தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரபாகரன் தாய்க்கு அனுமதி மறுப்பு:

செய்தி

பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டனர்.

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன் பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.

இதற்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண், சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர். பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல், அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.




பதிவு செய்தவர்: மனிதன்

தமிழர்களை தமிழ்நாட்டு அரசு அவமானப்படுத்துவது கொடுமை. இது அதைவிட கொடுமை. கேவலமான உலகில் ஒரு கேவலமான அரசியல் பிழைப்பு.

பதிவு செய்தவர்: மனசு

அட பாவிங்களா எதிரி வந்தால்கூட வாழவைக்கும் தமிழகம் இப்படி மாறியது.இதெல்லாம் அழிவுக்கே அழைத்துச் செல்லும்.தமிழன் இருக்கிறானா ? மனிதர்கள் நெஞ்சில் இரக்கமும் இல்லையா? தமிழர்களே சேலைகளை உடுத்திக்கொள்ளுங்கள் உங்கள் தாய் உங்கள் மண்ணிலிருந்து விரட்டி அடிக்கபடிருக்கிறாள்....இன்னும் எழ மனமில்லை போலும் தமிழனுக்கு..........பொறுத்திருந்து பார்போம்............


பதிவு செய்தவர்: மழலை

என்ன நடக்கிறது நம் நாட்டில்..? எனக்கு விடுதலை புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் பிடிக்காதுதான் ஆனால் அதே சமயம் இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். வந்தாரை வாழ வைக்கும் நாடு என்று நம்மை சொல்வார்கள்.. ஆனால் ஒரு 72 வயது முதியவரை திருப்பி அனுப்ப எப்படி அவர்களுக்கு மனம் வந்தது..? இது வேறு ஒரு மாநிலத்தில் நடைபெற்றிருந்தாலும் பரவாயில்லை, நம் தமிழ்நாட்டில்.. வெட்ககேடு.. இதற்க்கு அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாமே.. மனம் பதைக்கிறது அந்த முதியவரை என்னி..என்ன செய்வது.. என்ன செய்வது..

பதிவு செய்தவர்: வெட்கம்

இந்தியர்களை கொன்ற கசாப் என்கிற கயவனுக்கு கறி சோறு கொடுத்து வாதாட வக்கில் வைத்து அவன் உடல்நலம் பேணுவதில் தப்பில்லையாம். வயதான தாயை அவமரியாதை செய்ததை ஒருக்காலும் உலக தமிழர்கள் மறக்கமாட்டார்கள் இதில் வீணாய் போன செம்மொழி நாடு ஒரு கேடு.

பதிவு செய்தவர்: veeravanniyan

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று? இம்ரான்கான் மனைவி மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்த இந்தியா.ஏன் இந்த அம்மாவை அனுமதிக்கவில்லை.

பதிவு செய்தவர்: SURESH

இம்ரான்கான் மனைவி மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்த இந்தியா.ஏன் இந்த அம்மாவை அனுமதிக்கவில்லை. WHRE ARE YOU TAMILA ????????

பதிவு செய்தவர்: தமிழன்

பாக் கிரிக்கெட் வீரர் அகரம் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது இந்த அதிகாரிகள் எங்கே போனார்களோ தெரியவில்லை பாக் உடன் ஒப்பிட இலங்கை எங்கே?

பதிவு செய்தவர்: ராம்

ஒன்று மட்டும் ஈழ தோழர்களே.. தமிழ்நாட்டில் எப்பொழுதும் கருணாநிதி க்கு என்று ஒரு சக்தி இருக்கிறது.. அது காமராஜர் , M.G.ர களத்தில் இருந்து.. மக்கள் அதரவு இல்லாத வைகோ, நெடுமாறன் போன்றவர்களை நம்புவதை விட்டு விட்டு கருணாநிதியை அனுசரநியுங்கள்... எல்லாம் நல்லதே நடக்கும். அவரது குணம் அனைவரும் அவரை சார்ந்து இருந்தால் உதவுவர்... இல்லை என்றல் இது போல கண்ணீர் விட வேண்டியது தான். இது கருணாநிதி அதரவு கருத்து இல்லை... இது தான் பிரக்டிகல்.. ஈஅழ நம்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் .


