தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஈழம் பிறக்கும் . அல்லது இந்தியா அழியும் - இது நியதி.

இறுதி யுத்தம் என்ற பெயரில் இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு சிங்களவன் நடத்திய தமிழின அழித்தொழிப்புப் போர் முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறவில்லை. முள்ளிவாய்க்கால் முடிவல்ல. தமிழீழ விடுதலைப் போரின் மூன்றாம் கட்ட அரசியல் யுத்தத்திற்கான ஆரம்பம்.

தமிழீழ விடுதலை போரட்ட வரலாறு முள்ளிவாய்க்காலுக்கு முன்னென்றும் பின்னென்றும் தான் இனி எழுதப்படப் போகிறது.

யுத்த அரசியலும் அரசியல் யுத்தமும்..

அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம் . யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல் என்பார்கள்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு முன்னுள்ள தமிழீழ விடுதலை போராட்ட வரலாறு  மேற்ச்சொன்ன இரண்டு வடிவங்களையுமே கையாண்டு பார்த்து பழுத்த அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

1. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தனித் தமிழீழத்திற்காக தந்தை செல்வாவின்  தலைமையில்   ஆயுதம் ஏந்தாத அரசியல் யுத்தம்

2. தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் முள்ளிவாய்க்காலுடன் முடிவுற்ற ஆயுதம் ஏந்திய யுத்த அரசியல்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்காகத் தமிழர்கள் வேதனைப் படலாமே ஒழிய வெட்க்கப்படத் தேவையில்லை . வெட்க்கப்பட வேண்டியது கேடுகெட்ட மானுடமும் தலைகுனிய வேண்டியது நமது சமகால தரங்கெட்ட உலக ஒழுங்கும் தான்.

மூன்றாம் கட்ட அரசியல் யுத்தம்

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பின்னர் இனி வருவது மூன்றாவது கட்டம். இந்த மூன்றாவது கட்டத்தில் தேசியத் தலைவரின் தலைமையில் நடந்த ஆயுதம் ஏந்திய யுத்த அரசியலைப்       புலம் பெயர்ந்த தமிழர்கள், ஆயுதம் ஏந்தாத   அரசியல் யுத்தமாக தங்கள் தோள்களில் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தில் நாம் யுத்த களத்தைத் தான் இழந்திருக்கிறோம். யுத்தத்தை இழக்கவில்லை. ஒரு யுத்தகளத்திற்குப் பதிலாக புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் முப்பதுக்கும்  மேற்பட்ட நாடுகளில் அரசியல் தளங்களை அமைத்துப் போராடி வருகிறார்கள்.

இரட்டைக் குழல் துப்பாக்கி

நாம் மேலேச் சொன்ன தமிழீழ விடுதலைக்கான அரசியல் யுத்தத்தை உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற இரு இயக்கங்களும் உலகம் முழுதும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசின் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகுமாரன் இந்த இரண்டையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என வர்ணித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவை

உலகத் தமிழர் பேரவையினர் உலகம் முழுதும் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் முன்னெடுத்திருக்கும் "வட்டுக்கொட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு" என்ற அரசியல் நடவடிக்கையில் ஈழத்தமிழர்களை கிட்டத்தட்ட முற்றும் முழுதுமாகப் பங்கேற்கச் செய்ததன் மூலம் தங்களின் அரசியல் யுத்தத்திற்க்குச் சரியான துவக்கத்தைத் தந்துள்ளார்கள்.

மக்களவை உறுப்பினர் தேர்தல்களும், லண்டனில் நடைபெற்ற மாநாடும் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் விளைவும் பெருத்த நம்பிக்கை ஊட்டுவனவாகும்

"சுதந்திரத் தமிழீழமே புலம் பெயர்ந்த மக்களின் தேர்வு. அதுவே எம்மக்களின் துயர் துடைக்கும் நிரந்தரத் தீர்வு" என உலகுக்கு அறிவித்ததன் மூலம் தமிழீழம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரின் தாகம் என்பதைத் அகிலத்துக்கே அறிவித்திருப்பது சரியான திசை வழியிலான அரசியல் நகர்வு.

