தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2009 தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள்

சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது.2009 இல் தமிழ்சினிமா வர்த்தகரீதியாக பின்னடைவையே சந்திதித்தது என்பதனை மறுக்க முடியாது.நூற்றுக்கும் மேலான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனபோதும் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களே தரமான படங்களாக இருந்தன .ஆனால் சிறிய பட்ஜட்டில் எடுக்கப்பட்டு விமர்சகர்களின் பாராட்டை மட்டுமன்றி நல்ல வசூலையும் பெற்ற பலபடங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தது புதிய படைப்பாளிகளுக்கு ஒரு உந்துகோலே. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம்.வழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை பகலவன் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் சிறந்த படமாக தெரிந்தெடுக்கப்பட்ட TOP 10 இங்கே ,


10.ஈரம்

eeram



ஈரம் படம் ஷங்கர் தயாரிப்பில் வந்து எதிர்பார்க்காத வெற்றி படம் எனலாம் பேய் படம் என்றல் பயமுறுதும் மேக் அப் மிரட்டும் என்ற தமிழ் சினிமாவின் மரபை உடைத்து படம் பார்க்கும் நம்மை அந்த கதைக்குள் கொண்டு செல்லும் நுணுக்கம் சிறப்பாகவே செய்து இருந்தார் இயக்குனர்.ஆதி நந்தா சிந்து மேனன் என்று புதிய முகம் இருந்தாலும் கதைக்காக ஓடிய படம்,சங்கரின் உதவியாளர் அறிவழகனின் ஈரம் வழக்கமான ஒரு காதல் கதையை கொடுக்காமல் கொலை, பேய் என்று வித்யாசமாய் யோசித்து டெக்னிகலாகவும், இயக்குனராகவும் நின்ற படம்.பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

9.மாயாண்டி குடும்பத்தார்:
http://www.ticketnew.com/OnlineTheatre/Theatre/coming-soon/coming-images/Mayandi-Kudumbathar.jpg

பீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது.குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.கூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.

8.யாவரும் நலம்:
http://kalyanb4u.files.wordpress.com/2009/03/yavarum-nalam.jpg
ஒரு த்ரில்லர் படம் யாவரும் நலம் மாதவன் நடிப்பில் விக்ரம் கே குமார இயக்கத்தில் வந்த படம் சொல்லும் படியான படங்களில் ஒன்று
இப்படம் 13 B என்று ஹிந்தி மொழியில் வந்து பெரும் வெற்றி பெற்றது.தமிழிலும் நல்ல வெற்றியை பெற்றது.கடைசி கட்சி வரை சீட்டின் நுனியில் ரசிகர்களை உட்கார வைத்த படம்,இன்னும் தேவையற்ற கட்சிகளை தவிர்த்து இருக்கலாம்..பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை போலவே இருப்பதால் அலுப்பூட்டவே செய்கிறது.

7.உன்னை போல் ஒருவன்:


ஹிந்தி மொழியில் இருந்து வந்த படம் ஆனால் அது போல் வராமல் போன படம் நிச்சயம் ஹிந்தி மொழியில் இந்த படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும் அனுபம் கேர் நஸ்ருதின் ஷா போன்றவர்கள் இப்படத்தில் வாழ்ந்தார்கள் தமிழ் மொழியில் ஒரு நாடகத்தனம் வெளிப்பட்டது.ரிலையன்ஸின் தயாரிப்பில் சுமார் 6 கோடி தயாரிப்பில் தமிழ், ஹிந்தி என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் 27 கோடி ரூபாய் சம்பதித்த படம்.கமல் மோகன்லால் போன்ற சூப்பர் ஆக்டர்கள்,வித்தியாசமான கதைக்களம் போன்றவற்றின் மூலம் அனைத்து விமர்சகர்களாலும் பாரட்டப்பட்ட படம்.இருந்தும் பாடல்கள்,காமடி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பெரியவெற்றியை அடையமுடியவில்லை.எனினும் இதுஒரு கிளீன்ஹிட்.

6.பசங்க:




எந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.நல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க.

5.வெண்ணிலா கபடி குழு:



கிராமிய காதலை கபடியுடன் விளையாடிய் படம் இதுவும் புது முகங்கள் நடித்து கதை என்ற சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக ஓடிய படம் சுசிந்திரன் இயக்கம் எ ஆர் ரஹ்மான் பட்டறையில் இருந்து வந்த வி செல்வகணேசன் இசை என சொல்லலாம்.ஒவ்வொரு காட்சிகளும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.வருடத்தின் முதலில் வந்த வெண்ணிலா கபடிக்குழு. சின்ன பட்ஜெட் படமென்றாலும் வெளிவருவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். எதிர்பார்ப்பை திருப்தி செய்ததால் ஹிட்.


4.பேராண்மை:
http://i37.tinypic.com/iv8fns.jpg

ஜனநாதனின் இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம்.ஆங்கில படங்களுக்கு நிகரானதொரு படமாக இயக்கி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தார் ஜனநாதன்.ஜெயம் ரவியை இன்னொரு பரிணாமத்தில் காட்டிய படம்,ஐங்கரனின் மூன்று சறுக்கல்களின் பின்னர் அவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.மலை வாழ் மக்களின் வாழ்க்கையை எடுத்து காட்டிய படம்,தமிழ் சினிமா வரலாற்றில் எடுக்க படாத முயற்சி..

