தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நல்ல போராட்டம் கேரளாவின் சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டன.

நல்ல போராட்டம் கேரளாவின் சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டன.
 
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தலையங்கம் எழுதுகிறேன். அதற்க்கு காரணம் நான் செய்கின்ற தொழில்  அதன் சம்பந்தமாக நான் செலவிட வேண்டிய நேரம்.
 
இனிமேலும் இது போன்று இடைவெளிகள் இருக்காது. தினமும் ஒரு கருத்தை இங்கே பதிவேன்.
 
நேற்று முன்தினம்  நடந்த மதிமுக வின் சாலை மறியல் போராட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதை ஏன் பத்திரிக்கைகள் அதிகம் கண்டு கொள்ளவில்லை.
 
நான் மாலை மலரை இணையத்தில் பார்த்தேன் அவர்களுக்கு ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி விவகாரம் பெரிதாய் தெரிந்துள்ளது ஆனால் வேகாத வெயிலில் பல லக்ஷம் பேரை ,வைகோ ,  நேரடியாக சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதார பிரச்சினைகளை ஒட்டி நடந்த இந்த போராட்டத்தை பற்றி ஏன் எழுதவில்லை ?
 
நேற்றைய தினமலர் கூட ஒரு செய்தியை கூட வெளியிடவில்லை.  ஏன் வைகோ வையும் மதிமுக வையும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் ?
 
எனக்கு தெரிந்து வைகோ வின் இந்த போராட்டம் சமீப கால அரசியலில்  மிக பெரியது.  உண்மை நிலவரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லக்ஷம் பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
 
கைதானவர்கள் பத்தாயிரத்தில் இருப்பார்கள்.
 
இந்த போராட்டத்தை வைகோ மட்டும் நடத்தவில்லை பல அமைப்புகளும் கட்சிகளும் சேர்ந்துதான் நடத்தியுள்ளது. நெடுமாறன், கொளத்தூர் மணி ,அர்ஜுன் சம்பத், மணியரசன் போன்றோரும் சேர்ந்து நடத்தியுள்ள நல்ல போராட்டம்.
 
பத்திரிக்கைகள் நடு நிலை தவறி வருகின்றன என்பதை இது தெளிவாய் காட்டுகிறது.


நன்றி
வணக்கம்