நாடு கடந்த தமிழீழ அரசு

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. எமது விடுதலைப் போராட்ட்த்தில் இன்னொரு வலிமைமிக்க வடிவத்தின் ஆரம்பம் என்பதை நாடு கடந்த தமிழீழ அரசுக்கு புலம் பெயர்ந்த மக்கள் அளித்து வரும் அமோக ஆதரவு நிரூபித்து விட்டது. புலம் பெயர்ந்த எம்மக்கள் முன்னெடுக்கும் அரசியல் யுத்தத்தில் பிரயோகிக்கத் துவங்கியிருக்கும் பிரம்மாஸ்திரம் தான் நாடு கடந்த தமிழீழ அரசு. இந்திய வல்லாதிக்கத்தையும் சிங்களப் பேரினவாத அரசையும் நிலைகுலையச் செய்து விட்டது ஈழ மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுவிட்ட இந்த  பிரம்மாஸ்திரம்

உலகத் தமிழர்ப் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு இவை இரண்டின் வீரியமிக்க செயற்பாடுகள், மேற்குலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை நடவடிக்கைகளிள் ஏற்படுத்தியுள்ள எதிர்பாராத மாற்றங்களாலும், அவை தரும் அழுத்தங்களாலும் திணறத் தொடங்கியுள்ள சிங்கள அரசும் இந்திய அரசும் இந்த இரு அமைப்பு நிர்வாகிகளிடையேயுள்ள வேறுபாடுகளை கூர்மைபடுத்தி, முரன்பாடுகளாக்கி, அந்த முரன்பாடுகளை முற்றவைத்து, பகைமை நிலையை உருவாக்கும் பாதகச்செயல்களைச் செய்யத் தொடங்கி விட்டன.

இரு வாய் கொண்ட எரிமலை

உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசுப் பொறுப்பாளர்கள் இந்திய இலங்கை இனக்கொலை அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு இரையாகி விடாமல் தாங்கள் இரு வாய் கொண்ட எரிமலை என்பதை இந்த இரு இந்திய இலங்கை கழிசடை அரசுகளுக்கு நிரூபிக்கும் வண்ணம், தங்களுக்குள் விரைவில் ஒரு உடன்பாடு காண வேண்டும். அதனையும் நாடு கடந்த தமிழீழத் தற்காலிக அரசு திட்டமிட்டிருக்கும் முதல் அமர்வுத் தேதிக்கு         (மே 17) முன்னர் காண வேண்டும் என்பதே, உலகத் தமிழர் அனைவரின் பெரு விருப்பம். இதுவே இந்த இரு அமைப்புகளும் தமிழீழக் கனவில் தங்கள் இன்னுயிர்களை ஈழத்தில் விதைத்துச் சென்றிருக்கும் மாவீரர் கண்மணிகளுக்கு, இந்த இரு இயக்கங்களும் செலுத்துகின்ற மகத்தான வீர வணக்கமாகும். இதுவே முள்ளிவாய்க்காலில் உயிரோடு புதைக்கப்பட்ட நம்  உறவுகளுக்கு இவ்வமைப்புகள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

உங்கள் வழி உங்களுக்கு! எங்கள் வழி எங்களுக்கு

புலம் பெயர் தமிழர்கள் வாழும் சூழல் வேறு. அவர்களுக்கிருக்கும் சுதந்திரமும் வேறு ஈழ மண்ணில் அடிமைப் பட்டுக்கிடக்கும் தமிழர்களின் சூழலும்   சுதந்திரமும் வேறு வேறு. இந்த யதார்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தாய்மண்ணில் வாழும், தமிழர் தலைவர்கள் நடவடிக்கைகளைத் தாங்கள் விமர்சிக்காமலும் , தாய்மண்ணிலிருந்து தங்களைப் பற்றி வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமலும், முடிந்தால் இண்க்கத்தை வளர்ப்பது, இல்லையேல் பகைமைக்கு இடம் கொடாமல் " உங்கள் வழி உங்களுக்கு! எங்கள் வழி எங்களுக்கு"எனத் தங்கள் வழியே_