3.ரேணிகுண்டா:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgw3iAs_Joe44W61bYsSRc1uxukb8Dg_Wa5fUW8deKfpZJ-TBWTppHNrOGOxN6Y-CloS1K3tXGEFLXbkSdQe9hao-Tye2gCXiC5ejJEelPCIHTO7sh4SL1o3CXkf12Hvcue5bqMPEaQxh0/s400/renigunda-mp-songs-download-latest-tamil-songs.jpg

சந்தர்ப்ப வசத்தால் தாய் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலை செய்தவனை, கொல்ல நினைத்த போது போலீஸிடம் பிடித்து கொடுக்கப்படூம் ஒரு பதின்வயது இளைஞனின் திசை மாறி போகும் வாழ்க்கையின் சீல தினஙகளை கண் மூன்னே ஓட விட்டிருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் நடிகர்களா என கேட்க வைக்கும் வயது ஆனால் படம் பார்த்து வரும் ஒவ்வொருவரின் மனத்திலும் ஒரு சோகம் நிரம்பி விடுவது உண்மை.புது நடிகர்கள், புது டெக்னீஷியன்கள் என்று எல்லாரையும் புதுமுகங்களாய் வைத்து, ஒரு ஆக்ஷன் படத்தை கொடுப்பது என்பது சும்மா இல்லை. அதை திறம்படவே செய்திருக்கிறார்.நிஜமாகவே படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்திதான். படம் முழுவதும் இவரின் உழைப்பு வியாபித்திருக்கிறது. அதிலும் அந்த பொட்டை அத்துவான காட்டில், ஜானி இருவரை கொலை செய்யப்படும் காட்சியில் கேமரா இன்னொரு கேரக்டர் ஆகவே அலைகிறது. படத்தில் எடிட்டிங்கும் தன் பங்குக்கு இந்த காட்சியில் விளையாடியிருக்கிறது.புதுசாய் ஏதும் காட்சிகள் இல்லாதது குறையே. மிக சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியான படம். ஒரு சிறிய படத்திற்கு எவ்வாறு அக்ரசிவ் மார்கெட்டிங் செய்ய வேண்டும் என்று இப்படத்தை பார்த்தால் தெரியும். படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 4-5 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல ஓப்பனிங்கை கொடுத்த படம் அடுத்த அடுத்த வாரங்களில் வயலன்ஸ் அதிகமான காட்சிகளால் பெரிதாய் வெகு ஜனங்களை ஈர்க்கவில்லை. ஆனாலும் ஹிட்தான்.


2.அயன்:
http://www.tamilnadu-online.com/wp-content/uploads/2009/07/Ayan-Surya.jpg

ஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது..இந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படம் இதுதான்.இதுவும் "சன் பிக்சர்ஸ் வழங்கிய" படம் ஆயினும் இது வெற்றிபெற காரணம், கே வி ஆனந்தின் விறு விறு திரைக்கதை.ஹரிசின் அமர்க்களமான மெட்டுக்கள்,சூர்யாவின் துள்ளலான நடிப்பு,தமன்னாவின் இளமைத்துடிப்பு(ஆகா நமக்குள்ளேயும் ஒரு T.R )ஜெகனின் டைமிங் காமடி என பலவற்றைக் கூறலாம்.ஆனாலும் இப்படம் பெரியளவில் வெற்றியடைய காரணம் சன் டிவி என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

1.நாடோடிகள்:



சசிகுமார் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்.உன்னை சரணடைந்தேன்,நெறஞ்ச மனசு படங்கள் மூலம் தன்னை நிரூபிக்க தவறிய சமுத்திரக்கனி இப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்,சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரத்தில் வில்லனாக கலக்கியவர் இயக்குனராக ஜெயித்த படம்.ஜனரஞ்சகமான படமாக வந்து அனைவரது வரவேற்பையும் பெற்றது .சசி குமார் தவிர மற்றபடி சொல்லும் படியான புகழ் பெற்ற நடிகர்கள் இல்லை ,ஆனால் இப்படம் தமிழ் நாட்டை தாண்டி ஒரு தாக்கத்தை உண்டாக்கிய படம் ,ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வருவது இதன் சிறந்த கதைக்கு கிடைத்த வெற்றி
சிறந்த இயக்கம் நல்ல கருத்து சிறப்பான இசை எல்லாம் சிறப்பாக அமைந்து பெரும் வெற்றி பெற்ற படம் நாடோடிகள்.

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன.
....பகலவன்....

2009ம் ஆணடில் இந்தியா: முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

1 - கபில்தேவ், கவாஸ்கர், பிஷன் சிங் பேடி ஆகியோர் ஐசிசியின் சர்வதேச புகழ் பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றனர்.

- அஸ்ஸாமில் குண்டுவெடித்து 5 பேர் பலி.

4 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனான உறவை துண்டித்துக் கொள்வதாக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்தது.

- நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது.

5 - பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கை அழைத்து மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை வழங்கியது இந்தியா.

7 - அஜ்மல் கசாப் பாகிஸ்தானிதான் என்று பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டது.

10 - மிகப் பெரிய பண மோசடியை ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்கராஜு கைது செய்யப்பட்டார்.

12 - இடைத் தேர்தலி்ல தோல்வி அடைந்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் பதவி விலகினார்.

15 - பிரபல இயக்குநர் தபன்சின்ஹா மரணமடைந்தார்.

19 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

20 - உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவிலிருந்து விலகினார்.

24 - பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இருதய ரத்தக்குழாய் அடைப்பு அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

25 - மங்களூர் பப்பில் மதுவுடன் நடனமாடிய பெண்களை ஸ்ரீராம்சேனா அமைப்பினர் தாறுமாறாக அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணமடைந்தார்.

