தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். களத்தில் இறங்காமல் இணையத்தில் மட்டுமே சவடால் அடிக்கும் புரட்சியாளர்கள் நிறைந்துள்ள காலம் இது. ஆனால் களத்தில் தொடர்ந்து உழைக்கும் உங்கள் அமைப்பு இணையத்தில் வரலாற்றில் பதிவு செய்வது அவசியம் என இணைய நண்பர்கள் பலர் அடிக்கடி கேட்டுகொண்டதால் இயன்ற அளவு தோழர்களிடம் கேட்டு எழுதியுள்ளேன். விடுபட்ட நிகழ்வுகளை இதைப் படிக்கும் தோழர்கள் தெரிவித்தால் இணைத்துக்கொள்ளலாம். பெ.தி.க வின் செயல்பாடுகள், அதனால் தோழர்கள் அனுபவிக்கும் தொல்லைகள், அந்தத் தொல்லைகளைத் தீர்க்கும் வழிகள் என்ற வரிசையில் பதிவு செய்துள்ளேன்.

தமிழர்களைக் கொன்றுகுவிக்கும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்தும், இந்திய இராணுவ உதவியை நிறுத்தக்கோரியும் தமிழ்நாடுமுழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று 2008 ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியத் தலைநகரான புதுடில்லியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி நிறைவில் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகத்தில் கையெழுத்துப் பிரதிகளை அளித்தோம். தமிழ்நாட்டிலிருந்து 1000 தோழர்கள் தனி இரயிலில் புதுடில்லி சென்று நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் மீண்டும் 1980 களைப் போன்ற ஈழஎழுச்சியைத் தொடங்கி வைத்தது.

2008 மார்ச் 11

அன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாட்டில் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ முகாமில் சிங்கள வெறிபிடித்த முக்கிய சிங்களத் தளபதிகள் ஆறுபேருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதைக் கண்டித்து பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2008 அக்டோபர் 11

கோவையில் பெரியார் திக வின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரிகளில் இலங்கை அரசு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 அக்டோபர் 13

இலங்கைக்கு உதவி வரும் இந்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் தலைமைச்செயற்குழு உறுப்பினர் இல.அங்கக்குமார் தலைமையில் மாவட்டத்தலைவர் துரைசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

2008 அக்டோபர் 14

கோவை. ஈரோடு. தூத்துக்குடி. திருச்செந்தூர் ஆகிய நகரங்களில் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து பெ.தி.க சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஈரோட்டில் இந்து ஆங்கில ஏடுகள் முழுவதும் அதிகாலை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய உடனேயே தீவைத்து கொளுத்தப்பட்டது. பெரியார் தி.க மாவட்டப் பொறுப்பாளர் குமரகுரு உட்பட இன உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து ஆங்கில ஏட்டின் கோவை அலுவலகம் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் முற்றுகையிடப்பட்டது. அலுவலகம் தாக்கப்பட்டதாகவும். ஏடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் 10 தோழர்கள் கடும் சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.

2008 அக்டோபர் 22

தூத்துக்குடியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம்

2008 நவம்பர் 2, 9

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும், தமிழ்ஈழத்தை அங்கீகரிக்கக்கோரியும் கோவை அருகே உள்ள சூலூரில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
09.11.2008 அன்று கோவை பெரியநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் திரையரங்கம் முன்பு காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 நவம்பர் 3

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒருநாள் கடைஅடைப்புப் போராட்டம்

2008 நவம்பர் 10

ஈழத்தமிழரைக் காக்கக்கோரி திண்டுக்கல்லில் அனைத்து முற்போக்கு அமைப்புகள், தொண்டுநிறுவனங்களை ஒருங்கிணைத்து சுமார் 5000 பேர் பங்கேற்ற மாபெரும் காயக்கட்டு ஊர்வலம் மாவட்டத்தலைவர் துரை.சம்பத் தலைiமையில் நடைபெற்றது.

2008 நவம்பர் 12

ஈரோட்டில் பெ.தி.க மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் இராஜபக்ஷே கொடும்பாவியை பாடைகட்டி இழுத்துச் சென்ற 150 தோழர்கள் கைது.
2008 நவம்பர் 14
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக்கோரி ஏற்காட்டில் 67 மலைகிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி.

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் மாநிலம் முழுவதும் தொடர் பரப்புரைப் பயணம்

2008 நவம்பர் 25

சேலத்தில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அனைத்துக்கட்சி கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தை பெ.தி.க ஏற்பாடு செய்தது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 தோழர்கள் கைது.

2008 நவம்பர் 26

தூத்துக்குடியில் ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் கண்டனப் பேரணி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 நவம்பர் 18 முதல் டிசம்பர் 1 வரை

மருத்துவர் நா.எழிலன் தலைமையில் தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும். போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் 15 நாள் தொடர் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர். பயணத்தில் பெ.தி.க மாணவர்கள் பங்கேற்றனர்.

2008 டிசம்பர் 15

புதுச்சேரியில் பெ.தி.க, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, லோக்ஜன சக்தி, ஃபார்பர்டு ப்ளாக், தேசியவாத காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும் போரை நிறுத்தக் கோரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான் மற்றும் சரத்பவார். பிஸ்வாஸ் ஆகியோரையும் சந்தித்து ஈழத்தமிழருக்கு ஆதரவு திரட்டினர்.

2008 டிசம்பர் 19

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2008 டிசம்பர் 20

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன், தங்கபாலு கொடும்பாவிகள் எரிப்பு

சேலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

பழனியில் காங்கிரஸ்கட்சிக் கொடி பல்வேறு இடங்களில் எரித்து தொங்கவிடப்பட்டன. தோழர்கள் மருதமூர்த்தி, நல்லதம்பி உட்பட பல தோழர்கள் கைது.

2008 டிசம்பர் 21

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஈரோடு. ஏற்காடு, திருச்செந்தூர், குறும்பூர் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

2008 டிசம்பர் 22

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சேலம் மாவட்டம் கொளத்தூரில் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம், தங்கபாலு கொடும்பாவி எரிப்பு. 50 பெண்கள் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்பு. 60 தோழர்கள் கைது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு பாடைகட்டி, காங்கிரஸ் கொடியைச் செருப்பால் அடித்து ஊர்வலம் நடைபெற்றது.

2009 ஜனவரி 8

ஈழத்தில் போரை நிறுத்தக் கோரியும், இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்தும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் சுமார் 700 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009 ஜனவரி 9

திருச்சியில் நீதிமன்ற வளாகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2009 ஜனவரி 18

கோவைக்கு வந்த இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கருப்புக்கொடி காட்டிய பெ.தி.க தோழர்கள் கைது.

2009 ஜனவரி 20

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோர் கோவை சிறையிலிருந்து விடுதலை. கோவையிலிருந்து மேட்டூர்வரை ஆயிரக்கணக் கான தோழர்கள் உற்சாக வரவேற்பு.

2009 ஜனவரி 21

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம். மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை யில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், பழனி,சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

2009 ஜனவரி 31

சென்னையில் இலங்கை வங்கி தாக்கப்பட்டது. தலைமைச்செயற்குழு உறுப்பினர் கேசவன் உட்பட பல தோழர்கள் கைது.


இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பும் தஞ்சை விமானப்படை அலுவலகத்தை - விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் த.தே.பொ.க பொதுச் செயலாளர் மணியரசன், பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி. ஆதித்தமிழர் பேரவை, தமிழர்கழகம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்டது. சுமார் 250 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009 பிப்ரவரி 1

ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக் கோரியும் மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வண்ணமும் கொளத்தூரில் கடை அடைப்பும் கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் முத்துக்குமரன் வீரவணக்கப் பேரணி

2009 பிப்ரவரி 2

திண்டுக்கல்லில் சிங்கள அரசைக் கண்டித்து அனைத்துக்கல்லூரி மாணவர்களையும் திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி. வகுப்புகள் புறக்கணிப்புப் போராட்டம்.

2009 பிப்ரவரி 4

இலங்கைத்தமிழர்பாதுகாப்பு இயக்கம் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுமூச்சுடன் செயல்பட்ட பெ.தி.க தோழர்கள் பேருந்து உடைப்பு, மத்திய அரசு அஞ்சல் அலுவலகம் எரிப்பு போன்ற கடுமையான குற்றங்களின் அடிப்படையிலான வழக்குகளில் திருப்பூர், கோவை தோழர்கள் கைது.
கொளத்தூரில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்திய வழக்கில் ஈசுவரன், சசிக்குமார் உட்பட 13 தோழர்கள் கைது.
கொளத்தூர் விசு, குமார் ஆகிய இரு தோழர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

2009 பிப்ரவரி 20

இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து இந்தியஅரசின் வருமானவரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் தஞ்சை, மதுரை,ஈரோடு, புதுச்சேரி, சென்னை, கோவை சேலம் ஆகிய நரங்களில் நடைபெற்றது.

2009 பிப்ரவரி 22 முதல் 28 வரை

சேலம் மாநகரில் ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என்ற தலைப்பில் தொடர்கூட்டங்கள் நடைபெற்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

2009 பிப்ரவரி 26

திண்டுக்கல்லில் ஈழப்போரைநிறுத்தக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத்தலைவர் உரை. இராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றிருந்தால் பாராட்டுவோம் எனப் பேசியதற்காக தேசியப் பாதுகாப்புசட்டத்தில் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

2009 பிப்ரவரி 28

தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி, அவரது படத்துக்கு செருப்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தலைமையில் பெ.தி.க தோழர்கள் கைது.

2009 மார்ச் 7 முதல் 16 வரை

தமிழ்நாடு முழுவதும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள்.

2009 மார்ச் 20

புதுவையில் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் வாயில் கருப்புத்துணியைக் கட்டிக்கொண்டு கைவிலங்குடன் கண்டன ஆர்ப்பாட்டம்.

2009 மார்ச் 29

பெ தி க மாநில செயற்குழுவில் ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் - திமுக கூட்டணியைத் தோற்கடிப்பீர் என தீர்மானம்.

2009 ஏப்ரல் 7

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் மாவட்டச்செயலாளர் மார்டின் தலைமையிலும் புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

2009 ஏப்ரல் 12

இந்தியஇராணுவமே இலங்கையை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் கோவையிலுள்ள இந்திய இராணுவ அலுவலக முற்றுகைப் போராட்டம். பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தோழர்கள் பங்கேற்பு. 400 தோழர்கள் கைது.
2009 ஏப்ரல் 14 முதல் 26 வரை

14 ஆத்தூரிலும், எப்ரல் 16 தூத்துக்குடியிலும், ஏப்ரல் 19 இளம்பிள்ளையிலும், ஏப்ரல் 26 நங்கவள்ளியிலும் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றன.