பதிவு செய்தவர்: தமிழன்

மனிதபிமானமற்ற காட்டு விலங்காடித்தனம்.உயிரை வைத்து விளையாடும் புறம்போக்கு குணம்.தனக்கு இயலாதபோது ஏற்பட்ட உணர்வும் வலியும் இந்த வயதான தாய் விஷயத்தில் ஏற்படாதது அவமானம்.வெட்கப்படக்கூடிய வேதனை கலந்த துக்கம்.சம்பந்தபட்டவர்கள் சிந்திக்கட்டும்.

பதிவு செய்தவர்: Tamilan

அவமானம் இந்த நிலையில் செம்மொழி மாநாடு ஒரு கேடா இந்த மானக்கேட்ட தமிழனுக்கு. இன உணர்வுடன் செயல்படுங்கள் அரசியல் மாண்பிமிகு மந்திரிகளே ...

பதிவு செய்தவர்: நான்

இது ரொம்ப கொடுமையான நிகழ்வு. எந்த உயிருக்கும் இது போல நடக்க கூடாது. மனிதாபிமானம் இல்லாத செயல். இந்த நெடுமாறனும், வைகோவும் விமான நிலையம் போகாமல் இருந்திருந்தால் இப்படி நடக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும். இவர்கள் இதில் அரசியல் செய்யவே ஏர்போர்ட் போனார்கள். பிரபாகரன் தாயார் என்ற அடையாளம் இவர்களுக்கு ஒரு பிரச்சனை. அதை நெடுமாறனும் வைகோவுக்கும் மேலும் பெரிதாகவே செய்கிறார்கள். அய்யா அந்த அம்மாவை உங்கள் அரசியலில் இருந்து விட்டு விடுங்கள். நிமதியாக இருப்பார்கள். இந்திய அரசு செய்தது தவறு.

பதிவு செய்தவர்: srinivasan

டியர் இந்த செய்திய கேட்டு நமக்கு கண்ணீர் வருகிறது . ஒரு பகிஷ்டஹ்ன் வந்தால் இங்க ராஜா மரியாதையை ஒரு தமிழ் தாய் வந்தால் திருப்பி அனுப்பி வைகிறார்கள் கடவுளே என் இந்த கொடுமை எங்க தமிழ் இன்னாத்துக்கு முருகா எங்கள் தமிழ் கடவுளே எங்கள் நம்ப தமிழ் இன்னதுகு நல்ல களம் வராத என்னக்கு யாரை குறை கூறுவது தெரியவில்லை அனந்த தாய்க்கு கடவுள் தன துணை. கண்ணிருடன் தமிழ் மக்கள்

பதிவு செய்தவர்: அமெரிக்காவாசி

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லும் நிலைமை நமக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை


பதிவு செய்தவர்: முருகன்

இது மிகவும் வருத்தப்பட கூடிய செயலாகும். மனிதாபிமணம் அற்ற செயலாக உள்ளது. ஒரு தமிழக தாய்க்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்பதா? தமிழக முதல்வர் எதற்கு? ஜனநாயகம் எதற்கு? இது வன்மையாக கண்டிக்க தக்க செயல். நாம் தமிழர்களாக இருக்கவே வெட்கப்பட வேண்டுமல்லவா ? தமிழ் .. தமிழ் என்று சொல்லும் உலரும் தலைவர்கள் எங்கே?

பதிவு செய்தவர்: சூரியன்

இது மிகவும் மனிதபிமானமற்ற செயல். வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பதிவு செய்தவர்: தமிழன்

டே கலைஞர், நீ எல்லாம் ஒரு மனுசனா? நீ ஒரு தமிழ் இன துரோகி டா... உனக்கு எல்லாம் ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?

பதிவு செய்தவர்: நாய்

அந்த முதியவரை என்னி..என்ன செய்வது.. என்ன செய்வது..? ? யாரு கருநாநிதியை  என்ன செய்யிறது ? அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் எல்லோ போய் அவர் காலில் விழுங்கோ ? மானமுள்ள தமிழன் ஒருத்தனும் செம்மொழி  மாநாட்டிற்கு போகமாட்டான்.........? படிச்சவனுக்குதான் அது இருக்கிறதில்லையே .. நாய்ப்பசங்க?