31 - தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி, தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிப்ரவரி

2 - தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியது. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் கோரிக்கையை நிராகரித்தது.

12- மும்பைத் தாக்குதல் சதித் திட்டம் பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது என்று அந்த நாடு ஒப்புக் கொண்டது.

13 - ஒரிசாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

25 - மும்பைத் தாக்குதல் வழக்கில் 11,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மார்ச்

2 - நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

6 - நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்ட மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ. 9.25 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தார்.

7 - ஒரிசாவில் பாஜக - பிஜூ ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்தது.

17 - மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வருண் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

23 - டாடா நிறுவனத்தின் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

26- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், பாஸ்வான் ஆகியோர் புதிய கூட்டணியை அமைத்தனர்.

31 - லோக்சபா தேர்தலில் நடிகர் சஞ்சய் தத் போட்டியிட முடியாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் தடை விதித்து விட்டது.

ஏப்ரல்

1 - சேது சமுத்திரத் திட்டத்திற்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தியதாக கூறி முதல்வர் கருணாநிதி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

6 - டெல்லி மருத்துவமனையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜார் மரணமடைந்தார்.

10- தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த சம்பத் நியமிக்கப்பட்டார்.

21 - தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்றார்.

28 - போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை சிபிஐ நீக்கியது.

மே

8 - வருண் காந்தி மீது பிரயோகிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

9 - இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

16 - நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 256 இடங்களையும், பாஜக கூட்டணி 161 இடங்களையும், 3வது அணி 68 இடங்களையும், 4வது அணி 28 இடங்களையும் பெற்றன.

19 - மீண்டும் பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

20 - மன்மோகன் சிங் ஆட்சியமைக்குமாறு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அழைப்பு விடுத்தார்.

22 - மன்மோகன் சிங் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

25 - மேற்கு வங்கம், வங்கதேசம், சிக்கிம், ஒரிசாவை அய்லா புயல் தாக்கியது.

31 - பிரபல எழுத்தாளர், கவிஞர் கமலாதாஸ் மரணமடைந்தார்.

ஜூன்

3- லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றார்.

8 - லோக்சபா துணை சபாநாகராக பாஜகவின் கரியமுண்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- கர்நாடக மாநிலம் கெய்கா அணு நிலையத்தில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் காணாமல் போனார். பின்னர் ஐந்து நாட்கள் கழித்து பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

13 - பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்தது. யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜெட்லி ஆகியோர் கட்சிப் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.

16 - மேற்கு வங்க மாநிலம் லால்கர் உள்ளிட்ட பகுதிகளை மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- வேலைக்காரப் பெண்ணை இந்தி நடிகர் ஷைனி அகுஜா கற்பழித்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.

23 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பி.சி.கந்தூரியை பாஜக மேலிடம் கட்டாயப்படுத்தி விலக வைத்தது.

25 - இந்தியா முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

28 - மலையாள இயக்குநர் லோஹிததாஸ் மரணமடைந்தார்.

29 - அம்பேத்கர், கன்ஷிராம் மற்றும் தனக்கு சிலைகள், நினைவிடங்களை அமைக்க ரூ. 2000 கோடியில் திட்டமிட்ட உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம், நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

30- பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்தார்.

- மும்பையில், பிரமாண்ட கடல் பாலத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

ஜூலை

2 - மனது ஒருமித்து, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை அளித்தது.

5- வருண் காந்தி உள்ளிட்ட 3 முக்கியத் தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

12 - சிபிஎம் பொலிட்பீரோவிலிருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கப்பட்டார்.

- டெல்லி மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.

21 - பிரபல இந்துஸ்தானி இசைப் பாடகி கங்குபாய் ஹங்கல் மரணமடைந்தார்.

- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அமெரிக்க விமான நிறுவன பாதுகாவலர்கள் செருப்பைக் கழற்றுமாறும், காத்திருக்க வைத்தும் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் கெடுபிடி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

26 - இந்தியாவின் முதலாவது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரிஹாந்த்தை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

28 - சோபியான் கற்பழிப்பு மற்றும் கொலையில், தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டதால் கோபமடைந்த முதல்வர் உமர் அப்துல்லா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதை ஆளுநர் ஏற்க மறுத்து விட்டார்.

29 - மலையாள நடிகர் ராஜன் பி தேவ் மரணமடைந்தார்.

ஆகஸ்ட்

3 - இந்தியாவில் முதல் பன்றிக் காய்ச்சல் பலியாக புனேவைச் சேர்ந்த ரீட்டா ஷேக் என்ற 14 வயது சிறுமி உயிரிழந்தாள்.

9 - பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா முன்னிலையில் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

19 - ஜின்னாவைப் புகழ்ந்து நூல் எழுதியதற்காக ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.

29 - சந்திரயான் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர்

2 - ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

8 - தினசரி ரூ. 1 லட்சம் வாடகை கொடுத்து ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, சசி தரூர் ஆகியோர் பிரணாப் முகர்ஜியின் உத்தரவைத் தொடர்ந்து ஹோட்டலை விட்டு வெளியேறினர்.

11 - ரூ. 2500 கோடி செலவில் தலைவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள், பூங்காக்கள் அமைக்க மாயாவதி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

- நிதாரி படுகொலை வழக்கில் மனீந்தர் சிங் விடுதலை. வேலைக்காரருக்கு மட்டும் தூக்குத் தண்டனை.

