தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

புடுங்குற தலைவனுக்கு புடலங்காய் விழா !


ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.




திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.




முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.



“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.




“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு

தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..

உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு

உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு

உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு

உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “



அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.




“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே

உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்

நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கர் ஒரு எலிக்குட்டி


அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,


சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்

வழங்கப் பட்டது.




பின் குறிப்பு.


கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

நன்றி
சவுக்கு
 
 
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- கருணாநிதி கோரிக்கை

பெட்ரோல், டீசல் [^] மீதான சுங்க வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.http://thatstamil.oneindia.in/img/2010/02/27-kar200.jpg

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், உணவுப் பண வீக்கத்தால் மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் பாதிப்பை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் இந்த வரி உயர்வு உணவுப் பொருட்களின் விலை உயர்வை மேலும் கடினமாக்கி விடும்.

எனவே உடனடியாக இந்த உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் டீசல் விலை உயர்வையாவது நிறுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளும், சாதாரண மக்களும் பலன் பெற முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே இதில் தலையிட்டு இந்த விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. 

 வாசகர் கருத்து

வல்லவன்
பதிவு செய்தது: 27 Feb 2010 4:02 pm
ஓஹோ...! நல்லா படம் காட்டுராங்கப்பா !
 
fact
பதிவு செய்தது: 27 Feb 2010 4:08 pm
ட்ரை யுவர் best டு fight against price hike. c.m.we ஆர் already suffering
 
kuranku
பதிவு செய்தது: 27 Feb 2010 4:22 pm
we have to die soon.vegetables are hike.bus ticket hike.sugar hike.this ,that ,venkaayam,puliyamkottai are hike.no job degree holders are hike.land price hike.interest are hike.age are hike day by day.but there is no hike in many peoples life.
 
தபால்
பதிவு செய்தது: 27 Feb 2010 4:23 pm
தமிழ்மக்கள் பிரச்சினைக்கு கடிதம், தன் மக்கள் பதவிக்கு டில்லி பயணம்.
 
mariyan
பதிவு செய்தது: 27 Feb 2010 6:31 pm
உடன்பிறப்பே லட்சகணக்கான தந்தி அடியுங்கள். மனித சங்கலி அமையுங்கள். நாம் இங்கு கொடுக்கும் குரல் நாடாளுமன்றத்தின் கழிவறை வரை ஒழிக்கவேண்டும் என்றா சொன்னார், தயவு செய்து குறைந்தபட்சம் டீசல் விலையையாவது குறையுங்கள் என்றுதானே சொல்கிறார். வயதானவர் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ, பிழைத்து போகட்டும்,
 
unmai
பதிவு செய்தது: 27 Feb 2010 6:18 pm
the forum is full of bigots, always finding excuse to bash Karunanidhi. Despite being part of alliance M.K.Giving voice to roll back the hike. Hailing the budget as good generally in noway prevents opposing hike in petroleum tax. Karunanidhi sokka thangama endru ketka ingu yarum kalappada thangam kooda illai. shame on you bigots.
 
ONE OR SUN
பதிவு செய்தது: 27 Feb 2010 6:09 pm
உன்னை பெட்ரோல் விலை உயர்ந்தாலும் ஏழை தமிழ் மக்கள் விலை உயர்ந்த பெட்ரோலால் இலவசமாக உன்னை எரிக்க தயார்.நீ எரிய தயாரா .DEAL OR NO DEAL
 
அறிவுமதி
பதிவு செய்தது: 27 Feb 2010 5:52 pm
நேற்றுதான் சிறந்த பட்ஜெட் என்று அறிக்கைவிட்டார். இன்று பெட்ரோலிய விலை உயர்வை திரும்பப் பெருக என்று அறிக்கை. என்னை மொள்ளமாரித்தனம்!
 
gkp
பதிவு செய்தது: 27 Feb 2010 5:41 pm
வேற வேல இல்ல பேசாம முடிகிட்டு இரு
 
இந்தியன்
பதிவு செய்தது: 27 Feb 2010 5:17 pm
ஆரம்பிசுடாரையா
  

மனோ
பதிவு செய்தது: 27 Feb 2010 5:12 pm
தாங்க முடியலைப்பா !அந்தப் பேனாவை யாரவது திருடிப்போகக்கூடாதா ?
 
unmai
பதிவு செய்தது: 27 Feb 2010 4:46 pm
நேத்து தானே நல்ல பட்ஜெட்நு அறிக்கை விட்டான் கிழவன் இன்னைக்கு யாரை ஏமாற்ற இந்த கடிதம் ,இந்த லட்சணத்தில் நிதி துறை இணை அமைச்சர் தி மு க காரன் அவனுக்கு தெரியமல பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு இருந்துருக்கும்.
 
கிழ பாடு
பதிவு செய்தது: 27 Feb 2010 5:09 pm
அது முந்தா நாளே மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்தது .....வழக்கமாந பட்ஜெட் தானேன்னு மொத நாளே எழுதி வைக்க சொல்லிட்டேன்.....இப்போ தான் யாரோ சொன்னங்க..பெட்ரோல் டீஸல் விலை உயர்த்த போறங்கன்னு..அதான் "கடி"தம் எழுதுறேன்..
 
திமுக
பதிவு செய்தது: 27 Feb 2010 4:39 pm
இப்படியே கடிதம் எழுதி காலம் தள்ளும் கலைஞ்ர் வாழ்க, கடிதத்தில் கரை கண்ட, சென்சூரி அடித்த எங்கள் காவிய தலைவன் வாழ்க
 
நன்றி
தட்ஸ்தமிழ்
இப்படித்தான் இந்தியா ஒளிர்கிறது,
 வேதனையுடனும் எரிச்சலுடனும்
பகலவன்

 

பட்ஜெட் எதிரொலி:கேடிகளின் சொத்து மதிப்பு உயர்வு!

பட்ஜெட் காரணமாக, கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பானி சகோதரர்களில் மூத்தவரான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 209 கோடியாக இருந்தது.

நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அவர் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 633 கோடியாக உயர்ந்தது. ஒரே நாளில், அதுவும் சில நிமிடங்களுக்குள் அவரது சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரத்து 424 கோடி அதிகரித்துள்ளது.

அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 73,417 கோடியில் இருந்து ரூ. 75,134 கோடியாக உயர்ந்துள்ளது. அவருக்கு ஒரே நாளில் ரூ. 1,987 கோடி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

தொழில் அதிபர் பிர்லாவுக்கு பட்ஜெட் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பு அவரது சொத்து மதிப்பு ரூ. 35,581 கோடியாக இருந்தது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவரது சொத்து மதிப்பு ரூ.36,666 கோடியாக உயர்ந்துள்ளது.

விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜிக்கு ரூ. 946 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டலுக்கு 535 கோடி ரூபாய் சொத்து அதிகரித்துள்ளது.

டாடா தொழில் குழுமத்துக்கு ரூ. 87 கோடி சொத்து அதிகரித்துள்ளது. சிலருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்போசிஸ் நாராயண மூர்த்திக்கு ரூ. 40 கோடி சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

இது பெருந்தொழிலதிபர்களுக்கு இந்த பட்ஜெட்டால் கிடைத்த உடனடிப் பலன். பொதுமக்களுக்கு கிடைத்த உடனடி பலன் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான்! 

 வாசகர் கருத்து

Muhammad Ismail H PHD
பதிவு செய்தது: 27 Feb 2010 5:51 pm
நமது தாய் நாடு 'சில கோடி'ஸ்வரர்களும், 'பல கோடி' ஏழைகளும் வாழும் தேசமாக மாறிவருகிறது. இது சமுதாயத்தில் கடுமையான முறுகல் நிலையைத்தான் தோற்றுவிக்கும். இது நன்மைக்கான நிகழ்வல்ல. அனைத்து வேதப்புத்தகங்களிலும் 'பிறப்பின் போது யாரும் இப்பூமிக்கு எதையும் கொண்டு வருவதில்லை, அதே போல் இறப்பின் போது எதையும் எடுத்துச்சொல்வதில்லை' என்ற விஷயத்தை பல முறை, பலவிதமாக விளக்கினாலும் இதைப்புரிந்து நடப்போர் மிகக்குறைவான நபர்களே !!!
குறி சொல்லும் கோடங்கி
பதிவு செய்தது: 27 Feb 2010 4:30 pm
காங்கிரசுக்கு ஓட்டு போட்டோம்ல நமக்கு தேவைதான் இந்த கூடுதல் சுமை . ஏற்கனவே விலைவாசி விண்ணை தூட்டுகொன்ன்டு இருக்கும் நேரத்தில் மதிய அரசிடம் இருந்து சபாஷ் சரியான பரிசு .
tamizachi
பதிவு செய்தது: 27 Feb 2010 3:05 pm
பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகி கொண்டே இருகிறார்கள்,ஏழை ஏழை ஆகி கொண்டே இருக்கிறான். இது தான் இந்தியா????
நண்பன்
பதிவு செய்தது: 27 Feb 2010 3:03 pm
இதில் என்ன ஆச்சர்யம்?அம்பானிகள் [பணகாரரர்கள்]தான் நம் நாட்டை ரொம்ப காலமாக ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.
 
  நன்றி
தட்ஸ்தமிழ்
இப்படித்தான் இந்தியா ஒளிர்கிறது,
 வேதனையுடனும் எரிச்சலுடனும்
பகலவன்




இந்திய நிதிநிலை அறிக்கை 2010 - கேள்வி கேக்காதே வாயை பொத்து



என்ன தான் பட்ஜெட் போட்டாலும் ஏழை மக்களோட வயத்துல அடிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.கொள்ளை அடிக்கும் பணக்காரனுக்கு வரி சலுகை பணக்காரர்கள் அப்படியே தான் இருக்காங்க. இதுல கூச்ச படாம இதை பட்ஜெட்னு வெளியில் வேறே சொல்லிட்டு திரிகிறார்கள்.

இப்படி ஐந்து லட்சம் எட்டு லட்சம் வாங்குறவன் எல்லாம் இருபது முப்பது சதவிகதம் என்று வரி கட்டனும். கோடியில் கொள்ளை அடிக்கறவன் எல்லாத்தையும் அமுக்கிட்டு போயிடுவான். நாங்க கட்டுற வரிக்கு ஒழுங்கான குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, போக்குவரத்து வசதிகள் எங்களுக்கு செய்து தரப்படுகிறா என்றால், இல்லை. இன்னும் அதே பிரிட்டிஷ் காலத்து பாலங்கள், ரயில்கள், அரசு கட்டிடங்கள் தான் இருக்கின்றது. இவ்வளவு பட்ஜெட் போட்டு பாமர ஜனங்கள் எதனை கண்டார்கள்.

