தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அண்ணா வெக்கி தலைகுந்து நிற்கிறேன்!

அண்ணா உன் முன், இன்று நான் மௌனித்து இருந்த அந்த இரண்டு நிமிடம், நான் உனக்கு வீரவணக்கம் செலுத்த அல்ல என் அண்ணா,எங்களின் ஆற்றாமையால் வெக்கி தலைகுந்து நின்றேன் அண்ணா.

உன்னை இழந்த அந்த மாபெரும் இழப்பிற்கு பின்னும் நாங்கள் 60,000 தொப்புள் கொடியின் இழப்பை விதியின் சதி என்றே விட்டு விட்டோம் அண்ணா, அது எங்களின் இயலாமை அல்ல ஆழிப்பேரலை என்று நாங்கள் எழுந்திருந்தால் எந்த அரசும் எங்களை அடக்க முடிந்திருக்காது என் அண்னா, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி கிடக்கும் நம் மக்களை இனி "நாம் தமிழர்" என்று இணைய கூறினோம் அண்ணா, உறங்கி கிடக்கும் இந்த தமிழ் சாதியை எழுப்ப முயன்றோம் அண்ணா, துங்குகின்றவனை எழுப்பிவிடலாம் என் அண்ணா தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது அண்ணா. இருப்பினியும் எங்கள் முயற்சி தொடருந்து கொண்டே இருக்கிறது அண்ணா.

நமது தொப்புள்கொடி உறவுகள் அவர்களுக்கான உரிமையை பெற்றபிறகே நான் உன் முன் தலை நிமிரிந்து உன் கண்களை நோக்கி வீரவணக்கம் செலுத்துவேன் அண்ணா, அதுவே உண்மையான வீரவணக்கமாக இருக்கும் என்பதை நீ அறிவாய் என் அண்ணா... அது வரை உன் முன் தலை குனிந்தபடியே மௌனித்து இருப்பேன் அண்ணா.

நீ வைத்தகொண்ட தீயில் எரிந்துகொண்டு இருக்கும் உன் தங்கை...

நன்றி
லாவண்யா சம்பத்