15 - சிக்கண நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்து, சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டு ஸ்டண்ட் அடித்தார்.

24- நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் விண்கலத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க செயற்கைக் கோள் கண்டுபிடித்தது.

29 - தன்னைத் தாக்க வந்த தீவிரவாதிகளை அவர்களிடமிருந்த ஏ.கே. 47 துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார் காஷ்மீர் பெண் ருக்ஷானா. இதில் ஒரு தீவரவாதி உயிரிழந்தான்.

30 - ஏர் இந்தியா விமானிகள் தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

அக்டோபர்

3- போபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சியின் பெயரை நீக்கும் மனுவை கோர்ட்டில் சமர்ப்பித்தது சிபிஐ.

5 - முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

6 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியை தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றனர் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள்.

7 - தமிழகத்தில் பிறந்தவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

9 - மாயாவதி, கன்ஷிராம் உள்ளிட்டோரின் சிலைகளை நிறுவும் நினைவிடப் பணிகளை உடனடியாக நிறுத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.

10- உ.பியில் வளரும் கிரிக்கெட் வீரர் ககந்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

13 - மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது.

19 - புதிய அணை தொடர்பான ஆய்வுப் பணியை தொடங்கியது கேரளா.

21 - புதிய அணை தொடர்பான கேரளாவின ஆய்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

22 - மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

27 - ஒரிசாவிலிருந்து சென்ற பயணிகள் ரயிலை மாவோயிஸ்டுகள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் ரயில் மீட்கப்பட்டது.

29 - கர்நாடக அரசியல் நெருக்கடி முற்றி போட்டி எம்.எல்.ஏக்கள் 20 பேர் ஹைதராபாத் கொண்டு போகப்பட்டனர்.

30- பாஜக ஆட்சியில் ரூ. ஒன்றரை லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக ராசா குற்றம் சாட்டினார்.

31 - 2 வார கால ரெட்டி சகோதரர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. சமரசத் திட்டம் முடிவானது. எதியூரப்பா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

- இஸ்ரோவின் புதிய தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

நவம்பர்

2 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 21 நீதிபதிகள் சொத்துக் கணக்கை வெளியிட்டனர்.

5 - உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவசரச் சட்டம் இயற்றியது ஏன் என்று கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

9 - மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ அபு ஆஸ்மி தாக்கப்பட்டார்.

7 - மகாராஷ்டிர முதல்வராக அசோக் சவான் 2வது முறையாக பதவியேற்றார்.

10 - முல்லைப் பெரியாறு அணை வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

19 - கரும்பு விலை நிர்ணய சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி.

22 - மும்பை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் கல்யாணம் செய்து கொண்டனர்.

23 - பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் அறிக்கை ரகசியமாக வெளியானதால் நாடாளுமன்றத்தில் புயல் வீசியது. வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரைக் குற்றம் சாட்டியிருந்தார் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்.

25 - சுகோய் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

29 - தனி தெலுங்கானாவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க்க கிளம்பிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கைது. தெலுங்கானா முழுவதும் பெரும் வன்முறை.

30 - பல ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா கைது.

டிசம்பர்

2 - நதி நீர் இணைப்புத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தது மத்திய அரசு.

5 - மறைந்த ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, புலிவெந்துலா தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 - இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று, டெஸ்ட் தர வரிசையில் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்தது இந்திய கிரிக்கெட் அணி.

7 - கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தது.

9 - பூரி விழாவில் பங்கேற்கச் சென்ற குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்.

12 - உ.பியைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மாயாவதி கடிதம் எழுதினார்.

18 - லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகினார்.

- பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் பரிந்துரை நிறுத்தி வைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

19 - பாஜக தலைவராக நிதின் கட்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணிக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

21 - மும்பை சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை கடுமையாகத் தாக்கினர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

- ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலஸ்கர் என எந்த அதிகாரியையும் நான் சுட்டுக் கொல்லவில்லை என்று தனி கோர்ட் நீதிபதியிடம் கூறினான் அஜ்மல் கசாப்.

23 - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அக்கட்சியின் சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயசாந்தி ஆகியோர் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர 82 தெலுங்கானா பகுதி எம்.எல்.ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

25 - பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமில்லாமல் விமானத்தின் கழிவறையில் பதுங்கியபடி, சவூதியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்த உ.பி.யைச் சேர்ந்த ஹபீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

26 - பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக பிடிபட்ட என்.டி.திவாரி, ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

27 - ஆந்திர மாநில ஆளுநராக சட்டீஸ்கர் ஆளுநர் நரசிம்மன் கூடுதல் பொறுப்பேற்றார்.

- பெரோஷா கோட்லா மைதான பிட்ச் அபாயகரமானதாக மாறியதால் இந்தியா-இலங்கை இடையிலான 5வது ஒரு நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.

29 - பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்த பயங்கர தீவிபத்தில் 2 பேர் பலி

- டெல்லியில் நடந்த கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட கீர்த்தி ஆசாத் தாக்கப்பட்டதாக பரபரப்பு.

30 - தெலுங்கானாவில் பந்த். ஹைதராபாத், தெலுங்கானா பிராந்தியம் ஸ்தம்பித்தது.

- கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.

- நடிகர் முகேஷ், சரிதா, பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டை அணுகினர்.

- ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.

....பகலவன்....

2009ம் ஆணடில் தமிழகம்: முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

8- சென்னை துறைமுகம், கோயம்பேடு இடையிலான உயர் மட்ட பாலத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டினார்.

12- திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் லதா அதியமான் வெற்றி பெற்றார்.

13 - தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டார்.

19 - விடுதலைப் புலிகளுக்கு ஆதராகப் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.

- சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது.

21 - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்புறுதித் திட்டத்தை ஆளுநர் பர்னாலா சட்டசபையில் அறிவித்தார்.

26 - ஈழத்தமிழர்களின் உயிர் காக்க போர் நிறுத்தம் கேட்டு உயிரை தீயில் கருக்கிய முத்துக்குமார்.

28- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிப்ரவரி

2 - சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

8- தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் சைமன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளில் கொல்லப்பட்டார்.

- சன் டிவியின் காமெடி சானலான ஆதித்யா தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.

11 -முதல்வர் கருணாநிதிக்கு முதுகுத் தண்டவடத்தில் 11 மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது.

15- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டது.

17 - தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

19 - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் பெரும் மோதல் மூண்டு நாட்டையே அதிர வைத்தது.

20 - விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கில், நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் சரணடைந்தார்.

22 -புதிய திருப்பூர் மாவட்டத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

25 - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

26 - அருந்ததியர் இனத்தினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

27 - ராஜ கண்ணப்பன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

- பூங்கோதை ஆலடி அருணா மீ்ண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.

28 - தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.

மார்ச்

7 - இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார்.

9- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவியேற்றார்.

11 - மதிமுகவிலிருந்து மு.கண்ணப்பன் விலகினார். பின்னர் திமுகவில் இணைந்தார்.

12 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதுரையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

13 - சென்னையில் பிறந்து 3 நாளே ஆன கைக்குழநதையை கிணற்றில் வீசிக் கொலை செய்தார் அக்குழந்தையின் தந்தையான நிரஞ்சன் குமார்.
16 - இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ரூ. 2 கோடி நிதியை செஞ்சிலுவைச் சங்கத்திடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்படைத்தார்.

- நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்தார்.

19 - சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

- ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

23 - முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவர் மரணமடைந்தார்.

26 - அதிமுக கூட்டணியில் இணைவது என பாமக பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்தது.

- கம்பம் ராமகிருஷ்ணன் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

28 - லோக்சபா தேர்தலில் திமுக 21, காங்கிரஸ் 15, விடுதலைச் சிறுத்தைகள் 2, முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

- பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வேலு, அன்புமணி ராமதாஸ் விலகினர்.

29 - ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கட்சியோடு திமுகவில் இணைந்தார்.

- சிபிஐக்கு 3 சீட் தருவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

ஏப்ரல்

1 - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தேமுதிகவிலிரு்நது விலகி அதிமுகவில் இணைந்தார்.

3 - வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீன் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி.

- சிபிஎம்முக்கு 3 சீட் ஒதுக்கினார் ஜெயலலிதா.

8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

9 - அதிமுக 23 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்தார்.

21 - நாஞ்சில் சம்பத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

29 - சென்னையில் மின்சார ரயிலைக் கடத்திய மர்ம மனிதன் சரக்கு ரயிலுடன் அதை மோதினான். இதில் 4 பேர் பலியானார்கள்.

23 - இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்.

25 - பாஸ்போர்ட் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது.

26- ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மரணம்.

27- கொளத்தூர் மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

- விதிகளை மீறி மும்பை நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை.

மே

2 - கோவையில் ராணுவ லாரிகள் மீது பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்குதல்.

- தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஏ.ஜி.சம்பத், திமுகவில் இணைந்தார்.

6 -நாமக்கல் அருகே நடந்த தனியார் எண்ணை ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

10 - சென்னையில் சோனியா காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழ. நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

11 - டிவி நடிகை லட்சுமி கோபகுமாரின் பின்பக்கத்தில் தட்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப் விடுதலை.

12 - முன்னாள் தமிழக அமைச்சர் பி.டி.சரஸ்வதி மரணமடைந்தார்.

- பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார்.

13 - தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

21 - அமைச்சர் பதவிகள் மற்றும் இலாகாக்களில் திருப்தி இல்லை என்று கூறி அமைச்சரவையில் சேர முடியாது, வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும் திமுக கூறியது. முதல்வர் கருணாநிதி டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்.

- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

28 - இலாகாக்கள் மற்றும் அமைச்சர் பதவிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோருடன் 59 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

- சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்றார்.

29 - மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

31 - ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதன் மூலம் 30 சதவீத ஊதிய உயர்வு கிடைத்தது.

ஜூன்

7 - சென்னையில் நகை வியாபாரி சுரேஷ்குமாரின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

8 - சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பான நீதிபதி சண்முகம் கமிஷன் அறிக்கை தாக்கல்.

10 - புழல் சிறையில் நடந்த பயங்கர மோதலில், வெல்டிங் குமார் கொல்லப்பட்டார்.

11- ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

16 - மதுரை அருகே 16 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

27 - சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர்.குமார் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

29 - தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம் மரணமடைந்தார்.

ஜூலை

1 - என்.எஸ்.ஜி. மையத்தை சென்னையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

5- ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணமடைந்தார்.

12 - துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது.

16 - இசையரசி டி.கே.பட்டம்மாள் தனது 90வது வயதில் சென்னையில் காலமானார்.

20- பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.

