தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எழுவாய் நீ நெருப்பாய்!

http://southasiarev.files.wordpress.com/2009/08/ltte_guerrilla.jpg

தமிழா நீ தமிழ் வாழப்

பணி ஆற்று

தமிழல்லவா உன்னை

இயக்கும் உயிர்க்காற்று

உறவை நீ இழக்காதே

தமிழையே மொழிவாய்

பிறமொழி கலக்காதே

கலந்தால் நீ அழிவாய்

இசைவிழா மேடையில்

தமிழை முழக்கு

வசையாரும் பாடினால்

வரலாற்றை விளக்கு

மண்மீதில் தமிழ்ப்புலவன்

மனம் நோக விடாதே

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்

உணவை நீ தொடாதே

தமிழ்வாழ உழைப்போர்க்கு

துணையாக இருப்பாய்

தமிழையார் எதிர்த்தாலும்

எழுவாய் நீ நெருப்பாய்!

-உணர்ச்சிக் கவிஞ்ஞர் காசி ஆனந்தன்-