தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சென்னைப் பள்ளிகள்!


சென்னையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயது கல்யாணியின் சொத்து வறுமை மட்டுமே. கணவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்கவைக்க வேண்டும். வேறு வழியில்லை. நான்கைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் சேர்க்கிறார் கல்யாணி.

அவருக்கு ஒரு கனவு உண்டு. தனது பெரிய மகனை கலெக்டர் ஆக்க வேண்டும். இளைய மகனை போலிஸ் அதிகாரி ஆக்கவேண்டும். ஒரே வீட்டில் ஓர் ஐ.ஏ.எஸ், ஓர் ஐ.பி.எஸ். என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

முதல் கட்டமாக குழந்தைகளை படிக்கவைக்க வேண்டுமே? இரு குழந்தைகளுமே காண்வெண்டில் படிக்கிறார்கள். மாதாமாதம் பீஸ் கட்டவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ஜூன்மாதத்தில் பெரிய செலவு இருக்கும். அப்போது வசந்தி தவித்துப் போய்விடுவார்.

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளிகளிடம் கடன் கேட்பார். தன்னுடைய சம்பளத்தில் மாதாமாதம் கழித்துக்கொள்ள சொல்வார். வருடத்துக்கு ஒருமுறை கல்யாணி வாங்கும் பணத்தை மாதாமாதம் கட்டிமுடிப்பதற்குள் அடுத்த ஜூன் வந்துவிடும். மீண்டும் கடன். கேட்டது கிடைக்காதபட்சத்தில் ஐந்து, பத்து வட்டிக்கு வெளியில்கூட பணம் வாங்க கல்யாணி அஞ்சுவதில்லை.

இது கல்யாணியின் கதை மட்டுமே அல்ல. கல்யாணிகளின் கதை. சென்னையில் வசிக்கும் ஏழை/நடுத்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கதையும் இதுதான். பெயர்கள்தான் வேறு வேறு.

கல்வியின் அவசியத்தை இந்த தலைமுறை நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான் தனது அடுத்த தலைமுறைக்கு தலையை அடகுவைத்தாவது நல்ல கல்வியை வழங்கியாக வேண்டுமே என்று தன்னைத்தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்கிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியா என்ன?

அரசுப் பள்ளியிலோ, அருகிலிருக்கும் மாநகராட்சிப் பள்ளியிலோ ஏன் தன் குழந்தைகளை கல்யாணி சேர்க்கவில்லை?

“நானே கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். என் புருஷனும் அங்குதான் படிச்சாரு. எங்க புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிச்சு நல்ல நெலைமைக்கு வரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நல்லா கவனிச்சுப் பார்த்துட்டேன். நான் வேலை செய்யுற வீட்டுலே இருக்குற குழந்தைங்கள்லாம் காண்வெண்டுலேதான் படிக்குது. காண்வெண்டுலேதான் நல்ல படிப்பு கிடைக்குது” – கல்யாணி சொல்லக்கூடிய பதில் இதுதான்.

பலருக்கும் இருக்கும் மனத்தடை இதுதான். இது தவறென்றும் சொல்லிவிட முடியாது. அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கல்யாணியும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்?’

மாநகராட்சிப் பள்ளிகளில் ஒழுங்கு கிடையாது. தேவையான வசதிகள் கிடையாது. ஆசிரியர்கள் சரியாக கல்வி போதிக்க மாட்டார்கள். இங்கு படிப்பவர்கள் யாரும் பெரிய படிப்பு படிப்பதில்லை – இதெல்லாம் பொதுப்புத்தியாக நம் மக்கள் மனதில் ஆணியாய் அடித்து ஆழமாய் வேரூன்றப்பட்டிருக்கிறது.

ஆனால் நிலைமை அப்படியல்ல என்பதுதான் இன்றைய நிஜம். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளின் வசதிகளும், கல்வித்தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் பிரபலமான தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வசதிகள் குறிப்பிடத் தகுந்தவை.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை 40 ஆரம்பப் பள்ளிகளோடு 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று 30 மேல்நிலை, 37 உயர்நிலை, 99 நடுநிலை, 116 ஆரம்பப் பள்ளி, 30 மழலையர் பள்ளி, ஓர் உருது உயர்நிலை மற்றும் ஒரு தெலுங்கு உயர்நிலை பள்ளிகள் என்று விழுதுகளை விரிவாய் வேரூன்றியிருக்கிறது. 1,05,882 மாணவ மாணவியர் கல்வி பயிலுகிறார்கள். 4,062 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

4 சமுதாய கல்லூரிகள் நடத்துகிறார்கள். ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ஐ.டி.ஐ) உண்டு. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இங்கே சேரமுடியும்.

சரி. கட்டணமெல்லாம் எப்படி?

அதிகபட்சமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட வருடத்துக்கு ரூ.148/- மட்டுமே செலவு ஆகும் என்பதை வைத்து மற்ற வகுப்புகளுக்கு ஆகும் கட்டணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரை முற்றிலும் இலவசக் கல்வியையே சென்னைப் பள்ளிகள் வழங்குகிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஸ்பெஷல் ட்யூஷனும் தேவைப்படும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

வேறென்ன வசதிகள்?

ஒன்று முதல் பண்ணிரெண்டு வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசம்.

மதிய உணவுத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி.

எஸ்.சி./எஸ்.டி, பி.சி./எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு 11 மற்றும் 12 வகுப்புகளில் உதவித்தொகை. இதே பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

இலவச பஸ் பாஸ்.

ஓவியம், நுண்கலைத்திறன் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

தடகளம் மற்றும் இதரவிளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கணினி வழிக்கல்வி உண்டு. மாணவர்களுக்கு இண்டர்நெட் பரிச்சயம் படிக்கும்போதே ஏற்படுகிறது.

ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப் பயிற்சி.

ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடியும் வழங்கப்படுகிறது.

முறையான கட்டிடம், விளையாட்டு மைதானம், தீயணைப்புச் சாதனங்கள், ஒலிபெருக்கி, கணினி, மின்சார மணி, நவீன இருக்கைகள், மாணவ மாணவியர்களுக்கு சாய்வு நாற்காலிகள் என்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே உண்டு.

இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே.

சரி, கட்டணமும் குறைவு. நிறைய வசதிகள் இலவசம். கல்வித்தரம் எப்படி?

ஒட்டுமொத்தமாக இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 83 சதவிகிதமும், 10ஆம் வகுப்பில் 82 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இனியும் நாம் மாநகராட்சிப் பள்ளி என்றே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏப்ரல் 8 முதல் இவை ‘சென்னைப் பள்ளிகள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கையை சுறுசுறுப்பாக மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டிலிருந்து வரவேற்கத்தக்க சில மாற்றங்களை சென்னைப் பள்ளிகளில் நாம் காணலாம்.

மாணவ மாணவியருக்கு மட்டுமல்ல. எல்லாப் பள்ளிகளுக்கும் யூனிஃபார்ம் உண்டாம். அதாவது சென்னைப் பள்ளிகள் அனைத்துமே ஒரே மாதிரியான வண்ணத்தில் அலங்கரிக்கப்படுமாம்.

நூலகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வாரத்துக்கு மூன்றுநாட்களாவது குறைந்தபட்சம் அரைமணி நேரம் மாணவர்கள் நூலகத்தில் செலவழிக்க நேரம் வழங்கப்படுமாம். இலக்கியங்களில் தொடங்கி காமிக்ஸ் வரை தங்கள் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்று உறுதிகூறுகிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள். கோடை விடுமுறைகளில் ஒரு சிறப்பு நூலகத்தை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தலாம் என்றும் ஒரு ‘நச்’ ஐடியா மாநகராட்சிக்கு உண்டு.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு இணையாக இன்னும் சில வருடங்களில் இந்த சென்னைப் பள்ளிகளை தரமுயர்த்துவதே தங்களது குறிக்கோள் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்கிறார்.

12ஆம் வகுப்பு வரை தங்களிடம் படித்த மாணவ/மாணவியர் உயர்கல்வி கற்கவும் மாநகராட்சியே ஊக்கத்தொகையும் தருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.25000, செவிலியர் ஆசிரியர் போன்ற பயிற்சிகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.5000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3000 என்று ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது மாநகராட்சி.

“எந்த மனத்தடையும் இன்றி குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்க்கலாம். கல்வித் தரத்திலும் வளர்ச்சிலும் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக எங்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்துவிட்டு அவதிப்படும் பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன்.

கல்யாணிகள் இனி தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?

(நன்றி : புதிய தலைமுறை) 





எழுத்தாளரின் உயிர் காக்க உதவுங்கள்

எழுத்தாளரின் உயிர் காக்க உதவுங்கள்


சிறுகதை உலகில், ஒரு சூரிய மொட்டு போல விரியத் தொடங்கியிருப்பவர் முத்துராமன். அவரது இலக்கிய தாகமும், அறிவும் எத்தகையது என்பதை பிரபல எழுத்தாளர் பா.ராகவனின் வார்த்தைகளில் அறிய விரும்புபவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்.

http://www.writerpara.com/paper/?p=1166

கல்கி, கிழக்கு பதிப்பகம், தமிழக அரசியல் போன்ற இடங்களில் பணியாற்றிய இந்த 33 வயது இளைஞர், இன்று இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு தவித்துக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மருத்துவர்கள் நிர்ணயித்திருக்கும் நான்கு லட்சம் ரூபாய் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாதது.

கருணையுள்ளம் கொண்டவர்கள் அவருக்கு உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் ராமச்சந்திரா மருத்துவமனையில் வழங்கப்பட்ட கடிதத்தையும், அவருக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இன்னபிற தகவல்களையும் இணைத்துள்ளேன். நீங்கள் அனுப்புகிற சிறு துளி கூட அவருக்கு உதவக்கூடும். எவ்வளவு சிறு தொகையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அனுப்பி உதவுங்கள் தயவுசெய்து.

-ஆர்.எஸ்.அந்தணன்
பொறுப்பாசிரியர்
தமிழ்சினிமா,காம்

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch - A/c No: 30963258849

Branch Code : 5090

MICR No: 600002118

IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை - 600037.

muthuraman@gmail.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600 018.
தொலைபேசி எண் - 044 - 4200 9601 / 03/ 04.



நன்றி

பகலவன்

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்


அன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

subaveeஇப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.

"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?

சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?

இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?

நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக  பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.

ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் புறநகர் கமிஷ்னர் ஜாங்கிட் தலைமையில் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?

நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.

நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். "இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?" என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

கையாலாகாத ஒரு தமிழன்

வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்!



சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி


      சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன்  அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.
 
ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி  இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின்  கல்லடி, சொல்லடி,  செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயமரியாதையாக வாழ்ந்தவர்.


      இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், வாலடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார்.  பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆறு ஆண்டுகள் ராணுவ பணி செய்தார். ராணுவப் பணியின் போது மெசபடோமியாவில்  இவர் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்களை கடும்; பனிகாரணமாக  இங்கிலாந்து  படை விட்டு விட்டு திரும்பிவிட்டது. கவலைப்படாமல் கடல்வழியாக கொல்கத்தா  வந்து சேர்ந்து அத்துடன் ராணுவ பணிக்கு முழுக்கு போட்டார். ஊர் திரும்பியவருக்கு பட்டுக்கோட்டை சுயமரியாதை பயணவழிகள் செய்து கொடுத்துது.


      கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். அந்த சமயம் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்கள், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.
 
பிராமணரல்லாத மாணவர் பிராமணர்களுக்கான பானைத் தண்ணீரை  குடித்து விட அந்த மாணவரை அடித்து தண்டித்தது குருகுலம். அப்படிப்பட்ட குருகுலத்துக்கு அன்றைய காங்கிரஸ்  ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்தது. குருகுலத்தின் தீண்டாமை போக்கை காங்கிரஸ்  கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பெரியாரும், சீர்த்திருத்த கருத்து கொண்ட காங்கிரஸில்; பலரும்  கொதித்தெழுந்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி தலைவராக இருந்த வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு நாளிதழில் காரசாரமாக எழுதி பிராமணர்களின் போக்கை கண்டித்தார்.


      ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை  ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.


      அந்த வழக்கு நீதிமன்றம் போனது. ஆதில் அழகிரிக்காக வழக்கறிஞராக ம.சிங்காரவேலர் ஆஜரானார்.


      ஆழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால்  சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.


      இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் அழகிரிக்கு ராணுவத்துக்கு  ஆள் சேர்க்கும் ரீஜினல் லெக்சரர் பதவி கிடைத்தது. பசுமலையில் தங்கி போர் ஆதரவு பிரச்சாரக் கூட்டங்களில் போர் பற்றி பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார்.

ஏதிரானவர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினார்கள். கவர்னர் விசாரனை வந்தது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்காமல் சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக புகார் வருகிறதே ? என்று கேட்க. என் பிரச்சாரத்தால் பட்டாளத்துக்கு ஆள் சேருகிறார்களா என்று மட்டும் பாருங்கள். பேச்சை பார்க்காதீர்கள் என்றார் அழகிரி.  உங்களை எச்சரித்து அனுப்புகிறேன் என்றார் கவர்னர். நான் தவறு செய்யவில்லை உங்கள் மன்னிப்போ. எச்சரிக்கையோ வேண்டாம். இந்த வேலையும் வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுத்து  வெளியேறிவிட்டார்.


      சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது மாப்பிள்ளை ஊர்வலத்தில் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி வந்தது. கூடியிருந்த கூட்டம் ராஜரெத்தினம்  பிள்ளையின் தோல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாசிக்கச் சொன்னது. தனியாக வந்த கனீர் குரலொன்று ராஜரெத்தினம் பிள்ளை தோல் துண்டை எடுக்காதீர்கள் என்று கேட்டது. ஓட்டுமொத்த கூட்டமும் அந்த திசை நோக்கியது அந்த குரல் அழகிரியிடமிருந்து வந்து கொண்டிருந்தது. யாரும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் அக்கரையுடன் செயல்பட்டார்.


      தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைபயண இந்தி எதிர்ப்பு  பிரச்சாரம் செய்தார். சென்னையில் பெரியார் வரவேற்று விழா நடத்தினார்.


      அவர் எத்தனை சமூகப் பணி புரட்சி செய்தாலும் அவரை காசநோய் பிடித்துக் கொண்டது. திருவாரூரில் சுயமரியாதை  கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் காசநோயாளியான  நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய முதல்வர் கலைஞர்.


      தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவும் பிரிந்து விட்ட காலம் அழகிரிக்கு காசநோய் அதிகமானது. சென்னையில் டாக்டர் சந்தோசம்  சிகிச்சை அளித்தார். அண்ணாவுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு  அழகிரி இல்லை ஊருக்கு கிளம்பி விட்டதாக தகவல் தெரிந்தது. ரயிலில் ஏறியிருந்த அழகிரியை சந்தித்து ரூ.400 பணம் கொடுத்தார். நெகிழ்ந்து போன அழகிரி அண்ணாவின் கைகளை பற்றிக்கொண்டார். அதன் பிறகு அண்ணாவை எந்த கூட்டத்திற்கு அழைத்தாலும் அழகிரிபெயரில் ரூ.100 மணியார்டர் செய்து அதன் ரசீது அனுப்பினால் தான் கூட்டத்துக்கு வருவேன் என்று அறிக்கை கொடுத்துவிட்டார். அதன்படி பலரும் பணம் அனுப்பினார்கள்.


      இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்;த புரட்சியாளர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி காசநோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார். மரணமடைந்தாலும் அவரது பெயரும், புரட்சி புகழும் என்றும் மங்காமல் இன்றுவரை நீடித்து நிற்கிறது. இவரது கடன்களை கலைவாணர் என்.எஸ்.கே அடைத்தார்.


      அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற  காலத்தில் தான் முதல்வாரன போது தன் சொந்த செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையை பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த  2007ம்  ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி  உள்ளார்.


      எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக 'பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம்' தொடங்கினார்.


      ஆழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்ப+ர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.


      அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.

                  



மொழியின் வழிகாட்டி!

மொழியின் வழிகாட்டி!


லகின் தொன்மையான மொழிகள் பலவும் மறைந்தொழிந்துவிட்ட இன்றைய சூழலில், கற்பனைக் கெட்டாத காலந்தொட்டு இன்றளவும் தமிழ்மொழி வழக்கில் உள்ளதற்குக் காரணம், மொழிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நல்லோர் இடைவிடாது தோன்றிக் கொண்டிருந்ததேயாகும். அத்தகையோரில் மறைந்த எழுத்தாளர் அ.கி. பரந்தாமனாரும் ஒருவர்.

2002-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 15-ஆம் நாளன்று அவரது நூற்றாண்டு நிறைவு நாளை தமிழ் சான்றோர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடினர்.


சென்னையில் கிருஷ்ணசாமி-சிவக்கியானம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 1902-ல்  பிறந்த இவரின் படைப்புகளில் "நல்ல தமிழில் எழுத வேண்டுமா?' என்ற நூல் இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எழுதுவோரால்தான் ஒரு மொழி வளம் பெறுவதும் சேதமடைவதும் நிகழ்கிறது. எனவேதான் பரந்தாமனாரின் பொரும்பாலான படைப்புகள் எழுத்தாளர்களுக்கானதாக இருந்தன.

 தனது "நல்ல தமிழில் எழுத வேண்டுமா?' என்ற நூலில் அவர் முன்னிலைப்படுத்தியுள்ள கருத்துக்கள் கூர்மையாக கவனிக்கத்தக்கது.

""சிறுகதை, நெடுக்கதை எழுதுவோர், வார, மாத வெளியீடுகளுக்கு கட்டுரை எழுதுவோர், திறனாய்வோர், திரைப்பட உரைநடை(வசனம்) இயற்றுவோர் அனைவரும் எழுத்தாளர் எனப்படுகின்றனர்.

இன்று எழுத்தாளர் என்றால் தமிழ் இலக்கியம் அறியாது எழுதுகிறவர்கள் அல்லது தமிழ் மரபுக்கு மாறாக எதையும் இயற்றுகிறவர்கள் என எண்ணம் தோன்றிவிட்டது. ஆகவே எழுத்தாளர்கள் நடைமுறைக்கு வேண்டிய போதுமான அளவு இலக்கண அறிவும் பெறவேண்டுவது இன்றியமையாதது என்று உணரவேண்டும்.

இலக்கியம் ஓரளவு தெரிந்து, நடைமுறைக்குப் பயன்தரும் இலக்கணம் அறிந்து, நல்ல தமிழில் எழுதவல்ல எழுத்தாளர்கள் எழுதும் நூல்களும் கட்டுரைகளுமே சமுதாயத்தில் நன்மதிப்பை பெறும். நின்று நிலைக்கும்.

இலக்கணமே கற்க வேண்டுவதில்லை என்று ஒருசிலர் கூறும் கூற்று மதிக்கத்தக்கதன்று. கொச்சைத் தமிழில் தவறுகளுடன் எழுதுவதில் உயிருண்டு என்று சிலர் சொல்வதையும் எழுத்தாளர்கள் ஏற்று எழுதலாகாது. தமிழே படிக்காமல் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் வடமொழிப்பாடம் எடுத்து தேறியவர்கள், தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்காமல் எழுத்தாளராக வருவது தமிழன்னைக்குச் செய்யும் தீமையாகும்.
 
தமிழ் எழுத தெரிவது மட்டும் போதாது. ஆங்கிலப் பயிற்சி மிகுதியாக இருப்பதும் போதாது. தமிழ் இலக்கணம் ஓரளவாவது அறியாதவர்கள் தமிழ் எழுத்தாளராகத் தொண்டாற்றினால், அவர்களால் எப்படி நல்ல தமிழ் எழுத முடியும்? வேறு பல திறமைகள் பெற்றிருந்தாலும், இதுபோன்ற எழுத்தாளர்கள் பயனற்றவர்களாகிறார்கள். ஆதலால், தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய- இலக்கணங்களை போதிய அளவாவது கற்க வேண்டும்'' என்பது அவர் கருத்து.

இதைதவிர அன்றாட நடைமுறையில் பயன்படும் தமிழ் இலக்கணத்தை புதிய தமிழ் இலக்கணமாகவும், "புதிய தமிழுக்கும்' இலக்கணமாகவும் எழுதி வழிகாட்டியவர் பரந்தாமனார். இவரது "கவிஞராக' என்னும் நூல் தமிழகத்தில் பல நல்ல மரபு கவிஞர்களை  உருவாக்கியது.

1950-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பொறுப்பேற்று 17 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ் பேராசிரியராக இருந்தபோது, மதுரை திருவள்ளுவர் கழகத்திற்கும், எழுத்தாளர் மன்றத்திற்கும் துணைத் தலைவராக இருந்தார். இவர் பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சென்னை பல்கலைகழகத்தில் அகாடமி கவுன்சில் உறுப்பினராக இருந்தார். பல்வேறு பொறுப்புகள் வகித்து பல விருதுகள் பெற்ற இவரது தமிழ் தொண்டினை பாராட்டி 1981-ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், பரந்தாமனாருக்கு "திரு.வி.க. விருது' வழங்கி கௌரவித்தார்.

1986-ஆம் ஆண்டில் அவர் மறைந்தாலும், மொழிக்கு அவர் செய்த அருந்தொண்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

 

-இராம. அய்யப்பன்

கருணாநிதி, சாதாரண அரசியல் பிழைப்புவாதி..தமிழ் பேசும் பிழைப்புவாதி, பெரும் ஊழல்காரர் - ஈழ தேசம் பத்திரிக்கை.

தமிழர் நலன்கள் குறித்து இந்திய பாராளுமன்றத்திலும் பேச்சு..! தமிழக சட்டசபையிலும் பேச்சு…! பிரபாகரன், வேலுப்பிள்ளை திருவேங்கடம் தொடர்ந்து பார்வதி அம்மையார்..இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கருணா மற்றும் பார்ப்பனிய  சோனியா கும்பல்..!