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் விலையை அரசு குறைக்கும் போது மட்டும் அதே விலையில் பெட்ரோலை விற்பார்கள்.கேட்டால் உத்தரவு இன்னும் வரலன்னு சொல்லுவார்கள் .அதே அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் என்றால் அடுத்த நொடியில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பேங்க்ல் சர்ரென்று விலை உயரும்,அப்பொழுது மட்டும் எப்படி உத்தரவு வருது.

விலைவாசி உயர்வை பார்க்கும் போது காங்கரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது.வெகுஜன மற்றும் தேசவிரோதச் செயல்களைப் புரிவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் அழுத்தம், திருத்தமாக நிரூபித்துள்ளது.

விலைவாசியை குறைப்பதற்கு வழி காண்பதற்கு பதில், அது மேலும் உயர்வதற்கான அனைத்து வழிவகைகளையும் இந்த நிதி-நிலை அறிக்கை செய்துள்ளது. எரிபொருளுக்கு அதிக வரி, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை மறுப்பு என்று மக்களை மரணவாயிலுக்கே அழைத்துச் சென்றுவிட்டது காங்கிரஸ் பட்ஜெட். இந்த விளங்காத பட்ஜெட்டுக்கு, இனிமுதல் காங்கிரஸ் அறிவுஜீவிகள் விளக்கம் தரத் தொடங்குவதே பாக்கி.

அத்திவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.
பிரதமர் இது பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பாமர மக்களை பற்றி சிந்திக்கவேண்டும். பதுக்கல்காரர்களை தண்டிக்கவேண்டும் உணவு தானியம் போதுமான அளவுக்கு இருந்தும் விலைவாசி உயர்வுக்கு காரணமான பதுக்கலையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் ஒழிக்கவேண்டும்

பணக்காரங்க கிட்ட உங்க பருப்பு ஒன்னும் வேவாது. கருப்பு பணம் வெச்சி இருக்குறவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டவேண்டியதுதானே. எதுக்கு மிடில் கிளாஸ் கிட்ட உங்க வீரத்த காட்றீங்க.

சுவிஸ் பாங்கில் கருப்பு பணம் போட்டவன் எல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள். இந்த பண முதலைகளுக்கு ஆப்பு வைக்க உங்க பட்ஜெட்டில் ஏதாவது வழி வகை உண்டா? யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏழையை காப்பாத்த மாட்டாங்க. இது சத்தியம்.

புத்திசாலிதனம் என்று நினைத்து ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி அழகு பார்க்கிறார் தமிழகத்தின் பாச தலைவர்.விவசாயம் பார்க்க வேலை ஆள் கிடைக்கவில்லை, இதை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு விவசாயத்திற்கு என்று ஒரு மண்ணையும் அறிவிக்கவில்லை.தமிழகத்தில் விவசாயம் குறைய யார் காரணம்?

யாரும் ஒரு ரூபா அரிசி பயன் படுத்துறது இல்ல என்பது நிச்சயம் ஆனால் ரோட்டோர கடைகள் மற்றும் ஓட்டல்கலில் பயன்படுத்தி முப்பது நாற்பது ரூபாய் மக்களிடம் வசூலிக்கிறார்கள்.

நெசவுத்தொழிலை ஒரு காலத்தில் வீட்டில் இருந்தே வெற்றிகரமாக செய்து வந்த கூட்டுறவு சிறு முதலாளிகளாக இருந்த உழைப்பாளிகளை கஞ்சி தொட்டிக்கு கையேந்த விட்டு இன்று அவர்களின் சுய நெசவுத் தொழில்களை முடக்கி பெரு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு கூலி ஆட்களாக செல்லுமாறு மாற்றிய பெருமை இவர்களின் பட்ஜெட்டையே சேரும்


என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் பத்து ஆண்டுகளில் விவசாயம் என்பது கனவில் தான் நடக்க போகிறது.விவசாயம் என்றிருந்த நாட்டை சரியான வழி நடத்துதல் இல்லாமல் நாம் நமது உணவுக்காக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.இன்னொரு பசுமை புரட்சியை ஏன் இன்னும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியவில்லை.நதி நீர் இணைப்பை செயல்படுத்த ஏன் இன்னும் இந்த புண்ணியவான்களுக்கு புத்தி வரவில்லை.தமிழகத்துக்கு பாலாற்றையும் முல்லைப்பெரியாறையும் முறையாக பெற்று தந்தாலே பல மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். சோனியா மோசடி கும்பல் நமக்கு பட்டை நாமம் போடாமல் விட மாட்டார்கள்.


மறுபடியும் விலைவாசி அதிகரிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.ஒன்று மட்டும் உண்மை நீங்கள் கூட்டம் கூட்டி நாட்டுக்கு என்ற பெயரில் உங்கள் குடும்பத்துக்காக போடும் பட்ஜெட்டினால் நாட்டில் கோடான கோடி குடும்பங்களின் பட்ஜெட் அடகு கடை நோக்கியே பயணிக்கிறது.


பகலவன்





அரசியல் மேடை


லே சுவருமுட்டி.இந்த சித்தன் எங்க போய் தொலைஞ்சார்னு தெரியலப்பா. அடிக்கடி 'அலப்பரை கூட்டத்தை கூட்டி' நாட்டுக்கு நல்லதை கெட்டதை சொல்லலாம்னு பார்த்தா மனுஷன் கண்ணில் தென்படமாட்டேன் என்கிறார் என்று வருத்தப்பட்டுகொண்டார் ஆட்டோ அன்வர்.
 
நீ கவலைப்படாதப்பு. எங்கயிருந்தாலும் நான் தூக்கிட்டு வந்துடறேன். நீ மெரீனா பீச்சுக்கு வந்துடு. அங்கன வச்சு சித்தனை நல்லா கவனிப்போம் என்று செல்போன் இணைப்பை துண்டித்தார் கோட்டை கோபாலு. சொன்னபடி அடுத்த ஒரு மணி நேரத்தில் மெரீனா கடற்கரை... சித்தனை கைது செய்து இழுத்து வருவதைப் போல் கொண்டு வந்தார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதால் சித்தன் என்னவோ நொடிந்து போய் காணப்பட்டார்.
 
அலப்பரை கூட்டத்தை கூட்டுற பொறுப்பு நம்ப எல்லோருக்குமே இருக்கு. ஏதோ நான் மட்டும் குத்தவாளின்னு 'பிரச்சாரம்' செய்யாதீங்கப்பு... சரி விஷயத்துக்கு வாங்க...-சித்தன்.
 
சரி. நாட்டு நடப்புக்கு வருவோம். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உறவு எந்தளவில் இருக்குப்பா. நாட்டுல என்ணெண்ணவோ பேசிக்குறாங்க- கோபாலு
 
அப்படி போடு, ஆரம்பமே தூக்கலாதான் இருக்கு. அது பத்தின முழு தகவல் நம்பகிட்ட இருக்கு. நான் சொல்றன் கேளுங்க என்ற சுவருமுட்டி ''அது என்னமோ தெரியல சமீபமா நடக்குற சம்பவத்தை பார்த்தா அவிங்களுக்குள்ள ஏதோ முட்டல் மோதல் இருந்துகிட்டுதான் இருக்கு போல. கொஞ்சநாளா காங்கிரஸ் தரப்புல இருந்து சவுண்ட் வித்தயாசமா வருது. வழக்கமா பூனைக் குட்டிதான் மியாவ் சவுண்ட் கொடுக்குதுண்ணு தி.மு.க ஆளுங்க நினைச்சிருக்காங்க. பிறகு நல்லா கவனிச்சாதான் அது சிங்கம் கர்ஜனையா தெரியுது. தமிழ்நாட்டுல இருக்கிற காங்கிரஸ்காரங்க யாரும் திமுக-வுக்கு எதிரா போராடுறதே இல்ல. அப்படி என்ன பத்திரம் எழுதி கொடுத்திருக்கோம். அவிங்க நம்ப சென்ட்ரல்ல பங்கு வாங்கிட்டு அப்பப்போ எதிர்த்து பேசிகிட்டிருக்காங்க.ஆனா நாம மக்கள் பிரச்சனைக்குகூட ஏதும் குரல் கொடுக்கிறதே இல்ல. துணிவு இல்லயா நமக்கு. இப்படியே விட்டா அவிங்க செய்யுற தப்புக்கு நாமும் துணை போவதா ஆயிடும்''னு ஒரு கூட்டத்துல கார்த்தி சிதம்பரம் பேசுறாரு.
 
அதுக்கு ஒருபடி மேல போய் பேசுன இளங்கோவன் ''கூட்டணி வச்சுகிட்டாவே நாம் முழு நேரமும் புகழ்பாடிகிட்டுதான் இருக்கணுமா. ஆட்சியோட குத்தம் குறைய எடுத்து சொல்லகூடதா. நாம என்ன வைரமுத்துவா. அவருக்கு எதிரா எப்பவும் கவிதையால வாழ்த்து பாடுறதுக்கு''ன்னு போட்டு தாக்குறாரு. அது மட்டுமல்ல. நிலமை இப்படியே இருக்காது. மாறும். இது ஆரம்பம்தான். போகப்போக பாருங்கன்னு பொடி வச்சு பேசுறாரு. அதுக்கேத்த மாதிரி ஒரு சம்பவம் நடக்குது. மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகனும், மாநில அமைச்சர் துரைமுருகனும் சேர்ந்து ஒரு பெரிய விழா நடத்தினாங்க. அரண்மனை மாதிரி பிரமாண்ட செட் போட்டிருந்தாங்க. ரஜினி, கமல் உட்பட பெரிய வி.ஜ.பி. எல்லாம் ஆஜராகியிருந்தாங்க. இவ்வளவு பெரிய விழாவுக்கு ஒரு காங்கிரஸ் பிரமுகர்கூட கலந்துகொள்ளவில்லை. இவிங்களும் முயற்சி செய்து பார்த்திருக்காங்க. ஏதேதோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆகியிருக்காங்க. என்னடா இது, கூப்பிடாமலே கலைஞர் விழாவுக்கு வந்து உட்கார்ந்திடுவாங்களே இந்த காங்கிரஸ் ஆளுங்க. இப்ப ஒருத்தர்கூட வரலியேன்னு யோசிச்சிருக்காங்க. பிறகுதான் தெரியுது. 'பழக்க தோஷத்துல யாரும் அந்த பக்கம் போயிடக்கூடாது. அப்படி போனால் உங்க கட்சி பதவி காலியாயிடும். ஜாக்கிரதைன்னு' டெல்லி மேலிடம் ரொம்ப கராறா சொல்லியிருக்காம்.
 
