தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாரம்​ப​ரிய பயிர்​கள் அழிந்து போகும் - ரோகிணி


"மர ​பணு மாற்றுக் கத்​த​ரிக்​காயை இந்​தி​யா​வில் அனு​ம​திக்​கக் கூடாது' என வலி​யு​றுத்தி நாடு முழு​வ​தும் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​ தமி​ழ​கத்​தில் அத்​த​கைய போராட்​டங்​களை முனைப்​போடு நடத்​து​ப​வர்​க​ளில் குறிப்​பி​டத்​தக்​க​வர் நடிகை ரோகிணி.​கலைத் துறை​யைச் சேர்ந்த பல​ரும் தங்​கள் தொழி​லில் மட்​டும் கவ​னம் செலுத்​திக் கொண்​டி​ருக்​கும்​போது,​​ ஒரு சமூ​கப் பிரச்​னைக்​காக வீதி​யில் இறங்​கிப் போரா​டிக் கொண்​டி​ருக்​கி​றார் ரோகிணி.​ இப்​போ​ராட்​டத்​தில் பங்​கேற்க நேர்ந்​த​தற்​கான கார​ணங்​கள் குறித்து அவ​ரி​டம் கேட்​டோம்.​இனி உங்​க​ளு​டன் பேசு​கி​றார் ரோகிணி.