தி.மு.க கருணாநிதிக்கு ஜெயலலிதா என்றால் ஜென்மப்பகை..ஏன் அந்த அம்மையார் இவரின் சொத்துக்களை பறித்து விட்டாரா..? முன்பு எம்.ஜி.ஆர் என்றால் இதே போன்று கருணாநிதிக்கு ஜென்மப்பகை..எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதி என்றால் மிகப்பெரும் ஊழல் பேர்வழி..அரிசியில் ஊழல் செய்து ஏழைகள் வயிற்றில் அடித்த  மாபாதகன்..தமிழக சொத்துக்களை கொள்ளை அடிப்பவர் என்றே தமிழகத்தில் உள்ள அணைத்து மக்களும்
நம்பினார்..அதுதான் உண்மையும் கூட…

இந்த மாதிரி அரசியல் முகம் இருந்ததால் கருணாநிதி இதில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழ் அறிஞர் வேடம், இலக்கியவாதி வேடம், பத்திரிக்கையாளர் வேடம், கதை எழுதும் எழுத்தாளர் வேடம் எல்லாம் போடவேண்டிய நிலை ஏற்பட்டது..எம்.ஜி.ஆர் இறக்கும் வரை..!
 
பிறகு ஜெயலலிதா அம்மையார் வந்தார்..இவரின் அணைத்து வித வேடங்களையும் எள்ளி நகையாடினார்..ஊழலும் கேளிக்கையும் செய்ததால் இந்த அம்மையார் போன பிறகு..மீண்டு வந்த கருணாநிதி பல கோடிக்கணக்கான ரூபாய்களை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்து அடக்கினார்..முன்பு தப்பித்துக்கொள்ள போட்ட வேடங்களை உண்மை என்று தனது தொலைகாட்சி மற்றும் சினிமா உலகில் உள்ள பதர்களிடமும், இவரை விட மோசமாக உள்ள பத்திரிக்கையாளர்களிடம் தான் ஒரு மிகப்பெரும் தமிழ் அறிஞர் என்றும்..தமிழ் காவலர் என்றும்…" கலைஞர் என்றால் கலைஞர் தான்..என்ன பேச்சு….என்ன அறிவு..தமிழில் இவரைவிட்டால் இனி வேறு யாரும் இல்லை என்று.." தனது பிழைப்புவாதிகளிடம் தனது எடுபிடிகளிடம் ஒரு ஐந்து ஆண்டுகாலம் பரப்பி விட்டார்.. !
 
இந்த மோசடிக் கும்பலும் அவ்வாறே சொல்ல..பிறகு சன் டி.வி தொடங்கி இருக்கும் அணைத்து பத்திரிக்கைகளையும் வாங்கி, அதில் எல்லாம் தமிழ் – தமிழ்நாடு – தமிழர் என்றால் இனி கலைஞர் தான்…
என்று ஒரு பிம்பத்தை..பெயரை..புகழை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது…இந்த பொம்பளை ஜெயலலிதா மட்டும்..இவ்வளவும் பெரிய பிராடு, என்றும் மிகப்பெரும் மோசடிப் பேர்வழி கருணாநிதி என்றும் முன்பை விட மிகப்பெரும் ஊழல் பேர்வழிதான் இந்த கருணாநிதி என்று தொடர்ந்து கருணாநிதியை அம்பலப்படுத்தி வந்தார்..
 
போதாதா..இந்த போலி தமிழ் பேசும் கிழவருக்கு..இந்த அம்மையார் மீது ஜென்மப்பகை கொள்வதற்கு..! சாகப்போகும் நேரத்தில் ஒரு பெரும் தலைவர்,தமிழர் தலைவர் என்ற பெயரை  தன் முன்னே ஒன்றும் இல்லாமல் செய்து விட்டாரே  என்று கடும் சினம் கொள்கிறார். இவையெல்லாம் தமிழகத்தில் உள்ள மக்களிடம்…!
 
புலம் பெயர் தமிழர்கள் மற்றும் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் கருணாநிதியை தமிழர் தலைவர் தமிழ் காவலர் என்று சும்மா உச்சரிக்க கூட வாய்வரவில்லை..ஏனெனில் உண்மை என்னவென்று தெரியும் அவர்களுக்கு..அவர்கள் என்ன..மண் வெட்டி வரப்பு கட்டவா.. உலக நாடுகளுக்கு சென்றுள்ளனர்..!
 
இவை ஒருபுறமிக்க இவரின் அருகாமையிலேயே மாவீரன் என்றால் யார்..? தமிழரின் தலைவர் என்றால் யார்..? வீரம் என்றால் என்ன..? தமிழன் தமிழ் மக்களை உலக அரங்கில்  தலை நிமிர்த்தி இருக்குமாறு செய்து கொண்டிருக்கும் தேசியத் தலைவர் என்றும்..மாவீரன் என்றும்..உலகத் தமிழர்களின் லட்சிய புருஷன் என்றும் பெயர் வாங்கிக் கொண்டு தமிழ் மக்களின் நலன் ஒன்று தான் பிரதானம்..மற்றவை ஒன்றுமல்ல என்று உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துக்  கொண்டிருக்கும் பிரபாகரன் வேறு..! உலக தமிழ் இளைஞர்களும் தமிழ் அறிஞர்களும் பெருமிதமும் நெஞ்சார தலைவராகவும் ஏற்றுக்கொண்டு விட்டனர் மேதகு வே.பிரபாகரனை
என்றால் மிகையாகாது..!
 
இப்பொழுது பொருத்திப் பாருங்கள் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகள் ஏன்..? என்று..! முன்பு, சுதந்திர போராட்டத்திற்குப் பிறகு சில விரல் விட்டு எண்ணும் தலைவர்கள் தான் இருந்தனர்..
தமிழகத்தில் பெரியார் ஒருவர் மட்டும் என்று கொள்ளலாம்..! அவ்வளவுதான்..பிறகு சில நல்ல அரசியல்வாதிகள் இருந்தனர்..
 
( உ.ம் ) காமாராஜர், கக்கன் போன்றவர்கள்..பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் என்று மக்கள் நலன் அல்லது ஒரு தமிழ் நெறியோடு வாழ்க்கை நடத்துவது என்று..! தன்னுடன் அரசியல் நடத்தும் ஜெயலலிதா தனக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல அக புற வாழ்வில்..அப்படியிருக்க ஜெயலலிதாவையே ஜென்மப் பகையாக கருதும் பொழுது..பிரபாகரனை அதைவிட நூறு மடங்கு தன் பரம் வைரியாக கருதவே முடியும் இயல்பாக..!
 
தமிழ் நாட்டு  கருணாநிதி அப்படியா..? ஜெயலலிதா அப்படியா..? காங்கிரஸ் பெருச்சாளிகளில் யாராவது உள்ளனரா..தமிழ் நெறியோடு வாழ்பவர்கள் என்று..?  கருணாநிதிக்கு அதிகாரப்பூர்வமாக மூன்று மனைவிகள்..கணக்கில் வராதவை ஏராளம்..! அக புற வாழ்வில் மோசமான முன் எடுத்துக்காட்டு..இதில் தமிழ் அறிஞர், தமிழ் தலைவர் என்று பெயர் வாங்க வேண்டும்..என்றால் எப்படி..?
 
அவ்வளவு மோசமானவர்கள் கிடையாது தமிழர்கள்…! தான் கடினமாக உழைத்து ஏராளமான ரூபாய்களை செலவு செய்து வாங்கிய..வாங்கி விடலாம் உலக தமிழ் தலைவர் என்ற கனவை, கெடுத்து குட்டிச்சுவராக்கிய பிரபாகரன் அவரின் பெற்றோர்… அவரை உயிரினும் மேலாக நேசிக்கும் எவரும் கருணாநிதியின் ஜென்மப் பகையாளிகளே..
 
இதில் இவரை தமிழ் துரோகி, இன துரோகி என்றெல்லாம் இனிமேல் குற்றம் சுமத்த தேவையில்லை..அக புற வாழ்வில் ஒரு சாதாரண அரசியல் பிழைப்புவாதி..தமிழ் பேசும் பிழைப்புவாதி, பெரும் ஊழல்காரர்..தன் நலத்திற்க்காக எதையும் செய்யும் ஒரு கடைந்தெடுத்த பிழைப்புவாதி  என்றே கருத வேண்டும்..!

- நன்றி: ஈழதேசம்




மதுரை படங்கள் கி.பி. 1858.


மதுரை கோபுரம்.
Madurai_gopuram.jpg
 
 
mdu1_1858.jpg
 
 
mdu1_1858_easttower.jpg
 
 
mdu2_1858.jpg
 
mdu2_1858_southtower.jpg
 
புது மண்டபம்
 
pudumandabam.jpg
 
 
யானை மலை - ஒத்தக்கடை
yaanai_malai.jpg






முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் கலைஞர் – வைகோ கடும் தாக்கு !

முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் கலைஞர் – வைகோ கடும் தாக்கு !
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சாதாரணமாகவே உணர்ச்சிப் பிழம்பு. அதுவும் பிரபாகரனின் தாயார் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டால் என்னமாகப் பொங்குவார்.. இதோ ஜூனியர்விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டி இது..!

“தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு மாவீரனின் தாய்க்கு இந்த நிலையா..? தமிழகத்தின் தலைநகரில் கால் வைக்கக்கூடவிடாமல் அந்தத் தாயைத் தத்தளிக்க வைத்துவிட்டார்களே.. 80 வயது தாயை விரட்டாத குறையாக வெளியேற்றுகிற அளவுக்கு ஆட்சியாளர்களின் இதயத் தசைகள் இற்றுப் போய்விட்டதா..? ஆறரைக் கோடி தமிழர்களுக்கு இதைவிட வேறென்ன அவமானமாக இருக்க முடியும்..” என கொந்தளித்த வைகோவிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.

விமான நிலையத்தில் என்னதான் நடந்தது..?

பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது தெரிந்து, நானும் நெடுமாறன் ஐயாவும் விமானநிலையம் சென்றோம். பெரிதான வரவேற்பு கொடுத்தால், புலி ஆதரவு கோஷம் என்று அர்த்தம் கற்பித்து சட்டச் சிக்கல்களை உண்டாக்க கலைஞர் அரசு தயங்காது என்பதால் நாங்கள் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தோம்.

இதற்கிடையில் தமிழக போலீஸை விமான நிலையலத்தில் திடீரென குவித்து வைத்திருந்தனர். நாங்கள் பார்வையாளருக்கான பாதைக்குப் போனபோதே போலீஸ் மறித்தது. எங்களின் பாஸை காண்பித்து போலீஸிடம் பேசினோமே தவிர, அந்த இடத்தைத் தாண்டி எங்களைப் போகவிடவில்லை.

கூடவே போலீஸ் எங்கள் மீது திட்டமிட்டு பலாத்காரத்தைப் பாய்ச்சியது. எனது பிடரியைப் பிடித்தும் கைகளை இழுத்தும் அராஜகம் செய்தனர். உடனே கலைஞரின் ஏவலுக்காகப் பாய்ச்சல் காட்டிய போலீஸை கண்டித்து நானும், நெடுமாறன் ஐயாவும் அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டோம். சூழ்ந்து நின்ற போலீஸாரிடம் “இது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா..?” என்று கேட்டேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, “நாங்க என்ன ஸார் பண்ண முடியும்..?” என வருத்தத்தோடு சொன்னார். இந்த விஷயத்தில் போலீஸ் மீது எனக்கு வருத்தமில்லை. அவர்கள் யாருடைய இயக்குதல்படி அராஜகத்தை அரங்கேற்றினார்கள் என்பது தெரிந்ததுதானே..?

பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது நள்ளிரவுவரை தெரியாது என முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறாரே..?

அவர் சென்னை வருவது மத்திய உளவுத்துறை மூலமாகச் சொல்லப்பட்டு அன்று மாலையே கலைஞருக்கு தெரியும் என்பதுதான் உண்மை. மூலை முடுக்கில் யாரும் தும்மினால்கூட இன்டலிஜென்ஸ் மூலமாகக் கண்டுபிடித்துவிடும் கலைஞருக்கு பார்வதி அம்மாள் வரும் செய்தி தெரியாதென்றால், முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் அர்த்தம்.

நள்ளிரவில்தான் பார்வதி அம்மாள் விவகாரம் தெரியுமென்றால், இரவு பத்து மணிக்கே விமான நிலையத்தில் தமிழக போலீஸைக் குவித்தது ஏனாம்..? அவருக்கே தெரியாமல் போலீஸ் வந்துவிட்டதா..? அவர் சொல்லாமல்தான் போலீஸ் என்னை நெட்டித் தள்ளியதா..?

புதிய சட்டமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் “கருணாநிதியை கலந்து ஆலோசிக்காமல் நான் ஏதும் செய்ததில்லை..” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொன்னாரே.. அப்படியிருக்க கலைஞருக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இப்படியொரு முக்கியமான முடிவை எடுத்திருப்பார்களா..?

ஈழத்தில் படுகொலைகள் நிகழ்ந்தபோது ஒரு பக்கம் போருக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியும், இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு உறுதுணையாகவும் இருந்து எப்படி நாடகமாடினாரோ.. அதையெல்லாம் விஞ்சத்தக்க அளவுக்கு கலைஞர் நாடகமாடுகிறார். பிரபாகரனின் தாயார் சென்னைக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழக அரசோ, தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே..?

அப்படியானால், மத்திய அரசுதான் திருப்பி அனுப்பச் சொன்னதா..? பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது..? ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே..? அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டியடிப்பார்கள்..? அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபணையில்லையென்றால் உடனடியாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே..? இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன.. மத்திய அரசேகூட பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய அறிவிப்பை வெளியிட வைக்கும் முயற்சியில் இந்நேரம் கலைஞர் ஈடுபட்டிருப்பார்.

பிரபாகரன் தாயாரை சென்னையில் இறங்க வைப்பதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறதே..?


ஒரே ஒரு சம்பவத்தை இதற்கான பதிலாகச் சொல்கிறேன். ஈழ ஆர்வலரான தணிசேரன் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவரை புலிகளின் ஆதரவாளர் எனச் சொல்லி விமான நிலையத்திலேயே உட்கார வைத்தனர். அப்போது எம்.பி.யாக இருந்த நான், அத்வானியிடம் உடனடியாகப் பேசி அந்த ஈழ ஆர்வலர் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி வாங்கிக் கொடுத்தேன்.

ஒரு சாதாரண எம்.பி.யால் முடிந்தது. ஒரு முதல்வரால் முடியாது என்றால் யார் நம்புவார்கள்..?

சென்னை வரவிடாமல் பார்வதி அம்மாளை தடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது..?


செம்மொழி நடக்கவிருக்கும் வேளையில் பிரபாகரனின் தாய் சென்னையில் இருந்தால் இலங்கை கொடூரங்கள் எல்லாம் மறுபடி கொந்தளிப்போடு நினைவு கூறப்படும். இதனால் பல சிக்கல்கள் தனக்கு வரும் என நினைத்திருக்கிறார்.

மாநாட்டுக்காக பன்னாடுகளிலும் இருந்து தமிழகத்துக்கு வரும் தமிழறிஞர்களும் பெருமக்களும் அவசியம் அந்த அம்மாளைச் சென்று பார்ப்பார்கள். அதெல்லாம் ஊடகங்களில் வெளியாகும். அத்தனை பேரும் வந்து தன்னைப் பற்றி மட்டுமே பேசி, வாழ்த்த வேண்டும் என்று காத்திருக்கும் கலைஞரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.

இதையெல்லாம் எண்ணித்தான் பிரபாகரனின் தாயாரை சென்னைக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார். பார்வதி அம்மாளை நெடுமாறன் ஐயா வீட்டில் தங்க வைத்து உரிய சிகிச்சைகள் மூலமாக அவரை குணப்படுத்த விரும்பியும், ஈவு இரக்கமற்று அதனைத் தடுத்திருக்கிறார் கலைஞர்.

தமிழகத்தின் தலையிலேயே மிதிப்பதுபோல் திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுப் போகிறார் ராஜபக்சே. அவனுடைய மகன்கள் பெங்களூருக்கு வந்து கிரிக்கெட் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் விளையாட்டு வீரரான வாசிம் அக்ரமின் மனைவிக்கு உடல்நிலை சீரியஸானபோது விசா இல்லாமலேயே அவர் சென்னையில் இறங்கி தங்க வைக்கப்பட்டார். ஆனால் தமிழினத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு இங்கே விசா இருந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது.

இத்தகையை இழிநிலைக்கு தமிழினம் ஒருபோதும் ஆளானது கிடையாது. கலைஞர் நிகழ்த்தும் இத்தகைய கொடுமைகளைப் பார்க்கையில் ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகம்தான் நினைவுக்கு வருகிறது. அதில் அரசன் டங்கன் படுகொலைக்குப் பிறகு சீமாட்டி மேக்பத் “அரேபியாவின் ஆயிரமாயிரம் வாசனைத் திரவியங்களை ஊற்றிக் கழுவினாலும் என் கையில் உள்ள கறைகள் நீங்காது. என் களங்கம் தீராது..” என்பாள்.

கலைஞரே உங்களின் நிலையும் இப்படித்தான். ஆயிரக்கணக்கான மாநாடு நடத்தினாலும், போதும் போதும் என்கிற அளவுக்கு விருதுகள் வாங்கினாலும் தமிழினத்துக்கு எதிராக உங்கள் பாவங்களை உங்களால் கழுவவே முடியாது..”

- ஜூனியர் விகடன் – 24-04-10

கருணாநிதி அப்போதும் நடித்தார் இப்போதும் நடிக்கிறார்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதற்கு முயற்சி செய்கிறார்.

பார்வதி அம்மையார் வருவது குறித்து தனக்கோ தமிழக அரசுக்கோ எத்தகைய தகவலும் இல்லை என்று முதலமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் சொல்லுவது வேடிக்கையானது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் விசா பெற்று வருவதுதான் வழக்கம். அப்படி வருபவர்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
 
மறுநாள் காலை பத்திரிகைகளைப் படித்தப் பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரியும் என்று முதலமைச்சர் முதலில் கூறிவிட்டு பிறகு இரவு 12 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது பார்வதி அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டதை தெரிந்துகொண்டதாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார். மலேசியாவிலிருந்து வந்த விமானம் இரவு 10.45 மணிக்குத்தான் வந்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே சென்னை புறநகர் காவல் துறை ஆணையாளரான ஜாங்கிட் தலைமையில் பெரும் காவலர் படையொன்று விமான நிலைய வாசலில் கொண்டுவந்து குவிக்கப்பட்டது.
 
10.15 மணியளவில் வைகோவும் நானும் விமான நிலையத்திற்கு வந்த போது எங்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுப்பதற்கு பெருமுயற்சி செய்தார்கள். முதலமைச்சரின் உத்தரவில்லாமல் அவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆக இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே முதலமைச்சருக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்து அதன் பின்னர்தான் காவலர் படையை அனுப்ப அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு  எழுதப்பட்ட கடிதத்தில் பிரபாகரனின் பெற்றோர் இந்தியாவிற்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று எழுதி அதன் காரணமாக அவர்கள் பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். 
 
இது உண்மையானால் கருப்புப் பட்டியலில் இடம் பெற்றவருக்கு மலேசிய இந்தியத் தூதுவர் அலுவலகம் இந்தியா வருவதற்கு ஆறு மாத கால விசா கொடுத்தது ஏன்? 
 
தவறுதலாகக் கொடுத்திருந்தால் அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
 
ஜெயலலிதா காலத்தில் இழைக்கப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டுவதன் மூலம் தனது தவறை மறைப்பதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார். ஜெயலலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் எதிராக இருப்பவர். ஆனால் கருணாநிதி  அவர்களோ ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொண்டு எதிராகவே செயல்படுபவர்.
 
1970களின் தொடக்கத்தில் இவர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் டெலோ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான குட்டிமணி கைது செய்யப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்கள அரசு கேட்டபோது ஒப்படைத்தவர் கருணாநிதி ஆவார். அதன் காரணமாக குட்டிமணி சிங்களச் சிறையில் கொலை செய்யப்பட்டார் என்பது மறைக்க முடியாத வரலாறு ஆகும்.
 
தி.மு.க. வின் தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக பிரச்சார நாடகங்களில் நடித்தவர் கருணாநிதி. ஆனால் இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும் சட்டமன்றத்திலேயே நடிப்பது வெட்கக்கேடானது. பார்வதி அம்மையாருக்கு இழைக்கப்பட்ட அநீதியை இவருக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அதை மறைப்பதற்கு இவர் செய்யும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப்போவதுமில்லை.

ஜூனியர் விகடனும் ஊடகபொய் தொழில் செய்கிறது ?

கடந்த ஒரு ஆண்டாக பிரபாகரன் என்ற ஒற்றை சொல்லை வைத்து கொண்டு ஊடக வியாபாரத்தில் பணம் செய்தவர்கள் இருவர் ஒன்று நக்கீரன் மற்றொன்று விகடன் குழுமம்.
 
அதே நக்கீரனுக்கு இப்போது 'நித்யானந்தா' கிடைத்துவிட்டது ஈழம் இனி அவர்களுக்கு பெரிதில்லை.
 
பாரம்பரியம் கொண்ட ஜூனியர் விகடன் ஏன் தமிழர்கள் நம்பிக்கை விடும் அளவிற்கு 'பிரபாகரன் இனி வரமாட்டார்' என்று கட்டுரை பொய்யாய் வெளியிட வேண்டும்.
 
அந்த கட்டுரையை மறுத்து , உதிரகுமாரர் அளித்துள்ள அறிக்கை இதோ இங்கே,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் ருத்ரகுமாரன் இன்று தமிழக மக்களை விளித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே என மேற்சொன்ன ஊடக அறிக்கையில் ருத்ரகுமாரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

திரு ருத்ரகுமாரனின் அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகிறோம்.