2009 மே 2

கொச்சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு செல்ல இருந்த இராணுவ தளவாடங்கள் அடங்கிய இந்திய இராணுவ லாரிகள் கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் இராணுவ வீரர்களையும், லாரிகளையும் தாக்கினர். ஈழத்தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்த இருந்த ஆயுதவண்டிகளைத் தடுத்ததற்காக பொதுச்செயலாளர் அவர்கள் மீதும், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் இலட்சுமணன், ம.தி.மு.க மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

2009 மே 4

தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத்தலைவர் விடுதலை செய்யப்பட்டார். கோவை தாக்குதலைக் காரணம்காட்டி தமிழகம் முழுவதும் முக்கியத்தோழர்கள் கைது வேட்டை.

2009 மே 5

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உட்பல தமிழ்நாடு முழுதும் பல்வேறு ஊர்களில் தோழர்கள் கைது.

மேற்கண்ட பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் சில மாவட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. எனவே பட்டியலை முழுமையாக்க இயலவில்லை.

தேர்தலில் எதிரி காங்கிரசும் துரோகி தி.மு.க வும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முழுவீச்சில் செயல்பாட்டில் இறங்கிய அனைத்து மாவட்டத் தோழர்களும் காவல்துறையால் மிரட்டப்பட்டனர். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற குறுந்தகட்டைத் தேடுகிறோம் என்ற பெயரில் தோழர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை மிரட்டினர். கோவை கதிரவன், கோபி இளங்கோவன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர், கொளத்தூர். சென்னை இராயப்பேட்டை படிப்பகங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளும் காவல்துறையின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு குறுந்தகடு விநியோகம் கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது. மத்தியசென்னையில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இராயப்பேட்டை தோழர்கள் மீது பிணையில் வெளிவர இயலாத கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யட்டனர். ஈழத்தமிழர் என்ற சொல்லையே பயன்படுத்தத் தடை போடப்பட்டது. இராயப்பேட்டை படிப்பகம் தி.மு.க காலிகளால் சூறையாடப்பட்டது. அங்கிருந்த பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்திய காலிகளைக் கைதுசெய்யக் கோரி அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றபோது அந்தப் பெண்களும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தொடர்ச்சியாக 15 மாதங்களாக பெரியார்திக தோழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி, கொடும்பாவி எரிப்பு, கைது, சிறை, நீதிமன்றம் என ஒரே வட்டத்தில் சுற்றிச்சுற்றி வருகின்றனர். பெரும்பான்மையான தோழர்கள் தினசரி உழைத்தால்தான் வருமானம், சோறு என்ற நிலையில் வாழ்பவர்கள். துண்டறிக்கை அச்சிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நிதிதிரட்ட முடியும். ஆனால் திடீர் திடீர் என தலைமையால் முறையாக அறிவிக்கக்கூட நேரமில்லாமல் நடத்தப்படும் போராட்டங்கள் அதனால் ஏற்படும் கைது நடவடிக்கைகள், சிறைப்படுதல் போன்றவைகள் தொடர்ந்து நடப்பதால் நிதிதிரட்டுவதும் இயலாத செயலாகப்போய்விட்டது.
தலைவர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் பொதுச்செயலாளர் சிறைப்படுத்தப்படுகிறார். முக்கியத் தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நிதி திரட்டலைக்கூட திட்டமிட்டுச் செய்ய காலஅவகாசம் கொடுக்காமல் அடுத்த கைது உடனே நடக்கிறது. அவ்வப்பகுதிகளில் உள்ள தோழர்கள் வட்டிக்கு கடன் வாங்கி சிறையில் உள்ள தோழர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றனர். ஆனால் சிறையில் உள்ள தோழர்களின் வருவாயை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினர் நிலை இன்னும் மோசம். அவ்வாறு உள்ள குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், சிறைப்பட்ட தோழர்களுக்கு தேவையானவற்றை உதவவும், தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்கள் அனைத்திலும் நடக்கும் பெ.தி.க மீதான வழக்குகளைச் சந்திக்கவும் உங்களால் இயன்ற அளவு நிதி வழங்கி உதவுங்கள். எமது போராட்டத்திற்கு உங்களது பங்கைச் செலுத்துங்கள்.


ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
நிதிக் குழுவினர்: வே. ஆறுச்சாமி, பொள்ளாச்சி இரா. மனோகரன், இல. அங்ககுமார், சு. துரைசாமி, வழக்கறிஞர் சாஜித், கோவை கோபால்.
வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.
தா.செ.மணி, கணக்கு எண்: 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர், சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு:
தா. கருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர், யாழ் தையலகம், வ.உ.சி. வீதி, உடுமலை - 642 126. கை பேசி: 9788324474 - பெரியார் திராவிடர் கழகம்

நன்றி: அதிஅசுரன்

இந்திய இராணுவ வாகனத் தாக்குதல், ஈழஆதரவுப் போராட்ட வழக்குகளுக்கான நிதி

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் முழுதும் பெ.தி.க வினர் நடத்திய பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப்பயணங்கள், ஆர்ப்பாட்டங்கள், முறையாக அறிவித்த மற்றும் அறிவிக்காத போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தொகுத்து இணையத்தில் பதிவு செய்யுங்கள். களத்தில் இறங்காமல் இணையத்தில் மட்டுமே சவடால் அடிக்கும் புரட்சியாளர்கள் நிறைந்துள்ள காலம் இது. ஆனால் களத்தில் தொடர்ந்து உழைக்கும் உங்கள் அமைப்பு இணையத்தில் வரலாற்றில் பதிவு செய்வது அவசியம் என இணைய நண்பர்கள் பலர் அடிக்கடி கேட்டுகொண்டதால் இயன்ற அளவு தோழர்களிடம் கேட்டு எழுதியுள்ளேன். விடுபட்ட நிகழ்வுகளை இதைப் படிக்கும் தோழர்கள் தெரிவித்தால் இணைத்துக்கொள்ளலாம். பெ.தி.க வின் செயல்பாடுகள், அதனால் தோழர்கள் அனுபவிக்கும் தொல்லைகள், அந்தத் தொல்லைகளைத் தீர்க்கும் வழிகள் என்ற வரிசையில் பதிவு செய்துள்ளேன்.

தமிழர்களைக் கொன்றுகுவிக்கும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்தும், இந்திய இராணுவ உதவியை நிறுத்தக்கோரியும் தமிழ்நாடுமுழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று 2008 ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியத் தலைநகரான புதுடில்லியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி நிறைவில் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகத்தில் கையெழுத்துப் பிரதிகளை அளித்தோம். தமிழ்நாட்டிலிருந்து 1000 தோழர்கள் தனி இரயிலில் புதுடில்லி சென்று நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில் மீண்டும் 1980 களைப் போன்ற ஈழஎழுச்சியைத் தொடங்கி வைத்தது.

2008 மார்ச் 11

அன்று மாலை 5.30 மணியளவில் தமிழ்நாட்டில் குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவ முகாமில் சிங்கள வெறிபிடித்த முக்கிய சிங்களத் தளபதிகள் ஆறுபேருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதைக் கண்டித்து பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2008 அக்டோபர் 11

கோவையில் பெரியார் திக வின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரிகளில் இலங்கை அரசு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 அக்டோபர் 13

இலங்கைக்கு உதவி வரும் இந்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் தலைமைச்செயற்குழு உறுப்பினர் இல.அங்கக்குமார் தலைமையில் மாவட்டத்தலைவர் துரைசாமி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

2008 அக்டோபர் 14

கோவை. ஈரோடு. தூத்துக்குடி. திருச்செந்தூர் ஆகிய நகரங்களில் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து பெ.தி.க சார்பில் கண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஈரோட்டில் இந்து ஆங்கில ஏடுகள் முழுவதும் அதிகாலை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய உடனேயே தீவைத்து கொளுத்தப்பட்டது. பெரியார் தி.க மாவட்டப் பொறுப்பாளர் குமரகுரு உட்பட இன உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து ஆங்கில ஏட்டின் கோவை அலுவலகம் தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் முற்றுகையிடப்பட்டது. அலுவலகம் தாக்கப்பட்டதாகவும். ஏடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் 10 தோழர்கள் கடும் சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.

2008 அக்டோபர் 22

தூத்துக்குடியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம்

2008 நவம்பர் 2, 9

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரியும், தமிழ்ஈழத்தை அங்கீகரிக்கக்கோரியும் கோவை அருகே உள்ள சூலூரில் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
09.11.2008 அன்று கோவை பெரியநாயக்கன் பாளையம் ஸ்ரீராம் திரையரங்கம் முன்பு காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 நவம்பர் 3

இலங்கைக்கு உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒருநாள் கடைஅடைப்புப் போராட்டம்

2008 நவம்பர் 10

ஈழத்தமிழரைக் காக்கக்கோரி திண்டுக்கல்லில் அனைத்து முற்போக்கு அமைப்புகள், தொண்டுநிறுவனங்களை ஒருங்கிணைத்து சுமார் 5000 பேர் பங்கேற்ற மாபெரும் காயக்கட்டு ஊர்வலம் மாவட்டத்தலைவர் துரை.சம்பத் தலைiமையில் நடைபெற்றது.

2008 நவம்பர் 12

ஈரோட்டில் பெ.தி.க மாவட்டச் செயலாளர் இராம.இளங்கோவன் தலைமையில் இராஜபக்ஷே கொடும்பாவியை பாடைகட்டி இழுத்துச் சென்ற 150 தோழர்கள் கைது.
2008 நவம்பர் 14
ஈழத்தமிழர்களைக் காப்பாற்றக்கோரி ஏற்காட்டில் 67 மலைகிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி.

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் மாநிலம் முழுவதும் தொடர் பரப்புரைப் பயணம்

2008 நவம்பர் 25

சேலத்தில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அனைத்துக்கட்சி கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தை பெ.தி.க ஏற்பாடு செய்தது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 தோழர்கள் கைது.

2008 நவம்பர் 26

தூத்துக்குடியில் ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக்கோரி தலைமைச் செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் கண்டனப் பேரணி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2008 நவம்பர் 18 முதல் டிசம்பர் 1 வரை

மருத்துவர் நா.எழிலன் தலைமையில் தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும். போரை நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் 15 நாள் தொடர் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர். பயணத்தில் பெ.தி.க மாணவர்கள் பங்கேற்றனர்.