1.       தமிழீழத் தனி அரசு

2.       இலங்கைப் போர்க்குற்றவாளிகள் மீது சர்வதேச நடவடிக்கை

-என்ற இந்த இரட்டைக் கோரிக்கையை விட்டு, இறுதி வெற்றிக் கிட்டும் வரை இம்மியும் விலகாமல், நாம் முன்னரே அடைமொழியிட்டு அழைத்த்தைப் போல, உலகத் தமிழர் பேரவையும் -நாடு கடந்த தமிழீழ அரசும் இருவாய் கொண்ட எரிமலையாகச் சீறவேண்டும். இந்தச் சீற்றத்தில் இந்திய இலங்கை இனக் கொலைகார அரசுகளின் சதிகள் அத்தனையும் சாம்பலாக வேண்டும்.

தாய் மண்ணில் தமிழர்தம் அரசியல் பலத்தை அழியவிடலாமா?

இராணுவபலம், மக்களின் மனோபலம் இரண்டுமே ஈழத்தில் சிதைவுற்றிருக்கும் இத்தருணத்தில், அரசியல் பலமும் சிதைவுண்டு போகாமல், தாய்மண்ணில் தக்கவைப்பதொன்றே தமிழீழ அரசியல் தலைவர்களின் தற்போதைய  தலையாயக் கடமையாகும்.

தேசியத் தலைவர் கிளிநொச்சியில் இருந்து மெய்நடப்பு அரசினை  நடத்திக்கொண்டிருந்தபோது, மாமனிதர் சிவகுமார் போன்றோரால் கட்டியெழுப்பப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அரசியல் பலம்  அதில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களின் ஆளுக்கொரு திசைவழிப் போக்கினால் இன்று ஆட்டம் காணுகிறது. குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என இரண்டாகப் பிரிவுபட்டு, நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்குள்ளேயே                இந்த அரசியல் தலைவர்கள் மோதிக்கொள்கிறார்கள். இந்த இரு பிரிவினரில், ஒரு பிரிவினர் விலகிக்கொண்டு விட்டுகொடுக்கா விட்டால் தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போகும். இதன் விளைவாய் ஈழத் தமிழர் கட்டிக்காத்த அரசியல் பலம் அழிக்கப் பட்டு விடும். இதைதடுக்க யார் விட்டுக் கொடுப்பது? இதுவே இன்று நம்முன் உள்ள விடைகாண வேண்டிய கேள்வியாகும்.
   
இவ்வகையில், நடந்தவற்றையும், நடப்பவற்றையும் கவனமாக ஆராய்ந்தால் நாம் நடக்க வேண்டிய பாதை புலப்படும்

"இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்!"   இது ராஜபக்‌ஷகளின் ஒப்புதல் வாக்கு மூலம்.

இந்தியா என்றால் எந்த இந்தியா? பாகிஸ்தானுடன் நான்கு முறை யுத்தம் கண்டு, மூன்றாவது யுத்தத்தில் வங்க தேசத்தை பாகிஸ்தானில் இருந்து விடுவித்த்தே அந்த இந்தியாவா? இல்லை. பின் இந்தக் கள்ளயுத்தத்தை நடத்தியது எந்த இந்தியா?