அன்பான தமிழக உறவுகளே!
ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)
பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா)
வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)
பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா)
சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா)
பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)
வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)
பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்)
பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா)
கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா)

இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.orgஇல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம்.விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது.

அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன்.

தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

இவ்வாறு உத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.


மீண்டும் கடிதமா ? விட்டுவிடுங்கள் முதல்வர் அவர்களே தமிழர்கள் பிழைத்து போகட்டும்.



 
கீழே உள்ள கட்டுரையை பாலச்சந்திரன் என்பவர் எழுதி உள்ளார்,  இன்றைய தலையங்க பகுதிக்கு இந்த கட்டுரையை பதிகிறேன்.
 
 
ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுத தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள்!

ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம்.


ஈழத்தின் இறுதி யுத்த காலத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய கடிதங்கள் நெஞ்சுக்கு நீதியாக வெளிவரும்போதுதான் அவரது கண்ணீர்த் துளிகளின் எடையை அறிந்து கொள்ள முடியும். அவர் டெல்லிக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்காவிட்டால், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்துக் காப்பாற்றியிருக்க முடியாது என்றே உலகம் இப்போதும் நம்புகின்றது. அவர், பாலு தலைமையில் கனிமொழி குழுவினரை இலங்கைக்கு அனுப்பியிருக்காவிட்டால், அந்த முள்வேலி முகாமிலிருந்து இரண்டு இலட்சம் மக்களையாவது காப்பாற்றி வேறு இடங்களுக்கு அகற்றியிருக்க முடியாது என்று ஐ.நா. கூட நம்புகின்றது.


இப்போதும் கூட, தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடிதங்கள் எழுதுவதால்தான் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தமிழில் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகள் புரிந்த தமிழக முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் சிலர் புழுதி வாரித் தூற்றுவதைச் சகிக்க முடியாமல், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.


தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்குத் தனது குடும்பப் பிரச்சினையையே தீர்க்க நேரம் போதாமல் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு யார் வருகிறார்கள்? விமான நிலையத்திலிருந்து யார் போகிறார்கள்? அங்கிருந்து யார் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் என்பதையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பக்கம் அழகிரி - ஸ்டாலின் பிரச்சினை விசுவரூபம் கொள்கிறது. மற்றொரு பக்கம் மனைவியும் துணைவியும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். யார் தலைமாட்டில்? யார் கால் மாட்டில்? என்ற பிரச்சனை இன்றுவரை சோனியாவாலும் தீர்க்க முடியாததாகவே நீடிக்கின்றது. அதற்காக ஒரு அரை நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், அங்கேயும் தலைமாடு, கால்மாடு பிரச்சினை உருவாகிவிடுகின்றது.


அரசியல் வாழ்வில், தேவைக்கும் அதிகமாகப் பணத்தைச் சம்பாதித்து, இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டாலும், தேவைக்கு அளவிற்காவது நிம்மதியைச் சம்பாதிக்க முடியாத துக்கம் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது. வாலிப காலத்தில் அதிகமாக ஆசைப்பட்டதால் வாரிசுகள் தொகை அளவுக்கு மீறிஇ இப்போது அவரைத் தொல்லைப்படுத்தி வருகின்றது. மூத்த மகன் முத்து முதல், கடைக்குட்டி கனிமொழி வரை சொத்துக்கு மட்டும் சண்டை போட்டால் பரவாயில்லை, அவர்கள் பதவிகளுக்கும் போட்டி போடுவதால் சங்கடம் அவரது தலைக்குமேல் குந்தியே உள்ளது. தமிழகத்தை ஸ்டாலினுக்கும், டெல்லியை அழகிரிக்குமாகப் பகிர்ந்தாலும் பிரச்சினை தீர்வதாக இல்லை. ஆங்கிலம் புரியாத அழகிரி, தனக்குத் தோதான இடமாகத் தமிழகத்தையே தேர்வு செய்கிறார். கனிமொழியும் தனக்கு எதுவும் இல்லையா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். மூத்த மகன் முத்து குடும்பத்துடன் ஐக்கியப்பட்டு விட்டாலும், தான் தலைவரால் ஒதுக்கப்படுவதாகப் புலம்பிக்கொண்டுதான் உள்ளார்.


செல்வம் மட்டுமல்ல, ஊடகத் துறையும், சினிமாத் துறையும் கூட இப்போது கருணாநிதியிடம் அடைக்கலமாகியுள்ள நிலையில், அசக்க முடியாத சக்தியாக உருவாகிவரும் தனது குடும்பத்தில் சகோதர யுத்தம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே பாட்டி வடை சுட்ட கதை போல், அடிக்கடி தமிழீழ விடுதலைப் போர் இன்றைய நிலையை அடைந்ததற்கு சகோதர யுத்தமே காரணம் என்று தமது வாரிசுகளுக்கு கதை சொல்லி வருகின்றார்.


இத்தனை குடும்பக் குழப்பங்களுக்கு மத்தியில் அன்றாடம் அல்லாடும் மு. கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? மன்னிக்க வேண்டும்இ சோனியாவின் அன்புக் கட்டளைக்குப் பின்னர் எம்மை எல்லாம் ஈழத் தமிழர் என்று அழைப்பதைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர் என்றே விழித்து வருகின்றார். மயிலிடம் இறகு கோருவது போல், ராஜபக்ஷவிடம் தமிழர்களுக்கான உரிமைகளைக் கேரலாம் என்பதே தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் சோனியா சிந்தனை. அதை மீறி, மகிந்தருக்கு கோபம் வரும் வகையில் நடந்து மகிந்த சிந்தனை ஊடாக, இலங்கைத் தமிழருக்காக அவர் பெற்றுக் கொடுக்க விரும்பும் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? தேசியத் தலைவர் அவர்களது தாயார் பார்வதி அம்மாளைத் தமிழகத்தில் தரை இறங்க விடுவது தனது இலட்சியப் பயணத்திற்கு இடைஞ்சலாக அமையும் என்பதை மு. கருணாநிதி அவர்கள் புரிந்து கொண்டதில் என்ன தப்பைக் காண முடியும்?


தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சோனியா சிந்தனையும், மகிந்த சிந்தனையும் சந்திக்கும் இடத்தில் இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் இடத்தில்இ பார்ர்வதி அம்மாளின் தமிழகப் பயணம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரைத் திருப்பி மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பியதுடன், சோனியா சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க டெல்லிக்குக் கடிதம் எழுதும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் பலிகளையும், அவர்களோடிருந்த மக்களையும் அழித்துவிட்டதனால், சோனியாவிற்கு இருந்த பயங்கரவாத அச்சத்தைத் தீர்க்க முன்நின்று செயற்பட்ட மு. கருணாநிதி அவர்களது தியாகத்தை சோனியா காந்தி உணராமல் விட்டுவிடுவாரா?


ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் இன அழிப்பு புரிந்தபோது, அரை நாள் உண்ணாவிரதம் இருந்து சோனியாவின் மனத்தை மாற்றிய கருணாநிதி அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் முன்னைய தீர்மானத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து வைத்தியம் செய்துகொள்ள மீண்டும் ஒரு அரை நாளை உண்ணாவிரதத்திற்காக ஒதுக்கமாட்டாரா? மு. கருணாநிதி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்திய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சதி செய்தே, தற்போதைய முதல்வர் மு. கருணாநிதிக்குத் தெரியாமல் திருமதி பார்வதி அம்மாள் அவர்களைத் தமிழகத்தில் தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என ஆத்திரப்படும், அவ்வப்போது ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஜால்ரா போட்டுத் தன்னை நிரப்பிக்கொள்ளும் கி. வீரமணி சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா?


பாவம், முத்துக்குமாரன்... தமிழக மக்களை இவர்களிடமிருந்து மீட்க முயன்று தோற்றே போய்விட்டான்



--
நன்றி
தமிழினி




ஒரு தாய்க்கிழவியும், அவர் பெற்ற மக்களும்.

Vallipuram_Parvathi

எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா?

உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வரும் வயது முதிர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறதே? எத்தனை கொடுமையான குற்றம் புரிந்தவராக இருப்பினும், உயர் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள எந்த நாடும் தடை விதிப்பதில்லையே, நாடாளுமன்றத்தையே தகர்க்கத் திட்டமிட்ட தீவிரவாதிகள் இதே தேசத்தில் பாதுகாப்போடு வாழ்கிறார்களே? கொடுங்குற்றம் புரிந்தவர்களையும் கூட மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு எந்த நாடும் தடை செய்யவில்லையே? உலகெங்கிலும் சென்று இந்த நாட்டின் உயர் குடிமக்கள் அனைவரும் மனித நேயத்தைப் பற்றி அரங்குகளில் வகுப்பெடுக்கிறார்களே? அந்த மனித நேயம் தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் இல்லையா? ஏறத்தாழ இயக்கங்களை இழந்து விட்ட ஒரு வயதான பெண்மணியால் இந்த தேசத்திற்கு என்ன தீங்கு விழந்து விடப் போகிறது?

INDIA-ELECTION

இப்படி எல்லாம் என்னைச் சுற்றிலும் கேள்விகள் பெருந்தீயாய்ப் பற்றி எரிகின்றன, ஆனால், எனக்குத் தெரியும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பது, எனக்கு மட்டுமில்லை இங்கிருக்கும் எந்த முதுகெலும்பற்ற தமிழர்களாலும் ஒன்றும் செய்ய இயலாது, ஏனென்றால் இங்கு நாங்கள் தேர்வு செய்து எம்மை எதிரொலிக்கச் சொன்ன தலைவர்களும் முதுகெலும்பற்றவர்கள், அதிலும் மாநில முதல்வராக நாங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் அந்த மனிதர் முதுகெலும்பைக் கழற்றி விட்டு காங்கிரஸ் கொடுத்திருக்கும் ஆட்சி அதிகார எலும்பை அல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு மாநிலத் தலைநகருக்கு யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்கிற செய்தி இந்திய வெளியுறவுத் துறை மற்றும் குடி உரிமை அலுவலர்கள் மூலமும், தேவைப்பட்டால் மற்ற மைய அமைச்சகங்கள் மூலமும் மாநில உளவுத் துறைக்குச் சொல்லப்படுகிறது, அல்லது கேட்டுப் பெற வேண்டியது அவர்களின் பணி. இவர்கள் கணக்குப் படியே பார்த்தாலும், இந்திய தேசத்தால் தேடப்பட்டு வந்த பிரபாகரனின் தாயார் இன்றைக்கு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த, உலக நாடுகள் பலவற்றால் அறியப்பட்ட ஒரு பெண்மணி, அவர் குடிஉரிமை கேட்டு விண்ணப்பம் செய்த போதே தமிழக முதல்வருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தெரிவிக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால், அவரது வருகை நிகழும் அந்தக் குறிப்பிட்ட நாளில் செய்தி உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும், ஆனால், ஐயாவுக்கு செய்தி தெரியாதாம், காலையில் செய்தித் தாள்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாராம், அதைத் தான் நாங்களும் தெரிந்து கொண்டோமே முதல்வர் அவர்களே, பிறகு எதற்கு நானூற்று இருபது கோடியில் ஒரு கட்டிடம், அந்தக் கட்டிடத்தில் கிரிவலம் வருவதற்கு பல நூறு உறுப்பினர்கள், அதில் நடுநாயகமாய் வீற்றிருக்க நீங்கள், பிரபாகரனின் தாயார் வந்த செய்தியே சொல்லப்படவில்லை என்கிறார் முதல்வர், அதையும் எந்த ஒரு கூச்சமும் இன்றிச் சட்டசபையில் அறிவிக்கிறார். அப்படியென்றால், ஒரு மாநில முதல்வருக்கு அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மைய அரசு கொடுக்கும் மரியாதையின் லட்சணம் இவ்வளவு தானா??

karuna cartoon

தமிழர்களைச் சாரி சாரியாய்க் கொன்று குவித்த ராஜபக்சேயின் மகன் சென்னை வழியாக டெல்லிக்கு கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கப் போகிறான், அது உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே, தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களவனின் மகனுக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்பி இருக்கிறீர்களே, தமிழர்களுக்கு முதல்வரா இல்லை சிங்களவனுக்கு முதல்வரா நீங்கள்? ஒன்றும் புரியவில்லையே?

