தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆம் தமிழீழம் தெரிகிறது...!

பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு....
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடைந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராஜ்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..

பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.

இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!

ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..


1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.
@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..


300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
__________________
கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 விநாடி-நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம்-30 நாள் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்
__________________

எண்ணல் அளவை..

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10கோடி - 1அற்புதம்

10அற்புதம் - 1நிகற்புதம்

10நிகற்புதம் - 1கும்பம்

10கும்பம் - 1கணம்

10கணம் - 1கற்பம்

10கற்பம் - 1நிகற்பம்

10நிகற்பம் - 1பதுமம்

10பதுமம் - 1சங்கம்

10சங்கம் - 1சமுத்திரம்

10சமுத்திரம் - 1ஆம்பல்

10ஆம்பல் - 1மத்தியம்

10மத்தியம் - 1பரார்த்தம்

10பரார்த்தம் - 1பூரியம்


----------------------------- எப்புடி ................

மாதர் குல மாணிக்கம் அன்னை தெரேசா !

mothertheresa



அன்னை என்ற வார்த்தைக்கு விளக்கம் தருவது அவசியமற்றதல்லவா? இந்த அன்னை என்ற வார்த்தை தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் போது அந்த வார்த்தைக்கு இன்னும் வனப்பு அதிமாகிறது.

இந்த அன்னை என்ற வார்த்தை சிலரின் வாழ்க்கைக்கு அடைமொழியாய் நிற்கும்போது அதற்கு அழகு கூடுகிறது. மெசடோனியா நாட்டில் எங்கோ ஒரு மூலையில் அல்பேனிய இனத்தில் பிறந்த ஆக்னஸ், பின்னாளில் தெரேசாவாக உருவெடுத்தபோது அவருக்கு இந்த அன்னை என்ற அடைமொழி அழகாய் பொருந்தி நின்றது. அன்னை தெரேசா என்று உச்சரிக்கும்போதே சாந்தமே உருவான ஒரு கருணை பொங்கிய முகம் நம் மனக்கண் முன்னால் ஒரு நொடி நிழலாடிச் செல்வது உண்டல்லவா?

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆக்னஸின் தந்தை ஒரு பிஸினஸ்மேன். அகா, லாஸர், ஆக்னஸ் என்ற மூன்று முத்தான குழந்தைகளைக் கொண்ட அந்த சிறிய குடும்பத்திற்கு பேரிடியாய் வந்து சேர்ந்தது தந்தையின் மரணம்.

ஆக்னஸ்க்கு 9 வயது ஆகியிருந்த போது ஏற்பட்ட இந்த திடீர் இழப்பினால் குடும்பம் தடுமாறியது. ஆக்னாஸின் தாய் டிரானா சின்னச் சின்ன தையல் வேலைகள் செய்து தனது குழந்தைகளை வளர்த்தாள். தங்களைத் தேடி வரும் ஏழைகளுக்கு இயன்ற உதவியை அளித்து வந்தாள் டிரானா.

தங்களது அண்டை வீட்டில் இருந்த ஒரு பெண் மதுபானங்களின் பிடியில் சிக்கி சீரழிந்து கிடந்ததை கண்டு வருத்தமுற்றாள் டிரானா. நேரம் கிடைக்கும் போது அவள் இருப்பிடம் சென்று தேவையான சேவைகளைச் செய்து வந்தாள்.

டிரானாவினால் செய்ய முடியாத நாட்களில் அந்த பணியை ஆக்னஸ் சென்று செய்து வந்தாள்.

பின்னாளில் ஒரு சேவை ஸ்தாபனத்தை உருவாக்க அந்த அனுபவம் அவருக்கு ஒரு தூண்டுகோலாய் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கல்கத்தாவிற்கு மேல்படிப்புக்கு வந்த ஆக்னஸ், அங்கிருந்த ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டு புரியத் தொடங்கினாள். நல்ல உள்ளங்களின் உதவி, கர்த்தரின் ஆசி, கடுமையான பலன் எதிர்பாரா உழைப்பு இவையனைத்தும் "மிஷினரீஸ் ஆப் சாரிட்டிஸ்" என்ற மிகப்பெரிய ஸ்தாபனத்தை தொடங்க வழிவகுத்தது.