2008 டிசம்பர் 15

புதுச்சேரியில் பெ.தி.க, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, லோக்ஜன சக்தி, ஃபார்பர்டு ப்ளாக், தேசியவாத காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழத்தமிழரைக் காக்கக் கோரியும் போரை நிறுத்தக் கோரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வான் மற்றும் சரத்பவார். பிஸ்வாஸ் ஆகியோரையும் சந்தித்து ஈழத்தமிழருக்கு ஆதரவு திரட்டினர்.

2008 டிசம்பர் 19

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

2008 டிசம்பர் 20

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன், தங்கபாலு கொடும்பாவிகள் எரிப்பு

சேலத்தில் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

பழனியில் காங்கிரஸ்கட்சிக் கொடி பல்வேறு இடங்களில் எரித்து தொங்கவிடப்பட்டன. தோழர்கள் மருதமூர்த்தி, நல்லதம்பி உட்பட பல தோழர்கள் கைது.

2008 டிசம்பர் 21

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி ஈரோடு. ஏற்காடு, திருச்செந்தூர், குறும்பூர் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.

2008 டிசம்பர் 22

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி சேலம் மாவட்டம் கொளத்தூரில் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம், தங்கபாலு கொடும்பாவி எரிப்பு. 50 பெண்கள் 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்பு. 60 தோழர்கள் கைது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு பாடைகட்டி, காங்கிரஸ் கொடியைச் செருப்பால் அடித்து ஊர்வலம் நடைபெற்றது.

2009 ஜனவரி 8

ஈழத்தில் போரை நிறுத்தக் கோரியும், இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்தும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையில் சுமார் 700 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009 ஜனவரி 9

திருச்சியில் நீதிமன்ற வளாகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2009 ஜனவரி 18

கோவைக்கு வந்த இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கருப்புக்கொடி காட்டிய பெ.தி.க தோழர்கள் கைது.

2009 ஜனவரி 20

கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பெ.மணியரசன். சீமான் ஆகியோர் கோவை சிறையிலிருந்து விடுதலை. கோவையிலிருந்து மேட்டூர்வரை ஆயிரக்கணக் கான தோழர்கள் உற்சாக வரவேற்பு.

2009 ஜனவரி 21

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம். மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை யில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், பழனி,சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

2009 ஜனவரி 31

சென்னையில் இலங்கை வங்கி தாக்கப்பட்டது. தலைமைச்செயற்குழு உறுப்பினர் கேசவன் உட்பட பல தோழர்கள் கைது.


இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பும் தஞ்சை விமானப்படை அலுவலகத்தை - விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் த.தே.பொ.க பொதுச் செயலாளர் மணியரசன், பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி. ஆதித்தமிழர் பேரவை, தமிழர்கழகம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்டது. சுமார் 250 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009 பிப்ரவரி 1

ஈழத்தமிழர் மீதான போரை நிறுத்தக் கோரியும் மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் வண்ணமும் கொளத்தூரில் கடை அடைப்பும் கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

தூத்துக்குடியில் முத்துக்குமரன் வீரவணக்கப் பேரணி

2009 பிப்ரவரி 2

திண்டுக்கல்லில் சிங்கள அரசைக் கண்டித்து அனைத்துக்கல்லூரி மாணவர்களையும் திரட்டி மாபெரும் கண்டனப் பேரணி. வகுப்புகள் புறக்கணிப்புப் போராட்டம்.

2009 பிப்ரவரி 4

இலங்கைத்தமிழர்பாதுகாப்பு இயக்கம் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழுமூச்சுடன் செயல்பட்ட பெ.தி.க தோழர்கள் பேருந்து உடைப்பு, மத்திய அரசு அஞ்சல் அலுவலகம் எரிப்பு போன்ற கடுமையான குற்றங்களின் அடிப்படையிலான வழக்குகளில் திருப்பூர், கோவை தோழர்கள் கைது.
கொளத்தூரில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்திய வழக்கில் ஈசுவரன், சசிக்குமார் உட்பட 13 தோழர்கள் கைது.
கொளத்தூர் விசு, குமார் ஆகிய இரு தோழர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

2009 பிப்ரவரி 20

இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்தியாவைக் கண்டித்து இந்தியஅரசின் வருமானவரி அலுவலகங்களை இழுத்து மூடும் போராட்டம் தஞ்சை, மதுரை,ஈரோடு, புதுச்சேரி, சென்னை, கோவை சேலம் ஆகிய நரங்களில் நடைபெற்றது.

2009 பிப்ரவரி 22 முதல் 28 வரை

சேலம் மாநகரில் ஈழத்தமிழர்களுக்கு உதவுங்கள் என்ற தலைப்பில் தொடர்கூட்டங்கள் நடைபெற்றன. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

2009 பிப்ரவரி 26

திண்டுக்கல்லில் ஈழப்போரைநிறுத்தக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத்தலைவர் உரை. இராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றிருந்தால் பாராட்டுவோம் எனப் பேசியதற்காக தேசியப் பாதுகாப்புசட்டத்தில் மார்ச் 2 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

2009 பிப்ரவரி 28

தூத்துக்குடிக்கு வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி, அவரது படத்துக்கு செருப்படி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தலைமையில் பெ.தி.க தோழர்கள் கைது.

2009 மார்ச் 7 முதல் 16 வரை

தமிழ்நாடு முழுவதும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள்.

2009 மார்ச் 20

புதுவையில் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் கொளத்தூர் மணி, சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் வாயில் கருப்புத்துணியைக் கட்டிக்கொண்டு கைவிலங்குடன் கண்டன ஆர்ப்பாட்டம்.

2009 மார்ச் 29

பெ தி க மாநில செயற்குழுவில் ஈழத்தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் - திமுக கூட்டணியைத் தோற்கடிப்பீர் என தீர்மானம்.

2009 ஏப்ரல் 7

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் மாவட்டச்செயலாளர் மார்டின் தலைமையிலும் புதுச்சேரியில் மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

2009 ஏப்ரல் 12

இந்தியஇராணுவமே இலங்கையை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் கோவையிலுள்ள இந்திய இராணுவ அலுவலக முற்றுகைப் போராட்டம். பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தோழர்கள் பங்கேற்பு. 400 தோழர்கள் கைது.
2009 ஏப்ரல் 14 முதல் 26 வரை

14 ஆத்தூரிலும், எப்ரல் 16 தூத்துக்குடியிலும், ஏப்ரல் 19 இளம்பிள்ளையிலும், ஏப்ரல் 26 நங்கவள்ளியிலும் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக இரசாயன குண்டுகளையும், பாஸ்பரஸ் விசவாயுத் தாக்குதலையும் நடத்திவரும் சிங்கள - இந்திய அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றன.

2009 மே 2

கொச்சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு செல்ல இருந்த இராணுவ தளவாடங்கள் அடங்கிய இந்திய இராணுவ லாரிகள் கோவை நீலம்பூர் புறவழிச்சாலையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் தடுத்து நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் இராணுவ வீரர்களையும், லாரிகளையும் தாக்கினர். ஈழத்தமிழர்களைக் கொல்லப் பயன்படுத்த இருந்த ஆயுதவண்டிகளைத் தடுத்ததற்காக பொதுச்செயலாளர் அவர்கள் மீதும், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் இலட்சுமணன், ம.தி.மு.க மாணவரணி செயலாளர் சந்திரசேகர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

2009 மே 4

தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத்தலைவர் விடுதலை செய்யப்பட்டார். கோவை தாக்குதலைக் காரணம்காட்டி தமிழகம் முழுவதும் முக்கியத்தோழர்கள் கைது வேட்டை.

2009 மே 5

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உட்பல தமிழ்நாடு முழுதும் பல்வேறு ஊர்களில் தோழர்கள் கைது.

மேற்கண்ட பட்டியல் முழுமையானதல்ல. இன்னும் சில மாவட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. எனவே பட்டியலை முழுமையாக்க இயலவில்லை.

தேர்தலில் எதிரி காங்கிரசும் துரோகி தி.மு.க வும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி முழுவீச்சில் செயல்பாட்டில் இறங்கிய அனைத்து மாவட்டத் தோழர்களும் காவல்துறையால் மிரட்டப்பட்டனர். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற குறுந்தகட்டைத் தேடுகிறோம் என்ற பெயரில் தோழர்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பெண்களை மிரட்டினர். கோவை கதிரவன், கோபி இளங்கோவன் ஆகிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர், கொளத்தூர். சென்னை இராயப்பேட்டை படிப்பகங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளும் காவல்துறையின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு குறுந்தகடு விநியோகம் கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டது. மத்தியசென்னையில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற இராயப்பேட்டை தோழர்கள் மீது பிணையில் வெளிவர இயலாத கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யட்டனர். ஈழத்தமிழர் என்ற சொல்லையே பயன்படுத்தத் தடை போடப்பட்டது. இராயப்பேட்டை படிப்பகம் தி.மு.க காலிகளால் சூறையாடப்பட்டது. அங்கிருந்த பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்திய காலிகளைக் கைதுசெய்யக் கோரி அப்பகுதி பொதுமக்களும் பெண்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றபோது அந்தப் பெண்களும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தொடர்ச்சியாக 15 மாதங்களாக பெரியார்திக தோழர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி, கொடும்பாவி எரிப்பு, கைது, சிறை, நீதிமன்றம் என ஒரே வட்டத்தில் சுற்றிச்சுற்றி வருகின்றனர். பெரும்பான்மையான தோழர்கள் தினசரி உழைத்தால்தான் வருமானம், சோறு என்ற நிலையில் வாழ்பவர்கள். துண்டறிக்கை அச்சிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு நிதிதிரட்ட முடியும். ஆனால் திடீர் திடீர் என தலைமையால் முறையாக அறிவிக்கக்கூட நேரமில்லாமல் நடத்தப்படும் போராட்டங்கள் அதனால் ஏற்படும் கைது நடவடிக்கைகள், சிறைப்படுதல் போன்றவைகள் தொடர்ந்து நடப்பதால் நிதிதிரட்டுவதும் இயலாத செயலாகப்போய்விட்டது.
தலைவர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் பொதுச்செயலாளர் சிறைப்படுத்தப்படுகிறார். முக்கியத் தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். நிதி திரட்டலைக்கூட திட்டமிட்டுச் செய்ய காலஅவகாசம் கொடுக்காமல் அடுத்த கைது உடனே நடக்கிறது. அவ்வப்பகுதிகளில் உள்ள தோழர்கள் வட்டிக்கு கடன் வாங்கி சிறையில் உள்ள தோழர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றனர். ஆனால் சிறையில் உள்ள தோழர்களின் வருவாயை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினர் நிலை இன்னும் மோசம். அவ்வாறு உள்ள குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், சிறைப்பட்ட தோழர்களுக்கு தேவையானவற்றை உதவவும், தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்கள் அனைத்திலும் நடக்கும் பெ.தி.க மீதான வழக்குகளைச் சந்திக்கவும் உங்களால் இயன்ற அளவு நிதி வழங்கி உதவுங்கள். எமது போராட்டத்திற்கு உங்களது பங்கைச் செலுத்துங்கள்.


ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
நிதிக் குழுவினர்: வே. ஆறுச்சாமி, பொள்ளாச்சி இரா. மனோகரன், இல. அங்ககுமார், சு. துரைசாமி, வழக்கறிஞர் சாஜித், கோவை கோபால்.
வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.
தா.செ.மணி, கணக்கு எண்: 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர், சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு:
தா. கருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர், யாழ் தையலகம், வ.உ.சி. வீதி, உடுமலை - 642 126. கை பேசி: 9788324474 - பெரியார் திராவிடர் கழகம்

நன்றி: அதிஅசுரன்

பகலவன் குழுமத்தின் சிறப்பு அறிவிப்பு....

தோழமைக்குரிய உறவுகளுக்கு பகலவன் குழுமத்தின் வணக்கம் ,






வருகின்ற 2 மாத இடைவெளியில் பகலவன் குழுமத்தின் சார்பாக சென்னையில் பகலவன் இணையதளம் அறிமுக நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். அந்நிக்ழச்சியில் கலந்து கொள்ள குழுமத்தின் சார்பாக அழைக்கும் பொருட்டு, அழைப்பிதழை நேரடியாக உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்..தங்கள் முகவரியை பொது குழுமத்தில் வெளியிடாமல் பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு தனி மடலில் அனுப்பி வையுங்கள்.admin@pagalavan.in

அதோடு, நமது அடுத்த கட்ட நகர்விற்கு...பகலவன் இணைய தள(www.pagalavan.in) தொடக்கத்திற்கான முன்வரைவாக கீழ்க்கண்ட பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் தக்க சான்றிதழ்களும் குழுமத்தின் சார்பாக அளிக்கப்படும்.

1) நாளொரு நூல் அறிமுகம்.
2) வரலாற்றில் இன்று
3) உலக பகுத்தறிவுவாதிகள்
4) அறிவியல் கண்டுபிடிப்புகள்
5) தமிழின் தொன்மை
6) உலக வரலாறு
7) சிறுகதைகள்
8) கவிதைகள்
9) நாட்டுப்புற பாடல்கள்/கலைகள்
10) இழந்த அடையாளங்கள்
11) ஊர் பெருமை(தாங்கள் சார்ந்த அல்லது பயணம் செய்து அனுபவப்பட்ட ஊர்களை குறித்த பகிர்வு)
12) மாற்று சினிமா
13) சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
14) சமையல் கலை
15) சிறுதொழில்களின் அறிமுகம்
16) கல்வி குறித்த கேள்வி/பதில்கள்
17) ஆசிரியர் குழுவின் கேள்வி பதில்கள்
18) கேலிச்சித்திரம்

இவை மட்டுமில்லாது,
நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ற சிறப்பு பகுதியையும் இணைக்க இருக்கிறோம்...
அந்த பகுதியில், நீங்கள் கேட்கும் கேள்விகளை பிரபலங்களிடம் கேட்டு அதற்கான பதிலை நாங்கள் தங்களிடம் பகிர இருக்கிறோம்...


மேற்கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் வழங்கி நம் புதுத்தளம் சிறக்க உதவுங்கள்...


நன்றி


பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்

பகலவன் திரட்டி | வெளியானவை



பகலவன் திரட்டி | வெளியானவை


இலங்கையின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு

Posted: 20 Aug 2010 01:01 PM PDT

இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை அரசு தற்போது இந்திய மீனவர்களினையும்

4 Vote(s)

புலிகளின் உறுப்பினர்களே அகதிகள் அரசாங்கம்-விடுதலைப்புலிகள் இல்லை: கனேடிய ஊடகம்.

Posted: 20 Aug 2010 11:19 AM PDT

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவாகவே, அதிக எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக கனேடிய ஊடகம் ஒன்று

4 Vote(s)

நமது போட்டோவை பென்சிலால் வரைவதுபோல் எழிதில் அமைக்க

Posted: 19 Aug 2010 12:22 AM PDT

நமது புகைப்படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமானவர்களின் புகைப்படத்தையோ பென்சிலால்(sketch)வரைந்து பார்க்க அனைவருக்கும் ஆசைதான், ஆனால் நம்மில் பலருக்கு வரைவது என்பது தெரியாத ஒன்று அப்படியே தெரிந்தாலும் எதார்த்தமாக வரைவது சிரம்மம் மற்றும் நேரமும் விரையமாகும்.


ஒருநிமிடத்தில் நமது புகைப்படத்தை பென்சிலால் ஆன்லைனில் அற்புதமாக வரைந்துவிடலாம் இத்தலம் சென்றால்.


அதோடுமட்டும்

5 Vote(s)




{பகலவன் குழுமம்} - முக்கிய மின்னஞ்சல்


அனைத்து தோழர்களுக்கும் குழுமத்தின் சார்பாக வணக்கங்கள்
                                 இது எனது தனிப்பட்ட கருத்து. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 
இக்குழுமம் ஏன்? எதற்காக தொடங்கப்பட்டது. குழுமத்தில் முகப்பில்,
 
  "இது முழுக்க முழுக்க தமிழுக்காக,தமிழால்,தமிழுடன் காதல் கொண்டவர்களுக்கு மட்டும். தமிழ் மொழியில் தீராத அன்பு கொண்ட தமிழ் நெஞ்சங்களுக்கு மட்டும் உரிய குழுமம் இது. தமிழில் படைப்புகள் இயற்ற விரும்புபவர்களும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்கவும், படைப்பாளிகளின் ஆக்கங்களை படிக்கவும் , விமர்சிக்கவும், சீர் தூக்கி நிர்ணயிக்கவும் நல்ல தமிழ் ஆர்வலர்களும் ஆர்வமுள்ளவர்களும் ஒன்றிணையத் தகுந்த இல்லம் இது. இக் குழுமம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மற்றும் பல சுவையான இழைகளை உருவாக்கி சகல தரப்பு சுவைஞர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்ற ஆவலுடன் உருவாக்கப்பட்டுள்ளது."
 
  இப்படி குறிப்பிட்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான் சொல்ல கூடியவை யாருக்கு பொருந்தமாக இருக்குமோ அவர்களுக்கு தான்.  பகலவன் குழுமமானது துவங்கி ஆறரை மாதங்களுக்கு மேல்  ஆனா பிறகும், இக்குழுமத்தை பற்றி அரசியல் குழுமம், அந்த கட்சிக்கு ஆதரவான குழுமம், இந்த கட்சிக்கு ஆதரவான  குழுமம் என்று பல வீண் விமர்சனங்கள் எழுகின்றன. இது தேவை தானா?

தோழர்களே அந்த அரசியல் மாநாடு நடந்தது, இந்த அரசியல் மாநாடு நடந்தது, இவர் இப்படி சொன்னார், அவற் அப்படி சொன்னார், மாநாடு இங்கு  நடக்கும், அங்கு நடக்கும், அரசியல் தலைவர்கள் அவர், இவர் வருகிறார், அவர்  அப்படி செய்வது பிடிக்கவில்லை, இவர் செய்வது பிடிக்கவில்லை, இப்படி அரசியல் செய்திகள் எது நீங்கள் அனுப்பினாலும் அவைகள் அனைத்தும் முடுக்கப்படும்.

தயவு செய்து தினசரி செய்திகளை யாரும் வெளியிடவேண்டாம். இக்குழுமம் மூலம்  அன்றைய செய்திகளை அனைவருமே பெறுகிறோம். இருப்பினும் அதையே மீண்டும் ஒரு மின்னஞ்சலாக அனுப்புவதை தவிர்க்கவும். வெறுமனே அரசியலை மட்டுமே பேசுவதின் மூலம் மனிதனின் வாழ்வு முன்னேறுமா? அரசியலை பேசுபவர்கள் அதனைப் பற்றி வீண் வாதங்களில் ஈடுபடுபவர்கள் மின்னஞ்சல்கள் தடைசெய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  எந்த கட்சிக்கும் ஆதரவு தரக்கூடிய குழுமம் அல்ல இப்பகலவன் குழுமம். 

தமிழோடு, ஒற்றுமை, சமூக  விழிப்புணர்வு, வாழ்க்கை முன்னேற்றம், சமூக முன்னேற்றம், உலக தத்துவங்கள், தமிழ் கலைகள்,  மறக்கப்பட்ட போராளிகள்,  சமூக முன்னேற்றத்திற்காக போராடிய தலைவர்கள்,  விழிப்புணர்வு பாடல்கள், கவிதைகள், கதைகள்,  இப்படி பல விஷயங்கள் நீங்கள் பகிர்ந்துக்கொள்ளலாம்.

அரசியலை பற்றி உங்கள் கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம். அதனால் யாரின் மனமும் நோகாத வண்ணம் பார்த்துக் கொள்ள  வேண்டும்.   வீண் வாதங்கள் செய்ய இக்குழுமத்தில் இடமில்லை.  வீண் வாதங்கள், வீண்  பேச்சுகள் ஏதேனும் நடந்தால் அவர்கள் இக்குழுமத்தில் இருந்து  வெளியேற்றப்படுவது உறுதி.

குழுமத்தின் மூலம்   அனைவரும் தனக்கு தெரிந்த, தனக்கு பிடித்த ஒன்றை பகிர்ந்துக்கொள்வதினால், பல அறியா தகவல்கள் அனைவரும் அறிய வாய்ப்பு உள்ளது. அதைவிட்டு விட்டு வெறுமனே அரசியலை பற்றி விவாதிப்பது எந்த விதத்தில்  நியாயம்?. இதனால் யாருக்கு லாபம், யாரும் நட்டம். ஒன்றுமே இல்லை.  