எல்லாவற்றுக்கும் காரணம் ஜெயலலிதாதான் என்று நீங்களும் உங்களுக்குக் குடை பிடிக்கும் வீரமணியாரும் வாய் கூசாமல் சொல்கிறீர்கள், பிரபாகரனின் தாயாரையும், தந்தையையும் இந்திய தேசத்தின் குடி உரிமைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஜெயலலிதா மைய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் போது, சமூக விடுதலை வீராங்கனை என்று பட்டம் கட்டி அவர் காலில் விழாத குறையாகக் கிடந்தாரே வீரமணி. அது உங்களுக்குத் தெரியாதா? இல்லை, வானூர்தி நிலையத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ஐயா வைகோவுக்குத் தெரியாதா? கருணாநிதியின் முதுகு சொரியும் அறிக்கைகளைத் அதிகம் தயாரித்து அடுத்த கூட்டணிக்கு அடித்தளமிடும் ஐயா ராமதாசுக்குத் தெரியாதா? இல்லை, வெண் சாமரம் வீசும் விடுதலைச் சிறுத்தைக்குத் தெரியாதா?

jayalalitha_vaiko_20060320

ஒரு வழியாக நினைவு மறந்த நிலையில் நடக்க இயலாது படுத்திருந்த ஒரு நோயாளியை, மருத்துவ உதவி பெறுவதற்காக முறையான அனுமதியோடு வந்திருந்த தாய்க் கிழவியை அனுமதிக்க மறுத்து அனுப்பி விட்டோம், மலேசிய அரசாங்கமும், மற்ற எந்த நாடுகளும் செய்ய மறுக்கும் ஒரு மனித நேயமற்ற செயலைச் செய்து மீண்டும் ஒரு முறை தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கி இருக்கிறீர்கள், இது உங்களுக்குத் தெரியாமல் நடப்பதற்கு சாத்தியமே இல்லை, அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால் உங்களுக்கு மாநில முதல்வராக இருக்கும் தகுதி இல்லை. உங்கள் துரோக வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் இது, உரக்கக் குரல் எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய அப்பாவித் தமிழர்களின் படுகொலையை நீங்கள் கடைசி வரை தடுக்க முனையவில்லை, பிரபாகரன் என்கிற தனிப்பட்ட மனிதனின் மீது கொண்ட காழ்ப்புணர்வை அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மீது கொட்டினீர்கள், உண்ணாநிலைத் தேர்தல் நாடகம் நடத்தி போர் நிறுத்தம் என்று ஊரை ஏமாற்றினீர்கள், அப்படி நீங்கள் சொன்ன பத்து நிமிடத்தில் போர் நிறுத்தம் எல்லாம் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தான் ராஜபக்ஷே.

இனப் படுகொலையின் சுவடுகள் மறையாத இந்த ஓராண்டு காலம் முடிவதற்குள் ஒரு தமிழ் மூதாட்டியை மன நிலைப் பிறழ்வில் இருக்கிற தாய்க் கிழவியை மருத்துவம் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டுத் தேவைப்பட்டால் கடிதம் எழுதுவேன் என்கிறீர்கள், உங்கள் பொய்களுக்கும், நாடகங்களுக்கும் ராஜபக்ஷே பரவாயில்லை, மருத்துவம் பார்க்க அனுமதி கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தான். நீங்களும், உங்கள் இந்திய தேசமும் சிங்கள இன வெறியர்களை விடவும் கொடுங்கோலர்கள், உங்கள் ஆட்சிக் குடைகளின் கீழே சிக்கிக் கிடக்கும் நாங்கள் உண்மையில் பாவிகள்.
20061020004103001

"பிரபாகரன்" என்கிற பெயர் தமிழினத்தின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கும் உண்மையான செய்தி, ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியது மட்டுமன்றி ஒரு இனத்தின் ஒட்டு மொத்த அரசியல் விழிப்புணர்வுக்கும் காரணமாக அமைந்த பெயர் பிரபாகரன், தவறுகள் இழைக்காத, மாறுபட்ட பாதையில் பயணிக்காத விடுதலை இயக்கங்கள் இல்லை, அந்த வகையில் உலகின் பார்வையில் தவறாக அறியப்படுகிற சிலவற்றையும் கூட தனது விடுதலை வேட்கையின் தீவிரம் கருதியே அந்த மனிதன் செய்திருந்தான். இன்று இன உணர்வும், மொழி உணர்வும் இருக்கிற ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் அவன் தான் தலைவன், அவன் தான் முதல்வன், நீங்கள் ஊர் கூடி ஊளையிட்டாலும் உங்களுக்கு இருந்த தமிழினத் தலைவர் என்கிற போலிப் பெயர்களை அவனது சிந்தனைகள் நிரப்பி விட்டன. அப்படிப்பட்ட ஒரு தலைவனின் தாயை, உலகத் தமிழினத்தின் அன்புக்குரிய அந்தப் பெற்றவளை விரட்டி அடித்த பெருமையை நீங்களும் உங்கள் ஆட்சியும் பெற்றுக் கொண்டது முதல்வர் அவர்களே.

images730021_1

கடைசியாக மனதில் ஒன்று தான் தோன்றுகிறது முதல்வரே, உங்கள் கைகளால் கடிதம் எழுதி வந்து சிகிச்சை பெற்றுப் பிழைத்துக் கொள்வதை விடவும் அவர் செத்துப் போகட்டும்.

************




சிலமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை - முதலாம் ஆண்டு நினைவு நாள்

வன்னிப்போரின் உக்கிரம் தலைவிரித்தாடத் தொடங்கி மக்கள் மணிக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட தொடக்க நாளின் (19.04.2009) முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


வன்னியின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவின் கடற்கரைக் கிராமங்களான புதுமாத்தளன், பழைய மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, சாளம்பன், முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு என மக்கள் நெருக்கமாக குடியமர்ந்திருந்தனர்.


இந்தநிலையில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ஊடாக நகர்ந்த இலங்கைப் படையினர் பச்சைப் புல்மோட்டைப் பகுதி ஊடாக அம்பலவன் பொக்கணையை ஊடறுக்கும் முயற்சியில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.


இதன் போது ஈவிரக்கமற்ற முறையில் அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளை நோக்கி படையினர் கடும் தாக்குதல்களை நடத்தினர். கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் பீரங்கிகள், ஆட்டிலறி தொலைதூர எறிகணைகள் என பல்வேறு வகையான பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை கடலில் இருந்தும் இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2009-04-18ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரம் 2009-04-20 அன்று உக்கிரத்தை அடைந்தது. 20ஆம் தேதி படையினர் அம்பலவன் பொக்கணை ஊடாக கடற்கரைக் கிராமங்களைத் துண்டாடினர்.


இதன் போது ஒரு சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரக்ககணக்கானோர் அனாதைகள் ஆக்கப்பட்டும் படுகாயங்களைச் சந்தித்தும் தெருக்களிலும், முற்றங்களிலும் குற்றுயிராய்க் கிடந்தனர். இந்தக் காலப்பகுதியில் புதுமாத்தளன் பாடசாலையில் அமைந்திருந்த மருத்துவமனையே பிரதான மருத்துவமனையாக செயற்பட்டது. இந்த ஊடறுப்பினால் மருத்துவமனையின் முழுமையான உபகரணங்களும், மருத்துவச் செயற்பாட்டாளர்களும் இடம்மாறமுடியவில்லை.


இந்நிலையில் முடிந்தவர்கள் மட்டும் கடற்கரையூடாக முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்தனர். மேற்கு முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சில மருத்துவச் செயற்பாட்டாளர்களுடன் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மருத்துவமனையே மக்களுக்கு தஞ்சம் வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் போது காயமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிப்பதற்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த வேளை வன்னியில் வழமையில் சந்தித்த நெருக்கடிகளைவிடவும் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்திதத்தனர். மருத்துவச் செயற்பாட்டாளர்களும், மருந்துகளும் இல்லாமையாலேயே பலநூறுபேர் மருத்துவமனை வளாகத்திலேயே செத்து வீழ்ந்தனர். படையினரால் வளைக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோதிலும் படையினர் பெருமளவான உடல்களை பதுங்குழிகளில் போட்டு மூடியமையாலும் செய்திகளை மூடி மறைத்ததாலும் சரியான புள்ளிவிபரங்கள் வெளிவரவில்லை.


வன்னியில் மீள் குடியேறியுள்ள மக்களில் ஆயிரக்கணக்கானோர் 20-04-2010 இன்று தமது உறவுகள் பிரிந்த நாளை நினைவு நாளாக கண்ணீருடன் நினைவுகூர்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந் நாளில் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் வன்னியில் இருந்து செய்திளார்கள் செய்திகளை வழங்கிபோது அவ்வாறு ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தமிழ் தேசியத்திற்கான புலம்பெயர் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் சில செய்திகளைப் புறக்கணித்திருந்தமையும் இதே நாளில் அரங்கேறியமை நினைவுகொள்ளத்தக்கது.


இதேநாளில் மட்டும் ஒரு இலட்சம் வரையான மக்கள் இலங்கைப் படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டு படை ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ?

மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ?

இதில் வெட்கப்பட எதுவுமில்லை.வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம்.




தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.இத்தகைய மொழியும், அதனைப் பேசுகின்ற இனமும் பாரம்பரியம் மிக்க வரலாற்றைத் தன்னகத்தே கொண்டதென்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

நம் தமிழ்மொழி விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய மொழி, பெருமைப்படுத்தப்பட வேண்டிய மொழி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.ஆகவே உலக செம்மொழி மாநாடு நடைபெறுவதில் நமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை.ஆயிரம் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், ஆயிரம் கவிஞர்கள், ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகள்,ஐநூறுப்பக்கங்களில் சிறப்பு மலர், தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடனங்கள், இலட்சக்கணக்கில் பார்வையாளர்கள் என உலக செம்மொழி மாநாடு களைகட்டத் தொடங்கி விட்டது.

