தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ராஜ பக்சே வெற்றி தமிழர்களை கொன்றதற்கு அல்லது இன அழிப்பு செய்ததிற்கு சிங்களவனின் பரிசு ?

ராஜ பக்சே வெற்றி தமிழர்களை கொன்றதற்கு அல்லது இன அழிப்பு செய்ததிற்கு சிங்களவனின் பரிசு ?

இலங்கை தீவின் அதிபர் தேர்தலில் ஆளும் அதிபர் ராஜபக்சே மற்றும் பொன் செகாவிர்க்கும் இடையில் நடந்த தேர்தல் போட்டியில் ராஜ பக்சே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஊடகங்கள் கணித்த பொன்சேகாவின் வெற்றி பொய்யாகி உள்ளது. இது ஊடக வழி வந்த கணிப்பினால நடந்தது . களத்தின் நிலைமை, களத்தின் அட்டகாசங்களை, உண்மைகளை காரணமாய் கொண்டு யாரும் கணிக்க இயலவில்லை.
ஆனால் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கான வாழ்வும் உரிமையும் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை.
சரத் வெற்றி பெற்றிருந்தால் சிங்களவனிற்கு பிடிக்காத செயலை அதாவது தமிழர் இன அழிப்பை ராஜ பக்சே செய்தான் என்று சொல்லி இருக்கலாம் . ஆனால் அதிபரே திரும்பவும் வென்றிருப்பது , சிங்களவனுக்கு பிடித்த செயலைத்தான் அதிபர் செய்தார் என்ற பார்வையையும் நாம் பார்க்கவேண்டி உள்ளது.
சிங்களவனின் நோக்கம் தமிழன் அங்கே இருக்க கூடாதென்பதில் தெளிவாய் ஒவ்வொரு சிங்களனும் உள்ளான் .
தமிழன் சாவதை அரசியல் லாபமாய் மாற்ற பார்க்கிறது இந்திய அரசு . எரிகிற கொள்ளியில் பிடுங்கியது லாபம் என்ற நோக்கில் சீன உள்ளது .
தமிழ் நாட்டில் தமிழர்களை காப்போம் என்று அரசியல் கோடுகளை மீறி யாரும் வெளியில் வரவில்லை. பல கட்சிகள் ஈழதமிழர் பார்வையில் , இன்னும் தெளிவில்லாமல்தான் உள்ளன.
ஈழ தமிழர் விடயத்தில், சூழலுக்கு ஏற்ப காட்சிகளையும் கொள்கைகளையும் மாற்றி பேசுகின்றன.
இந்திய அரசின் பிடியை மீறி தமிழக அரசு ஏதும் இலங்கையில், தமிழர் நன்மைகளை செய்த மாதிரி தெரியவில்லை. நிவாரண பொருட்களை அனுப்பியதை தவிர .
பல விடயங்களை நோக்கும் பொது உலக தமிழர் ஒன்று பட வேண்டிய காலம் இது. உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் ஒன்று பட்டு கோரிக்கைகளை போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் இலங்கை தீவில், ஈழத்தில் ஒரு தமிழனும் வாழ முடியாது இது நிச்சயம்.