இன்னொரு சேதி. இதுக்கு முன்னாடி, டெல்லியில் இருக்கிற பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டுல இருந்து யாரும் போய் சந்திச்சுட முடியாது. திமுக சிக்னல் கொடுத்தாதான் சந்திக்க முடியும். அப்படி பல விஷயம் நடந்திருக்கிறது. எதிர் கட்சி உட்பட எத்தனையோ பிரமுகர்கள் அப்படி முயற்சி எடுத்து தோற்றுபோய் இருக்காங்க. அதுவும் இப்போ தலைகீழா நடந்திருக்கு. கரும்பு விவசாயிகள் கோரிக்கை சம்பந்தமா அதிமுக எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமரை, அதுவும் அவரது வீட்டுல போய் சந்திச்சு அரை மணி நேரம் பேசியிருக்காங்க.இப்படி நடக்குமான்னு திமுக. நினைச்சே பார்க்க முடியாம இருக்கு. எந்த மாநிலத்திலிருந்தும் எந்த கோரிக்கையா இருந்தாலும் மத்தியில இருக்கிற சம்பந்தப்பட்ட அமைச்சரை பார்க்கறதுதான் வாடிக்கை. தெலுங்கானா பிரச்சனை மாதிரி ஏதாவது ரொம்ப சென்சிட்டிவான பிரச்சனை என்றால்தான் பிரதமரை சந்திக்க முடியும். ஆனா வழக்கத்திற்கு மாறாக பிரதமரை நேரில் சந்திச்சிருக்கு அதிமுக தரப்பு. அதுவும் இந்த நேரம் சாதாரன நேரமல்ல. வர்ற 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்க. அதுக்க பட்ஜட் தாக்கல் வேலை படு பிஸியாக இருக்கும். இடையில பூனேவில் பெரிய குண்டு வெடிப்பு.இன்னும் பெரிய குடைச்சலா மேற்கு வங்களாத்தில் மாவோயிட்டுகள், வேற அதிரடி தாக்குதல் நடத்தி காங்கிரஸ் தலைய பிடிச்சு உலுக்கிகிட்டு இருக்காங்க...
அய்யோ... நம்ப பிரதமர் பாவம்யா.. அவரு கதைய கேட்குறப்போவே தலைசுத்தலா இருக்கு. இம்புட்டுக்கும் மத்தியில மனுஷன் எப்படி தெம்பா நிக்றாருன்னே தெரியல.. - சிரித்தார் அன்வர்பாய்.
 
''இன்னும் கேளுப்பா. அவசரப்படாதே. இம்புட்டு வேலைக்கும் மத்தியில வர்ற 25-ம் தேதி பாகிஸ்தான் கூட பேச்சுவார்த்தை. அதுக்கான ஏற்பாடு ஒரு பக்கம். அந்தான்ட சீனா வந்து அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடிகிட்டு 'எப்போவெனாலும் உள்ளே நுழைஞ்சிடுவோம்'னு வரிசை கட்டி நிக்குறாங்க. தலாய்லாமாவை நாம அடைக்கலம் கொடுத்து வச்சிகிட்டு இருக்கோம். அந்த மனுஷன் என்னாடான்னா அமெரிக்க அதிபர் ஒபாமாவை போய் சந்திக்கிறாரு. எல்லாத்துக்கும் காரணம் இந்தியாதான்னு சீனா சீறுது. இவ்வளவு திருகுவலி இருக்கிறப்போ ஒரு மாநிலத்துக்குள்ள இருக்கிற கரும்பு விவசாயிகள் கோரிக்கையை தீர்க்குறதுதான் பெரிய வேலையா. அதுக்குதான் அந்த துறை அமைச்சர் சரத்பவார் இருக்காரே. அவரை மட்டும் சந்திச்சு பேசினா போதாதா. எதுக்கு அதிமுக எம்.பி.களை முக்கியத்துவம் கொடுத்து சந்திக்கனும். நல்லா யோசிச்சு பாருங்க''... என்றபடியே சிரித்தார் சுவருமுட்டி..
 
அடப்பாவி, அம்புட்டுதானா.. இன்னும் பாதி மேட்டரு இருக்கு கேளுங்க. 'கரும்பு'ன்னு சொல்கிட்டு அதிமுக எம்.பி.ங்க போய் பிரதமரை பார்துட்டு ரொம்ப நேரம் பேசிட்டு வந்தாங்க இல்லையா. அதுக்க முன்னாடி நம்ப துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு போனாரு. அப்போ பிரதமரை தனியா சந்திக்க அனுமதி கேட்டிருக்காங்க. பிஸி, அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டாங்க. முதல்வர்கள் மாநாடு நடக்குறப்போ, மதியம் சாப்பாட்டு டைம்ல சும்மா பார்த்து பேசிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. மத்தபடி தனியா நேரத்தை ஒதுக்க முடியாதுன்னு கரார் காட்டியிருக்காங்க. வேற வழியில்லாம ஸ்டாலினும் சாப்பாட்டு நேரத்துல சும்மா சந்திச்சு போட்டோவை எடுத்துகிட்டு மானத்தை காப்பாத்திகிட்டாரு. காங்கிரஸ் ஏன் இப்படி செய்யுதுன்னு தெரியல. அப்படியே இன்னொரு சேதி. விவசாயிகளுக்கான உரம் விலைய ஏத்தகூடாதுன்னு அந்த துறையோட மந்திரி மு.க.அழகிரி மத்திய அரசுக்கு கோரிக்கைய வச்சாரு. அப்படி மீறி ஏத்தினா விவசாயிகள் கொந்தளிச்சுடுவாங்கன்னு பேட்டியெல்லாம் கொடுத்தாரு. அதுக்கேற்ப உடனே முதல்வர் கலைஞரும் பிரதமருக்கு 'உரம் விலைய எத்திடாதீங்க, விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்'னு கடிதம் எழுதினாரு. இம்புட்டுக்கும் பிறகும் அந்த கமிட்டி கூட்டம் கூடியது. துறை அமைச்சர் என்கிற வகையில் அழகிரியும் தன் முடிவை சொன்னாரு. அதாவது விலையேத்தம் ஏதும் செய்தடாதீங்கன்னு. ஒரு கூட்டணி கட்சி அமைச்சர் சொல்றாரு. பரிசீலிப்போம்னு கூட சொல்லலை. எல்லாவற்றையும் மீறி 'விலையை ஏத்திதான் ஆகனும். தவிர்க்க முடியாது. வேற வழியில்லைன்னு' தெளிவா சொல்லியிருக்காங்க. அழகிரிக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது. இப்படி நடந்த எல்லாத்தையும் கூட்டி கழிச்சுபாரு. கணக்கு சரியா வருதா, இல்லையான்னு தெரியும்... என்று முடித்தார் சித்தன்.
 
இம்புட்டு விஷயம் நடந்திருக்கு. ஆனாலும் எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. நல்லாதான் இருக்கோம்னு அப்பப்ப நம்ப தங்கபாலுவை விட்டு சும்மா ஒரு அறிக்கை வேற கொடுக்க வைக்கிறாங்கப்பு. என்னத்த சொல்றது. சரி நம்ப அண்ணன் தம்பி சேதி எப்படி போயிட்டிருக்கு. ஒன்னுக்குள்ள ஒன்னாதான் இருக்காங்களா. இல்ல முட்டிகிட்டுதான் இருக்காங்களா- சுவருமுட்டி..
 
என்னாத்த சொல்றது. மேலுக்கா பார்த்தா ஒன்னுமில்லங்கிற மாதிரிதான் தெரியும். ஆனா உள்ளுக்குள்ள பிராண்டிகிட்டுதான் இருக்காங்களாம். சமீபத்துல தென் மாவட்டத்துல மூணு பெரிய நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டம்ன்னாலே அழகிரி இல்லாம நடக்குமா. ஆனா நடந்திருக்கு. அந்த விழா அழைப்பிதழில் அண்ணன் பேரு இல்ல. இல்லாமலே போய் சின்னவரு கொடியேத்தி தன் செல்வாக்கை நிலைநாட்டிட்டு வந்திருக்காரு தளபதி. கொதிச்சுபோன அண்ணன் அந்த மாவட்ட கலெக்டரை அழைச்சு 'என்னய்யா நடக்குதிங்க'ன்னு கோபப்பட்டிருக்காரு. பதறிபோன கலெக்டர் 'அய்யா சாமி. எங்க மேல தப்பு இல்ல. அழைப்பிதழில் உங்க பேரை பெரிசா முன்னுரிமை கொடுத்துதான் மேலிடத்து ஒப்புதலுக்கு அனுப்பினோம். ஆனா அங்கிருந்து வர்ரப்போ உங்க பேரை நீக்கிட்டாங்க' அப்டீன்னு சொல்லியிருக்காங்க. யாருய்யா அந்த மேலிடம்னு கேட்டா, துணை முதல்வர் அலுவலகம்னு சொல்லியிருக்காங்க... பிறகு பார்க்கனுமே அண்ணனின் கோபத்தை. அப்படியே கோபாலபுறத்திற்கு போன் போட்டு அம்மாகிட்ட கொதிச்சு போயிருக்காரு. முடிவுதான் என்னன்னு தெரியல. அதுமட்டமில்ல. டெல்லியில தனக்கு செல்வாக்கு ஒன்னுமில்லன்னு அழகிரி நினைக்கிறாரு. ஏதாவது பேசனும்னா இந்தி, இல்ல இங்லீஸ்தான் பேசியாகனும். அதுக்கு துணையா தயாநிதி தயவை நாட வேண்டியிருக்கு. உரம் விலையேத்த கமிட்டியிலகூட தயாநிதிதான், அழகிரி சொன்னத ஆங்கலத்தில் எடுத்து சொல்லியிருக்காரு. அந்த போக்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும்னு தெரியலன்னு அம்மாகிட்ட ரொம்பவே வருத்தப்பட்டாரு என்று கூடவே ஆதங்கப்பட்டார் கோட்டை - கோபாலு.
 
யோவ்.. அதெல்லாம் பழைய விஷயமில்ல. இப்போ என்ன புது சேதி.- சித்தன்.
 
அது பழைய விஷயம்தான். ஆனா முடிந்தபாடில்லை. அந்த புலம்பல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அதனால நான் தமிழ்நாடு அரசியலுக்கு வந்துடறேன். கட்சி பதவிய கொடுத்துட சொல்லுங்கன்னு பிராண்டுறாரு. அதுக்கு தலைவரு எந்த முடிவையும் சொல்லலை. தம்வி முதல்வரு. அண்ணன் கட்சிக்கு தலைவரான்னு எராவது நினைச்சுடகூடாதேன்னு யோசிக்கிறாரோ என்னவோ- அன்வர்பாய்.
 
