தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அழகிரியின் பிறந்த நாள் - ஒரு நூலும் - செய்திக்கு வந்த விமர்சனங்களும்.

மத்திய அமைச்சர் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


தினமலரின் இணைய செய்தியை இங்கு மீள் பதிகிறேன் . அந்த செய்திக்கு வந்த விமர்சனங்களையும் அப்படியே இங்கு மீள் பதிகிறேன்.

ஒருவரை திட்ட வேண்டும் அல்லது திட்டியதை பார்த்து மகிழ வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகளும் பதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும் போது, அனைவரும் மதிக்கும் வகையில் 'பெருந்தன்மை' என்ற அரசியல் பண்போடும், அரசியலின் ஒவ்வொரு நிகழ்வும் படிகளும் மக்கள் ஜனநாயகத்தை உறுதி படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்.

அரசியல்வாதியை நினைக்கும் போதெல்லாம், மக்கள் நிம்மதி பெறவேண்டும் நம்பிக்கை பெறவேண்டும்.

அரசாங்க பொறுப்பில் இருக்கும் போது கூடுதல் கவனத்தோடு கட்சி மாச்சர்யங்களை விட்டு விட்டு மக்கள் அனைவருக்குமான அமைச்சர் அல்லது மக்களுக்கான அரசியல்வாதி என்ற பெயர் பெறவேண்டும்.

அதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அதைத்தான் விமர்சனம் செய்பவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.

தினமலரின் செய்தி இங்கே :

மதுரை : தேர்தலில் தொடர் வெற்றியின் காரணங்கள் குறித்து மதுரையில் நடந்த, "அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விளக்கினார். அவர் பேசியதாவது: ஏழைகளுக்கு உதவத்தான் நான் மத்திய அமைச்சரானேன். வெறும் அழகிரியாக இருந்தால், நான் சொல்வதை அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். மத்திய அமைச்சர் எனில் உடனே கேட்பர். குடிநீர், சாலை வசதிகளை உடனே நிறைவேற்றுவர்.



முதல்வர் கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். நான் அப்போது தேர்தல் பணியாற்றினேன். கருணாநிதி இரவு, பகல் பாராமல் ஓட்டுச் சாவடிகளுக்கு சென்று பார்வையிடுவார். கட்சி நிர்வாகிகள் அங்கு யாரும் இல்லையெனில் கண்டிப்பார். தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டதால், தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெறுகிறேன்.



சைதாப்பேட்டை (1967) தேர்தல் பணியின் போது, கருணாநிதியை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பித்து குடிசைப் பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்த பெண்கள் அவருக்கு உதவி செய்தனர். துணிச்சலை நான் அவரிடம் கற்றேன்.



திருமங்கலம் இடைத்தேர்தலில், நான் சொன்னது போல் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வென்றதால் எனக்கு இப்பதவி கிடைத்தது. இந்த மத்திய அமைச்சர் பதவியே உங்களுக்கு உழைக்கத்தான்.



திருமங்கலம், கம்பம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பணியாற்றும் போது கருணாநிதி, தொகுதி நிலவரம் பற்றி என்னிடம் அடிக்கடி கேட்பார். ஆனால், திருச்செந்தூர் தொகுதி தேர்தலின் போது அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்கு அவர் மீது வருத்தம் உண்டு. பின், நான் சென்னை சென்றபோது, என் தாயிடம் இது பற்றி கூறினேன். அவர் கருணாநிதியிடம், "அழகிரி உங்கள் மீது கோபமாக இருக்கிறான்' என்றார். கருணாநிதி என்னிடம், "என்னடா கோபம்' என்றார். நான், " தொகுதி நிலவரம் குறித்து என்னிடம், ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே' என்றேன். அவர், " நீ வெற்றி பெற்று விடுவாய் என்பது தெரியும்' என சாதுர்யமாகக் கூறினார். இந்த சாதுர்யத்தை அவரிடம் கற்றேன். என்னைப் பற்றி இப்புத்தகம் எழுதியதால், எதிர்காலத்தில் பிரச்னை வரலாம் என ரத்தினவேல் நினைத்திருக்கலாம். ஆனால், நான் சொல்கிறேன்; 2011க்கு பின் அ.தி.மு.க.,வே இருக்காது; இதை நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.

