தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காங்கிரசுடன் கள்ள கூட்டு கொண்டு காணாமல் போய்விட்ட விஜயகாந்தும் தேமுதிகவின் அரசியலும் .

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து ஆறு வருடங்கள் ஆகபோகிறது ., இதுவரை அதிமுக மற்றும் திமுக எதிர்ப்பு அரசியலை நன்றாக செய்தார்.
நான்கு வருடத்திற்கு முன்னர் இவரது அரசியலை புதியவர்கள் எழுச்சியாக நோக்கினார்கள்.

Vijaykanth



அதிமுகவை திட்டினாலும் தம்மை "கருப்பு எம்ஜியார்" என்று அழைக்க விட்டு , தமக்கும் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் அமைச்சர்களிர்க்கும் இப்போதைய பல கல்லூரி முதல்வர்களிர்க்கும் உள்ள தொடர்பை உறுதி படுத்தினார்.

 



"எம்ஜியாரை"  அடிக்கடி மேடைகளில்  சொன்னதாலும்  மேலும் கருணாநிதியை கடுமையாக தாக்கி பேசியதாலும்  அதிமுகவில் இருந்தும் பலர் விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

 



ஆனால் இவரது சுயரூபம் , கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுவிட்டது, இவர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவை எனபது இப்போதைய அரசியலை நோக்கும் அனைவரும் நன்றாக உணர்வார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அனுசரணையாக முடிவு எடுக்கும் கட்சியாக தேமுதிக  இப்போது உள்ளது.


காங்கிரஸ் கட்சி திருச்சியில் மாநாடு  போடலாம், தனி ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாம் , ஆனால் அவர்களிற்கு நன்றாக தெரியும் தமிழ்நாட்டில் தமது கட்சி தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட்  தொகை கிடைக்காது என்று அவர்களிற்கு நன்றாக தெரியும்.



இன்னும் ஈழத்தில் அவர்கள் செய்த பாவம் , கொடும் குற்றத்தை தமிழர்கள் மறக்கவில்லை என்பதை நன்றாக அறிவார்கள்.

 


இதனால் தேமுதிகவை ஒரு கருவியாக வைத்து கொண்டு காங்கிரஸ் அரசியலில் காயை நகர்த்துவது அனைவரும் அறிந்த ஒன்று.

 



இந்த காங்கிரஸ் கட்சியின் கள்ள  தொடர்பினாலேயே தேமுதிக கட்சியும் தமிழர் எதிரி கட்சியாக இந்த தேர்தலில் பார்க்கபடபோவதும், தேர்தலில் நான்கு சதவீதமோ அல்லது மூன்று சதவீத வாக்குகளை மட்டும் பெரும் ஒரு கட்சியாக மாரபோவதும் உண்மை.

Vijaykanth

 


திமுக மற்றும் அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் தேமுதிக ஊழலின்  ஊற்றுக்கண்ணாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை , தமிழர்களின் எதிரியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஏன்  ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை என்பதை தமிழ்நாட்டின் வாக்காளர்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.


வாக்களர்களிற்கு பணத்தை பட்டுவாடா செய்தால் மட்டுமே ஒரு சில தொகுதிகளை வெல்ல முடியும் என்ற நிலையில்தாம் இப்போதைய திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உள்ளது.



அந்த பட்டுவாடாவை நம்பி, அதிமுகவும் காங்கிரஸ் கட்சியை விரும்பி தேர்தல் கூட்டணி கண்டால் , அதிமுக வும் மண்ணை கவ்வும் எனபது உறுதி.

 


ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் , அறவே ஒதுக்கி இரண்டு வருடங்கள் ஆகபோகிறது. ஈழத்தில் செத்த  ஒரு லக்ஷம்  தமிழனின் ரத்த வாடை தமிழ் மொழியில் கலந்து உள்ளது.  தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவனும் , தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொருவனும் காங்கிரஸ் நாய்களை தமிழ் நாட்டில் இருந்து விரட்டி அடிப்பான்.  விரட்டி அடிக்க முடிவெடுத்துவிட்டான். அதன் வெளிபாடே சென்ற நாடாளுமன்ற தேர்தலில் , தோற்ற அதன் அனைத்து தலைகளும்.


அந்த முடிவு , அதோடு கூட்டணி சேரும் யாருக்கும்தான். அது திமுக அல்லது அதிமுக அல்லது தேமுதிக . காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேரும் எவனும் தமிழனுக்கு துரோகியே.