''யோவ் ரொம்ப நல்லாயிருக்கே நீ சொல்றது. இப்படி 'யாராவது எதுனா நினைப்பாங்களான்னு கலைஞர் நினைச்சிருந்தா, அவர் கட்சி பதவியை பிடிச்சிருக்க முடியாது. முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. தொடர்ந்து மகளை எம்.பியா ஆக்கியிருக்க முடியாது. ஒரு பேரனையும் எம்.பி யா ஆக்கியிருக்க முடியாது. எல்லாத்துக்ஙகும் மேல ஸ்டாலினை துணை முதல்வரா ஆக்கியிருக்க முடியாதுல்ல. அரசியல்ல அந்த மாதிரியெல்லாம். பார்க்க முடியாதப்பு. அவர் யோசிக்கிறதே வேற. இப்போ அவரசப்பட்டு ஏதானாச்சும் செய்தா... நாம காங்கிர கட்சிக்குள்ளவே சில 'கையாளுங்கள' வச்சி பாலிட்டிக்ஸ் செய்துகிட்டிருக்கிற மாதிரி டெல்லி மேலிடமும் தன்னோட கட்சிக்குள்ள 'யாரையாச்சும்' 'கை' யாளா வச்சிருக்குமோ. அவிங்க மூலமா ஏதுனாச்சும் கலகம் செய்யுமோ. அதிமுக ஜெ அணி, ஜா அணின்னு பிரிஞ்சிருந்த மாதிரி தன்னோட கம்பெனிக்கும், சாரி தன்னோட கட்சிக்கும் ஏதாவது சிக்கல் வருமோன்னு எல்லாம் யோசிக்கிறாரு. இப்படி நாலா பக்கமும் பார்த்துதான் எதையும் செய்யனும்னு நினைக்கிறாரு. அதனாலதான் நான் ஓய்வு பெருவேன். ஆனால் ஓய்வு பெற மாட்டேன்னு சொல்றாரு. அதாவது எதை எப்ப செய்யனுமோ அப்ப அதை செய்வோம்னு இருக்காரு'' என்று போட்டு உடைத்தார் கோட்டை கோபாலு,
 
ஏம்பா இப்படியே சுத்தி சுத்தி திமுக-வையே பேசிகிட்டிருந்தா எப்படி. எங்க தலைவருன்னா இலக்காரமா. என் அந்தம்மா இருக்கே. அதைப்பற்றி பேசக்கூடாதா- கோபித்துகொண்டார் அன்வர்பாய்.
 
''இதோ பாருடா. இவரு கட்சிக்காரறாமில்ல என்று சிரித்த சுவருமுட்டி 'கோபப்பட்டுக்காதப்பு' அந்தம்மா விஷயமும் இருக்கு. அவசரப்படாம கேளு '' அதிமுக-வில் இருக்கிறவங்கெல்லாம் நாளைக்கு நம்பலை கட்சிய விட்டு நீக்கியிருப்பாங்களான்னுதான் படுக்கவே போறான். அப்படி ஆயிடுச்சு நிலமை. உட்கட்சி தேர்தல்னு நடத்தி பாதி ஆளங்களை காலி பன்னிடுச்சு. இதுல பழைய ஆளங்க பாதி பேர் நொந்துபோய் ஒதுங்கிட்டாங்க. இருக்கிற சட்டமன்ற உறப்பினர்களையும் கொஞ்சம் கொஞ்சமா திமுக. இழுத்துகிட்டு இருக்கு. எற்கனவே 'காமிடி' பீஸ் எஸ்.வி. சேகரை மனசு நோகடிச்சு அனுப்பி வைச்சுட்டாங்க. அப்புறம் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சிமாறிப்போய், திமுக சார்பா நின்று ஜெயிச்சும் போயிட்டாரு.இப்போ பார்த்தா புதுசா ரெண்டு எம்.எல்.ஏக்களை இழுத்திருக்காங்க. அது போதாதுன்னு மேலும் ஒரு இருபது அதிமுக சட்டமன்ற உறுப்பினர இழுக்க இருக்காங்க. இப்படி இழுத்து அவிங்க எல்ரோரையும் திமுக பக்கம் கொண்டு வந்திடாம, அந்த கட்சியிலேயே இருக்க வச்சுடறது. மூன்றில் ஒரு பங்கு அந்த கட்சியில இருந்து இப்படி அதிர்ப்தியாளரா பிரிந்தா அந்த கட்சிக்கு அங்கீகாரம் இருக்காது. அதுக்குதான் திட்டம் போட்டு காய் நகர்த்துறாரு கலைஞர். இந்த அம்மா அதை புரிஞ்சுக்காம இன்னும் மாறாம, பழையபடியே இருக்காங்க. அந்தபக்கம் கொடைக்காணல் ஓய்வு போய் பங்களாவில் இருந்துடறாங்க. இந்தப்பக்கம் வந்தா கார்டன் பங்களா இல்லாட்டி சிறுதாவூர் பங்களான்னு இருந்துடறாங்கன். கட்சிக்காரனை பார்ப்போம். அவன் கஷ்ட நஷ்டத்தை கேட்போம். அரவனைச்சு பிடிப்போம்னு கனவுலகூட நினைக்க மாட்டேன் என்கிறாங்க. இப்படியே போனா இரட்டை இல்லை இருக்காது. ஒத்த இலைதான்னு ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புது'' என்றார் சித்தன்.
 
அதாவது அடுத்த பத்து பதினைந்து வருஷத்துக்கு திமுக-வை கவலைப்படாம நாற்காலியில் வைச்சிருக்கிற திட்டத்தை அந்தம்மா போட்டுகிட்டிருக்குன்னு சொல்லு, என்று சுவருமுட்டி சிரித்த 'அம்புட்டுதானப்பு.. மீதிய அடுத்த வாரம் பேசிக்கிடலாம். நான் டாஸ்மாக் மதுபாணக் கடைக்கு போகாட்டி நம்ப முதல்வர் 'அவரோட நலதிட்டத்தை புறக்கணிச்சுட்டதா நினைப்பாரு' என்றபடியே எழுந்து நடந்தார்... சபை களைந்தது.
 
ஒட்டுக்கேட்டது
 
 
 
 

பத்தினி சாபத்தால் பரிதவிக்கும் கிராமம் ?

மனைவக்கு கணவன் இல்லை...
கணவருக்கு மனைவி இல்லை!
பத்தினி சாபத்தால் பரிதவிக்கும் கிராமம்



பத்தினி சாபம் பற்றி பல கதைகள் படித்திருக்கிறோம். ஆனால்... அப்படி ஒரு பத்தினியின் சாபத்தை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது(!) ஒரு கிராமம். ஆமாம்... விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அருகே இருக்கிறது அக்கராபாளையம். இந்த கிராமத்தினரின் தொழில் விவசாயம், பிறகு பயப்படுதல், இந்த இரண்டும்தான். மலை சூழ்ந்த ரம்மியமான இந்த அக்கராபாளையத்தை சூனியமும் சூழ்ந்திருப்பதாகவே நம்புகிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.

எல்லையில் இருந்த சாம்பரப்பன் கோயிலைத் தாண்டி ஊருக்குள் நாம் நடந்தபோது, அந்த சூனியம் அப்பட்டமாகத் தெரிந்தது. வீதிகளில் நடந்த எந்தப் பெண்ணும் பூ முடிந்திருக்கவில்லை, பொட்டு வைத்திருக்கவில்லை. பெரும்பாலான பெண்களின் கழுத்துக்கள் தாலி இல்லாமல் காலியாகவே இருந்தது. பெண்கள் இப்படி-யென்றால், ஆண்களோ எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி உலா வந்தார்கள்.

ஏன் இந்த ஊரில் இப்படி? அந்த வழியாக வந்த சண்முகத்-திடம் கேட்டோம்.

‘‘நம்பினா நம்புங்க. நம்பாட்டி போங்க. எங்க ஊர்ல எந்தக் குடும்பத்-துலயும் குடும்பத் தலைவனாக இருக்குற ஆணோ, குடும்பத் தலைவியான பெண்ணோ உசிரோட இருக்கறதில்லை. அதனாலதான் பல பொண்ணுங்க தாலியில்லாமயும், பல ஆளுங்க பொண்டாட்டி இல்லாமயும் திரியுறாங்க. என்னையே எடுத்துக்குங்களேன்... இதே ஊர்ல அலமேலுவை பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினேன். சிவரஞ்சனி, பிரியதர்ஷினின்னு ரெண்டு குழந்தைங்களோட சந்தோஷமாத்தான் இருந்தோம். எனக்கும் என் பொஞ்சாதிக்கும் சின்ன உரசல் கூட வந்ததில்ல.

ஒருநாள் வயலுக்குப் போயிருந்த அலமேலுவை பாம்பு கடிச்சு அவ இறந்துட்டா. இது எப்படியும் நடக்கும்... முதல்ல சாகப்போறது நானா அவளான்னு பயந்துக்கிட்டிருந்தோம். அந்தப் பத்தினியோட சாபம் என் பொஞ்சாதியைக் கொண்டுபோயிடுச்சு. எங்க குடும்பத்துல இதுவரை ஏழு தலைமுறையா வீட்டுல குடும்பத் தலைவனோ, தலைவியோ அகாலத்துல இறந்துபோறது தொடர்ந்து நடக்குது. எங்க குடும்பம் மட்டுமில்ல, ஊர்ல எல்லா குடும்பத்துக்கும் இதான் கதி’’ என்றவர் மேற்கொண்டு நாம் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்று-விட்டார்.

பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கொடை-யனிடம் பேசினோம்.

‘‘எங்க அப்பாவும், அம்மாவும் நான் சின்ன-பிள்ளையா இருக்கும்போதே இறந்துட்டாங்க. என் கூடப் பிறந்த தம்பி கல்யாணமான ஒரு வருசத்துக்குள்ளயே செத்துப்போயிட்டான். பாவம் அவன் பொண்டாட்டி வீட்லேயே முடங்கிக் கிடக்குது. இந்த சாபக் கேடு எங்க ஊர்க்காரங்களோட முடியறதில்லைங்க. இந்த ஊர்ல பெண்ணெடுக்குற ஆம்பளைங்களும் சில மாசத்துல இறந்துடறாங்க’’ என்றவர்... ‘‘அது பெரிய சாபக் கதைங்க’’ என்றபடியே தொடர்ந்தார்.