உங்களின் பயணங்கள், பயண அனுபவங்கள், சமீபத்தில் படித்த புத்தகம், கற்றுக்கொன்ற ஒரு தத்துவம், விளையாட்டுக்கள், இப்படி பகிரலாமே.   உங்கள் மனம் கவர்ந்த தத்துவ பாடல்கள் ( பழைய திரைப்படங்களின் தத்துவ பாடல்கள்) , விழிப்புணர்வு பாடல்களை பகிரலாமே. தங்களுக்கு பிடித்த குறும்படங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வேற்று மொழி கவிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள்,  இப்படி பகிரலாமே. உங்களுக்கு பிடித்த புரட்சியாளர்கள், உலகம் மறக்காத முக்கிய நிகழ்வுகள், தலைவர்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், இப்படியும் பகிரலாம்.

தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் சிறப்புகள் உங்கள் எழுத்து நடையில் ஏற்ற  புகைப்படங்கள் பதித்து அனுப்புவது நன்றாக இருக்குமே.  வேற்று மொழிகளுக்கும், தமிழ் மொழிக்கும் இடையே உள்ள வேறுபாடு நீங்கள் அறிந்த வகையில் சொல்லலாமே.  தமிழ் கலாச்சாரம், வேற்று மாநில, வேற்று நட்டு கலாச்சாரங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே. அறிவியல், வரலாறு, விஞ்ஞானம், பொது அறிவு,ஆன்மீகம், யோகா  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்துணை விஷயங்கள் இருக்கும் போது வெறுமனே அரசியல் மட்டும் பேசுவது தவறு. அரசியலை பற்றி உங்கள் கருது தெரிவியுங்கள் அதனை வரவேற்கிறோம். ஒற்றுமையோடு வாழ்வோம் மகிழ்வாக 

எனவே தோழர்களே,தங்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் நன்மை அளிக்கும்  ஒன்றாக இருக்குமெனில், யார் மனமும் நோகாத ஒன்றாக இருக்குமெனில், புதுமையாக ஒன்றாக இருக்குமெனில், அதனை வரவேற்கிறோம்.மற்றபடி இம் மின்னஞ்சலானது யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.  
 
வாருங்கள் தோழர்களே வீண்வாதங்களை   விட்டு,  பகுத்தறிவோடு, ஒற்றுமையோடு, தமிழ் உணர்வோடு,  அன்பென்னும் மழையில் நனையலாம். காற்றில் ஏறி விண்ணையும் தொடலாம் 



 
 
நன்றி
வணக்கம்
பகலவன் குழுமம்
இது தமிழ் உணர்வாளர்களின் சங்கமம்
 
http://pagalavantamil.blogspot.com/
http://www.periyarl.com/
சென்னை
admin@pagalavan.in

..நாங்க ஆடுனா மட்டும் இடிஞ்சிடுமா... கலைஞருக்கு ”கலைஞனின்“ கடிதம் - கருப்பு கருணா

அன்பான முதல்வர் அவர்களுக்கு...

வணக்கமுங்க.

தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க.

பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத நெனைக்கும்போது கஷ்டமாயிருந்தாலும், ஊரையே நாம ஒதுக்கிவச்சிட்டதா நெனைச்சி ஆறுதல் பட்டுக்கிறோமுங்க.வேறென்ன பண்ணமுடியும்.

இந்த வேதனை ஒரு பக்கம் உள்ளுக்குள்ள அரிச்சிகிட்டே இருந்தாலும்,ஆதிமனுசனின் கலையை..ஒரு பாரம்பரியக் கலையை இன்னும்விடாம வச்சிருக்கோம்கிறத நெனைச்சா பெருமையாவும் இருக்குதுங்க.அந்த சந்தோசத்துல ரெண்டு அடி ஓங்கி அடிப்பேங்க.

நாங்கல்லாம் தாழ்ந்த சாதிங்களாம்.நான் மட்டும் இல்லீங்க, எங்கள மாதிரி இருக்குற நாட்டுப்புறக் கலைஞருங்க எல்லாருமே பெரும்பாலும் தாழ்ந்தசாதிதான்னு சொல்றாங்க.அதுக்கேத்தமாதிரி நாங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா சேரியிலதான் வசிக்கிறோங்க.நாங்களா விரும்பி அங்க வசிக்கலைங்க. அதுதான் ஒங்க இடமுன்னு ..அந்தசேரியதான் எங்களுக்குன்னு ஒதுக்கி குடுத்திருக்காங்க.நாங்களும் காலங்காலமா சரிங்க சாமீன்னுட்டு அங்கயே இருந்துட்டுவர்றோம்.

எங்களமாதியான பெரும்பாலும் நாட்டுப்புறக் கலைஞர்களூம் சேரியிலதான் வசிக்கறாங்களாம்.மோளம் வாசிக்கறவங்க..கொட்டு அடிக்கறவங்க..கரகம் ஆடறவங்க...கூத்து ஆடறவங்க.....புலியாட்டம்..மயிலாட்டம்..ஒயிலாட்டம்..காளயாட்டம்..அப்படீன்னு இருக்குற எங்கள மாதிரியான கலைஞர்களுக்கு பெருசா அப்படி ஒண்ணும் மரியாதை கிடையாதுங்க. தம்மாத்துண்டு இருக்குற சின்னப்பசங்ககூட எங்கள வாடா..போடான்னு மரியாதையில்லாமத்தான் கூப்புடுவானுங்க.தொழிலுக்குப் போற எடத்துல தன்ணிஅடிச்சிட்டுவந்து அட்றா..அட்ற்றான்னு ஆட்டம்போடுவானுங்க.மோளத்த தூக்கிப்போட்டு ஒடைப்பானுங்க.ஆனா இதையெல்லாம் நாங்க கண்டுக்கறது இல்லீங்க.மக்கள சந்தோசப்படுத்தறப்போ இதுமாதிரி சங்கடம்லாம் இருக்கும்தான்னு சிரிச்சிக்கிட்டே அடிக்க ஆரம்பிச்சிடுவோம். வேற என்ன பண்ணமுடியும்.

எங்களுக்கு வருசம்பூரா பெருசா ஒன்னும் வேலைஇருக்காதுங்க.எப்பயாவது சாவு வுழுந்தா வேலை வரும்...கோயிலு திருவிழா வந்தா வேலைவரும். மத்தபடி கட்சி ஊர்வம்,மீட்டிங்க்குக்கு கூப்புட்டாங்கன்னா போவோம்.மீதிநாள்ல அத்துக்கூலி வேலைதான்.ஒழவுக்கூலிக்கு போவோம்..செருப்பு தைக்கிறோம்..மாடு அறுக்குறோம்..எதையாவது செய்ஞ்சி வயித்தக்கழுவவேண்டியிருக்கு.

இப்பதான் கொஞ்சநாளா எங்களயும் திரும்பிபாக்க ஆரம்பிச்சிருக்காங்க. வெளியூருங்கள்ல இருந்தெல்லாம் கூப்டறாங்க. நாங்களும் போயிட்டு வர்றோம். ரெண்டு,மூணு வருசமா ஒங்க பொண்ணு கனிமொயி எங்கள சென்னைக்கு கூப்டு ஆட வச்சாங்க.பார்க்கு..பீச்சீ...ன்னு பல இடங்கள்ல ஆடுனோம். கொஞ்சம் காசும் குடுத்தாங்க.ஏதோ எங்கள கவுரவிக்கிற மாதிரி இருந்துச்சி. நீங்ககூட எங்க ஆட்டத்தப்பாத்து நல்லாயிருக்குன்னு சொன்னீங்க.எங்களுக்குன்னு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்னு கூட ஆரம்பிச்சீங்க.அடையாளஅட்டைக்கூட குடுத்தீங்க.ஆனா நலஉதவிதான் இன்னும் குடுக்கல.

கோயம்புத்தூர்ல நடந்த செம்மொயி மாநாட்டுக்குக்குகூட மோளம் அடிக்க கூப்டாங்க.போய்ட்டுவந்தோம்.பத்துமைலு தூரம் அடிச்சிக்கினே..ஆடிக்குனே வந்தோம்.அப்ப ஒங்களப் பாத்து கையக்கூட ஆட்டுனேன். நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல.இன்னாடா..இம்மாம் விளக்கமா எழுதறான்னு நெனைக்கறீகளா..இம்மாம்நேரம் சொன்னதுல ஒன்ண நீங்க கவனீச்சீங்களா அய்யா..இந்த நிகழ்ச்சி எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் நடத்தியிருக்கோம். ஒன்ணக்கூட மேடையிலயோ...பெரீய்ய மண்டபத்துலயோ நடத்தல. ஆனா இதே நிகழ்ச்சியில கலந்துகிட்ட மத்தவங்கள்லாம்..அதாங்க...இந்த வீணை வாசிக்கறவங்க...டொய்ங்...டொய்ங்..ன்னு வயலின் வாசிக்கறவங்க...சங்கீதம் பாடறவங்க...கர்னாடக பாட்டு பாடறவங்க..பரதனாட்டியம் ஆடறவங்க..இவங்கெல்லாம் பெரியபெரிய மேடையிலதான் வாசிச்சாங்க.ஒருத்தருகூட தெருவுக்கு வந்து பாடல...ஆடல...இது ஏன்னு எனக்கு புரியல. எங்கூட இருந்தவங்ககிட்ட இதப்பத்திக் கேட்டேன். அப்பிடியெல்லாம் கேக்கக்கூடாது..அவங்கள்லாம் ரொம்ப பெரியவங்க..ன்னு சொன்னாங்க. நானும் சரிதான்னுட்டு கம்முனு போய்டுவேங்க. ஆனா ஒரு கேள்வி மட்டும் எனக்குள்ளயே கேட்டுக்குவேன்..”நமக்கு மட்டும் எப்பவும் தெருவுதானா...”என்ற கேள்விதாங்க அது.

தெருவுல ஆடறது ஒண்ணும் கேவலமில்லீங்க. நாங்க அதை கேவலமா நெனைக்கலீங்க.தெருவுலதான் பொறந்தோம்..தெருவுலதான் வாழறோம்...அங்கயே சாவறோம்..ஆனா..நாங்க மட்டும் எப்பவும் தெருவுலதான் ஆடணுமாங்கற கேள்விதான் என்ன துரத்திக்கிட்டேயிருக்கு. அந்தக் கேள்வி இப்ப எனக்கு மறுபடியும் வந்துடிச்சிங்க.அதுவும் நீங்க வெளியிட்டிருக்கிற ஒரு அறிவிப்பாலதான், அந்த கேள்வி மறுபடியும் வந்துடுச்சிங்க.

