாது என்று சொன்னீர்கள்.



ஆனால் உண்மையில் இந்திய காங்கிரஸ் அரசு என்னென செய்தது எனபது எல்லாருக்கும்  தெரியும் .


ராஜபக்சே சொன்னான் ' இந்தியாவின் போரை நான் நடத்தினேன் ' என்று .

நிற்க.



இப்போது இந்திய மீனவனையே இலங்கை கடற்படை கொன்று வருகிறது.



கேள்விக்கு பதில் அளித்த கடல் படை தளபதி சொல்லுகிறார், இந்திய மீனவர்கள் கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லுகிறார்கள் அதனால் கொல்லபடுகிறார்கள் என்று.



எல்லையை தாண்டி ஆயிரம் முறை சென்ற , குஜராத் மீனவர்களில்  ஒருவனை கூட  , எதிரி நாடு பாகிஸ்தான் சுட்டு கொல்லவில்லை.


எல்லையை தாண்டும் எல்லாரையும் பிடித்து விசாரிக்கட்டும் . கைது செய்யட்டும்.  பக்கத்தில் வந்து அவன் அப்பாவி மீனவன் என்று தெரிந்தும் , அடித்து , உதைத்து , நிர்வாணப்படுத்தி , பிறகு கொன்றும் அனுப்புகிறார்கள் என்றால்.



இந்த மீனவர் பிரச்சினைக்காக மட்டுமே இந்தியா இலங்கை கடும் நடவடிக்கை எடுக்கலாம்.



ஆனால் இது வரை செய்யவில்லை, போயும் போயும் ஒரு மீனவனுக்காக ஒரு நாட்டை பகைத்து கொள்ளவா? என்ற  கண்ணோட்டதில்தாம் இந்திய அரசு உள்ளது.



அதில் சாவது தமிழன் , என்றிருப்பதால் , கூடுதல் கவநீனம்.



இதில் நாம் காணும் தெளிவு,



இந்தியா மாநில மக்களின் என்ன ஓட்டத்தையும்  அவர்களின் சுய அடையாளத்தையும் காக்காது.

 


இந்தியா அரச பயங்கரவாதத்தில்  இந்தியா வை காக்க நினைக்கிறது.
அரச பயங்கரவாத்தினால் பல்வேறு ஓட்டுக்களாக இருக்கும் இந்தியாவை காக்க நினைப்பது முட்டாள்தனமான அரசு சிந்தனை.



தலையங்கதிர்க்கான செய்தி இங்கே :




சென்னை, ஜூலை 9:


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:



கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். மற்ற மூவரையும் நிர்வாணப்படுத்தி, மிருகவெறியோடு தாக்கிவிட்டு படகையும் நொறுக்கியிருக்கிறார்கள். மீன்கள், வலை உள்ளிட்ட பொருள்களை கடலில் எறிந்துள்ளனர்.



இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தந்த நேரங்களில் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தமிழக மீனவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது என்று இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நேரில் வலியுறுத்தியதை நாடறியும்.



ஆனாலும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நிற்கவில்லை. இனியாவது தமிழக மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு கடுûமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுகொண்டுள்ளார்.



இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் செல்லப்பன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  தங்கபாலு அதில் குறிப்பிட்டுள்ளார்.