தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருணாநிதி (vs) எம்.ஜி.ஆர்

இன்று சட்ட சபையில் நடந்த இந்த உரையாடல்களும் அது செய்தியானபின்பு வாசகர்களிடமிருந்து வந்த விமர்சனங்களும் இங்கே பதியபடுகிறது :

செய்தி :


என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!' என்ற பாடல் எனக்காக எம்.ஜி.ஆர். பாடினார்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

எனக்குத் தெரியும், எம்.ஜி.ஆர். என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது.​ ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அவர்.​ இன்னும் சொல்லப் போனால், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றபோது, தலைவராக நான் தான் வரவேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர். அதற்காக ஆட்களைச் சேர்த்தவர்.

அந்த நன்றி எனக்கு உண்டு. சாகின்ற வரையிலே உண்டு. அதைபோல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். எனவே, எம்.ஜி.ஆர். பாடிய பாடலை நான் இப்படி கருதிக் கொள்கிறேன். அந்தப் பாடலில் "தலைவன் இருக்கின்றான் மயங்காதே' என்று வரும் வரி, என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். தலைவி இருக்கிறார் மயங்காதே எனச் சொல்லவில்லை'' என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

வாசகர் விமர்சனங்கள் :

1 ) "மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" அதே எம்.ஜி.ஆர்.தான் பாடினார் இந்த கருணாநிதிக்காக

2 ) திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என கருணாநிதியை மனதில் வைத்தே பாடப்பட்டது.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள் அத்துணையும் பொருள் திருடன்,தமிழினத் துரோகி கருணாநிதியை மனதில் வைத்தே பாடப்பட்டது.அதனால் தான் எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தவரை இந்த பன்னாடை கருணாநிதியால் பதவிக்கு வரமுடியவில்லை.

3 ) ஒரு வாலுமில்லை நாலு காலுமில்லை ஒரு மிருகம் இருக்குது நாட்டுக்குள்ளே" '"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" "நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும்" "மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே" "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே " "சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க" "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" " உரத்தில் கூட ஊழல்பண்ணி எங்க பேரைக் கெடுக்கிறான்" இப்படியெல்லாம் அதே எம்.ஜி.ஆர்.தான் பாடினார். இவை காலத்தால் அழியாத பாடல் வரிகள்

4 ) 40 ஆண்டுகளாக இருந்த நண்பரையும்(MGR), தம்பியையும்(வைகோ) கட்சியை விட்டு அனுப்பிவிட்டு, கழகம் என்ற குடும்பத்தின் தலைவராக தனக்கு போட்டியில்லாமையை உருவாக்கியப்பின், அதற்கு வெளியேறியவர்கள் தான் காரணம் என்று கூறும் கைவந்த கலைஞர். 'நேருக்கு நேராய் வரட்டும்' என்று MGR பிரிந்தப்பின்பு கருணநிதிக்கு பாடிய பாடலுக்கேர்ப்ப, நேருக்கு நேராய் வந்து தோல்வியுற்றப்பின், நேரு கட்சி துணையுடன் MGR ஆட்சியை கவிழ்க்கப் பார்த்ததும் ஒரு நண்பர் செய்யும் செயலா? ஆயிரத்தில் ஒருவன் MGR அப்படத்தில் வரும் MGR, ஜயலலிதா, நம்பியார்(கருணாநிதி) இன்றும் அப்படியே பொருந்தும்

5 ) நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது. புரட்சித் தலைவருக்கு எதிரான இயக்க விளக்கும் அணையாமல் இருப்பதை உணர்ந்து இனியேனும் எதிர்ப்பிற்கு முந்தைய நிலை‌யைக் கூறி மக்க‌ளை எரிச்சல்படுத்தக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

6 ) 40 ஆண்டுக் கால நண்பரா மகனா என்ற நிலை வந்த பொழுது நிலைப்பாடு மாறியதை மறக்கக் கூடாது. தந்தை பெரியார் இறை மறுப்பாளராக மாறிய பின்பு அவரின் முந்தைய கருத்துகளை எவ்வாறு எடுத்தாளக் கூடாதோ, அதே போல் நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது.