இந்த போராட்டத்திற்கு தேமுதிக வின் ஆதரவை தாம் நேரில் போய் அழைக்க போவதாய் தா பாண்டியன் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பா ம க ஆதரவு இல்லை என்று இன்று அறிவித்துள்ளது.
இது பா ம க காங்கிரஸ் கூட்டணியில் இருக்கவே தனது விருப்பத்தை தெளிவாக்கி உள்ளது.
எனவே இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் ஒரே கட்சி தேமுதிக தான்.
தேமுதிக , திமுக உடன் கூட்டணி சேர்ந்தால், அது தற்கொலைக்கு சமம் என்பதை அதன் தலைவர்கள் நன்றாய் உணர்வார்கள்.
காங்கிரஸ் கட்சியும் தனித்து வரும் வாய்ப்பு அறவே இப்போது இல்லை என்பதும் தெளிவாகிறது.
திமுக கம்யூனிஸ்டுகளுக்கு வலை வீசுகிறது.
மிகபெரும் முயற்சியாய், இப்போது பலமாய் உள்ள மதிமுகவையும் அசைக்க முயற்சிக்கிறது.
ஈழ விடயத்தில் மதிமுக, திமுக விற்கு எதிர்ப்பு நிலையில் மிக தீவிரமாய் உள்ளதால் , அந்த கட்சி திமுக வோடு இணையாது என்பது தெளிவு.
தேமுதிக வும் அதிமுக அணிக்கு வரும் சாத்தியகூறுகள் தாம் அதிகம்.
எனவே சட்டசபைக்கான கூட்டணி இவ்வாறே இப்போதைய நிலவரத்தில் உள்ளது.
திமுக அணி
திமுக
காங்கிரஸ்
பா ம க
விடுதலை சிறுத்தைகள்
அதிமுக அணி
அதிமுக
மதிமுக
தேமுதிக
இடது கம்யூனிஸ்ட்
வலது கம்யூனிஸ்ட்
பா ஜா க தனி கட்சியாக போட்டியிடும்.
புதிய தமிழகம் கட்சி வழக்கம் போல திமுக ஆதரவு நிலைக்காக தனி கட்சியாக நிற்கும். அதிமுக வின் முக்கியமான தொகுதிகளில் போட்டியிடாமல் திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். ஆனால் திமுக எதிர்ப்பு அரசியல்தாம் செய்யும்.
கொங்கு முன்னேற்ற அணியும் தனியாக நிற்கும். இவர்களும் திமுக ஆதரவு நிலைக்கு ஏற்ப போட்டியிடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி மற்றும் சமூக சங்கங்கள் திமுக ஆதரவு நிலை எடுக்கும்.
இன்றைய நிலவரத்தில் இதுதான் தமிழக கட்சிகளின் நிலைமை.