தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காணப்பட வேண்டிய நியாயம் - பல்கலைக்கழகங்கள்


செய்தி
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து


Deemed University in TamilNadu


இந்தியாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு உயர்கல்வித்துறையின் விதிகளை மீறப்படுவது, கூடுதல் கட்டணம் வசூல் செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு வந்தன. இந்நிலையில் புகார் செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை கோரியும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஒழுங்கு படுத்தக்கோரியும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விப்லாவ் யாதவ் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதன்படி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்த பதில் மனுவில்...' நாடு முழுவதும் உள்ள 126 நகிர்நிலைப்பல்கலைக்கழகங்களில் 38 பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. 44பல்கலைக்கழகங்கள் தரமாக செயல்பட அவற்றிற்கு 3ஆண்டு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 44 பல்கலைக்கழங்கள் வீதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

http://www.exam-results.com/indiaindex.jpg

விரும்பத்தகாத நிர்வாக முறை, இவை கல்வி நிறுவனங்கள் போல் இல்லாமல் குடும்ப நிறுவனங்கள்போல் இயங்குகின்றன. அனுமதித்த எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை சேர்த்தல், அடிக்கடி பாடத்திட்டத்தை மாற்றுதல், அதிக கட்டணம் வசூல் செய்தல். போதுமான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகிய செயல்களில் உள்ளதால் பல்கலைக்கழகமாக இயங்க தகுதியற்றவையாக அவை உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 27 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 16 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இவற்றில் பொறியியல், மருத்துவ பல்கலைக்கழ கங்கள் அடங்கும். இவை இனி அந்தந்த பகுதி அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக இயங்கும். புதுச்சேரியில் ஒரு நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.

இதில் தமிழகத்தில் பிரபலமான கி.வீரமணி அவர்களின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமானது குடும்பநலனுக்காகச் செயல்படுவதாகக்கூறி அதன் பல்கலைக்கழக அங்கீகாரத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
http://www.iimaindia.in/images/universitylogo.gif
அத்துறையின் பி.என். டாண்டுன் கமிட்டி மற்றும் உயர்மட்டக்குழுவும் இந்தியா முழுவதும் உள்ள 126 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து திரு.வீரமணி அவர்களின் பல்கலை உட்பட 44 பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்தை திரும்பபப் பெற்றுள்ளதாக உச்சநீதி மன்றத்தில் அறிவித்துள்ளது.

அதன்பட்டியல் வருமாறு:


Christ College, Bangalore

Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh

Lingaya's University, Faridabad

St Peter's Institute of Higher Education and Research, Chennai

Noorul Islam Centre for Higher Education, Kanyakumari

Jaypee Institute of Information Technology, Noida

Shobhit Institute of Engineering and Technology, Meerut

Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat

Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka

Yenepoya University, Mangalore

BLDE University, Bijapur, Karnataka

Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra

D Y Patil Medical College, Kolhapur, Maharashtra

Meenakshi Academy of Higher Education and Research, Chennai

Chettinad Academy of Research and Education, Kanchipuram

HIHT University, Dehradun

Santosh University, Ghaziabad

Maharshi Markandeshwar University, Ambala, Haryana

Manav Rachna International University, Faridabad

Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka

Jain University, Bangalore

Tilak Maharashtra Vidyapeeth, Pune

Siksha "O" Anusandha, Bhubaneswar

Janardan Rai Nagar, Udaipur, Rajasthan

Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir, Sardarshahr, Rajasthan

Mody Institute of Technology, Sikar, Rajasthan

Dr MGR Educational and Research Institute, Chennai

Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai

Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu

Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur

Academy of Maritime Education and Training, Chennai

Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai

Karpagam Academy of Higher Education, Coimbatore

Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai

Gurukul Kangri, Haridwar

Grapich Era University, Dehradun

Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad

Sri Balaji Vidyapeeth, Puducherry

Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu

Bharath Institute of Higher Education And Research, Chennai

Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu

Nava Nalanda Mahavira, Nalanda, Bihar

Rajiv Gandhi National Institute of Youth Development Sriperumbudur,Tamil Nadu

National Museum, Institute of the History of Art Conservation and Musicology, Janpath, New Delhi

காணப்பட வேண்டிய நியாயம்,

இந்த நிகர்நிலை பழகலைகழகங்கள் அதிக பணம் வாங்குகிறார்கள் அனால் உள்கட்டமைப்பு சரியாக செய்து தரவில்லை.

1.இந்த பல்கலை கழகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?எதை வைத்து அதிகாரம் தரப்பட்டது ?

2.அங்கிகாரம் ரத்து செய்த அரசு அவர்களிடம் வாங்கிய அதிக பணத்தை திருப்பி தர ஏன் சொல்லவில்லை?

3.அந்த கல்வி நிறுவனங்கள் மீது கல்வியை வியாபாரம் ஆக்கியதற்காக நிதிமன்றத்தில் அரசு ஏன் வழக்கு தொடரவில்லை?

4.இனி இந்த தவறு நடை பெறாமலிருக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கு?

5.அந்த பல்கலை கழகங்களில் தொலை தூர பாடங்கள் பயிலும் மாணவர்களின் கதி என்ன?

6.ஏற்கனவே தொலை தூர முறையில் பட்டம் பெற்றவர்களின் கதி என்ன?

அங்கிகாரம் வழங்கிய அதிகாரிகளை விட்டு விட்டீர்களே , காசு வாங்கிட்டு அங்கீகாரம் கொடுத்தவனுகளை முதல்ல நடு ரோட்ல வைத்து கல்லால அடிச்சா அப்புறம் யாரும் இப்படி அனுமதி கொடுக்க மாட்டங்க. பெரியார் பெயரை வைத்து தொழில் நடத்தும் சில சுயநல வாதிகளுக்கு இது நல்ல படமாக அமையும்..இந்த மாதிரி தவறுகளை திருத்த மாணவர்கள் புரட்சி அவசியம்.......

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் இந்த இழி நிலைக்கு காரணம், கல்வி கொடுப்பது என்பது சேவை என்பதை தாண்டி வணிக மயமாய் மாறி விட்டதே மிக முக்கிய காரணம் ஆகும். இந்நிலை மாற வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதம் செய்யாமல் நாட்டில் நடை முறையில் உள்ள அனைத்து துறை கல்வியையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு துவக்கக் கல்வி முதல் உயர் மற்றும் தொழிற் கல்வி வரையில் தகுதியானவர்களுக்கு தரமான இலவசக் கல்வி வழங்கிட முன்வர வேண்டும்.

....பகலவன்....