23 - தனது கோபாலபுரம் வீட்டை தனது காலத்திற்குப் பின்னர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்ற பெயரில் இலவச மருத்துவமனை அமைக்க வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

29 - நடிகர் எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

- மதுரையில் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மகனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து உடலை பிரிட்ஜுக்குள் போட்டு வைத்த தாயை போலீஸார் கைது செய்தனர்.

31 - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் இணைவதாக அறிவித்தார்.

ஆகஸ்ட்

1 - துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

4- சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் அதிரடி சிபிஐ ரெய்டு. ரூ. இரண்டே கால் கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

5 - ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு.

10- பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் பலி. சென்னையைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் மரணமடைந்தான்.

12 - சென்னையில் கடற்கரை- தாம்பரம் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் மகளிர் சிறப்பு ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

- தமிழகத்தில் உறுப்பு தானத்திற்கு வித்திட்ட ஹிதேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 3 பேருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

13 - சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறந்து வைத்தார்.

20- தங்கபாலு மீதான சொத்துக் குவிப்பை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி.

- நாட்டிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திறந்து வைத்தார்.

21 - ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்திலும் வெற்றி. கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்தன.

- கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

24 - சென்னை அருகே பனையூரில் முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவனும், அவரது மனைவி ரமணியும் சினிமா பாணியில் நடந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பிடிபட்ட சண்முகராஜன் என்பவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

26 - 2010ம் ஆண்டிலிருந்து முதல் கட்டமாக 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்ததப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

28 - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்றரை மணி நேரத்தில் 14 பெண்களுக்கு நடந்த மார்பக அறுவைச் சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியது.

- உறுப்பு தானம் செய்வதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அறிவித்து ஆவணத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

31 - முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பாக கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

செப்டம்பர்

1- இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு.

8 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

13 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி அபிராமி சென்னையில் மரணம்.

15 - அண்ணா நூற்றாண்டையொட்டி கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் 9 பேர் விடுதலை.

- சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரி்மை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 - தென்கச்சி சுவாமிநாதன் சென்னையில் மரணமடைந்தார்.

17 - சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதலாவது இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

18 - தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படை. முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

21 - சென்னை- டெல்லி இடையிலான அதிவேக எங்கும் நிற்காமல் செல்லும் ரயிலை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

- நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தில் குதித்தார்.

24 - சென்னை அசோக் நகரி்ல அனந்தலட்சுமி என்ற பெண்மணியும், அவரது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- திருவண்ணாமலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமானது. அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.

26 - காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருதினை திமுக வழங்கியது.

30 - திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் திறந்து வைத்தார்.

- தேக்கடியில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 47 பேர் பலியானார்கள்.

அக்டோபர்

1- அரியலூர் அருகே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனசோர் முட்டைகள் குவியல் குவியலாக கண்டுபிடிப்பு.

2 - நடிகை புவனேஸ்வரி வீட்டில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

- திருச்சி அருகே திருவெறும்பூரில் பிரபல ரவுடி குரங்கு செந்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

4 - அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக பாமக அறிவிப்பு.

6- மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடிவிபத்து. 2 பேர் பலி. பட்டாசு வெடித்ததாக போலீஸார் அறிவிப்பு.

16 - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் பட்டாசுக் கடையில் பயங்கர தீவிபத்து, 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

- கோவையில் உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவிப்பு.

25 - முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

29 - சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முன்னாள் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

30- மதுரை முன்னாள் எம்.பி. மோகன் சென்னையில் மரணம்.

நவம்பர்

2 - வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் சென்னையில் மரணம்.

3 - முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு.

8- நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த பேய் மழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டமே ஸ்தம்பித்துப் போனது.

9 - முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.

12 - அகதிகள் முகாம்களின் மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு. தமிழக அரசின் திட்டங்கள் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.

14 - சேலம் சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

16 - கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட்டில் சரணடைந்தார்.

27 - கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் கோவை சாலை விபத்தில் மரணம்.

30 - அனைத்து மதத்தினரும் திருமணங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

டிசம்பர்

1 - பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் மரணம்.

3 - கூவம் நதி சீரமைப்புக்காக சென்னை நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.

- வேதாரண்யத்தில் பள்ளிக்கூட வேன் கோவில் குளத்தில் பாய்ந்ததில், ஆசிரியை மற்றும் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 - சென்னை உயர்நீதிமன்ற மோதல் வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

5 - சென்னையில் அருந்ததியர் இன மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியல், பதவிக்கு விடை கொடுத்து விடப் போகிறேன் என்று அறிவித்தார்.

9 - உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.

15 - தமிழகத்தில் மின்வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டது. மின் தொடரமைப்புக் கழகத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

- தாராபுரத்தில் காடராக்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 9 பேருக்கு பார்வை பறிபோனது.

18 - கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு தண்டனையை உறுதி செய்தும், 22 பேரின் தண்டனையை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.

22 - உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கோ.சி.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

23 - திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

24 - தமிழகத்தில் ஆம்பூர், மடத்துக்குளம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய புதிய தாலுகாக்கள் அமைக்கப்பட்டன.

27- பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

- சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்தது.

29 - கம்பத்தில் கேரள வாகனங்களை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

30 - கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் நில ஆக்கரமிப்பு தொடர்பான சர்வே குழுவினரின் விசாரணை தொடங்கியது.

- பாஜக மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

....பகலவன்....

2009ம் ஆணடில் உலகம்: முக்கிய நிகழ்வுகள்.