முத்தமிழுக்கு நான்காம் தமிழான கணினித் தமிழும் அணி செய்கிறது.இந்தத் திருவிழாவுக்கு இடையில் தமிழ்மொழியை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.தமிழ்த் தாயின் நேரடி வாரிசுகளாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் அரியணையில் அமர்ந்து நாற்பத்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடி விட்டன.எழுத்தில், பேச்சில், வசனத்தில், கவிதையில் எங்கும் தமிழ்வாசம் மணக்க மணக்க காட்சிகள் அரங்கேறின.‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’ எனும் வசனம் காலங்காலமாய் எதிரொலித்துக் கொண்டே வருகிறது.

இத்தகைய வரலாற்றை உள்ளடக்கிய நம் தமிழ்மொழி எங்கெல்லாம் இருக்கிறதெனக் கேள்வி எழுப்பிப் பார்த்தால் எஞ்சி நிற்பது வேதனை மட்டுமே தான்!

நீதி மன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை? 

கடவுளின் சன்னதியில் பூசிக்கும் மொழியாகத் தமிழ் இல்லை?
கடைப்பலகைகளில் தமிழ் இல்லை? 

பாட சாலைகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை?

கணிப்பொறியில் தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழியாகத் தமிழ் இல்லை?

இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை? 

இப்படி இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் தமிழ் இல்லை.ஆனால் மேடைகளில் புகழ் மாலைகளில் தமிழ் தாராளமாய்க் கொஞ்சி விளையாடுகிறது.ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்து நூல்கள் பதிப்பிக்கும் உரிமை நம் கைக்கு வந்து சுமார் எழுபது ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன.ஆனால் நம்மிடம் கால வரிசைபடி தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு இல்லை.தொல்காப்பியம் உள்ளிட்ட நமது பழம் இலக்கியங்களின் ஆய்வியல் நோக்கிலான வரலாறு நம்மிடம் இல்லை.நமது இலக்கியங்கள் உருவான காலம் குறித்த பரந்து பட்ட ஆய்வுகள் இல்லை.தமிழ்மொழியை உலக மொழிகளோடு ஒப்பாய்வு செய்யும் ஆய்வு மையங்கள் இல்லை.அதற்கான முயற்சிகள் கூட இல்லை.

இதையெல்லாம் செய்து முடித்து விட்டு தான் விழா எடுக்க வேண்டுமா? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.ஆனால் இதைக்கூட செய்ய முடியாத நாம் விழா எடுத்து என்ன செய்து விடப்போகிறோம் என்பது தான் நம் கேள்வி.

இப்படி தமிழின் உரிமைகள் நிலைநாட்டப்படாத சூழல் மட்டுமல்ல, தமிழரின் உரிமைகளும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பது குறித்தும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழரின் ஆற்று நீர் உரிமை காவிரியில் தொடங்கி, முல்லைப்பெரியாற்றில் வேகம் பிடித்து கிருட்டிணாவில் வந்து நிற்கிறது.நல்லவேளை கடலில் மட்டும் சிக்கலில்லை என நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை.அங்கோ இலட்சோப இலட்சம் மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது.

தமிழுக்கான உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை.ஆனால் இது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் வெட்கப்படாமல் விழா எடுக்க முனைந்துள்ளோம்.தமிழுக்கு விழா எடுக்கும் உரிமை நமக்கு மட்டும் சொந்தமானதா? என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.இந்த பூமிப்பந்திலுள்ள எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றனர்.

இணையத்தில் தமிழ்மொழி வனப்புடன் உலா வருவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் காரணம் என்பதனை மறுக்க இயலுமா?
மொழி மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை மறைக்க இயலுமா?

தமிழ்மொழியை உலக மக்கள் அறிந்திட ஏதுவாக தமிழ்மொழியின் சிறப்பை இணையத்தில் ஆங்கிலத்தில் தொகுத்து வருவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தானே?

தமிழ் என்பது தமிழ்நாட்டுத் தமிழரின் தனிச்சொத்து அல்ல.நாம் மட்டும் முடிவு செய்து கொண்டாடுவதற்கு நமது குடும்ப விழாவும் அல்ல.உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.ஈழத்தமிழர்கள் மீளாத்துயரிலிருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறார்கள்.நமது உறவுகள் துயரத்தில் தவிக்கையில் விழா எடுப்பது கல் நெஞ்சம் கொண்டோரையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்வல்லவா?

காலங்காலமாக பழம் பெருமை பேசுவதிலேயே சுகம் கண்டு போன சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மாறிவிட்டது.இந்த இனம் இப்படியே இருக்க வேண்டுமென இனப்பகைவர்கள் மட்டுமல்ல நம்மை ஆள்வோரும் நினைக்கின்றனர்.

தமிழர் கேளிக்கைகளில் மூழ்கடிக்கப்படுகின்றனர்.போரைக்கூட வேடிக்கைப்பார்கின்ற நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாடு மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கானத் தாக்கத்தையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.
அண்மையில் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குருதி காயும் முன்பு இப்படி ஒரு மாநாடு தேவையா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.திருவிழா ஆரவாரத்தில் இந்தக்கேள்வி ஆள்வோர் காதுகளில் விழாது தான்.ஈழக்கொலைகள் தொடர்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறலை இன்னமும் விடாமல் எழுப்பிக்கொண்டே உள்ளன.

வதை முகாமிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீளவே இல்லை, காணமல் போனோர் தொடர்பில் தகவலே இல்லை.ஆனால் நாம் மொழிக்கு மாநாடு கூட்டுகிறோம். அதில் உலகெங்குமிருந்து கவிதைகளோடும், ஆய்வுக்கட்டுரைகளோடும் புறப்பட்டு விட்டான் மறத்தமிழன்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைப் பன்னாட்டு நீதிமான்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆனால் நாம் தமிழுக்கு விழா எடுப்பதில் ஆர்வமாக உள்ளோம்.இதனையெல்லாம் வருங்கால தலைமுறை மன்னிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, நிகழ்காலம் நிச்சயம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

தமிழ்மொழி பேசும் தமிழ்நாட்டு தமிழனின் வாழ்விலும் மகிழ்ச்சியில்லை,புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வாழ்நிலையிலும் ஏற்றமில்லை.ஆனால் மொழி பேசும் நா பற்றி கவலைபடாமல் மொழியைப் பாதுகாக்க போர் மறவர்கள் களம் கண்டுள்ளனர்.

இத்தகைய அறிவார்ந்த மொழி வளர்ச்சியை உலகில் வேறெந்த இனமும் முன்னெடுத்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.நவீன நீரோமன்னர்கள் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.புலவர் படை பரிசில் பெற வசனங்களோடும், கவிதைகளோடும் செம்மொழி மாநாட்டில் அணி திரள இருக்கிறார்கள்.இதில் வெட்கப்பட எதுவுமில்லை



இந்தியாவிற்கு என்ன ஆபத்து வரபோகிறது ?

படுத்த படுக்கையாய் உள்ள எண்பது வயது மூதாட்டி சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடும் என நேற்று முன்தினம் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்க விடாது திருப்பி அனுப்பிய இந்திய தமிழக அரசுகளின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே முழுமையாகத் தருகிறோம்.

தமிழீழ தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களின் அன்னையார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள், தமது எண்பது வயதில் கடுமையாக நோயுற்று சென்னையில் உயர் சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து விமானத்தில், 16.04.2010 அன்று இரவு வந்த போது அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க விடாமல் இந்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து தடுத்து, அவரைத் திரும்ப மலேசியாவுக்கு அனுப்பி விட்டார்கள்.

இந்திய தமிழக அரசுகளின் இந்தச் செயல் மனித நேயமற்ற செயல்மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயலும் ஆகும்.
படுத்த படுக்கையாய் உள்ள எண்பது வயது மூதாட்டி சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடும்!
முறையாக விசாவுக்கு விண்ணப்பித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய அரசுடன் கலந்து பேசி, திருமதி பார்வதி அம்மையார் சென்னை வர விசா வழங்கியுள்ளது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் பார்வதி அம்மையாரையும் அவருடன் வந்த பெண் உதவியாளரையும் இந்திய அரசின் குடிவரவு அதிகாரிகளும் தமிழகக் காவல்துறையினரும் விமானத்தை விட்டு இறங்கவிடாமல் தடுத்து, அதே விமானத்தில் அவர்களை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எண்பது வயது மூதாட்டி எந்த நாட்டிலும் மருத்துவ உதவி பெறுவதற்கு மருத்துவத்துறை நீதியும் மனித உரிமையும் அனுமதிக்கும்.
விசா வழங்கிவிட்டு திருப்பி அனுப்புவது மனித உரிமை மீறல் குற்றம் மட்டுமல்ல. மருத்துவநீதியை மறுப்பதும் ஆகும்.
பார்வதி அம்மையார் பிரபாகரனுக்கு மட்டும் தாய் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தாயாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் பாசம் வைத்துள்ளனர். அவரை வர அனுமதித்துத் திருப்பி அனுப்பியது அவரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய செயலாகும்.

சிகிச்சையாகப் படுத்த படுக்கையாய் விமானத்தில் வந்த மூதாட்டி பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பிய இந்திய – தமிழகக் கொடுங்கோலர்களின் தமிழ் இன எதிர்ப்பு உணர்ச்சியைக் கண்டித்து, மனித நேயம் உள்ளவர்களும் தமிழ் இன உணர்வாளர்ககளும் கண்டனப் போராட்டங்களை நடத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

IPL ஊழலின் ஊற்றுக்கண் ?

IPL  ஊழலின் ஊற்றுக்கண் ?
 
ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் ஏற்படுத்திய பரபரப்புகளை விட, அதன் முக்கிய நபரான லலித் மோடி ஏற்படுத்தி விட்டார். சசி தரூர் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொண்டார் என்றால், சசி தரூர் புழங்கிய கோடிகள் அவரை வெளிச்சத்தில் கொண்டு வந்திருக்கிறது.