வாசகர் விமர்சனங்கள் :

ஒருத்தர் கூட உன்னை பற்றி நல்ல கமெண்ட் எழுதவில்லை , அப்படியிருக்க , தி மு க விற்கு எதிர்காலம் ரொம்ப நாளைக்கு இல்லை. நீ சொல்லுகின்ற உதாரணம் ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட இப்படி பேசமாட்டான்.
by seeni முருகன்,london,India 1/30/2010 6:52:15 AM IST

அற்பத்தனம் கேவலம் !! மானமிகு என வாழ்ந்த திராவிட கழகத்தில் மானமற்ற ஒரு நபரின் பேச்சு !! என்ன செய்வது பணம் என் மக்களின் கண்களையும் காதுகளையும் குருடு செவிடாக மாற்றி விட்டதே !! ஐயோ
by j பிரதி,cbe,India 1/30/2010 6:48:04 AM IST

Both Dad & Son are Culprit.
You are the Right person to ''Relase the Book''

by S Ganesh,Chennnai,India 1/30/2010 6:40:03 AM IST

அப்பாவுக்கு தப்பாத பொறந்த தமிழ்நாட்டு திருடன்...தமிழ்நாட்ட வித்துடாதீங்க.
by Murugan,chennai,India 1/30/2010 6:27:27 AM IST

''அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை'' இத்தனை வருடம் கழித்து இதில் என்ன சந்தேகம் வந்தது?
by J Revolt,Malaysia,Malaysia 1/30/2010 6:26:42 AM IST

Don''t think urself.Think people.Most of the people can''t run the life.
by g vetrivel,chennai,India 1/30/2010 6:05:41 AM IST

கேள்வி : அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது ஏன்? கேள்வி : முக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தது ஏன்?. கேள்வி: கனிமொழிக்கு மதிய அமைச்சர் பதவிகேட்டு டெல்லிக்கு கருணாநிதி சென்றது ஏன்?. இதற்கெல்லாம் காரணம் கருனநீதியிடம் கேட்டால் திறமையனவர்களுக்காக பதவி கேட்டேன் என்றார். அப்படிஎன்றல் திமுகவில் உள்ள மற்ற தலைவர்களெல்லாம் திறமையற்றவர்கள் என்றுதானே அர்த்தம். இதற்க்கு எல்லாம் ஒரே பதில் என்ன ?
by SELVA SELVARAJU,singapore,India 1/30/2010 6:04:00 AM IST

கருணாநிதி 1962ல், தஞ்சாவூரில் ஒரு பண முதலைக்கு எதிராக போட்டியிட்டார். இன்று கருணாநிதியே ஒரு மகா பெரிய பண முதலை. எதிர்க்க யார் இருக்கா ???
by siva SANKARKUMAR,lyon/france,India 1/30/2010 5:33:30 AM IST

காசு காசு காசு
by v சுரேஷ்,tamilnadu,India 1/30/2010 4:53:00 AM IST



இது ரொம்ப ஓவர் .....ஆணவத்துல ஆடறது உங்க பேச்சுல தெரியுது ....... தன்னை புகழ்ந்து எழுதின புத்தக வெளியீட்டு விழாவுல ..தன்னை பத்தி தானே புகழ்ந்துகிறது ரொம்ப கேவலமா, சில்லரைதனமா இருக்கு
by R PRABHU,SINGAPORE,JURONG WEST,India 1/30/2010 4:49:36 AM IST

ஆமாம் தொகுதி நிலவரம் பற்றி உங்களிடம் கேட்கவில்லை. ஏன் என்றால் உன் அப்பாவுக்கு தெரியும் நீ வெற்றி பெற்று விடுவாய் என்று, பணம், கள்ள வோட்டு மற்றும் ரவுடிசம் செய்வதற்கு தான் உன்னிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள் என்ற தைரியம் உன் அப்பாவுக்கு. திருமங்கலத்தில் நீங்கள் நாற்பது ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று புள்ளி விவரத்தோடு சொல்லி வெற்றிபெற்றீர்கள். ஆனால் நான் நீங்கள் நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தேன். இந்த செய்தியை படித்துவிட்டு இதனை ஆதரிபவர்கள் ஒரு முட்டாள்கள், திரு ரிஸ்வான், உங்கள் கடைசி கருத்தை நான் படித்தேன், எல்லா வாசகர்களும் உங்களை கேலி செய்தார்கள், அதற்க்கு நீங்கள் கவலைபடாதீர்கள், கருணாநிதி எதை செய்தாலும் நல்லது, அம்மா எதை செய்தாலும் தவறு என்று கூறும் ஜென்மங்கள் இருக்கும் வரை நம்மை போன்றவர்களுக்கு சத்ய சோதனை. ஆட்சியில் உட்கார்ந்து இலவசங்கள் மற்றும் ரவுடிகளை வைத்து ஆட்சி செய்வதை விட கொடநாட்டில் இருப்பது எவ்வளவோ மேல். கொடநாட்டில் ரெஸ்ட் எடுப்பது என்ன தவறு, அம்மா என்ன முதல் அமைச்சராக இருந்துகொண்டு கொடநாட்டிற்கு செல்கிறாரா???? நீங்கள் கோடைகாலத்தில் சுற்றுலா செல்வதே இல்லையா????? கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்களே, சட்டம் ஒழுங்கு இந்த ஆட்சியில் இருக்கிறதா என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் இல்லை, யோசித்து, படித்தவர் போல கருத்து கூறுங்கள் திரு ரிஸ்வானை போல. என்ன ரிஸ்வான் நான் சொல்லுவது சரி தானே. தயவு செய்து ஸ்ரீதர் கலிபோர்னியா மற்றும் லியோ பரமக்குடியை தவிர்த்து.
by g சந்தோஷ்,vellore, tamilnadu,India 1/30/2010 4:33:43 AM IST