ஜனவரி

1 – .நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரியா, ஜப்பான், மெக்சிகோ, துருக்கி, உகாண்டா ஆகியவை உறுப்பினர்களாகின.

ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை செக் நாடு ஏற்றது.

- ஸ்லோவேகியா தனது தேசிய நாணயமாக யூரோவை ஏற்றுக் கொண்டது.

3 – காஸா போரின் உச்சகட்டமாக காஸா நகருக்குள் தரை வழித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.

7 – உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு சப்ளையை மூடியது ரஷ்யா.

13 – எத்தியோப்பிய ராணுவம் சோமாலியாவை விட்டு விலகத் தொடங்கிது.

15 - அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம், ஹட்சன் ஆற்றில் விழுந்தது. ஆனால் விமானத்திற்கும் எதுவும் ஆகவில்லை. அதில் இருந்த 6 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.

17 – காஸாவில் போர் நிறுத்தத்தை அறிவித்தது இஸ்ரேல்.

20 – பாரக் ஹூசேன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார்.

22 – காங்கோ புரட்சித் தலைவர் லாரன்ட் நுகுண்டாவை, ருவாண்டா படைகள் பிடித்தன.

பிப்ரவரி

1 – உலகின் முதல் லெஸ்பியன் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் அயர்லாந்தின் புதிய பிரதமாரக பதவியேற்ற ஜோஹன்னா சிகுரோர்டாட்டாய்ர்.

7 – 173 பேரை பலி கொண்ட மிகப் பெரிய காட்டுத் தீ ஆஸ்திரேலியாவில் தொடங்கிய தினம். இதில் 500 பேர் காயமடைந்தனர். 7500 பேர் வீடுகளை இழந்தனர்.

10 – அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் செயற்கைக்கோள்கள் மோதி சைபீரியாவில் விழுந்தன.

11 – ஜிம்பாப்வேயின் புதிய பிரதமராக மார்கன் ஸ்வாங்கிராய் பொறுப்பேற்றார்.

25 - வங்கேதச படையினர் திடீர் புரட்சி. 15 அதிகாரிகள் சுட்டுக் கொலை.

மார்ச்

2- கினியா -பிசா அதிபர் ஜோவோ பெர்னார்டோ வியரியா படுகொலை செய்யப்பட்டார்.

3 – பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களில் பலர் காயமடைந்தனர்.

7 – நாசாவின் கெப்ளர் மிஷன் தொடங்கியது.

21 - தமிழகத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல்

1 - அல்பேனியாவும், குரோஷியாவும் நேட்டோவில் இணைந்தன.

2 - உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதிக்க ஜி -20 நாடுகளின் கூட்டம் லண்டனில் தொடங்கியது.

3– 21வது நேட்டோ மாநாடு தொடங்கியது. டென்மார்க் பிரதமர் ரஸ்முஸன் புதிய பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

5 – வட கொரியா ராக்கெட் சோதனையை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர வைத்தது.

6 – இத்தாலியின் லாஅக்யூலா நகரில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்திற்கு 300 பேர் பலியானார்கள்.

7 – முன்னாள் பெரு அதிபர் அல்பர்டோ பிஜிமோரிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

11– தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ராணுவப் புரட்சியும், மக்கள் புரட்சியும் இணைந்ததால் தாய்லாந்தில் பதட்டம் ஏற்பட்டது.

21 – உலக டிஜிட்டல் நூலகத்தை யுனெஸ்கோ தொடங்கி வைத்தது.

24 – பன்றிக் காய்ச்சல் மெக்சிகோவிலிருந்து உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

மே

23 – முன்னாள் தென் கொரிய அதிபர் ரோ மூ ஹியூன் தற்கொலை செய்து கொண்டார்.

25 – 2வது அணு சோதனையை வெற்றிகரமாக நடத்திப்
பார்த்துள்ளதாக வட கொரியா அறிவித்தது.

ஜூன்

1 – பிரேசிலிலிருந்து பாரீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் 228 பேருடன் அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அனைவரும் உயிரிழந்தனர்.

11 – பன்றிக் காய்ச்சல் உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எச்1என்1 என்ற பெயரையும் உலக சுகாதார நிறுவனம் சூட்டியது.

12 – ஈரான் அதிபராக 2வது முறையாக மஹமூத் அகமதிநிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

21 – டென்மார்க் வசம் இருந்து வந்த சட்ட அமலாக்கம், நீதித்துறை விவகாரங்கள், இயற்கை வளங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றை தன் வசம் எடுத்துக் கொண்டது கிரீன்லாந்து. மேலும் கிரீன்லான்டிக் மொழியே இனி அதிகாரப்பூர்வ மொழி என்றும் அது அறிவித்தது.

25 – பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணமடைந்தார்.

30 – ஏமன் விமானம் 153 பேருடன் காமரூஸ் அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

ஜூலை

1 – ஐரோப்பிய யூனியனின் தலைமைப் பொறுப்பை ஸ்வீடன் ஏற்றது.

5 – சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்குட்பட்ட உரும்கி பகுதியில், உய்கூர் முஸ்லீம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய மோதலில் 150க்கும் மேற்பட்ட உய்கூர் முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். வழக்கம் போல சீன அரசு தனது படை பலத்தை வைத்து இந்தப் போராட்டத்தை அடக்கி விட்டது.

- ரோஜர் பெடரர் 15வது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்தார்.

7 – மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கு நடந்தது.

14 - பாரீஸில் நடந்த பிரெஞ்சு தேசிய தினத்தில் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது நடந்த அணிவகுப்பில் இந்திய முப்படை வீரர்கள் கலந்து கொண்டு மிடுக்காக நடை போட்டனர்.