பல்வேறு ரகமான ஊழல்கள் அலசப்பட்டாலும், கிரிக்கெட் போட்டிகளை வைத்து நடக்கும் ஊழல் பிரமாண்டமானது. தற்போது வரித் துறையினர், கம்பெனித் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில், ஆவணங்கள் பரிசீலனைகளில் மோடி நடத்திய ஊழல் அரைகுறையாக அம்பலமாகியிருக்கின்றன. இந்த ஐ.பி.எல்., குழுமத்தில் மோடி போக்கை சிலர் ஆதரிக்கவில்லை. அதேபோல, பல்வேறு கிளைகளை இந்த அமைப்பு ஆரம்பிக்க முயன்றதில், கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டுடன் சரியான இணக்கம் இல்லை. அது குறித்தும் விசாரணை நடக்கிறது. ஆனால், மோடி எல்லாரையும் தாண்டி முன்னணிக்கு வந்து தற்போது சிக்கியிருக்கிறார். வருமான வரித்துறையின் தலைமையகத்தில், மோடி சம்பந்தப்பட்ட கோப்புகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. வரும் 23ம் தேதி கிரிக்கெட் கன்ட்ரோல் வாரியத்தில் இருந்து பொறுப்பானவர்கள், ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

முதலில் ஐ.பி.எல்., துவங்கிய 2008ல் மோடி கட்டிய வரி 2.5 கோடி ரூபாய். தெற்கு ஆப்ரிக்காவுக்கு ஐ.பி.எல்., மாற்றம் செய்யப்பட்டதும் அவர் கட்டிய அட்வான்ஸ் வரி 32 லட்சம் ரூபாய். பின்பு, இந்த ஆண்டு அவர் கட்டிய வரி 11 கோடி ரூபாய். ஆனால், 2006ல் வரி கட்டாத அளவுக்கு வருமானம் இன்றி இருந்தவர் மோடி. அப்படி பார்க்கும் போது, கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிய கறுப்புப் பணம் மற்றும் சூதாட்டமாக ஆட்டத்தின் முடிவுகளை முடிவு செய்தது, தற்போது அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. அது மட்டுமின்றி, மோடியின் உறவினர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். இதன் தலைவர் சுரேஷ் செல்லாராம் என்பவர் மோடியின் மைத்துனர். இவருக்கு 44 சதவீத பங்குகள் உண்டு. தற்போது நைஜீரியாவில் இருக்கிறார். மோடி குடும்பத்திற்கு நெருக்கமான மனோஜ் படாலே மற்றொரு முக்கியப்புள்ளி. இந்த அணியில் சம்பந்தப்பட்ட பலருக்கும் கறுப்புப் பணம் சேமித்து வைக்கப்படும் பகாமாஸ் மற்றும் வெர்ஜின் ஐலண்டு ஆகிய இடங்களில் தொடர்பு இருக்கிறது. அங்கு, கம்பெனிகள் வேறு இருக்கிறது. ஏற்கனவே மொரீஷியசில் இருக்கும் சில பணக்காரர்கள் இந்த ஐ.பி.எல்.,லில் சேர்ந்தது குறித்து மோடியிடம் கேட்கப்பட்ட போது, 'சுறுசுறுப்பான பணக்காரர்கள், எனக்கு வேண்டியவர்கள்; இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு நானா பொறுப்பு' என்றார்.

அதேபோல, சசி தரூர் தோழியான சுனந்தா புஷ்கர், 'கொச்சி பிரான்சைஸ்' என்ற பெயரில் இதில் ஈடுபட்டது குறித்தும் தற்போது விசாரிக்கப்படுகிறது. வெறும் லட்சம் ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்த இவர், இக்கம்பெனி மூலம் 70 கோடி ரூபாய் லாபம் பார்த்தது தான், சசி தரூர் பதவிக்கு வேட்டு வைத்தது. இவர், தனக்கு வந்த பங்குப் பணத்தை தற்போது வேண்டாம் என்று தன் வக்கீல் மூலம் கூறுகிறார். பொதுவாக கம்பெனி சட்டப் பிரிவுகள் படி, 'வியர்வை சிந்தி பெறும் பங்குகள்' அதாவது ஸ்வெட் ஈகுவிடி என்பது கம்பெனி பங்குதாரர்கள் அல்லது பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், கம்பெனியில் நான்காண்டுகள் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் பெற வேண்டியது. ஆனால், துபாயில் தொடர்புடைய சுனந்தா இதில் எந்த ரகத்திலும் வராதவர். தொழில் துவங்கியதும் இந்த அளவு ஆதாயம் என்றால், அதில் புதைந்திருக்கும் மர்மம் என்ன? துபாயில் தொடர்பு வைத்திருக்கும் சில பணக்காரர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஏனெனில், கிரிக்கெட்டிற்கும் அதன் பிரபலங்களுக்கும் துபாய் ஒரு சொர்க்க பூமி.

தற்போது சுனந்தா பற்றியும் விசாரணை துவங்கியிருக்கிறது. சசி தரூர் எந்த அளவு இந்த பணப் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஐ.பி.எல்., என்றதும் மிகப்பெரும் தொழிலதிபர்கள், அவர்கள் உறவினர்கள் என்று எல்லாருமே முக்கியஸ்தர்கள். அதனால், ஐ.பி.எல்., விளையாட்டு என்ற பெயரில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் இதுவரை நடந்திராத பெரிய மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம், மத்திய விவசாயத்துறை அமைச்சர் பவார் போன்ற பல அரசியல்வாதிகள் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்டிருந்தும், எப்படி மோடி போல பெயர் கெடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
ஐ.பி.எல்., போட்டி துவங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி கொண்டு தான் இருக்கிறது. கடந்தாண்டு, பொதுத்தேர்தல் காரணமாக போட்டியை நடத்துவதா, வேண்டாமா என பிரச்னை கிளம்பியது. தேர்தலுக்கு பின் வைத்து கொள்ளுங்கள் என அரசு கேட்டுக்கொண்டும், மோடி தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்தார். தென்னாப்ரிக்காவிற்கு போட்டியை மாற்றி வெற்றிகரமாக நடத்தி காட்டினர். இது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயும் குறைந்தது. தற்போது சசி தரூர் விவகாரம், மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதில் சசி தரூரை இழக்கவேண்டியதாகிவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு விஸ்வரூபம் எடுக்க துவங்கிவிட்டது, தொடர்ந்து வரும் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. வருமான வரித்துறையும் வரிந்து கட்டி இறங்கியுள்ளது. இதில் பல பூதங்கள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் சமயம், ஐ.பி.எல்.,லில் தங்களுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்கவில்லை என கவலைப்பட்டு கொண்டிருந்த அரசியல்வாதிகளும், எதிராக காய் நகர்த்த துவங்கிவிட்டனர். இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு,'செக்' வைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி போர்டு நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், மோடியை நீக்க ஏகமனதாக முடிவு செய்யப்படுகிறது. கிரிக்கெட் போர்டு தலைவர் ஐ.பி.எல்., சேர்மனாக நியமிக்கப்பட இருக்கிறார். ஐ.பி.எல்., போட்டி 25ம் தேதி முடிகிறது. 26ம் தேதி மோடி பதவியை துறக்கிறார்.





காதலியை கரம் பிடிக்க கள்ளத்தனம் செய்து மாட்டி கொண்ட சசி தரூரின் லீலைகள்

சசி தரூர் தம்மை பொறுப்புள்ள அமைச்சராக எப்போதும் நினைத்த மாதிரி தெரியவில்லை. இதற்கு முன்னரும் பல நேரங்களில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சசிதரூர் தனது காதலி சுனந்தாவுக்கு கொச்சி அணியின் ரூ. 70 கோடி பங்குகளை வாங்கி கொடுத்த விவகாரம் எளிதாக வெடித்ததுமே மத்திய அரசு உஷார் அடைந் தது. இது தொடர்பாக விசாரிக்க தொடங்கியது. மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தனது துறை மூலம் விசாரணை களை நடத்தினார். இதற்காகத்தான் ஐ.பி.எல். அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தினார்கள். லலித்மோடியிடமும் விசாரணை நடந்தது. இதன் மூலம் சுனந்தாவுக்கு கொச்சி அணி பங்கு எப்படி கை மாறியது? சசி தரூர் எந்த வகையில் சம்பந்தப்பட்டார் என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொண்டனர்.


அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய உளவுத்துறையான ஐ.பி.க்கு இதன் முழு விவரங்களையும் சேகரித்து தரும்படி உத்தர விட்டார். அதில் சசிதரூர் எந்த வகையில் எல்லாம் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்? சுனந்தா சசிதரூரின் பினாமியா? இதில் ஊழல் நடந்து இருக்கிறதா? போன்றவற்றை விசாரிக்கும்படி பிரதமர் கூறி இருந்தார்.


அதன்படி ஐ.பி. விசாரணையை தொடங்கியது. மற்றொரு உளவுத்துறையான “ரா”வும் இது தொடர்பாக விசாரித்தது. கொச்சி அணியை ஏலம் எடுத்த “ரென்டஸ்வஸ்” நிறுவனத்துக்கு ஏலத் தொகையில் பெரும் பகுதி பணம் துபாயில் இருந்து வந்துள்ளது. அந்த பணம் யார் மூலம் வந்தது? இதற்கும் சசிதரூருக்கும் சம்பந்தம் உண்டா? கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் முயற்சியில் இந்த முதலீடு செய்யப்பட்டதா, என்று விசாரித்தனர்.


சுனந்தாவுக்கு ரூ. 70 கோடி பங்குகள் இலவசமாக கொடுக்கப்பட காரணம் என்ன? இதற்கும் துபாயில் இருந்து வந்த பணத்துக்கும் சம்பந்தம் உண்டா? என்றும் விசாரித்தனர். அதில் சசிதரூர் முழுக்க, முழுக்க சம்பந்தப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். ஊழல் நடந்து இருப்பதும் தெரிந்தது. இதில் சசிதரூர் தனது மத்திய மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் எந்தெந்த வகையில் எல்லாம் தவறு செய்து இருக்கிறார் என்ற முழு விவரத்தையும் சேகரித்தனர்.


பின்னர் இது தொடர்பாக “ஐ.பி.யும், “ராவும் சேர்ந்து ஒரு அறிக்கை தயாரித்தனர். அதில் சசிதரூர் செய்த தவறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு இருந்தனர். 6 பக்கம் கொண்ட இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் அடைத்து பிரதமரிடம் கொடுத்தனர். அதை பிரதமர் நேற்று காலையிலேயே படித்து பார்த்தார். அதன் பின்னர் சசிதரூரை தனது வீட்டுக்கு அழைத்து விசாரித்தார்.


உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்த அனைத்து விவரங்கள் குறித்து சசிதரூரிடம் அவர் விளக்கம் கேட்டார். ஆனால் சசிதரூரால் அதற்கு சரியான விளக்கங்களை கொடுக்க முடியவில்லை. ஏன் என்றால் உளவுத்துறை அறிக்கையில் அத்தனை விவரங்களும் துல்லியமாக சேகரித்து கொடுக்கப்பட்டு இருந்தன. எனவே சசிதரூரால் எதையுமே மறைக்க முடிய வில்லை.


அவர் மீது குற்றம் இருப்பது நிரூபணம் ஆனதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடும்படி அப்போதைய பிரதமர் கூறி விட்டார்.
ஆனாலும் மாலையில் நடந்த காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் இதுபற்றி விவா தித்து இறுதி முடிவு எடுத்தனர். அதில் எடுத்த முடிவு படி சசிதரூர் ராஜினாமா செய்தார்.


சசிதரூர் ஆரம்பத்தில் எனது மாநில (கேரளா) நலனுக்காகவே தலையிட்டேன் என்று கூறி வந்தார். ஆனால் உளவுத்துறை அறிக்கையில் அவர் தனது காதலிக்காக இதில் தலையிட்டதும், பல தவறுகள் செய்ததும் உறுதிப் படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சசிதரூர் தப் பிக்க முடியாமல் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.