அதுத்த மாசம் ரெண்டு நாளு தஞ்சாவூர்ல நீங்க விழா நடத்தப் போறீங்களாமே..ராஜராஜசோழன் கட்டுன பெரியகோயிலு ஆயிரமாவது ஆண்டுவிழாவ கொண்டாடப் போறீங்களாமே.அந்தவிழாவுல எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடக்கும்னு நீங்க அறிவிச்சதுல இருந்துதாங்க அந்தக் கேள்வி மறுபடியும் கெளம்பிடுச்சி.எங்களுக்கு வாய்ப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க. ஆனா.. இப்பவும் முதல்நாள் நிகழ்ச்சியில...காலையிலயிருந்து தஞ்சாவூர்ல தெருவோரங்கள்ல நாங்க நிகழ்ச்சி நடத்துவோம்னு அறிவிச்சிருக்கீங்க.அதேசமயம்,அன்னிக்கி சாயங்காலம் பெரியகோயில் உள்ளாற பத்மா சுப்ரமணியம் தலைமையில ஆயிரம் பேரு பரதநாட்டியம் நடத்துவாங்கன்னும் அறிவிச்சிருக்கீங்க.

இது என்னங்க நியாயம். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தெருவு..பரதனாட்டியத்துக்கு கோயிலு.. கலைகள்னா எல்லாக்கலைகளுமே ஒண்ணுதானுங்க...எந்தக் கலைஞனுக்கும் உழைப்பு ஒன்னுதானுங்க..வியர்வை ஒண்ணுதானுங்க..அதுல அடிக்கிற் நாத்தமும் ஒண்ணுதானுங்க...அதுல ஏற்றத்தாழ்வு பாக்குறது..வித்தியாசமா நடத்துறது சரியாங்க. ஒருவேளை நாங்கள்லாம் தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்கங்கிறதால எங்க கலையும் தாழ்த்தப்பட்ட கலைகள்னு முடிவு பண்ணி கோயிலுக்குள்ள வுடக்கூடாதுன்னு தெருவுலயே நிறுத்திட்டீங்களா..? அல்லது எங்க கலைகளுக்கு கோயிலுக்குள்ள நடத்துற அளவுக்கு தகுதியிலையின்னு முடிவுபண்ணிட்டீங்கள..?

உலகத்திலயே எந்த தலைவருக்கும் இல்லாத பட்டப்பேரு ஒங்களுக்கு இருக்கு.’கலைஞர்’னு பேரு வச்சிகிட்டு கலைஞர்களை இப்படி தெருவுல நிறுத்தறீங்களே..ஒருவேளை பரதனாட்டியம் ஆடறவங்கதான் கலைஞர்கள்..மத்தவங்கள்லாம் கலைஞர்கள் இல்லைன்னு நீங்களாவே முடிவுக்குவந்துட்டீங்களா..? ஒங்க ஆட்சியில என்னென்னமோ..இலவசமா குடுக்கறதா சொல்றீங்க.அரிசி குடுக்கறோம்...மளிகை கொடுக்கறோம்..டீவி குடுக்கறோம்..ரெண்டு ஏக்கரு நெலம் குடுக்கறோம்...வூடு குடுக்குறோம்...அப்படீன்னு என்னென்னமோ குடுக்கறதா சொல்றீங்க...அதையெல்லாம்விட முக்கியம் மானமும் மரியாதையும்தாங்க. ‘மானமும் அறிவும்தான் மனுசனுக்கே அழகு’ன்னு பெரியாரு கூட சொல்லியிருக்காருங்க. நான் அவருகிட்டதான் வளர்ந்தேன்னு சொல்லிக்கறீங்க..இது ஒங்களுக்கு தெரியாதா..?

அதனால எங்களமாதிரி நாட்டுப்புறக் கலைஞர்களும் தஞ்சை விழாவுல கோயில்ல ஆடறதுக்கு இடம் குடுங்க.பெரிய கோயில் சுவத்துல எங்க பறை சத்தமும் கேட்கட்டுமே..புழுதிபடிஞ்ச எங்க காலுங்க கோயிலுக்குள்ள ஆடட்டுமே...யுகம்யுகமா ஒடுக்கப்பட்டிருக்கிற எங்க குரல் பெரியகோயில் கோபுரத்துல எதிரொலிக்கட்டுமே..அடிமைச்சங்கிலி நொறுங்கநொறுங்க திசைகளெல்லாம் அதிர அதிர... நாங்க கோயிலுக்குள்ள ஆடினா..தீட்டு பட்டுடுமா..நட்ட கல்லும் பேசுமோன்னு ரெண்டு நாளைக்கு முன்னாலதானே பேசுனீங்க..அப்புறம் நாங்க ஆடினாமட்டும் கோயில் இடிஞ்சுடுமா..? திட்டமிட்ட இந்த புறக்கணிப்பை...ஒதுக்குதலை...எளிய மனிதர்களை கேவலப்படுத்துவதை ...தடுத்து நிறுத்த...ஒங்க ஒரு கையெழுத்து போதும். செய்ஞ்சீங்கன்னா, சந்தோஷத்துல அடிப்பேன்...

டண்டணக்கா..டண்டன்க்கா...

டண்டணக்கா..டண்டன்க்கா...

இப்படிக்கி...

கருப்பன்

பறை இசைக்கலஞர்

பகலவன் திரட்டி | வெளியானவை



பகலவன் திரட்டி | வெளியானவை


திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

Posted: 18 Aug 2010 09:09 AM PDT

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?

4 Vote(s)

Email delivery powered by Google


பகலவன் திரட்டி | வெளியானவை




பகலவன் திரட்டி | வெளியானவை


உலகில் தாவர உணவுகளை மட்டுமே உண்ணும் பகீரா கிப்லிங்கி சிலந்தி

Posted: 14 Aug 2010 09:35 AM PDT

பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi)எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும்.

4 Vote(s)

ஜெயலலிதா திருச்சியில் பேசியது.என்ன?-டிவிட்டர் துணுக்குகள்

Posted: 14 Aug 2010 08:16 AM PDT

திருச்சியில் இன்று மாலை முதல் ஜெயலலிதா முழங்கி வரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேருரையின் முக்கிய கருத்துக்களை மாயவரத்தான் டிவிட்டரில் படித்தேன்.அது அப்படியே சில துணுக்குக

4 Vote(s)

பால்

Posted: 14 Aug 2010 08:02 AM PDT

பால்

4 Vote(s)

இது பவியின் தளம் .............துளிகள்.: அணிகலன்கள்

Posted: 13 Aug 2010 11:02 PM PDT

நமது தமிழர் பண்பாடுகளில் அணிகலன்களுக்கு முக்கிய பங்கு உண்டு . ஆதி காலத்தில் இருந்தே அணிகலன்கள் அணிந்தார்கள் முன்னோர்கள் . அது இப்போதும் தொடர்கிறது . பணம் உள்ளோர் ஒரு சொத்தாக தங்க நகைகளை வாங்கி ஒரு சொத்தாக, மூலதனமாக வைப்பதுண்டு .

4 Vote(s)

துணைக்குப் போன கோழி ! பாண்டியன்ஜி

Posted: 13 Aug 2010 09:36 PM PDT

விஞ்ஞானச்சிந்தனைகள் மனிதனை எத்தனை உயரத்துக்கு கொண்டுபோனாலும் முன்னேற்றத்துக்கு தடையான இது போன்ற நினைவுகளை இன்னும் மறக்கத்தயாராக இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனிதன் போகலாமா

4 Vote(s)

ஆயிரத்தில் ஒருவன்: நான் அவன் இல்லை

Posted: 13 Aug 2010 08:08 PM PDT

போபால் விஷ வாயு வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிகின்ற இந்த வேளையில்

4 Vote(s)

சளி, வேண்டாம் கிலி

Posted: 13 Aug 2010 08:26 AM PDT

சளி, வேண்டாம் கிலி

3 Vote(s)

பேராசைக்காரிதான்...நீ

Posted: 13 Aug 2010 01:32 AM PDT

பேராசைக்காரிதான்...நீ

4 Vote(s)

ஆணுறை உருவான கதை (condom)

Posted: 13 Aug 2010 12:41 AM PDT

இது A தரச்சான்றுக்குரிய கதையில்லை

5 Vote(s)

வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…

Posted: 12 Aug 2010 10:48 PM PDT

"அண்ணாச்சி இந்த சுற்றுலாவை படமா எடுக்கலாமென்று இருக்கிறேன்"என்று சொன்ன போது அண்ணாச்சி சிரிச்ச சிரிப்பை மறக்கவே முடியாது…அப்படி ஒரு சிரிப்பு…"ஏண்டே அந்த சினிமாக்காரனுங்க தான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டு இருங்கானுங்கன்ன உனக்கு என்னங்கடே வந்தது…" என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாருஅன்றைக்கு என் வாழ்க்கையிலே சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன்…1)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி என்னைக்கும் சிரிச்சுக

5 Vote(s)

சுடும் நிலவு, சுடாத சூரியன்!

Posted: 12 Aug 2010 10:47 PM PDT

அமைதிப்புயல்ஆர்பாட்டமில்லாத பூகம்பம்அக்கினிச்சாரல்பெருமழைக்காதல்ஒரு துளி பெருங்கடல்கைக்குட்டை வானம்பனிமலைச் சூரியன்நடமாடும் சிலைநீலவண்ணக் கவிதைசிறகில்லா தேவதைநீஎன்னைக் கண்டெடுத்தவள்நான்உன்னில் தொலைந்தவன்!0*0வண்ணங்கள் குழைத்துவடித்த சிலையொன்றுசமுத்திரத்திற்கு நிழலாய்வானில் வலம் வருகிறதுநிலவொளியில் மின்னும்சிறகுகள் வான்வெளி முழுதும் மறைக்கிறதுதினம் ஒருமுறை வந்தாலும்தினம் தினம் வானம் பார்த்தசிறுவனாய

5 Vote(s)

ஆனந்தவிகடன்மேனியா!

Posted: 12 Aug 2010 10:47 PM PDT

இந்த வார தலையங்கம்: பிஞ்சுக்குள் செலுத்துவதா நஞ்சு!அப்படி என்ன தான் இருக்கோ அந்த சாதிமயிருல, ஒரு இழவும் புரியல! தேனி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் சென்ற வாரம் ஒரு சாதி மோதல் ஏற்பட தெரிந்ததாம், கவனிக்க அது கல்லூரி கூட கிடையாது பள்ளி, இப்போது தான் சென்னை சட்ட கல்லூரி ரகளையை பார்த்து வெறுத்து போய் அமர்ந்திருக்கிறோம், திரும்பவும் சாதிப்பிரச்சனையா? அதில் எதாவது நன்மை இருக்கா? சுயமரியாதையை

5 Vote(s)

பனித்துளிசங்கரின் கவிதைகள் - ஊனத்தின் முகவரி !!!

