தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பழைய குட்டி கதை .. இதாங்க நடக்குது இலங்கையில்..

பழைய குட்டி கதை .. இதாங்க நடக்குது இலங்கையில்..


அமெரிக்காவில் காட்டின் அருகில் அமைந்த ஒரு கிராமத்தில் புலி ஒன்றின்
அட்டகாசம் இருந்தது.என்ன செய்வது அந்த புலியைப் பிடிக்க முடியவில்லை
.அமெரிக்காவில் முப்படைகளாலும் அந்தப் புலியை பிடிக்க முடியாத நிலையில்
வேறு நாடுகளிடம் உதவி கோரியது லண்டன், கனடா,பிரான்ஸ் ,யப்பான் இவை யாராலும்
முடியவில்லை

எங்களை கேட்கலையே நாங்கள் எவ்வளவு புலிகளைப் பிடிக்குறோம் இதைப் பிடிக்க
மாட்டோமா ?

என்று ஒரு குரல் . யார் ? இலங்கை அரசுதான்............. இலங்கைக்கு
அனுமதி அளிக்கப்பட்டது இலங்கை படை காட்டுக்குள்போய் பல மாதங்களாயிற்று.
வ்ருடமாயிற்று போன படை திரும்பவே இல்லை .

கடைசியில் உலகப்படைகள் அனைத்தும் சேர்ந்து இலங்கைப் படைகளை மீட்க
காட்டுக்குள் சென்றன. நடுக்காட்டில் அவர்கள் கண்ட காட்சி.

ஒரு மான் தலை கீழாக நெருப்பின் மேல் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது கீழே
இலங்கைப் படையினர் அந்த மானை குண்டாந் தடிகளால் தாக்கிகொன்டிருந்தனர். '
ஒப்புக்கொள் ஒப்புக்கொள் நீதான் புலி '

உலகப் படையினர் அந்த அப்பாவி மானை விடுவித்து . ஒரு வருடமா இதையா கேட்டு
வதைத்தனர் ?

அதற்கு அந்த மான் 'பரவாயில்லைங்க . எனக்காவது ஒரு வருடம்தான் . ஆனால்
இலங்கையில் 30 வருடமாக இதைத்தான் பண்றாங்க.என்றது அந்த மான் .