தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மூன்று நாட்களுக்குள் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை பெற்று தந்த அதே அணி மீண்டும் ராஜபக்சேவை சந்திக்கிறது.

தலையங்கம் :
 
தலைப்பை தவிர புதிதாய் ஒன்று மட்டும் சொல்லலாம். தமிழனின் தலைவிதி. ஈழத்தில் செத்து அழிந்தான். இங்கே நான்கு வருடமாய் பட்டு அழிகிறான்.
 
முன்னமேயே  , இலங்கையில் இதே அணி ராஜபக்சேவை சந்தித்து  மூன்று நாட்களுக்குள் விடுதலை பெற்று தந்தது என்னாயிற்று ?
 
தமிழர்களுக்கு விடுதலை எனபது இலங்கையில் மட்டுமில்லை இந்தியாவிடமிருந்தும்தான் என்பதை நோக்கி அச்சப்படும் வகையில் தான் தமிழர் துரோக மற்றும் எதிரிகள் தமிழர்களை உந்துகிரார்கள்.
 
இன்றைய செய்தி : 
 
இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.இலங்கை அதிபர் ராஜபட்ச மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

 இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ராஜபட்சவுடன் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளனர். இதுகுறித்து, அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

 நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அப்போது, ராஜபட்சவைச் சந்தித்து பேசுவதற்கான நேரத்தினை ஒதுக்கிடுமாறு வலியுறுத்தினார்.

 இதற்கான அனுமதி பெறப்பட்டு, திமுக எம்.பி.க்கள் குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.

 ராஜபட்சவை சந்திக்கும் எம்.பி.க்களின் விவரம்:

 திமுக: டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.

 காங்கிரஸ்: மணி சங்கர் ஐயர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன், பி.எஸ்.ஞானதேசிகன்.

 விடுதலைச் சிறுத்தைகள்: தொல்.திருமாவளவன்.