தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கருத்து சுதந்திரத்தை மறுக்காதே! போர் குற்றத்தை மறைக்காதே! - மக்கள் எழுச்சிப் பொதுக்கூட்டம் - கருத்துரிமைக் களம்.

சென்னையில் வரும் வெள்ளி(06-08-10) மாலை 5.30 மணிக்கு மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. தமிழர்களின் கருத்து சுதந்திரத்தை மறுப்பதற்கும் இலங்கை இனவெறி அரசால் நடத்தபெற்ற போர் குற்றங்களை மறைக்கவும் முழுவீச்சாக இறங்கியிருக்கும் அரசை கண்டிக்கும் மக்கள் அனைவரும் இணைகிறார்கள். கருத்துரிமை களம் என்ற அமைப்பு நடத்தும் இந்த நிகழ்வில் தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.