ஆமாம் மிஸ்டர் அழகிரி, உண்மைதான்! இருக்கும் பணத்தில் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கி விடுவீர்கள். அதிமுக எம்மாத்திரம்? அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை!!! உங்கள் குடும்பமே ''ஏழைப் பங்காளர்களாச்சே!!!'' அப்படியே தமிழ் நாட்டையும் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்.
அப்பா பாராட்டுவார், தயாளு அம்மா பாராட்டுவார். குடும்பமே பாராட்டும், தமிழ் பேசும் மக்கள் தவிர்த்து.....
by r sugumaran,chnnai,India 1/30/2010 4:29:28 AM IST

As per Alagiri,there will not be AIADMK,in 2011.If AIADMK is not there,then MDMK,PMK,BJP,CPM,CPI, Vijayakant party,Puthiya Thamiligam etc,will also not be there,in TN,as per Alagiri.
by R Karuppiah Sathiyaseelan,Kinshasa,Congo (Zaire) 1/30/2010 4:22:54 AM IST

இதல்லாம் ரொம்ப ஓவரா தெரியல ?
by பிரபு இராமசாமி ,new jersy,India 1/30/2010 4:09:30 AM IST

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை தான்.
by s காசி,ny,United States 1/30/2010 3:41:04 AM IST

தொடர் வெற்றிக்கு காரணம்தான் எல்லோருக்குமே தெரியுமே, பணம் தான்!
by K SK,BOSTON,India 1/30/2010 3:25:56 AM IST

இது ரொம்ப ஓவர் .....ஆணவத்துல ஆடறது உங்க பேச்சுல தெரியுது .......தன்னை புகழ்ந்து எழுதின புத்தக வெளியீட்டு விழாவுல ..தன்னை பத்தி தானே புகழ்ந்துகிறது ரொம்ப கேவலமா, சில்லரைதனமா இருக்கு
by SD SD,Oklahoma,United States 1/30/2010 3:24:16 AM IST

அழகிரி கடின உழைப்பாளி, திறமைசாலி, தன்னம்பிக்கைவாதி மேலும் சாதுரியமானவர். ஆனாலும் அதிமுகவை இருக்காது என்று உறுதியாக சொல்வது ஆணவம். தந்தைக்குப்பின், ஸ்டாலினுக்கும் இவருக்கும் ஏற்படும் சண்டையில் திமுக இருக்குமா?

by ரவி,TORONOTO,Canada 1/30/2010 3:12:01 AM IST

1967, தேர்தலின் பொது இவர் அப்பா குடிசைக்குள் போனாராம். ஏன் போனார் எதுக்கு போனார் என்று, கவிஞர் கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார். தம்பி அழகிரி அந்த புத்தகத்தை ஒரு முறை படித்து பார்த்து பிறகு கருத்து சொல்லுங்க.... by G வைகோ priyan,karaikudu,Singapore 1/30/2010 7:03:03 AM IST


மத்திய மந்திரி அழகிரி அய்யாவுக்கு. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனா இவ்வளோ தூரம் ஜோக் அடிப்பீங்கன்னு நிச்சயமா நாங்க எதிர்பாக்கல. தமிழ் நாட்டுல தன்மானத்தை விற்க தமிழர்கள் தயாரா இருக்கற வரைக்கும் (அதான் வோட்டுக்கு காசு) உங்களுக்கு ஜே தான்.



உங்கள் வெற்றியின் ரகசியம் ஊர் அறியும். நீங்க எதுவும் சொல்லவே வேண்டாம். ?
by வெங்கடேசன்,Chennai,India 1/30/2010 2:31:49 AM IST

நன்றி
தின இதழ்