‘‘எங்கள் ஊரில் தகடியான் தலைக்கட்டு, முகலான் தலைக்கட்டு, மண்ணுபாடியான் தலைக்கட்டு, தரைப் பாண்டியான் தலைக்கட்டு... இப்படி மொத்தம் நாலு கொத்து தலைக்கட்டு குடும்பங்கள் இருக்கோம். எங்க முன்னோர்கள்ல ஒருசிலரு மேளம் அடிக்கிற தொழில் செய்தவங்க. ஒரு நாள் கல்வராயன் மலைப் பக்கம் உள்ள அருந்ததி குடும்பத்துல ஒருத்தர் சாவுக்கு மேளம் அடிக்கப் போயிருக்காங்க. போனவங்கள்ல ஒருத்தருக்கு அங்க உள்ள அருந்ததி பொண்ணு ஒருத்தியோட பழக்கமாகியிருக்கு.

காலப்போக்குல ரெண்டுபேரும் வயக்காட்ல ஒதுங்க, அந்த அருந்ததிப் பொண்ணு மாச-மாயிடுச்சு. விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ் சதும் சாதிசனத்தோட எங்க ஊருக்கு வந்து நியாயம் கேட்டிருக்காங்க. ஆனா எங்க ஊர் நாட்டாமைகளோ, ‘எங்க பசங்க எந்தத் தப்பும் செய்யமாட்டாங்க. வேற யாருக்கிட்டயோ பழகிட்டு இங்க வந்து பிராது பண்றீங்களா?’ன்னு கேட்டு அடிச்சு விரட்டிட்டாங்களாம். இந்த அவமானம் தாங்காம அந்தப் பொண்ணோட அப்பா - அம்மா விஷத்தைக் குடிச்சுட்டு செத்துட்டாங்க. பாவம் அந்த புள்ளத்தாச்சிப் பொண்ணு புத்தி பேதலிச்சுப் போயி கல்வராயன் மலையில போய் ஒளிஞ்சுருக்கு.

அப்பவும் எங்க ஊர் பாவிக சும்மா விடலய்யா... அந்த ஆறு மாசப் புள்ளதாச்சிய தேடிக்கிட்டு கல்வராயன் மலைக்குப் போனாங்க. அங்க உள்ள பீசாகத்தி ஆத்தங்-கரையில நின்ன அவளைப் புடிச்சு அடிச்சிருக்காங்க. தாரைத் தாரையா அழுத அந்த அருந்ததிப் பொண்ணு... ‘உங்க ஊர்க் காரனுக்குத்தான் நான் முந்திவிரிச்சேன். என் பாவம் உங்களை சும்மா விடாதுடா... உங்க பரம்பரைக்கே ஆண் அடிச்சுப் போகும், பெண் பொய்யாப் போகும்டா’னு சாபம் விட்டிருக்கு. இதைக் கேட்டு இன்னும் அதிகமா கோவப்பட்டு அந்த அருந்ததிப் பொண்ணை புள்ளதாச்சின்னும் பாக்காம கண்டம்துண்டமா வெட்டி ஆத்தங்கரையில புதைச்சிட்டாங்களாம். அந்த பத்தினி சாபம்தான்யா எங்களை இப்படித் துரத்துது...’’ என திகில் கதையைச் சொல்லி முடித்தார் கொடையன். மேற்கண்ட நான்கு கொத்தில் பிறந்தவர்கள்தான் ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், அழகுப்பிள்ளை, அயர்சிங்கம், கோவிந்தராஜலு ஆகியோர். இவர்களில் அதிக பாதிப்பு அழகுப்பிள்ளைக்குத்தானாம். அவரும் அவரது முதல் மனைவியும் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மனைவி பார்வதி நம்மிடம் பேசினார்.

‘‘எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இரண்டு ஆண் குழந்தைகள். சந்திராணி, கல்யாணி, நேர்பார்வதி ஆகிய மூன்று பேருக்கும் திருமணம் நடைபெற்றது. முதல் பெண்ணின் கணவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை செய்தார். அவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு திருமணம் நடைபெற்ற இரண்டு பெண்களது கணவர்களும் இறந்துவிட்டார்கள். இரண்டு மகன்கள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை’’ என்று அழுதபடியே கூறினார் பார்வதி.

வினோத விபரீதம் குறித்து அக்கராபளையத்தில் உள்ள சாம்பரப்பன் கோயில் பூசாரியான செல்லப்-பாண்டியனிடம் கேட்டோம். ‘‘எனது தந்தை இறந்ததற்கு பிறகு இந்தப் பணியை நான் செய்து வருகிறேன். மேற்கண்ட நான்கு கொத்தில் என் குடும்பக் கொத்தும் ஒன்று. எங்கள் ஊரிலிருந்து வெளியூர் சென்று வேலை செய்தாலும் எங்கள் ஊர் சாபம் சும்மா விடாது, எங்களுக்கு வாழ வழியில்லை, நிம்மதி இல்லை. எழவு மேளச் சத்தம் கேட்காத நாளே கிடையாது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக சாம்பரப்பன் சுவாமியின் பூர்வீகக் கோயிலான திருக்கோவிலூர் வட்டம் கீழத்தாழனூரில் உள்ள அய்யனாரப்பன் கோயில் சென்று பூஜை செய்யவேண்டும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது’’ என்று சொன்னார் பூசாரி.

நடப்பது எல்லாவற்றுக்கும் அந்த அருந்ததி பெண்ணின் சாபம்--தான் காரணமோ இல்லையோ... பெண் பாவத்தின் விளைவை மர்மத்தோடு பறைசாற்றுகிறது திகில் படிந்து கிடக்கும் அக்கராப்பாளையம்!

எஸ்.செல்வராஜ்




மலிவான விளம்பரம் தேடும் அற்ப மனிதர்கள்!

  கடந்த இரு தினங்களாக திரையுலகிலும் அதற்கு வெளியிலும் நிகழும் சில சம்பவங்கள், விளம்பரத்துக்காக எந்த அளவுக்கென்றாலும் கீழிறங்கிப் போக சிலர் தயங்குவதில்லை என்பதையே காட்டுகிறது.
முதல்வர் கருணாநிதிக்கு சினிமாக்காரர்கள் எடுத்த பாராட்டு விழாவில் அஜீத் யதார்த்தமாகப் பேசியதையும் அதற்கு ரஜினி இயல்பாக தெரிவித்த பாராட்டையும் முடிந்தவரை அரசியலாக்கப் பார்க்கின்றனர் விசி குகநாதன் போன்ற சில திரைத்துறைப் பிரமுகர்களும் ஜாகுவார் தங்கம் போன்ற சில்லறைகளும்.

இதற்கு தோதாக திரித்து எழுதுவதில் டாக்டரேட் வாங்கிய சிலர், இந்த திரிகொளுத்திகள் என்ன சொன்னாலும் அதை பெரிய செய்தியாக்கி தீமூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

புரட்சி தமிழ் இயக்குநர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு மனம் போன போக்கில் படங்கள் எடுத்து பின் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் விசி குகநாதன். ஃபெப்ஸி தலைவர் ஆன பிறகு இவர் திரையுலகின் சூப்பர் நாட்டாமையாக தன்னைக் காட்டிக் கொண்டு வருகிறார்.
பொது இடத்தில் என்ன பேச வேண்டும், ஒரு பெண் கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத இந்த மனிதர், இப்போது நடிகர்கள் – நடிகைகள் அனைவரும் தனக்குக் கீழ்படிந்து, தனது ஆணைக்கேற்ப நடக்க வேண்டும் என்று மேடைதோறும் சத்தம் போடுகிறார்.

நேற்றைய விழா ஒன்றில், ‘எப்பேர்பட்ட நடிகராக இருந்தாலும் நாங்கள் அழைத்தால் வந்தே தீர வேண்டும். ஒரு தலைவன் பேச்சைக் கேட்கும் தொண்டனைப் போல, நடிகர்கள் யாராக இருந்தாலும் எங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு வரவேண்டும் என்று கூறுவதை மிரட்டல் என்பதா?
அமைப்புக்கு கட்டுப்படாதவர்களை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். பணிவாக கேட்போம், பண்பாக கேட்போம், மிரட்டவும் செய்வோம். என்ன செய்வீங்க? பேச்சை மீறி நடக்கும் நடிகர் நடிகைகளை இருக்குமிடம் தெரியாமல் செய்யவும் எங்களுக்கு தெரியும்’ என்று ரஜினி மற்றும் அஜீத்தை கடுமையாக, ஆனால் மறைமுகமாக சாடியுள்ளார்.


ஆந்திராவில் போய் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டுவிட்டு, ஹீரோக்கள் மடியில் உட்கார்ந்து கூத்தடிக்கிறார்கள் தமிழ் நடிகைகள் என கமெண்டும் அடித்துள்ளார் இந்த வார குமுதத்தில் (இப்போது நடிகைகளின் கற்புக்கு பங்கம் எதுவும் நேரவில்லை போலிருக்கிறது!).
எந்த தைரியத்தில் இவர் இந்த அளவு சர்வாதிகாரம் காட்டுகிறார்? ஃபெப்ஸி என்பது ஒரு சாதாரண சினிமா சங்கம்தானே… மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அரசு அல்லவே! ஃபெப்ஸி தலைவருக்கு மட்டும் தனியாக கொம்பு ஏதும் முளைத்துவிட்டதோ! அடடா.. இந்த ஸோ கால்டு சினிமா சங்கங்கள் விடும் அறிக்கையும் போடும் ஆட்டமும் தாங்கமுடியவில்லை. எல்லாம் ஆட்சி மேலிடத்தின் பூரண அருளாசி தங்களுக்கு இருக்கிற தைரியம்!
இன்னொரு பக்கம் ஜாகுவார் தங்கம் போன்ற காலிப் பானைகள் சத்தம் பெரும் தொல்லையாகவே மாறிவிட்டது. அதுவும் நேற்று வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த நபர் போட்ட பேயாட்டம் தாங்க முடியவில்லை.
யார் இந்த நபர்..? ஒரு கவர்ச்சி நடிகையை கற்பழித்த புகாரில் சிக்கி உள்ளே இருந்து, பின்னர் அதற்கும் சாதிச் சங்கத்தை துணைக்கழைத்து, அது வேலைக்காகாமல் போனதால், அந்த நடிகையிடமே சமாதானம் வேண்டி நின்றவர்.

