தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- கருணாநிதி கோரிக்கை

பெட்ரோல், டீசல் [^] மீதான சுங்க வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.http://thatstamil.oneindia.in/img/2010/02/27-kar200.jpg

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், உணவுப் பண வீக்கத்தால் மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் பாதிப்பை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் இந்த வரி உயர்வு உணவுப் பொருட்களின் விலை உயர்வை மேலும் கடினமாக்கி விடும்.

எனவே உடனடியாக இந்த உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் டீசல் விலை உயர்வையாவது நிறுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளும், சாதாரண மக்களும் பலன் பெற முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே இதில் தலையிட்டு இந்த விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. 

 வாசகர் கருத்து

வல்லவன்
பதிவு செய்தது: 27 Feb 2010 4:02 pm
ஓஹோ...! நல்லா படம் காட்டுராங்கப்பா !
 
fact
பதிவு செய்தது: 27 Feb 2010 4:08 pm
ட்ரை யுவர் best டு fight against price hike. c.m.we ஆர் already suffering
 
kuranku
பதிவு செய்தது: 27 Feb 2010 4:22 pm
we have to die soon.vegetables are hike.bus ticket hike.sugar hike.this ,that ,venkaayam,puliyamkottai are hike.no job degree holders are hike.land price hike.interest are hike.age are hike day by day.but there is no hike in many peoples life.
 
தபால்
பதிவு செய்தது: 27 Feb 2010 4:23 pm
தமிழ்மக்கள் பிரச்சினைக்கு கடிதம், தன் மக்கள் பதவிக்கு டில்லி பயணம்.
 
mariyan
பதிவு செய்தது: 27 Feb 2010 6:31 pm
உடன்பிறப்பே லட்சகணக்கான தந்தி அடியுங்கள். மனித சங்கலி அமையுங்கள். நாம் இங்கு கொடுக்கும் குரல் நாடாளுமன்றத்தின் கழிவறை வரை ஒழிக்கவேண்டும் என்றா சொன்னார், தயவு செய்து குறைந்தபட்சம் டீசல் விலையையாவது குறையுங்கள் என்றுதானே சொல்கிறார். வயதானவர் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ, பிழைத்து போகட்டும்,
 
unmai
பதிவு செய்தது: 27 Feb 2010 6:18 pm
the forum is full of bigots, always finding excuse to bash Karunanidhi. Despite being part of alliance M.K.Giving voice to roll back the hike. Hailing the budget as good generally in noway prevents opposing hike in petroleum tax. Karunanidhi sokka thangama endru ketka ingu yarum kalappada thangam kooda illai. shame on you bigots.
 
ONE OR SUN
பதிவு செய்தது: 27 Feb 2010 6:09 pm
உன்னை பெட்ரோல் விலை உயர்ந்தாலும் ஏழை தமிழ் மக்கள் விலை உயர்ந்த பெட்ரோலால் இலவசமாக உன்னை எரிக்க தயார்.நீ எரிய தயாரா .DEAL OR NO DEAL
 
அறிவுமதி
பதிவு செய்தது: 27 Feb 2010 5:52 pm
நேற்றுதான் சிறந்த பட்ஜெட் என்று அறிக்கைவிட்டார். இன்று பெட்ரோலிய விலை உயர்வை திரும்பப் பெருக என்று அறிக்கை. என்னை மொள்ளமாரித்தனம்!
 
gkp
பதிவு செய்தது: 27 Feb 2010 5:41 pm
வேற வேல இல்ல பேசாம முடிகிட்டு இரு
 
இந்தியன்
பதிவு செய்தது: 27 Feb 2010 5:17 pm
ஆரம்பிசுடாரையா
  

மனோ
பதிவு செய்தது: 27 Feb 2010 5:12 pm
தாங்க முடியலைப்பா !அந்தப் பேனாவை யாரவது திருடிப்போகக்கூடாதா ?
 
unmai
பதிவு செய்தது: 27 Feb 2010 4:46 pm
நேத்து தானே நல்ல பட்ஜெட்நு அறிக்கை விட்டான் கிழவன் இன்னைக்கு யாரை ஏமாற்ற இந்த கடிதம் ,இந்த லட்சணத்தில் நிதி துறை இணை அமைச்சர் தி மு க காரன் அவனுக்கு தெரியமல பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு இருந்துருக்கும்.
 
கிழ பாடு
பதிவு செய்தது: 27 Feb 2010 5:09 pm
அது முந்தா நாளே மண்டபத்துல யாரோ எழுதி கொடுத்தது .....வழக்கமாந பட்ஜெட் தானேன்னு மொத நாளே எழுதி வைக்க சொல்லிட்டேன்.....இப்போ தான் யாரோ சொன்னங்க..பெட்ரோல் டீஸல் விலை உயர்த்த போறங்கன்னு..அதான் "கடி"தம் எழுதுறேன்..
 
திமுக
பதிவு செய்தது: 27 Feb 2010 4:39 pm
இப்படியே கடிதம் எழுதி காலம் தள்ளும் கலைஞ்ர் வாழ்க, கடிதத்தில் கரை கண்ட, சென்சூரி அடித்த எங்கள் காவிய தலைவன் வாழ்க
 
நன்றி
தட்ஸ்தமிழ்
இப்படித்தான் இந்தியா ஒளிர்கிறது,
 வேதனையுடனும் எரிச்சலுடனும்
பகலவன்