தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நக்கலு கொஞ்சம் ஓவருதான்..

நக்கலு கொஞ்சம் ஓவருதான்..

செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை பெரு நகரத்தில் கடைகளில் விளம்பர பலகைகள், தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனால் இந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- திருமாவளவன்


குசும்பு குருவையா :

... சன் டிவி க்கு தமிழில் பெயர் மாற்றம் செய்வதற்கு யாரும் ஏன் வாய் திறக்க வில்லை.. கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரி யில் திறந்திருக்கும்  பள்ளியின் பெயர் 'சன் ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல்' பெயர் ஏன் தமிழில் எழுதப்படவில்லை மற்றும் தமிழில் ஏன் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை... ஒருவேளை "ஊருக்கு தான் உபதேசம் தனது குடும்ப உர்ப்பினர்களுக்கு அல்ல " என்ற பழமொழியை பின்பற்றுகிரரா.