தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நான் ஒரு தமிழன். அதன் பிறகே இந்தியன்.

நான் ஒரு இந்தியன் ,
நான் இத்தேசத்தை உளமாற நேசிக்கிறேன்.
சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரபாகரன் வரை வாழ்ந்த மண் இது.
இந்நாட்டின் சுதந்திரத்துக்காகவே எம் மூதாதையர்கள் அரும்பாடுபட்டனர்.
நானும் அவர்கள் வழியில் இம்மண்ணுக்காகவும், இம்மக்களுக்காகவும் தியாகங்கள் பல புரிவேன்.
இம்மண் எம் மூதாதையர் வாழ்ந்த மண், குருதி சிந்தி , உயிர் ஈந்து எம்மை விடுதலையின் மக்களாய் வாழ வைத்த மண்.
எனது அபிலாசைகள், சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு நீங்கி எம் தேசத்துக்காக உயிர் உள்ளவரை உழைப்பேன்.
இம்மண்ணுக்காக உழைப்பது என் பிறப்புரிமை.
இதைத் தடுக்க எவராலும் முடியாது. அது எம் பிறப்புரிமையை மறுப்பதாகும்......

இம்மண்ணில் அநீதிகளும், கொடுமைகளும் நடப்பதை அனுமதிக்க மாட்டோம். சொந்த மண்ணிலே எம் மக்கள் துன்புறுத்தப்படுவதை கண்டு பொறுத்திருக்க மாட்டோம்.
ஒரு கொலைகாரனின் மரணத்துக்காக , ஒரு இனத்தையே அழிக்கும்
கொடுங்கோல் காங்கிரசை அழிப்பேன்.
தமிழ் ஆதரவாளர்களான புலிகளின் பின்னடைவுக்கு துணை போகும்
FBI, R.A.W. போன்ற கொலைகார அமைப்புகளின் முயற்சிகளுக்கு துணை போக மாட்டேன். மாறாக, அவற்றை கட்டுப்படுத்த எனக்கான உரிமையைப் பயன்படுத்துவேன்.
என் நாட்டின் இராணுவம் , எம் உறவுகள் மீது நடத்திய கொடுமைகளை மறக்க மாட்டேன். அவர்களுக்கு நிவாரணம் அளிப்பேன். எல்லாவற்றிலும் பக்க பலமாக இருப்பேன்.இதுவரை என் நாடு நடத்திய அனைத்து துரோக்ங்களுக்கும் பொறுப்பேற்று, அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பேன்.

எமக்கான அரசாங்கத்தை கட்டுப்படுத்த எனக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. இவற்றை எதிர்ப்பதும், கட்டுப்படுத்துவதும் எமக்கெதிரான அநீதியும், உரிமை மீறலும், துரோகமுமேயாகும்........
எம் மண்ணுக்கான இறையாண்மை என்பது எம்மில் மட்டுமே அடங்கியுள்ளது.

இதை பயங்கரவாதம் என்னும் பெயரில் தடுப்பதோ, எங்களை சிறைப்படுத்துவதோ அடிமைத்தனமாகும்.......
நான் எம் இனத்துக்கும், விடுதலை இயக்கத்துக்கும் என்னால் முடிந்த மேலான உதவிகளை செய்வேன்...
எம் தேசத்தில் , தாயகம் திரும்பிய எம் மக்களை மிக மகிழ்ச்சியாக வாழ வைப்பேன்.
எம் மக்களின் உயிருக்கு ஏதேனும் தீங்கு நேருமானால் , ஆயுதம் ஏந்த தயங்க மாட்டேன்....
உயிர் கொடுக்கவும் மறுக்கமாட்டேன்.
இது தீவிரவாதமாகாது.
எம் மக்கள் தடுக்கும் வரை ஓய மாட்டோம்.
எம்மக்களுக்கான மகிழ்ச்சி என்பது எனது தியாகத்தில்தான் இருக்கிறது என்பதை நன்கு அறிவேன்.
தேவை ஏற்படின், எம் குழந்தைகள் என்றாலும்,
நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்.
என் உடல் , பொருள், ஆவி அனைத்தும் இம்மன்னுக்கே சொந்தம்.
எக் காலக்கட்டத்திலும் எம் மண்ணுக்கு தீங்கிழைத்த துரோகிகளை மன்னிக்க மாட்டேன்.
மக்களின் முன் நிறுத்துவேன்.
மக்களை விட மேலான சட்டம் ஏதுமில்லை.
எம் மக்களுக்காக போராடுவது பயங்கராவாதமாகாது.
நான் ஒரு தமிழன். அதன் பிறகே இந்தியன்.

என் நாடு,
என் மக்கள்......
இவற்றை என் உயிருள்ளவரை கடை பிடிப்பேன்.