தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தி.மு.க. எம்.பி.களிடம் ராஜபக்சே எகத்தாளம்!


டெல்லி வந்த ராஜபக்சேவை சந்தித்து ஈழத்தமிழர்களின் மீள்குடியேற்றம் பற்றியும் அரசியல் தீர்வை முன்னெடுக்கும் படியும் வலியுறுத்தினர் தி.மு.க.வின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு. இந்த சந்திப்பின்போது ராஜபக்சேவுடன் இருந்த டக்ளஸ் தேவானந்தா, ""நானும் போராளியாக இருந்தவன்தான். நிலைமைகள் எனக்கு நல்லா தெரியும்.

இப்போ காலங்கள் மாறிவிட்டது. மகிந்த ராஜபக்சே மீது எங்கட மக்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. 20 வருடங்கள் போராடினோம். எல்லாம் வேஸ்ட். இன்னும் 2 ஆண்டுகளில் எங்கட மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுப்பார் மகிந்த ராஜபக்சே'' என்று ஒரு மிடுக்காக பேசியவர், ""அங்குள்ள பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியமாட்டேங்குது. உங்க ஊரிலும் தேர்தல் நடக்கிறது. ஓட்டுகள் வாங்கணும். உங்க பிரச்சினை எனக்கு புரியுது. அதுக்காக கடுமையாக பேசி எங்களுக்கு கிடைக்கறதை கெடுத்திடாதீங்க''''என்று குழைந்தும் நெளிந்தும் நைச்சியமாக சொல்லி விட்டு, தான் எழுதிய புத்தகம் ஒன்றை எல்லோருக்கும் தந்துள்ளார்.

இதனை அடுத்து ராஜபக்சேவிடம் பேசிய டி.ஆர்.பாலு,'""போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் பார்க்க இலங்கைக்கு வந்தபோது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை விரைந்து செய்யும்படியும் முகாம்களில் உள்ள மக்களை முழுமையாக அவரவர்களின் வீடுகளில் குடியேற்றவும் வலியுறுத்தினோம். இதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றுகிறேன்னு உறுதி கொடுத்தீர்கள். அந்த உறுதியை நீங்கள் நிறைவேற்றவில்லை.

இன்னமும் 80 ஆயிரம் மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல அரசியல் தீர்விற்கான எந்த முயற்சியும் நீங்கள் எடுக்கவில்லை. இதனை எங்கள் தலைவர் கடுமையாகவே உங்களிடம் வலியுறுத்தச் சொன்னார்'''என்றார் கோபமாகவே. அதற்கு பதில் சொன்ன ராஜ்பக்சே,'""80 ஆயிரம் பேர்ங்கிறது தப்பு. இப்போ 54 ஆயிரம் பேர்தான் முகாம்களில் இருக்காங்க. (இண்டியன் - ஃபாரின் அபேயர்ஸ் கமிட்டி சொன்னதையே சொன்னார்) அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் வந்ததால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்த முடியலை. வரும் டிசம்பருக்குள் நிறைவேத்து வேன்''''என்றார். இதில் சமாதானமாகாத டி.ஆர். பாலு,''""மழைக்காலம் தொடங்கிடுச்சி. டிசம்பர் வரை தள்ளிப்போடக்கூடாது. இன்னும் ஓரிரு மாதத்திற்குள் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுங்கள். மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தரவேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு கட்டித்தரப்படும் என்று சொன்ன நீங்கள் அதையும் செய்யவில்லை.

இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறது. தமிழக அரசு சார்பாக 40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அனுப்பி வைத்தோம். இது எதுவும் முழுமையாக தமிழர்களுக்கு போய்ச் சேரவில்லை''''என்று கடுமையாக பேச, அப்போது ராஜபக்சே,''""நாங்களே வீடு கட்டிக்கறம். நீங்க கட்டித்தரத் தேவையில்லைன்னு மக்கள் சொல்லிட்டாங்க. அதனால 8 மூட்டை சிமெண்டும் பணமும் தந்திருக்கோம். அவங்க சந்தோஷமாக இருக்காங்க. எம் மக்களுக்கு என்ன செய்யணும்ங்கிறது எனக்கு தெரியும். அதை செய்துகிட்டு இருக்கேன். என்னைப்போல உலகத்துல யாருமே நல்ல காரியங்களை செய்யறதில்லே. நல்லதை மட்டுமே நான் செய்துக்கிட்டு இருக்கேன்'''என்றார் மிக எகத்தாளமாக. அப்போது இதை ஆமோதிக்கிற மாதிரி,''""கொழும்புவில் நாங்க உங்கள சந்திச்சப்போ விரைவில் 1 லட்சம் தமிழர்கள் அவரவரின் சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்னு சொன்னீங்க. அதே மாதிரி செய்திருக்கிறீங்க.

அது ரொம்ப சந்தோஷம் எங்களுக்கு'''என்று ராஜபக்சேவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்து ஊதினர். இந்த இடத்தில் எல்லோருக்கும் கூல்டிரிங்ஸும் ஸ்னாக்சும் வந்தது. இதனை பெரும்பாலான தி.மு.க. எம்.பி.க்கள் தவிர்த்துவிட்டனர். ராஜபக்சேவிடம் பேசிய கனிமொழி,''""உங்க ராணுவத்தினர் தமிழக மீனவர்களை சுட்டுகொல்றதை நிறுத்தவே மாட்டேங்கிறார்களே?''''என்றபோது,''""எங்க கடல் எல்லைக்கு வரும் தமிழக மீனவர்களை நாங்க சுடுறதே இல்லை. வழி தவறி வருகிற தமிழக மீனவர்களை கைது செய்து எங்க மாஜிஸ்திரேட்டிடம் கொண்டுபோய் ஜெயிலிலும் போடறதில்லே. அவங்களை பிடிச்சி உங்க இந்திய அதிகாரிங்ககிட்டே ஒப்படைச்சிடுறோம். நாங்க சுடுறதெல்லாம் கிடையாது. ஆனா எங்க மீனவர்களைத்தான் நீங்க ஜெயில்லே வைச்சிருக்கீங்க''''என்று குற்றம்சாட்ட,''""எங்கே தமிழக ஜெயில்லேயா?'' என்று கனிமொழி கோபமாக கேட்க,'' ""இல்லே நான் பொதுவா சொன்னேன்'''' என்றிருக்கிறார் ராஜபக்சே.

அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. எம்.பி. ஜின்னா, ""முகாமில் மருத்துவ வசதியே இல்லை. டாக்டர் களும் இல்லை. நாங்க வேணா தமிழகத்திலிருந்து டாக்டர்களை அனுப்பி வைக் கட்டுமா?''''என்று சொன்ன போது,''""முகாமில் எல்லா வசதிகளும் செய்து தரப் பட்டுள்ளது. டாக்டர்கள் போதுமான அளவுக்கு இருக்காங்க. உங்களுக்குவேணா சொல்லுங்க நான் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்'' என்றார் திமிராக. தி.மு.க. எம்.பி.க்களிடம் இப்படி பிடிகொடுக்காமல் ராஜபக்சே பேசியதைத் தான் திருப்தியில்லை என்கிற தொனியில் சொல்லியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

இந்த கட்டுரை  tamilcnn  இணையத்தில்  இருந்து  படிக்கப்பட்டது.