இந்தியாவில் இருந்து. இந்தத் தமிழினப் படுகொலை போரை நடத்திய சூத்திரதாரிகள், ஆண்டாண்டு காலம், தலைமுறை தலைமுறையாக,     இந்தியாவின் அதிகாரபீடங்களில் அமர்ந்தபடி, குறிப்பாக வெளியுறவுத் துறையை விடாமல் ஆக்கிரமித்தபடி, ஆட்சியாளர்களைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி, தமிழின விரோதச் செயல்களில் தொடர்ந்து   ஈடுப்படும் மலையாள, வடஇந்தியப் பார்ப்பன ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ்  அதிகாரிகள் தான்.  ராஜீவ்காந்தியைத் தங்கள் வலைக்குள் வீழ்த்தி, ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அமைதிப்படை என்ற பெயரில்    இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தேசியத் தலைவரைக் கொன்று, விடுதலைப்புலிகளை அழித்து ஈழத்தில் தமிழ்த் தேசிய எழுச்சியைத் தரைமட்டமாக்கத் திட்டமிட்டார்கள் இந்தத் தமிழின விரோத மலையாள, வடஇந்தியப் பார்ப்பன ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள்.

பொறுமை, சாமர்த்தியம், சாதுரியம் நிறைந்த தனது ராஜதந்திர நடவடிக்கைகளால், இந்திய ராணுவத்தின் இடுப்பை முறித்து இலங்கையை விட்டு வெளியேறச் செய்து தமிழின விரோத இந்தியப் பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் மூக்கை உடைத்தார் நம் தேசியத் தலைவர்.

இதற்குப் பழிவாங்கச் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கிடந்தன இந்த இந்தியப் பார்ப்பன அதிகாரவர்க்கம்.

ராஜிவ்காந்தி கொலையை இந்தக்கூட்டம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், சந்திராசாமி, சுப்பிரமணியசாமி இவர்களை முதன்மைக் குற்றவாளிகளாக்காமல் தேசியத் தலைவரையும் பொட்டுஅம்மானையும் முதன்மை குற்றவாளிகளாக்கினார்கள்.

13 ஈழத்தமிழர்கள், 13 தமிழகத் தமிழர்கள் ஆக 26 பேருக்கு இவ்வழக்கில் தூக்குத் தண்டனை கிடைக்கச் செய்து தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் மண்டிக்கிடந்த தமிழீழ ஆதரவு நிலையையும், தமிழ்த் தேசிய எழுச்சியையும் தடுத்துவிட்டார்கள்.

மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகள் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்திவிட்டுத் தலைவரைச் சந்திக்க நாடு திரும்பிக்கொண்டிருந்த மாவீரர் கிட்டுவையும், அவருடன் 9 புலிகளையும் நடுக்கடலில்     நஞ்சருந்தி சாகடித்த சதிக்குப் பின்னால் இருந்தது இந்த இந்தியப் பார்ப்பனக் கூட்டமே.

மாத்தையாவைத் துரோகியாக்கித் தலைவரை கொல்லச் சதிச் செய்ததும்   இந்தச் சதிகார்ர்களே

இதற்கு மேலதிகமாக ஒன்றும் செய்ய இயலாதிருந்த நிலையில் தான், சோனியாவின் அரசியல் பிரவேசமும், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைக்கிற சூழலும் இவர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்கிறது.

சோனியா பிரதமராக வரயியலாத சூழலில், ஒரு அரசியல் வாதியை பிரதமராக்காமல் முன்னாள் உலக வங்கி அதிகாரியான மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதும் இவர்களே. இந்திய வெளியுறவுத் துறையின் ஏகபோக குத்தகைத் தாரர்களான இந்தப் பார்ப்பனக் கூட்டம். தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து, தேசியத் தலைவரையும் தீர்த்துக் கட்டும் தங்கள் திட்டத்திற்கு, சோனியா, ராகுல், பிரியங்கா, மன்மோகன் சிங் இவர்களை இணங்க வைக்கிறார்கள்.

இவர்கள் திட்டத்தின் முதற் கட்டமாக, இரட்டைக் கோபுரத் தாக்குதலில் வெருண்டுபோயிருந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பயங்கர வாத இயக்கமாக அறிவிக்கச் செய்தார்கள்.