17 - போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் குளியலறையில் வழுக்கி விழுந்து காயமுற்றார்.

22 – 21வது நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நடந்தது. இது 6.38 நிமிடங்கள் நீடித்தது. ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் பெருங்கடலில் இது நீடித்தது.

ஆகஸ்ட்

3 - தனித்துவம் கொண்ட இனப் பிரிவினர் அவர்களை அவர்களே ஆட்சி புரியலாம் என்ற உரிமையை அறிவித்தது பொலிவியா. இப்படி அறிவித்த முதல் தென் அமெரிக்க நாடு இதுதான்.

4 – பில் கிளிண்டன் நேரில் வந்து சமாதானம் பேசியதைத் தொடர்ந்து கைது செய்யபப்பட்ட 2 அமெரிக்க பத்திரிக்கையாளர்களை விடுவிக்க வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல் உத்தரவிட்டார்.

7 - கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், மலேசியாவில் வைத்து இலங்கை உளவுப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

15 - அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் ஷாருக் கான் 2 மணி நேரம் சிறை வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

23 - மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலாவின் ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பெற்றார்.

செப்டம்பர்

25 - பிட்ஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டில், உலகப்
பொருளாதார முன்னேற்றத்திற்கு இனி ஜி 20 நாடுகள் தீவிரமாகப் பாடுபடும் என அறிவித்தன.

26 – கேட்சனா சூறாவளியால் பிலிப்பைன்ஸ் நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து மணிலா வெள்ளக்காடாகியது. பிலிப்பைன்ஸின் 25 மாகாணங்களில் இயற்கை பேரழிவு ஏற்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது.

27 - மிஸ் கான்டினென்டல் அழகிப் பட்டத்தை வெனிசூலா அழகி ஹென்னாலி வென்றார்.

28 – கினியா ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 157 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

29 – அமெரிக்க சமோவா தீவுப் பகுதியில், கடலில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால், சுனாமி அலைகள் தாக்கின. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

30 – இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அக்டோபர்

2 - ரியோடிஜெனீரோ நகரில் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

9- அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

நவம்பர்

3 – பெல்ஜியம் பிரதமர் ஹென்மன் வான்ரோம்பி, ஐரோப்பிய கவுன்சிலின் முதல் நிரந்தர அதிபராக அறிவிக்கப்பட்டார்.

11 - இந்தியாவில் நாச வேலைக்குத் திட்டமிட்டதாக பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லி, மற்றும் பாகிஸ்தானிய கனடியர் தஹவூர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

14- சிங்கப்பூரில் அபெக் மாநாடு நடந்தது.

13 – இந்தியாவின் சந்திராயனில் இணைத்து அனுப்பப்பட்ட நாசாவின் எல்கிராஸ், நிலவில் போதிய அளவு தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது.

22 - மிஸ் எர்த் பட்டத்தை பிரேசில் அழகி லாரிசா ரமோஸ் வென்றார்.

27 – துபாய் வேர்ல்ட் மிகப் பெரும் கடன் சிக்கலில் சிக்கி, உலக பங்குச் சந்தைகளை ஆட்டம் காண வைத்தது.

டிசம்பர்

1 - ஜார்ஜ் புஷ் மீது ஷூவை வீசி புதிய கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்த ஈராக் பத்திரிக்கையாளர் அல்ஜெய்தி மீது, பாரீஸில் இன்னொரு ஈராக் பத்திரிக்கையாளர் ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

7 - கோபன்ஹேகன் நகரில் .நா. புவிவெப்ப மாற்றத் தடுப்பு மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

10 - அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார் ஒபாமா.

12 - பல பெண்களுடன் டைகர் உட்ஸுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகி உலக கோல்ப் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

- ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த உலக அழகிப் போட்டியில், ஜிப்ரால்டர் அழகி கயானி பட்டம் வென்றார்.

18 - உருப்படியான தீர்வைக் கூறாமல் கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.

22- இயேசுநாதர் வளர்ந்த நாசரேத் நகரில், அவர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான வீட்டை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

23 - இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியிருந்த ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற இலங்கைத் தமிழ் வாலிபர் உடல் நலம் குன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

25 - வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் உரை நிகழ்த்த வந்த போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டை ஒரு பெண் மோதித் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

26 - அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி உமர் பாருக் அப்துல்முத்தல்லாப் என்பவரை சக பயணிகள் மடக்கிப் பிடித்து பெரும் விபரீதத்தைத் தடுத்தனர்.

28 - கராச்சியில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது நடந்த பயங்கரத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

- உலகிலேயே மிகவும் மோசமான டிரஸ் அணிந்தவர் என்று ஹாலிவுட் நடிகை கேட் பிளான்சட்டை இங்கிலாந்து பத்திரிக்கை அறிவி்த்தது.

29 - அமெரிக்காவில் தாக்குதல் நடத்த ஏராளமான தற்கொலைப் படையினர் அங்கு செல்லவுள்ளதாக கைதான நைஜீரியர் அப்துல்முத்தல்லாப் தெரிவித்தார்.

- மன நலம் பாதித்த இங்கிலாந்துக் குடிமகனான அக்மல் ஷேக் (53) என்பவருக்கு சீனா மரண தண்டனையை நிறைவேற்றியது.

30 - பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த உதவுமாறு தலிபான்கள் தன்னைக் கேட்டுள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.
....பகலவன்....