""நான் நம்​பும் கட​வுள் இயற்​கை​தான்.​ இயற்​கை​யை​விட இந்த உல​கில் உன்​ன​த​மா​னது வேறு எது​வும் கிடை​யாது.​ "ஒரு​வன் இயற்​கை​யின் உன்​ன​தத்தை உணர்ந்து,​​ அந்த இயற்​கை​யின் போக்​கோடு தன் வாழ்​வின் போக்​கை​யும் இணைத்​துக் கொள்​ளும் நேரம் எதுவோ,​​ அது​தான் அவன் கட​வுளை உண​ரும் நேரம்' என்று பல்​வேறு மதங்​க​ளும் குறிப்​பி​டு​கின்​றன.​இத் ​த​கைய மன​நி​லை​யோடு வாழ்ந்து கொண்​டி​ருக்​கும் என்​னி​டம்,​​ வாட​கைக்கு வீடு வேண்​டும் என்று கேட்டு 4 பெண்​கள் வந்​த​னர்.​ அது 2008 டிசம்​பர் மாதம்.​ "கிரீன் பீஸ்' என்ற அமைப்பி​லி​ருந்து வந்​தி​ருப்​ப​தா​க​வும்,​​ மர​பணு மாற்று உண​வு​க​ளின் பாதிப்​பு​கள் குறித்து மக்​க​ளி​டம் விழிப்​பு​ணர்வு ஏற்​ப​டுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டி​ருப்​ப​தா​க​வும் அவர்​கள் தெரி​வித்​த​னர்.​மர​ பணு மாற்​றம் செய்​யப்​பட்ட உண​வு​கள் என்​பதை அப்​போ​து​தான் நான் புதி​தாக கேள்​விப்​பட்​டேன்.​ அது குறித்த விவ​ரங்​களை அறி​வ​தில் எனக்​குள் ஆர்​வம் ஏற்​பட்​டது.​ஆனால் அவர்​கள் தெரி​வித்த விவ​ரங்​கள் என்னை அதிர்ச்​சி​ய​டை​யச் செய்​தன.​ நான் நிலை​கு​லைந்து போனேன்.​மர ​பணு மாற்று பயிர் வகை​களை பயி​ரி​டு​வ​தால்,​​ அதே வகை​யைச் சேர்ந்த மற்ற ஆயி​ரக்​க​ணக்​கான பாரம்​ப​ரிய பயிர்​கள் அழிந்து போகும்;​ மர​பணு மாற்று உண​வு​களை உண்​ப​தால் மனி​தர்​க​ளுக்கு பல​வகை ஒவ்​வாமை நோய்​கள்,​​ கார​ணம் புரி​யாத பல புதுப்​புது நோய்​கள் வரும்;​ வயலில் உள்ள மண் மலடு ஆவ​தோடு,​​ மனி​தர்​க​ளுக்​கும் மலட்​டுத் தன்மை அதி​க​ரிக்​கும் என பல பாதிப்​பு​களை அவர்​கள் விளக்​கி​னர்.​இதனை என்​னால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இயற்​கை​யின் இனி​மை​யான சுழற்சியை அறுத்​துப் போடும் முயற்சி இது எனப் புரிந்து கொண்​டேன்.​இத​னால் யாருக்கு லாபம் என்​ப​தைப் பற்றி எனக்கு கவ​லை​யில்லை.​ ஆனால் ஒரு நுகர்​வோர்;​ ஒரு தாய்;​ நாட்​டின் குடி​ம​கன் என்ற முறை​யில்,​​ எனக்​கும்,​​ என் வீட்​டுக்​கும் கேடு விளை​விக்​கும் ஒன்றை,​​ "வேண்​டாம்' என்று மறுக்​கும் உரிமை எனக்கு உண்டு.​ எனக்கு வேண்​டாம் என்று மன​தில் பட்​டதை மற்​ற​வர்​க​ளுக்​கும் விளக்க வேண்​டும் என்று விரும்​பி​னேன்.​ எனவே,​​ என்​னை​யும் இந்​தப் போராட்​டத்​தில் இணைத்​துக் கொண்​டேன்.​கிரீன் பீஸ்,​​ பூவு​ல​கின் நண்​பர்​கள்,​​ ரீஸ்​டோர்,​​ இயற்கை வேளாண்மை கூட்​ட​மைப்பு,​​ பசுமை இயக்​கம்,​​ விவ​சா​யி​கள் சங்​கம்,​​ தமிழ்​நாடு பெண்​கள் இணைப்​புக் குழு போன்ற பல அமைப்​பு​கள் இணைந்து "பாது​காப்​பான உண​வுக்​கான கூட்​ட​மைப்பு' என்ற அமைப்பை உரு​வாக்​கி​னோம்.​இப்​போது மர​பணு மாற்​றம் செய்​யப்​பட்ட பி.டி.​ கத்​த​ரிக்​காயை இந்​தி​யச் சந்​தை​யில் நுழைப்​ப​தற்​கான முயற்​சி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​ மனி​தர்​கள்,​​ விலங்​கு​கள் மற்​றும் ஆயி​ரக்​க​ணக்​கான பயிர் வகை​களை அழிக்​கக் கூடிய பி.டி.​ கத்​த​ரிக்​காயை அனு​ம​திக்​கக் கூடாது என நாங்​கள் போராடி வரு​கி​றோம்.​தமி ​ழ​கத்​தில் முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​ட​னான எங்​கள் சந்​திப்பு,​​ அத​னைத் தொடர்ந்து இப்​போ​தைய நிலை​யில் இங்கு மர​பணு மாற்று உண​வு​களை விளை​விக்​கவோ,​​ விற்​கவோ கூடாது என்ற முதல்​வ​ரின் உத்​த​ரவு,​​ பி.டி.​ கத்​த​ரிக்​காய் தொடர்​பாக நடை​பெற்று வரும் கருத்து கேட்பு நிகழ்ச்​சி​கள்,​​ எல்​லா​வற்​றுக்​கும் மேலாக மக்​க​ளி​டம் அதி​க​ரித்து வரும் விழிப்​பு​ணர்வு மற்​றும் எதிர்ப்​புக் குரல்​கள் முத​லா​னவை எங்​க​ளின் நம்​பிக்​கையை அதி​க​ரித்​துள்​ளன.​ஒவ்​வொ​ரு​வர் வாழ்க்​கை​யி​லும் ஓர் அர​சி​யல் இருக்​கும்.​ இந்​தி​யா​வின் பன்​மய சுற்​றுச்​சூ​ழலை,​​ நம் மக்​களை,​​ நம் மண்ணை அழிக்​கக் கூடிய மர​பணு மாற்று உண​வு​களை அனு​ம​திக்​கக் கூடாது.​ இது​தான் எனது வாழ்க்கை அர​சி​யல்.​மர​பணு மாற்​றம் செய்​யப்​பட்ட எந்த உண​வை​யும் இங்கு அனு​ம​திக்க மாட்​டோம் என்று மத்​திய அரசு அறி​விக்​கும் வரை எமது போராட்​டம் தொட​ரும்.​ அப்​போ​ராட்​டம் காந்​திய வழி​யில்,​​ அமை​தி​யாக,​​ ஆனால் உறு​தி​யா​ன​தாக இருக்​கும்'' .​


நன்றி
ரோகிணி

தினமணி