  இணைத் தலைமை நாடுகளைப் பின்னணியில் இருந்து இயக்கியது, கருணாவை துரோகியாக்கியது, புலிகளுக்கு கடல் வழி ஆயுத வரத்தை தடுத்து நிறுத்தியது அனைத்தும் இவர்களின் திட்டத்தின் முதற்கட்டச் செயற் பாடுகள். xஇதற்கு முன்னர் புலிகள் சிங்கள ராணுவதிற்கு மரண அடி கொடுத்து யாழ்பாணத்தினைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்பை வாஜ்பாய்-அத்வானி மூலமாக கைவிடச் செய்யக் காரணமாக இருந்தவர்கள் இந்த கங்கு பட்டர்களே. அதன்பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.

அன்றாடம் இந்த பார்ப்பனர்களிடம் ஆலோசனை பெற்றுத் தான் இந்த யுத்தத்தை நாங்கள் நடத்தி முடித்தோம் என்பது ராஜபக்‌ஷக்களின் மற்றும் ஒரு வாக்கு மூலம்.

இன்று நேற்றுத் தொடங்கியது அல்ல இந்த யுத்தம். நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் சிந்து சமவெளியில் தொடங்கிய யுத்தம் இப்பொழுது முள்ளிவாய்க்காலில் வந்து நிற்கிறது.

தமிழினப் படுகொலைப் போரை இலங்கை ராணுவத்தைக் கொண்டு நடத்தி முடித்த இந்தியப் பார்ப்பன சூத்திரதாரிகள் தற்பொழுது தமிழீழம் உட்பட இலங்கை முழுவதும் தங்கள் வல்லாதிகத்தை நிலைநாட்டும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்

தமிழின விரோத இந்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரல்                       

1.       தமிழீழத்தின் ராணுவ பலத்தையும்,மக்களின் மனோபலத்தையும் சிதைத்தல் (இதனைச்  சற்றேறக் குறைய  நிறைவேற்றி விட்டார்கள்)

2.       தமிழீழ மக்களின் அரசியல் பலத்தை சிதைத்தல் (இந்த வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.)

3.       தமிழீழ அரசியல் கட்சிகளிடையே பிளவுகளை உண்டாக்கி, அவற்றுள்  இந்தியாவின் வல்லாதிகத்தை ஏற்றுக்கொள்ளும் பிரிவைத் தத்தெடுத்து, அவர்கள் மூலமாக ராஜிவ்- ஜயவர்தன ஒப்பந்தத்திற்கு உயிரூட்டல்    (வடக்கு கிழக்கு இணைப்பு, வடகிழக்கு மாகாணசபை உருவாக்கம் இதரவை)

4.       சிங்கள பிரதேசமான தென்னிலங்கையிலும் இந்தியாவின் வல்லாதிகத்தை நிலைநாட்டுதல் (இந்தியாவின் இந்த திட்டத்தில் சிங்களத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்துதல், சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல், சிங்களர்களுக்கிடையே கலகம், சிங்கள ராணுவத்திற்குள் கலவரம் என இந்தக் காட்சிகள் சுவாரசியங்கள்  நிறைந்தவை.)

5.       நிறைவாக, தமிழர்களும், சிங்களர்களும் தங்கள் இறைமைகளை           இழந்து, ஒட்டு மொத்த இலங்கையும் இந்தியாவின் இணைக்கப்படாத     மாநிலமாக மாற்றப்படும்,(தமிழர் தேசமும்,சிங்களர் தேசமும் இந்திய பார்ப்பன-பனியாக் கூட்டத்தார்+கருணாநிதி குடும்பத்தாரின் சொர்க்க பூமிகளாகத் திகழும்)

இது எப்படிச் சாத்தியமாகும்? இலங்கையின் அத்தியந்த ஆத்மார்த்த நண்பர்கள் சீனாவும்,பாகிஸ்தானும் இலங்கையைக் கைவிட்டு விடுமா? இது நியாயமான கேள்வி

இலங்கையில் சீனாவின் தலையீட்டை இந்திய-அமெரிக்க கூட்டு       ராஜதந்திர நடவடிக்கை கட்டுப்படுத்தியாகிவிட்டது. சீனா மிரட்டிப்பார்த்தும் திபெத்தின் தலாய்லாமாவை ஒபாமா சந்தித்து ஆற்றுப்படுத்தி இருக்கிறார்.