Posted: 12 Aug 2010 10:47 PM PDT

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது மனைவி உயிருக்கு போராடுகிறாள் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் உடல் முழுவதும் கொடுமையான நோய்கள் தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள் தொல்லை தரும் பசி என்றுதனது சுயநலத்திற்கு பரிதாப வார்த்தைகளை அடகு வைத்து காசு கேட்காமல் !,பார்வை இல்லை இருந்தும் நேர்வழியில் செல்ல கையில்நீண்ட கம்பியொன்று , உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம் கருப்பு ஒன்றுதான் என்று மீண்டும் சொல்லும் கறுப்ப

5 Vote(s)

வைரமுத்துவின் "தோழிமார் கதை"

Posted: 12 Aug 2010 10:42 PM PDT

Vairamuthu recites his kavithai 'thozhimaar kathai' based on a madurai region folk song

4 Vote(s)

Email delivery powered by Google


பழைய குட்டி கதை .. இதாங்க நடக்குது இலங்கையில்..

பழைய குட்டி கதை .. இதாங்க நடக்குது இலங்கையில்..


அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின்
அட்டகாசம் இருந்தது.என்ன செய்வது அந்த புலியைப் பிடிக்க முடியவில்லை
.அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியை பிடிக்க முடியாத நிலையில்
வேறு நாடுகளிடம் உதவி கோரியது லண்டன், கனடா,பிரான்ஸ் ,யப்பான் இவை யாராலும்
முடியவில்லை

எங்களை கேட்கலையே நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்குறோம் இதைப் பிடிக்க
மாட்டோமா ?

என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான்............. இலங்கைக்கு
அனுமதி அளிக்கப்பட்டது இலங்கை படை காட்டுக்குள்போய் பல மாதங்களாயிற்று.
வ்ருடமாயிற்று போன படை திரும்பவே இல்லை .

கடைசியில் உலகப்படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க
காட்டுக்குள் சென்றன. நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி.

ஒரு மான் தலை கீழாக நெருப்பின் மேல் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது கீழே
இலங்கைப் படையினர் அந்த மானை குண்டாந் தடிகளால் தாக்கிகொன்டிருந்தனர். '
ஒப்புக்கொள் ஒப்புக்கொள் நீதான் புலி '

உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து . ஒரு வருடமா இதையா கேட்டு
வதைத்தனர் ?

அதற்கு அந்த மான் 'பரவாயில்லைங்க . எனக்காவது ஒரு வருடம்தான் . ஆனால்
இலங்கையில் 30 வருடமாக இதைத்தான் பண்றாங்க.என்றது அந்த மான் .


பகலவன் திரட்டி | வெளியானவை


பகலவன் திரட்டி | வெளியானவை


வேலியே பயிரை மேயலாமா?

Posted: 11 Aug 2010 07:43 PM PDT

வேலியே பயிரை மேயலாமா?

5 Vote(s)

ஆயிரத்தில் ஒருவன்: ஏன் பெண் என்று பிறந்தாய்

Posted: 11 Aug 2010 07:40 PM PDT

கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது

5 Vote(s)

அட்ரா சக்க: மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +

Posted: 11 Aug 2010 12:04 PM PDT

10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்ளாஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

4 Vote(s)

ஆந்தைகளின் இராட்சியம்

Posted: 11 Aug 2010 11:08 AM PDT

இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.


5 Vote(s)

உணர்ச்சிகள் இல்லையே உலகம் இல்லை?

Posted: 11 Aug 2010 09:03 AM PDT

உணர்ச்சிகள் இல்லையே உலகம் இல்லை?

5 Vote(s)

நேரடி ஒளிபரப்பிற்க்கு ஜெயலலிதா பயன்படுத்தும் இணையதளம்!

Posted: 11 Aug 2010 12:10 AM PDT

கொட நாடு எஸ்டேட்டில் நடக்கும் அதிகாரிகளின் சர்வே மற்றும் கொட நாடு தி.மு.க வினர் தரும் குடைச்சல்கள்,போராட்டங்களை நேரடி ஒளிபரப்பாக ஜெயலைதா பார்த்து வருகிறாராம்.இன்னும் பல முக்கிய இடங்களிலும் இ

6 Vote(s)

தமிழ் கணினியகம்: விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த

Posted: 10 Aug 2010 09:59 PM PDT

தமிழ் கணினியகம்: விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த

6 Vote(s)




குமரன் பத்மநாதன் என்று அறியப்பட்ட கே.பி. அவர்களுக்கு...!




 உங்கள் நலம் விசாரிக்க வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதாலும், எங்கள் நலம் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையிலும் பரஸ்பர விசாரிப்புக்கள் தேவையற்ற நிலையில் இந்த மடலைப் பகிரங்கமாகவே உங்களுக்கு வரைகின்றேன்.


ஈழத் தமிழினத்தின் அவலங்களைத் தரிசித்த காரணத்தாலும், சிங்களத்தின் மாறாத இனவாத சிந்தனையைப் புரிந்து கொண்ட காரணத்தாலும் தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் நாங்கள் தடம் மாறாத பயணத்தை மேற்கொண்டு வருவது, தற்போதைய உங்கள் அட்டகாசமான இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால், எங்கள் சிந்தனைகளும், எழுத்துக்களும், நியாயங்களும் கூட உங்களுக்கு கோபத்தைத் தரலாம். கட்டாயம் கோபம் வந்தேயாகவேண்டும்.


ஆனாலும் உங்களால் புலம்பெயர் தமிழர்களான எங்களை எதுவும் செய்ய முடியாது. எதுவும் செய்ய முடியாது என்பது, எங்கள் மமதையின் உச்சரிப்பு அல்ல. கொண்ட இலட்சியத்தின் திமிர். உங்களால் எங்களில் சிலரை வீழ்த்த முடிந்தாலும் கூட, அது எங்கள் இலட்சியத்தை இன்னமும் கொழுந்து விட்டு எரியச் செய்யும். அது உங்களது முடி சூட்டுதலுக்கு இசைவானதாக அமையப் போவதில்லை.


'ஒருவனை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவனது நண்பனைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்பார்கள். இப்போது உங்கள் அணிக்கு டி.பி.எஸ். ஜெயராஜும் வந்துவிட்டார். சபாஷ்...! சரியான தெரிவுகளோடுதான் நீங்களும் களத்தில் நிற்கிறீர்கள். ஆனால், திறமை மிகுந்த ஊடகவியலாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் அவர்களது எழுத்துக்களுக்கு தமிழர்களிடையே ரசிகர்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே.


இத்தனை காலம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து? பணியாற்றிய உங்கள் தரப்பு நியாயங்களை எழுத தேசிய ஊடகவியலாளன் எவரும் கிடைக்கவில்லை என்பதிலிருந்தே நீங்கள் இப்போதே தோற்றுப்போய் விட்டீர்கள் என்பதை நீங்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். உங்கள் குறித்த வீடியோப் பதிவுகளில் உங்களைத் தரிசித்தேன்.


அப்பாடா...! முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இவ்வளவு சந்தோசமான ஒரு மனிதரை எங்குமே பார்த்ததில்லைப் போங்கள்... எந்தவொரு துக்கமோ, எந்தவொரு இழப்போ, எந்தவொரு சஞ்சலமோ, எந்தவொரு அழுத்தமோ நெருங்காத ஒரு தமிழரின் முகத்தைத் தேடிக் களைத்த என் விழிகளுக்கு அற்புதமான காட்சியாக இருந்தது.


எப்படி ஐயா உங்களால் மட்டும் இத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது? உங்கள் மனம் போல, உங்கள் விருப்பம் போல உங்கள் வாழ்வு அமைந்ததனால் வந்த பூரிப்பை உங்கள் முகத்திலும் பேச்சிலும் தரிசித்தேன். சிங்கள தேசத்தில் இப்போது உயிரோடு பிழைத்துள்ள தமிழர்கள் பாக்கியவான்கள். நீங்கள் அதை விடவும் மேலாக, எதிரியின் சிம்மாசன நிழலில் அல்லவா விளையாடுகின்றீர்கள்.


வீரத் தமிழ் மன்னன் எல்லாளனைக் காட்டிக் கொடுத்த அவன் தளபதியும் துட்ட கைமுனுவுடன் தாயம் விளையாடி மகிழ்ந்தானாமே... நானும் படித்திருக்கிறேன். பாவம், எல்லாளன் தமிழனாகப் பிறந்தது அவன் செய்த பாவம் அல்லவா...? நீங்களும், நானும் அதற்கு என்ன செய்யமுடியும்? அன்றும் நீங்கள் இருந்து, எல்லாளன் உங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் அவனும் உயிர் பிழைத்திருப்பான். உங்களால் அப்போது பிறந்திருக்க முடியவில்லை, அது ஆண்டவன் செய்த சதி. விட்டுவிடுங்கள், சரித்திரம் திரும்பியா வரப்போகின்றது?


சிங்களத்தால் அடித்து நொருக்கி, துவைத்துக் காயப்போட்டு, உயிரோடு விட்டு வைத்துள்ள தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களாமே...? அதுவும், புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெற்று புனர்வாழ்வு கொடுக்கப் போகின்றீர்களாமே...? என்ன அற்புதமான சிந்தனை.... பகவத் கீதையில் கண்ணன் சொன்னதை நீங்கள்தான் சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்.


'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது... எதற்காக அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு...' எதற்காகத் தமிழர்கள் அழ வேண்டும்? 'கொன்றவன் கண்ணன்..... கொல்பவன் கண்ணன்....' என்று கீதையே சொல்லும்போது, அந்தக் கண்ணன்தான் ராஜபக்ஷக்கள் என்று நீங்கள் சொல்வதைத் பாவித் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா...?


வர... வரத் தமிழர்களுக்கு விதி மீது நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது... பெரிய மீனைச் சின்ன மீன் சாப்பிடுவதை என்றாவது நிறுத்தியிருக்கிறதா...? அதற்காகச் சின்ன மீன்கள் பெரிய மீன்களோடு சண்டை போட்டுக்கொண்டா இருக்கின்றன...? பெரிய மீன்கள் வாழும் கடலில்த்தான் சின்ன மீன்களும் வாழ வேண்டியிருப்பதால், பெரிய மீன்களை சின்ன மீன்கள் அனுசரித்துத்தான் போக வேண்டும் என்ற உங்கள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.