நியாயமாக இவர் இருக்க வேண்டிய இடம் புழல் சிறைச்சாலை. சம்பந்தமே இல்லாமல், அதுவும் தவறு முழுக்க இவர் பக்கமே உள்ள நிலையில், தன் சொந்த விஷயத்தை சாதிப் பிரச்சினையாக்கப் பார்க்கிறார்.
அஜீத்தை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தவர் இந்த நபர்தான். வெற்றுப் பரபரப்புக்காக ஒரு பத்திரிகையில் அஜீத்தை மகா கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியவர் இந்த தங்கம்தான். ஆனால் இதை அஜீத்தும் சரி அஜீத் ரசிகர்களும் சரி… கண்டு கொள்ளவே இல்லை. ஒரு சின்ன முணுமுணுப்பு கூட அஜீத் தரப்பிலிருந்து வராமல் போகவே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரிந்தவர், திடீரென்று தன் கார் உடைக்கப்பட்டதாக போட்டோவுடன் போஸ் கொடுத்தார்.
பின்னர், அஜீத்தும் அவர் மேனேஜரும் இவர் வீட்டுக்கு அடியாட்களுடன் வந்து கார் மீது கல்லெறிந்து சேதப்படுத்தியதாக இவர் கொடுத்த புகாரைப் பார்த்து ‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் வரும் போலீஸைப் போலவே விழித்துள்ளார் சென்னை கமிஷனர் (அந்தப் படத்தில் அஜீத் தன் மனைவியை வைத்துக் கொண்டிருப்பதாக புகார் தருவார் மனநோயாளியான கருணாஸ்!).
 
பின்னர் விசாரித்ததில் அஜீத்துக்கும் இந்த கார் உடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்ததாம். ஆனாலும் தொல்லை விட்டால்தானே… மேலிடம், அதன் கிச்சன் காபினெட் என எங்கெங்கிருந்தோ வந்த அழுத்தம் காரணமாக அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் போட்டுள்ளனர் போலீசார்.
இதுகுறித்து அஜீத்தின் மேனேஜரிடம் கேட்டால், “என்ன கொடுமை சார் இது!” என்று நொந்து கொண்டார்.

இதிலும் போதிய பப்ளிசிட்டி கிடைக்கவில்லை அந்த பித்தளைக்கு… சரி, இன்னொரு கல்லையும் விட்டுப் பார்ப்போம் என்று ரஜினியை சீண்ட முனைந்திருக்கிறார். ரஜினி குறித்து அந்த நபர் தெரிவித்த கருத்து ரசிகர்களை கொந்தளிக்க வைக்கக் கூடியது.. ஒரு பைத்தியக்காரனின் பிதற்றலுக்கு நிகரானதும் கூட. அது தெரிந்தும் வேண்டுமென்றே அதைக் கட்டம் கட்டி செய்தியாக்கியுள்ளது அவருக்கு வேண்டப்பட்ட அந்த பத்திரிகை.
ஆனாலும், ஒரு சின்னக்கல்லை சாக்கடையில் விட்டெறிந்தாலும் சாக்கடை நம்மீதுதான் தெறித்து விழும் என்பது புரிந்து ரசிகர்கள் அமைதி காக்கிறார்கள். அப்படியும் இந்த நபர் அடங்குவதாக இல்லை. தன் வீட்டை ரஜினி ரசிகர்கள் அடித்து உடைத்துவிட்டதாக செய்தி பரப்பி வருகிறார் (கடந்த இரு தினங்களாக கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இந்த நபரின் வீட்டுக்கு. அதை மீறி எந்த ரசிகர் வந்திருப்பார்? விட்டால் சட்டையைக் கிழித்துக் கொண்டு அடுத்தவர் மேல் புகாரும் தருவாரோ!).

இதற்கு சாதிச் சாயத்தையும் பூசியுள்ளார். ஆனால் இதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். சமூக அமைதியைக் கெடுக்க பகிரங்கமாக வேலை பார்க்கும் ஜாகுவார்களை தூக்கி சிறையில் வைக்காமல், தங்கமே என கொஞ்சி மகிழுகின்றனர் தரங்கெட்ட அரசியல் தலைவர்களும் சினிமா கட்டைப் பஞ்சாயத்து பார்ட்டிகளும்.

நியாயத்தை எழுத வேண்டிய பத்திரிகைக்காரர்களோ, அவரது சாதி மற்றும் அந்த சாதியின் தொப்புள் கொடி உறவாகத் திகழும் பெரும் பத்திரிகைகளை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஓடி ஓடி ஜாகுவார் தங்கத்தின் பிரஸ் மீட் கவரேஜில் பிஸியாகியுள்ளனர்.

போலீஸ் துறைக்குப் பொறுப்பான முதல்வரும் நடப்பதை சுவாரஸ்யமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதே உண்மை. ஒருவேளை அஜீத் சரியாக காலில் விழவில்லை என்று ஃபீல் பண்ணுகிறாரோ!
எந்த மாநிலத்திலும் இத்தனை கேவலமான முதல்வரையோ, ஒட்டுமொத்த சினிமா உலகமும் தன் காலடியிலேயே விழுந்து கிடக்க வேண்டும் என்ற மோசமான எண்ணம் கொண்ட அரசியல் தலைவரையோ நாம் பார்த்ததில்லை.
இப்போது நடப்பது, சுற்றியிருப்பவர்களை அடித்துக் கொள்ளத் தூண்டிவிட்டு, கடைசியில் அனைவரும் தன் காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவரது அல்பத்தனமேயன்றி வேறில்லை!


குறிப்பு: இந்த அற்ப மனிதர்கள் லிஸ்டில் ஒருவரை விட்டுவிட்டோம்… அந்த நபர் இன்று ஒரு அறிக்கை விட்டு மீண்டும் நினைவுபடுத்தினார். பெயர் பன்னி செல்வம்… ( பன்னீராம்).  இவர் யாரென்று தெரிகிறதா… குசேலன் படம் வெளியான அடுத்த நாளே, அந்தப் படம் ப்ளாப் என்று கிளப்பிவிட்டு, பணம் பறிப்பதில் குறியாக இருந்த கொள்ளைக் கூட்டத்துக்கு… அதாங்க தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு தலைவர்.

அஜீத் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர் படத்தை ஓடவிடமாட்டாராம். அடுத்து நிச்சயம் எந்திரனுக்கு பிரச்சினை தர பாயைப் பிறாண்டுகிறது இந்த ஜென்மம்.மீண்டும் சொல்கிறோம்… இது அரசும் அல்ல… கருணாநிதி நடத்துவது ஆட்சியும் அல்ல!

நன்றி -வினோ


பத்த வச்சிட்டியே பரட்டை - தலாய் லாமாவின் பேச்சு

வாஷிங்டன் :""சீனாவை விட, பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் காலம் வரும்,'' என, திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் நடந்த விழாவில், சிறந்த ஜனநாயக சேவைக்கான பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக சீனாவை விட, இந்தியா பின்தங்கியிருக்கலாம். ஆனால், சீனாவை விட பலம் வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் காலம் வரும்.சுதந்திரமாக செயல்படும் நீதித் துறை, மிகச் சிறந்த ஜனநாயகம், வெளிப்படையான போக்கு போன்றவை இந்தியாவின் சிறப்பம்சம். இதுபோன்ற விஷயங்கள் சீனாவில் இல்லை.இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மகான் போன்றவர். பழகுவதற்கு எளியவர். அவரின் தோற்றமும் மகான் போன்று தான் உள்ளது. சீனாவை பொறுத்தவரை தலைவர்கள் கோர்ட்டுக்கு போவது இல்லை. அங்கு அரசியல் கட்சியால் தான் கோர்ட் நடத்தப்படுகிறது.ராணுவமும் அப்படித் தான்.

ஆனால், அதற்கு மக்கள் ராணுவம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது, விசித்திரமானது. சீன தலைவர்கள் தற்போது சமத்துவம் பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. முதலாளித்துவம் தான் அங்கு முழு வீச்சில் உள்ளது.பணத்தைத் தவிர, வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பது இல்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஓய்வு பெறும் நிலையை நெருங்கி விட்டது. அதற்கான நேரம் வந்து விட்டது.இவ்வாறு தலாய் லாமா பேசினார்.




அட்டைக் கத்தியின் போர்க்குணம் !


               சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக எல்லை மீறப்படும்போது, நாம் நமது போர்க்குணத்தைக் காட்ட நேரிடும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்  

ஐயோ இது என்ன கனவா இல்லை நினைவா ? நம்ம உப்பு சப்பு இல்லாத முதல்வரா இப்படி தெரிவித்து உள்ளார்.

    இதே பொதுக்கூட்டத்தில் ஒரு துரோக நாடகம் அரங்கேறியிருக்கிறது. அது முல்லைப்பெரியார் வழக்கில் அணைஉறுதி பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்படும் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு தமிழகத்தின் சார்பில் யாரையும் அனுப்ப தேவையில்லை என்று கூறி உள்ளார்.ஏற்க்கனவே அணையின் உறுதி உறுதி செய்யப்பட்டது எனவே மீண்டும் ஒரு ஆய்வு தேவையில்லை என்று கோர்ட்டில் வாதிடாமல் அங்கே ஆய்வுக்குழு அமைக்க ஒப்புக்கொண்டுவிட்டு அந்த குழுவுக்கு நாங்கள் யாரையும் அனுப்பமாட்டோம் நீங்களாகவே ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் இந்த கேடுகெட்ட உத்தமர்.

தலைவா உனக்கு போர்க்குணம் என்றால் என்னவென்று தெரியுமா? தமிழனின் இன அழிப்பிற்கு காரணமாக இருந்த ஒரு இத்தாலி சூனியக்காரியிடம் உம் பிள்ளைக்காக அமைச்சர் பதவி கேட்டு கையேந்தி நின்றீரே! அப்பொழுது எங்கே சென்றது உங்கள் போர்க்குணம்.

தமிழனின் உண்மையான போர்க்குணத்தால் விளைந்த தமிழிழ நாட்டினையும் அந்த போர்க்குணத்துடன் பாதுகாக்கப்பட்ட தமிழன மக்களையும் இன அழிப்பால் கொன்று குவிக்க துணை நின்றீர்களே,இதுதான் உங்கள் போர்க்குணமா?

எதை போராட்ட குணம் என்கிறீர்கள்? மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை நிகழ்த்தியதையா? மனித சங்கிலி போராட்டம் நடத்தி தமிழன் காதில் பூ சுற்றியதையா? ஏன் காவேரி, கச்சத்தீவு, பெரியாறு, மீனவர் பிரச்சனைகளில் பார்த்தோமே உங்கள் போராட்ட குணத்தை! வயதானாலும் உங்கள் நகைச்சுவை உணர்வு மட்டும் மாறவில்லை!

இந்த போர் குணத்தை ஈழ தமிழர்கள் வதை படும்போது காண்பித்து இருந்தால் மொத்த தமிழர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்! ஆனால், தற்போது உசுப்புவது என்ன காரணம்? காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி  அமைக்குமோ என்ற கலக்கமா? இல்லை நீங்கள் எதிர்த்து நின்றால் காங்கிரஸ்காரன்  சொத்துக்கணக்கு கேட்பானே என்ற பயமா?

உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் அதற்க்கு நேர் மாறாக கேரள அரசு செயல்படும் பொழுது அதற்கு கண்டனம் கூட தெருவிக்காமல் உங்களுக்கு நீங்களே  விழா எடுத்து கொண்டிருந்தரே!அப்பொழுது எங்கே சென்றது உங்கள் போர்க்குணம்.

சென்ற மத்திய அரசு ஆட்சியில் பெரும்பான்மை பெறாத காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை தந்துவிட்டு உங்கள் போர் குணத்தால் இந்த தமிழகத்துக்கு பெற்றது என்னவென்று சொல்ல முடியுமா ? 60000 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ராம் ஊழல் செய்ததை திவிர வேறொன்றும் இல்லை.அப்பாவி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்க  உங்களுக்கு நீங்களே தொடர்ந்து நடத்தும் பாராட்டு விழாக்களும் பட்டங்களும்,தமிழக மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்காத நீங்கள் தமிழனும் இல்லை.நீங்கள் தமிழின காவலனும் இல்லை.

இத்தனை வருட ஆட்சியில் நீங்கள் சாதித்தது என்ன? பாவம் யா இந்த தமிழன் ! அம்மாவாசைக்கும் அர மண்டைக்கும் மாற்றி மாற்றி ஒட்டு போட்ட இந்த தமிழனுக்கு எதிர் கேள்வி கூட கேட்க தெரியாமல் வாழ ஆரம்பித்து விட்டான்.

தமிழக அரசு தரக்கூடிய ஒரு ரூபாய் அரிசியை உங்கள் ஆட்களே கேரளாவுக்கு கொண்டுபோய் கொடுப்பது உங்களுக்கு தெரியாதா? கேரளவுக்கு செல்லும் தமிழக பொருட்கள் மொத்தத்தையும் நிறுத்த உமக்கு ஏன் இன்னும் போர்க்குணம் வரவில்லை.ஒ இதற்கு பெயர்தான் உண்ட வீட்டுக்கு குந்தகம் விளைவிப்பதா?நீங்கள் மட்டும் அதை செய்யவில்லை,உங்கள் வாரிசுகளுக்கும் பரம்பரை பாரம்பரியமாக அதை செய்ய கற்று கொடுத்து விட்டீர் போலும்.கோமாளிகளுக்கு என்றுமே போர்க்குணம் வந்தது கிடையாது.உமக்கு மட்டும் எதற்கு.

 பத்திரிக்கைகாரன் ஏடாகூடமாக கேள்விகேட்டு பதில் சொல்ல தெரியாமல் முழிப்பதைவிட உங்களுக்கு ஏதுவான கேள்விகளை  நீங்களே கேள்வி கேட்டு பதில் கூறுவது உங்களுக்கே உரித்தான கைவந்த கலை? இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே தன்னுடைய கேள்விக்கு தானே பதில் சொல்லும் ஒரே புத்திசாலி நீங்கள் மட்டும் தான் முதல்வரே .

இதை எல்லாம் புரிந்துக்கொள்ளகூடிய அளவுக்கு மக்கள் புத்திசாலிகள் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். மலையாளி தண்ணீரை நிறுத்திய பிறகு இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து பிறகு தண்ணீர் வந்துவிட்டது என்று நீங்கள் சொன்னால் கூட நாங்க நம்பிடுவோம் ! நாங்க என்ன போய் பார்க்கவா போறோம்!

முல்லை பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையே ஆன கவுரவப் பிரச்சனை ஆகிவிட்டது வருந்ததக்கது. இதில் விவசாயிகளின் நலனே முக்கியம் என்பதை நீதி மன்றம் உட்பட அனைவரும் உணர வேண்டும். காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்பது நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.எப்படியும் இந்த தமிழனுக்கு விடிவு இல்லை.

தமிழ்நாட்டு தமிழனின் போர்க்குணத்தை ஒடுக்கி விட்டதாக நினைக்க வேண்டாம். அவனின் போர்க்குணம் வெளிப்படும் போது நீங்களும் உங்கள் குடும்ப அரசியலும் காணமல் போய்விடும்.ஆகையால் தலைவரே நீங்கள் நீக்கு போக்காக மட்டுமே பேசி வரப்போகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மிரட்டலில் இருந்து தப்பிக்க முயலுங்கள். உங்களுக்கு கடிதமும் தந்தியும் மட்டும் தான் என்றைக்கும் சிறந்த போர்க்கருவிகள். ஆகையால் துரோகத்தின் மறு உருவமான உங்கள் நாவில் இருந்து போர்க்குணம் என்ற வார்த்தை எல்லாம் வரலாமா முதல்வரே!

மறைமுகமாக திருட்டு விசிடி தயாரிக்கிறாரா அழகிரி ?

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக எடுக்கப்படும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே வெளி மார்க்கெட்டில் திருட்டு விசிடிக்களாக உலா வருவது அதிகரித்து வருகிறது.அதுவும் இந்த மதுரை இதன் மையமாக செயல்படுவது வேதனையின் உச்ச கட்டம்,

திருட்டு விசிடி பிரச்சினையை சமாளிக்க முடியாமல் திரையுலகம் திணறிக் கொண்டுள்ளது. சமீபத்தில் திரைக்கே வராத நிலையில் ஜக்குபாய் படத்தை இன்டர்நெட்டில் வெளியிடவே அதிர்ந்து போனது திரையுலகம்.
இதையடுத்து ரஜினி - கமல் துணையோடு கலை உலகை ஆளும் முதல்வரைப் பார்த்து திருட்டு விசிடி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்தது.ஆனால் அந்த எச்சரிக்கை மதுரைக்கு மட்டும் ஏனோ செல்லவில்லை.

இதையடுத்து வேலிக்கு ஓனான் சாட்சி என்ற கதையாக உயிருள்ள வரையில் தமிழே மூச்சாக வாழும் (அப்படின்னு அவரே சொல்லிப்பார்) நடைபிண முதல்வருக்கு
திரையுலகம்  புகழாரம் சூட்டி விழா எடுத்தது. தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிரடி சோதனைகளை வீடியோ தடுப்பு பிரிவு முடுக்கி விட்டு திருட்டு விசிடி வேட்டையை நடத்தி வருகிறது என்று டம்மி பீஸ் கதையாக கூடுதல் டிஜிபி பேட்டி அளித்தார் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

தென் மாவட்டங்களில் ஜக்குபாய், கோவா, தீராத விளையாட்டு பிள்ளை, அசல் உள்பட புதுப்படங்களின் திருட்டு விசிடிக்கள், டிவிடிக்கள் ரூ.40க்கு விற்பனையாகிறது.ஒரே டிவிடியில் 2 புதுப் படங்களை சேர்த்து பிரின்ட் போட்டு சூடாக விற்கிறார்கள்.
மதுரையில்தான் திருட்டு விசிடி தயாரிப்பு !!!!!

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மதுரை மாநகரில் இருந்துதான் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு புதுப்பட விசிடிக்கள், டிவிடிக்கள் சப்ளை ஆகிறது.சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களின் திருட்டு விசிடிக்களையும் மதுரையை சுற்றி உள்ள ஏரியாக்களில் பார்க்க முடிகிறது.

அதேசமயம், தமிழ்ப் படம் என்ற புதிய படத்தின் திருட்டு விசிடியை மட்டும் எங்குமே பார்க்க முடிவதில்லை. ஆனால் அதைத் தவிர எல்லா படமும் மார்க்கெட்டில் ரூ.20 முதல் 40 வரை கிடைக்கின்றன.

அப்படி என்ன இந்த தமிழ்ப்படத்தின் சிறப்பு?


காரணம் மதுரை மண்ணின் சக்கரவர்த்தி அழகிரியின் அடுத்த ஒரே வாரிசான தயாநிதி தயாரித்த படம் என்பதை தவிர வேறொன்றும் அந்த படத்துக்கு தனித்துவம் கிடையாது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் வெளிநாடுகளில் கூட இந்த படத்திற்கான திருட்டு விசிடியை பார்க்க முடியாததுதான்.

அசல் படம் வெளியான இரண்டே நாட்களில் அந்த படத்திற்கான திருட்டு விசிடி பிடிபட்ட முதல் இடமே மதுரைதான் என்பது கூடுதல் செய்தி.

திருட்டு விசிடி மட்டுமில்லைங்க , மத்த எல்லா அயோக்கியத்தனத்துக்கும் மதுரை தாங்க மையம். கொலை, கொள்ளை, ஊழல், கற்பழிப்பு, துரோகம் , நயவஞ்சகம், பொய் , சாதிப்படுகொலை, மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கித்தனம் இன்னும் விட்டுப்போனது எல்லாத்துக்கும் மையம் மதுரை தான் என்று மதுரைக்காரர்கள் அனைவரும் சட்டையை பெருமையாக தூக்கி விட்டு கொள்ளலாம்.

அழகிரியை தேர்ந்தெடுத்த மதுரை மக்களையே இந்த பாவம் போய் சேரும். யார் நல்லவன்,திறமைசாலி என்று இனம் காண தெரியாமல் கூலிக்கு மாறடிக்கும் கும்பல் இந்த மாமன்னரை சுற்றி எப்பொழுதும் இருக்கும்.அவர்களுக்கு வேண்டியது பிச்சை காசும், தண்ணியும், பிரியாணியும் மட்டுமே. அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் நாய் போல் இவர் கூட சுத்தவேண்டியது. அவ்வளவுதான். மதுரை வீரம்மிக்க மண் என்பது போய் கூலிக்கு மாறடிக்கும் மண்ணாகி ஆகிவிட்டது

எங்கிருந்து செய்தால் பாதுகாப்பு கிடைக்குமோ அங்கிருந்து செயலாற்றுவது எப்போதுமே புரிந்து கொள்ளக்கூடியதே. மதுரையில் இருந்து செயல்பட்டால், அண்ணனின் அமோக ஆதரவு கிடைக்கும் என்று திருட்டு விசிடி திருடர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.

தமிழ் மக்களே தயவு செய்து பார்லிமென்ட் நியூஸ் பாருங்கள் உங்கள் தலைவர்களின் லட்சணம் என்ன என்று தெரியும். பல லட்சம் பேர் ஒட்டு போட்டு, பல கோடி ரூபாய் செலவு செய்து மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுங்கள் என்றால் இந்த அழகில்லாத கிரி நான் தமிழ் பேசுவேன் என்று கட் அடித்து மக்களை ஏமாற்றுகின்றார், நன்கு படித்த ஆங்கில அறிவு உள்ள எத்தனையோ திமுக தலைவர்கள் உள்ளபோது இவனை மந்திரி ஆக்கியது சுயநலத்தின் உச்ச கட்டம். திமுக ஆட்டுமந்தைகளே சிந்தியுங்கள்.