"இலங்கை இந்தியாவின் விவகாரம். இதில் சீனா அளவுக்கதிகமாக மூக்கை நுழைத்தால் திபெத் விடயத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாகச் செயல்படும். திபெத் இந்தியாவின் கிழக்கு வாசல். திபெத் பிரச்சனை         இந்தியாவின் பாதுகாப்போடு தொடர்புடையது. ஆனால் சீனாவுக்கு இலங்கை அப்படியல்ல" இந்த விடயங்களெல்லாம் சீனாவுக்கு எடுத்து சொல்லப்பட்டு விட்டன. சீனாவும் இதனை ஏற்றுக்கொண்டு விட்டது. சீனாவுக்கு இலங்கையை விட திபெத் முக்கியமானது இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா.சபை நடவடிக்கைகளை இந்தியாவும் சீனாவும் எதிர்க்கப்போவதில்லை என்று வருகிற செய்திகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் சீனாவில் இருந்து வந்த ஆயுதக் கப்பலை மகிந்த ராஜபக்‌ஷ திருப்பி அனுப்பிவிட்டது இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அவர் அடிபணிந்து விட்டதைத்தான் காட்டுகிறது. சீனாவுடனான இலங்கையின் தேனிலவை    இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது.

ஊருக்கெல்லாம் தெரிந்திருக்கிற சீனாவின் முத்து மாலை ஆபரேஷன்      இந்தியாவின் உளவுத் துறைக்குத் தெரியாதா? சீனா தன் கடைசி முத்தை இலங்கையில் பதிப்பதை வேடிக்கை பார்க்க இந்தியா தன் காதில் கடுக்கனா போட்டிருக்கிறது?

அடுத்தது இலங்கையின் உற்ற நண்பன் பாகிஸ்தான் பற்றி. பாகிஸ்தான் அமெரிக்காவின் கட்டுத்தறிக் கன்றுக்குட்டி. லஸ்கர் இ தொய்பா இயக்கம் இலங்கையில் வளர்ந்து வருவதாக அமெரிக்கா அறிவித்துவிட்டது. எனவே பாகிஸ்தான் இலங்கைக்கு அளிக்கிற உதவிகள் லஸ்கர் இ தொய்பா இயக்கத்திற்கு போய்ச்சேர வாய்ப்புள்ளதால், இலங்கைக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என அமெரிக்கா பாகிஸ்தானைத் தடுத்து விடும். இந்தியா அமெரிக்காவுடன் செய்துக்கொண்டுள்ள அணுசக்தி எரிப்பொருள் ஒப்பந்தம் போலத் தானும் செய்துகொள்ள வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பத்திற்கு அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே தன்னுடைய ஆபத்பாந்தவர்களாகவும், அனாதை ரட்சகர்களாகவும் சீனாவும் பாகிஸ்தானும் என்றும் இருப்பார்கள் என்ற இலங்கையின் நம்பிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் மண்ணை அள்ளிபோட்டு விட்டன.

ஐரோப்பிய கூட்டமைப்பு இலங்கைக்கான வர்த்தகச் சலுகைகளை இனி நீட்டிக்கப் போவதில்லை. அதனால் ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான ஆடைத் தொழிற்சாலைகள் இலங்கையில் மூடப்படவுள்ளன. இதன் விளைவாக இலங்கையில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடியின் தாக்குதல் தாங்க முடியாத அளவு இருக்கும். ஈழத் தமிழர்கள் தற்போது வீதிகளில் பட்டினி கிடக்கிறார்கள். சிங்களர்கள் இனி வீடுகளுக்குள் பட்டினி கிடப்பார்கள்.

ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ராணுவ பலம் சிதைக்கப் பட்டதைப் போல, இலங்கையின் ராணுவ பலமும் சிதைக்கப் பட்டுவிட்டது. இதற்கும் ஒருபடி மேலே போய், சரத்பொன்சேகா- மகிந்தராஜபக்‌ஷ மோதலினால் இலங்கை ராணுவ வீரர்களின் மனோ பலமும் சிதைக்கப் பட்டுவிட்டது. ஒற்றுமை குலைக்கப்பட்டு விட்டது. ராணுவத்திற்குள் கலவரம் வெடிக்கலாம்.அல்லது ராணுவத்தை விட்டு வெளியேறிய பொன்சேகா ஆதரவு ராணுவ அதிகாரிகள் வீரர்கள் உதவியுடன் மக்கள் புரட்சி வெடிக்கலாம். முன்னரே குறிப்பிட்ட வாறு சீனா பாகிஸ்தான் நாடுகளின் இலங்கைக்கான ராணுவ உதவிகள் தடுக்கப்பட்ட  நிலையில், இலங்கையின் உள்நாட்டு கலவரங்களால் இலங்கையின் ராணுவ பலம் மேலும் சிதையும். இந்தியா விரும்பினால் அன்றி இலங்கையால் தன் ராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்ய முடியவே முடியாது. இலங்கை வந்த சீன ஆயுதக் கப்பலைத் திருப்பி அனுப்பியது   சம்பந்தமாக மகிந்த ராஜபக்‌ஷ அழித்தப் பேட்டியில் இனி ஆயுதங்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். இனி ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியாவின் அனுமதியில்லை என்பதே அதில்       உட்பொதிந்துள்ள  ரகசியமாகும்.

இனிமேல்தான், சிங்களவர்களுக்கு, அப்பத்தைப் பூனைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க முன்வந்த இந்தியக் குரங்கின் தந்திரம் விளங்கும். தமிழீழத் தேசியத் தலைவரின் பேராண்மையும் புரிபடும். ஈழப் பெருந்தீவில் தமிழரின் இறைமையுடன் சிங்களனின் இறைமையையும் சேர்த்துக் காத்த பெருமறவன் பிரபாகரனின் பெருமை புலப்படும். அந்த எல்லாள மகராசனுடனேயே  எல்லாவற்றையும் பேசித் தீர்க்காமல் போனோமே என சிங்களன் ஏங்கும் காலம் வரும்.

இதற்கிடையில், இன்று, தமிழீழத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதறவிடாமல் தக்க வைப்பது எப்படி?

அன்று இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது வடகிழக்கு மாகாண சபை உருவாக்கத்திற்காக இந்தியா தேர்ந்தேடுத்த தமிழீழ அரசியல் தலைவர் வரதராஜப்பெருமாள்.

அதே போல மகிந்தாவா? இந்தியாவா? இன்றைய சூழலில் ஈழத் தமிழர்களை அவர்களது அவல நிலைகளில் இருந்து கொஞ்சமேனும் மீட்டெடுக்க யாரோடு இணைவது என்கிற கேள்வி எழுகிற போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தேர்ந்தேடுத்து இருப்பது இந்தியா.

தமிழீழ தனியரசுக் கோரிக்கையில் பிடிவாதமாக் இருக்கும் தேசியத் தலைவரின் விசுவாசிகளை விலக்கி வைத்துவிட்டு, பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க.


--
....நன்றி....

தூங்கும் புலியைப்
பறைகொண்டு எழுப்புவோம்...
தூய தமிழரைத்
தமிழ்கொண்டு எழுப்புவோம்!'