பெரிய மீன்கள் பசி எடுக்கும்போது, சின்ன மீன்கள் இரையாக வேண்டியது சின்ன மீன்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல், சிங்களம் திமிர் எடுக்கும் காலங்களில் எல்லாம் தமிழர்கள் கொல்லப்படுவதும், எரிக்கப்படுவதும், அடிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் விதியாகத் தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்ற உங்கள் தத்துவத்தை ஏனோ தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.


ஈழத் தமிழர்களின் வாழ்வும், வழமும், மாண்பும், நலமும், மானமும் என எல்லாமே சிங்களத்தால் சூறையாடப்பட்டது தவிர்க்க முடியாதது. எல்லாவற்றையும் துடைத்துவிட்டு, மீண்டும் உங்கள் கரங்களை ஊன்றி எழுவதற்கு முயற்சி செய்யுங்கள்... நீங்கள் எதுவும் கேட்காதவர்களாக இருக்கும்வரை எங்களால் எந்தத் தொல்லையும் இருக்காது என்று சிங்களம் தரும் நல்வாய்ப்பை இந்தத் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற உங்கள் ஆதங்கம் எங்களுக்குப் புரியாமல் இல்லை.


இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலைக்கு வந்த பின்னர், தமிழர்களாய் இருப்பதற்கு எதற்காக மானம்? என்ற உங்களது நியாயம் அவர்களுக்கு விழங்குவதாய் இல்லை. அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு விழங்குவதாக இல்லை. அதனால்தான், நீங்கள் உங்கள் உயிர்த் தோழர்கள் கோத்தபாயவுடனும், ஹெந்த விதாரணவுடனும் மூளையைக் கசக்கி, தமிழீழம் எங்கும் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி, ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்து கேள்வி கேட்டு, மீண்டும் சிங்களத்திற்குக் கோபம் மூட்டாமல், அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் திட்டத்தை அரங்கேற்றி வருவதை இந்தத் தமிழ் ஜென்மங்கள் உணர்வதாய் தெரியவில்லை.


உயிர் வாழ்தல் என்பது ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் வரமாகவே உள்ளது. அதை விடவும் எது வேண்டும் அவர்களுக்கு...? 'நான் உயிர்வாழ்தலுக்கான சமரசத்தைச் செய்து கொண்டதனால், சந்தோசமாக இல்லையா...?' என்று கேட்கும் உங்களைப் புரிந்து கொள்கிறார்கள் இல்லையே...! நீங்கள் புத்தரைக் கும்பிட்டதால், கோத்தபாயா குளிர்ந்துபோய் உங்களை ஆரத் தழுவினாராமே... அதற்காகத்தானே தமிழீழம் எங்கும் புத்த விகாரைகளை சிங்களம் விதைத்து வருகின்றது என்பதை இந்தத் தமிழ் மர மண்டைகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனவே...


உங்களால் வரவழைக்கப்பட்டு, கோத்தபாயவுடன் விருந்துண்ண வைக்கப்பட்டவர்களை, புலம்பெயர் தமிழர்கள் துரோகிகள் என்கிறார்களே... 'துரோகி' என்ற வார்த்தைக்கு இந்தத் தமிழர்களுக்கு எப்போதுமே அர்த்தம் புரிவதில்லை. நீங்கள் விடுதலைப் புலிகள் பக்கத்தில் இருக்கும்போது, சிங்கள அரச தரப்புடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே 'துரோகி' என்பதை எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பது?


டி.பி.எஸ். ஜெயராஜ் சொல்கிறார், நீங்கள் வடக்கு - கிழக்கில் விரைவான மீள் குடியேற்றம் செய்யப் போகிறீர்களாம், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விரைவாக விடுதலை செய்யப் போகின்றீர்களாம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி செய்யப் போகிறீர்களாம்... கேட்கச் சந்தோசமாக இருக்கின்றது... இராமன் கால்கள் பட்டு அகலிகை சாபம் நீங்கியது போல், ஒங்கள் கால்கள் பட்டு தமிழீழம் சாபம் நீங்கட்டுமே என்று இந்தத் தமிழர்கள் உங்களை நம்புகிறார்கள் இல்லையே...


ஆனாலும் ஒரு கேள்வி, தமிழீழத்தின் வளமான பகுதிகள் எல்லாம், இராணுவக் குடியிருப்புக்களாக மாற்றப்பட்டு வரும் நிலையில், பாவம் அந்த அப்பாவித் தமிழர்களை எங்கே குடியிருத்த உத்தேசித்துள்ளீர்கள்? அப்படிக் குடியெற்றப்பட்டாலும் அவர்களது உயிர்வாழ்தலுக்கு என்ன உத்தரவாதம்? சிங்களம் திருந்திவிட்டது என்று சத்தியம் செய்கிறீர்களா, அல்லது 'அந்தச் சிங்கங்கள் பசித்தாலும் இப்போது புல்லு மட்டும்தான் தின்னும்' என்று சமாதானம் சொல்லப் போகின்றீர்களா? பிடிப்பதும், அடிப்பதும், அடைப்பதும், விடுவதும் அவன் செயல் என்றே நாங்கள் வாழாவிருக்க..., புலம்பெயர் தேசங்களில் நாங்கள் தூங்கிக்கொண்டு இருக்க..., தமிழீழத்தைக் காவு கொடுத்து சிங்களத்திடம் இரஞ்சி விடுதலை பெற்றுக் கொடுக்கும் உங்கள் தியாகத்திற்கு ஈடு எதுவுமே ஆகாது....


விடுதலைப்புலி என்ற சந்தேகத்தில் நிரூபிக்கப்பட முடியாத குற்றச்சாட்டுடன், அல்லது உங்களைப் போலவே சிங்களத்திற்கு ஊழியம் செய்யத் தயாரான ஒரு சில நூறு போராளிகளின் விடுதலைக்காகவா விடுதலை வேள்வியை விலை பேசி விற்கிறீர்கள்? என்று புரியாத தமிழர்கள் உங்களைத் திட்டுவதும் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கின்றது.


நீங்கள் ஆயுதம் கொடுத்தீர்கள், போராடினார்கள். நீங்கள் சயனைற் கொடுத்தீர்கள், குப்பி கடித்தார்கள். நீங்கள் ஜக்கெற் கொடுத்தீர்கள், அவர்கள் வெடித்துச் சிதறினார்கள். அது அவர்கள் தலைவிதி. இப்போது நீங்கள் உயிர் வாழ்வதற்காய் இந்தத் தமிழர்களிடம் பெரிதாய் என்ன கேட்டுவிட்டீர்கள்? மானத்தையும், வீரத்தையும், சுயமரியாதையையும் மட்டும்தானே கேட்கிறீர்கள். இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை?


நீங்கள் யுத்தத்திற்காகக் காசு கேட்டீர்கள், அள்ளிக் கொடுத்தோம். நீங்கள் அங்காங்கே, சில முதலீடுகள் செய்ததை எப்படிப் பிழை என்று சொல்ல முடியும்? உங்கள் பெயரிலா கனடாவில் நகைக்கடைகள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா தொலைக்காட்சி இருக்கின்றது? உங்கள் பெயரிலேயா கட்டடங்கள் இருக்கின்றன? ஹோட்டல்கள் இருக்கின்றன? உங்கள் பெயரிலேயா கப்பல்கள் ஓடுகின்றன? எல்லாமே பினாமி பெயரில் அல்லவா இயங்குகின்றன.


இதையெல்லாம் உங்கள்மீது குற்றச்சாட்டாக வைத்தால், உலகம் தாங்குமா...? இப்போது, உங்கள் உதவியோடு அழிக்கப்பட்ட தமிழீழத்தைப் புனரமைக்க உங்களிடம் வாரி வழங்குவதுதானே முறை? அதை ஏன் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை...? சிங்களப் படையிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவரும் உயிரோடு இல்லையாமே...? வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற அரசியல் போராளிகளும், தலைவர்களும் கோத்தபாயாவின் உத்தரவோடு சுட்டுக் கொல்லப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்...? அவர்கள் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்வார்கள் என்று எப்படி நம்ப முடியும்...?


சமாதான காலத்தில், உங்களைப் போல் அவர்களும் ஏதாவது ஏற்பாடு பண்ணியிருந்தால் பிளைத்துத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அரசியல் புரியவில்லை. அது அவர்களுடைய தப்பு. ஆனால், உயிரோடு சரணடைந்த பாலகுமாரனும், யோகியும், புதுவை இரத்தினதுரையும் இன்னும் பல அற்புதமான மனிதர்களும் என்னவானார்கள்...? அவர்களும் உங்களைப்போல் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால், உங்கள் நண்பர் அழிக்கச் சொல்லி ஆணையிட்டு விட்டாரா? கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்...


அவர்களது உறவுகள் இறுதிக்கடனுக்காவது அழுது தொலைக்கட்டுமே.... போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வும், போருக்குள் சிதைந்துபோன சிறுவர்களுக்குக் கல்வியுங்கூட வழங்குகிறீர்களாம்... கண்ணா... உன் கருணைக்கு அளவே கிடையாதா...? கொல்பவனும் நீ, கொல்லச் சொல்பவனும் நீ, காப்பாற்றுபவனும் நீ, உயிர் வாழ வைப்பவனும் நீயாகவே எங்கள் கண்ணுக்குக் காட்சி தருகின்றாயே...


பத்மநாபனே...


உன் கருணை வெள்ளத்தால் அழிந்துபோயுள்ள எங்கள் தமிழீழம் அழிழ்ந்து போக வேண்டாம்... உன்னால் முடிந்தால், உன் ஆருயிர் நண்பன் கோத்தபாயா மூலம் எங்கள் மக்களைத் திறந்து விடச் சொல்லு, எங்கள் மக்களை நாங்களே வாழ வைக்க எங்களுக்கு உள்ள தடையை நீக்கச் சொல்லு... நாங்கள் அவர்களை சொர்க்கத்தில் வாழ வைக்கின்றோம்... உனக்கு ஏன் கண்ணா வீண் சிரமம்...? எங்களிடம் யாசித்து எங்களுக்கே அவல் கொடுக்கிறாயே...


தொடரும்...அறிவன்

யாழ் மாவட்டம்

தமிழீழம்