இந்த உத்தமருக்கு அவரோட கட்சி கொள்கையே தெரியாது.இதுல உரக் கொள்கையை பற்றி இந்த வல்லவர் பேச போகிறார்.முடியலடா சாமி.

இதை பற்றி அழகிரியிடம் நம் நிருபர் கேட்டதற்கு இதலாம் எனக்கு தெரியாது அட்டாக் பாண்டியை கேளுங்க எனக்கே இங்க இந்திபடிக்க நேரம் பத்தல.படிச்சாலும் இந்த வயசுல மண்டையில ஏறமட்டேங்குது என்று ஒரே வரியில் பதிலை கொடுத்தார்..

மக்களே நான் நையாண்டியாக எழுத நினைத்தாலும் இப்படி ஒரு அராஜக அரசியல்வாதியின் கொடுமைகளை ஏன் கேள்வி கூட நாம் கேட்காமல் நடைபிணமாக வாழ்கிறோம் என்ற கேள்வியை உங்கள் முன் என்னால் வைக்காமல் இருக்க முடியவில்லை.

பகலவன்

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்




[letter+1.jpg] 

[letter+2.jpg] 
[letter+3.jpg] 
[letter+4.jpg]  
[letter+5.jpg] 
[letter+6.jpg]  

[letter+7.jpg]

தலைவன் வருவான் தமிழீழம் மலரும் – பாவலர் சீதையின் மைந்தன்,

தஞ்சையில் ஈழத் தமிழருக்கான வாழ்வுரிமை மாநாட்டில் பாவலர் சீதையின் மைந்தனால் பாடப்பட்ட தலைவன் வருவான் தமிழீழம் மலரும் - பாவலர் சீதையின் மைந்தன்

திராவிடக் கட்சிகளை புறக்கணிக்கும் மாணவர் சக்தி!


''மாணவ தலைமுறையே சூளுரை எடுத்து துள்ளி வா, இந்தியெனும் அரக்கன் தமிழ் மொழியை அழிக்க வருகிறான், ஆர்ப்பரித்து அலைகடலென திரண்டு வா உணர்ச்சி பொங்க, உள்ளத்தில் வேள்வி தீயை எரிய விட்டு உன்னதனமான பணிக்கு மன உந்துதலோடு வா'' என்று தமிழகத்தில் அக்காலத்தில் விடுக்கப்பட்ட திராவிடக் கட்சிகளின் அழைப்புகளை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இன்றளவும் கூட தமிழக அரசியல் தலைவர்களின் அறைகூவல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த அழைப்புகள் அனைத்தும் மாணவர்களைத்தான் பெரும்பாலும் குறி வைப்பவையாக உள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அரியணையில் இருந்து அகற்ற திமுகவுக்கு அப்போது மாணவர் இயக்கம்தான் பெருமளவு கை கொடுத்தது. திமுகவின் அன்றைய காலகட்டத்தில் அதன் கொடியை மாணவர்கள் தூக்கி வருவது போன்றே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அதே நிலை இருக்கிறதா என்றால். நிச்சயமாக இல்லை.

திமுக என்றில்லை எந்தத் திராவிடக் கட்சிக்குமே இன்று மாணவர்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இல்லை என்பது தான் நிதர்சனம்.

திமுக அன்றைய காலத்தில் மாணவ சக்தியை வைத்து தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்பட பல போராட்டங்களை முன் எடுத்துச் சென்றது.

அக்காலத்து பியூசி முதல் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களிடையே அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கருணாநிதி ஆகியோரது பேச்சுகள், கட்டுரைகள், எழுத்துகள் ஈர்ப்பை ஏற்படுத்தின.

இந்த மாணவ சக்திதான் தமிழக அரசியலில் 1961 முதல் ஆட்சியாளர்களுக்குத் தூணாக இருந்து வந்தது.

தமிழகத்தில் வகுப்பு வாரி இட ஓதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கலில் தலைவர்கள் மாணவ சமூகத்தை தட்டியெழுப்பித் தான் வெற்றிகளைக் கண்டனர்.

1967ல் அண்ணா தலைமையில் திமுக அரியணையில் ஏறியபோது மாணவர் சமுதாயமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது. 67-68 நிதி அறிக்கையில் பேரறிஞர் அண்ணா தமிழகத்தில் இலவச கல்வியை அறிவித்தார். அந்த அறிவிப்பு கூனி, குறுகி கிடந்த விவசாய வீட்டு பிள்ளைகளை உலகறிய செய்யும் அறிவிப்பாக அமைந்தது.

அதன் பின் இந்தி எதிர்ப்பு போராட்டம். இதுவும் திராவிட கட்சிகளுக்கு மாணவ சமுதாயம் முழுமையாக ஒட்டு மொத்த ஆதரவையும் அளித்த போராட்டம். இலவச கல்வியெனும் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய மாணவ சமூகம், இந்தி ஆட்சி மொழியெனும் அறிவிப்பை எதிர்த்துப் போராடினர்.

தமிழகமெங்கும் தலைநகரங்களில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்து ஜனவரி 26 குடியரசு தினத்தை துக்க தினமாக கொண்டாடினர். பச்சையப்பன் கல்லூரியில் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மதுரையில் அரசியல் பிரிவு 17ன் நகலை மாணவர் கூட்டங்கள் எரித்தன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். ஏவிசி கல்லூரி மாணவன் சாரங்கபாணி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

மாணவர் சக்தி தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றியது என்பதை விட திராவிட திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் அடித்தளமாக அமைந்தது என்பதே உண்மை.

அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறும் மாணவர் பேரவை தேர்தலில் திராவிடக் கட்சிகள் சார்பில் போட்டியிட தொடங்கினர்.

அதேசயம், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட மாணவர்கள் மத்தியில் வலுவாக வேரூண்றத் தொடங்கின.

திமுக ஆட்சிக் காலங்களில் மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளி்ல் முக்கியத்துவம் கிடைத்தது. அதேபோல அதிமுகவும் தனது மாணவர் சக்தியை தக்க வைத்துக் கொள்ள பல வழிகளிலும் முயன்றது.

தி்முக மாணவர் பிரிவு, அதிமுக மாணவர் பிரிவுகளில் பொறுப்பு வகித்த கல்லூரி மாணவர்களுக்கு எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சி காலங்களில் எம்எல்ஏ உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் சமீப காலமாக திராவிடப் போர்வைக்குள்ளிருந்து மாணவர்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. மாறாக, சிவப்புக் கம்பளம் போட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கம் அவர்கள் சாயத் தொடங்கியுள்ளனர்.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி சமீப காலமாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி, ஆட்சியைப் பிடிப்பது எப்படி, யாருடன் கூட்டணி சேரலாம், எந்தக் கூட்டணியைக் கலைக்கலாம் என்பது போன்ற சிந்தனைகளில் தீவிரமாக மூழ்கி விட்டதால், ஏறி வந்த ஏணியான மாணவர்களை அவர்கள் வசதியாக மறந்து விட்டதாகவே தெரிகிறது.

மாணவர் பிரச்சனை குறித்து முன்னேற்றகரமான திட்டங்களை செயல்படுத்தாததும் மட்டுமின்றி கல்வி கட்டண உயர்வு, குதிரை கொம்பாக மாறிவரும் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்புகள் வேலை வாய்ப்புகளும் மாணவர்கள் நிறம் மாற ஒரு காரணம் என்று கூறுகின்றனர்.

இதுவே சமீபத்தில் தமிழக கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தல் [^] முடிவுகளில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில், 16 பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்டு ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளில் முன்பெல்லாம் மாணவர் பேரவை தேர்தல்களில் திமுக அல்லது அதிமுக சார்பான மாணவர்களே வெல்வார்கள்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பல்கலைக்கழகங்களிலேயே முதன்முறையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 66 கலை அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கி செயல்படும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான இந்திய மாணவர் பேரவை (எஸ்.எப்.ஐ) முதல் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இராண்டாவது முறை பலத்த போட்டிகள், ஜாதிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் அனுதாபிகள் என நெருக்குதல்கள் கூடின. இருப்பினும், எஸ்.எப்.ஐயே வென்றது.

3வது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் எஸ்.எப்.ஐக்குத்தான் வெற்றி. 51 கல்லூரிகளில் நடைபெற்ற தேர்தல்களில் 47 கல்லூரிகளில் எஸ்எப்ஐ வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக வலுவாக உள்ள தென்மாவட்டங்களில் காம்ரேடுகளுக்கு அதிக செல்வாக்கு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுதான். ஆனால் மாணவர் பேரவை தேர்தல்களில் திராவி்ட கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மாணவர்களை மறந்து போனதே திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு்க காரணம் என்று கூறப்படுகிறது.

தென் மாவட்ட கல்லூரிகளைக் கைப்பற்றியுள்ளது குறித்து எஸ்.எப்.ஐ. மாவட்ட பொறுப்பாளர் அருண் பிரவீன் கூறுகையில்,

இந்திய மாணவர் பேரவைக்கு கிடைத்த இந்த வெற்றி சாதாரணமானதல்ல, இதற்காக எங்கள் இயக்கத்தில் பலர் உயிர்ப் பலி கொடுத்துள்ளனர்.

93ல் மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர் சோமசுந்தரம், செம்புலிங்கம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில குமார் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய மாணவர் பேரவையின் போராட்ட களம் வலுவானது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவ பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்று 7 ஆண்டு காலமாக போராடியுள்ளோம். இறுதியாக முற்றுகை போராட்டம் நடத்திய பின்புதான் தேர்தல் நடத்த அப்போதைய துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் அனுமதி அளித்தார்.

தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகளில் கழிப்பிடம், மின்வசதி, காம்பவுண்ட் சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதியின்றி இருக்கின்றன. அவைகளை அரசு இனம் கண்டு நிதி ஓதுக்கீடு செய்து செம்மைபடுத்த முடியவில்லை. ஆனால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறது.

அதிகாரம் கொண்ட ஆளும்கட்சி மறந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சனை. மேலும் நெல்லை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டு மட்டும் 16 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை என்றால் எங்கள் இயக்கம் முன் நின்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

காம்ரேடுகள் போராளிகள் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் பிரச்சனையானலும், மாணவர் பிரச்சனையானலும் முதலில் நாங்கள் களத்தில் நிற்பதால் எங்களுக்கு வருங்கால இளைஞர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது என்றார்.


 - கே.எம்.கே. இசக்கிராஜன்