1979 ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் மேடைகளில், பல இடங்களில் ஆதரவற்றவர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும், பேசி வந்துள்ளார். அவரது பேச்சுத் தொகுப்பிலிருந்து ஒரு சிறிய பகுதி இதோ. . .

"அன்பு செலுத்துவது உங்களது இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள்தான் முதலில் ஆரம்பிக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. உனது சகோதர, சகோதரிகளோடு அன்பு பாராட்ட முடியாத நீ, எங்கோ இருப்பவருக்கு உன் வார்த்தைகள் மூலம் மட்டும் அன்பைத் தெரிவிக்க நினைப்பது எப்படி சரியாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழலில் வெவ்வேறு முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் எழுவது இயற்கை. வேற்றுமைகளையும் மீறி நம் அனைவரையும் கட்டிப்போடும் சக்தி அன்புக்கு மட்டும்தான் உண்டு.

நீங்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கும்போது ஏதோ ஒரு கருத்து வேறுபாடு எழலாம். வேறுபாடுகள் எழுவது எப்படி இயற்கையோ அதேபோல அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள நேரம் இருக்க வேண்டியதும் இயற்கை.

நம் குடும்பத்தினரால் நாம் காயப்படுத்தப்படும் போது, அதை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் நாம் தயாராக இருப்போமேயானால் கடவுளின் அன்பை நாம் உணர முடியும்.

அன்பு செலுத்துவது எல்லா நேரங்களிலும் சாத்தியமான செயலல்ல... அதுவும் குடும்பத்தினரிடையே அன்பு எப்போதும் தொடரும் என்பது மிகவும் சிரமமான செயல்தான்.

ஆனாலும், இல்லத்தில் நாம் அன்பு செலுத்தி, நம் மீதும் அன்பு செலுத்தப்படுமானால், அந்த அன்பை சுற்றி உள்ளவர்கள் மீது நாம் செலுத்த ஏதுவான சூழல் உருவாகும்.

நம்மைக் காயப்படுத்துபவர்களை மன்னிப்பதும், நம்மை ஏமாற்றுபவர்களை மறப்பதும், நமக்கு துரோகம் இழைப்பவர்களை திருத்த முயற்சிப்பதும் அன்பு செலுத்துவதின் அடிப்படைத் தேவைகள் என்பதை நாம் புரிந்து கொண்டால் எங்கும் அன்பு நிறைந்து அமைதி பெருகி வாழ்க்கை வளமடையும்".

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தக் குறளுக்கு விளக்கமாய் வாழ்ந்து, தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு பாடமாக்கி சென்றுள்ளார் அன்னை. . . குறள் போல அவர் புகழும் என்றும் நிலைத்து வாழும்.

அம்மா நீ இல்லாத இவ்வுலகில் .....

அம்மா உனக்கு உன் மடி என்ற
சிம்மாசனத்தின் மைந்தன் எழுதும் கடிதம் !
நீ சிந்திய வியர்வை துளிகள் மண்ணாகிபோனது - ஏனோ
இன்று என் வியர்வை சிந்தாமல் இருக்கவா !

உன் கடைசி மூச்சிக்காற்றில்
என்னை ஏன் கலக்க மறுத்தாய் -எனக்காக
இவ்வுலகில் வாழ்ந்தவள் நீ ஒருத்தி அம்மா !

உன் இரத்தத்தை எனக்கு கொடுத்து
பத்து மாதம் உயிராக சுமந்தாய் !
உன் பாதங்களில் முள் குத்தினாலும் - என்னை
உன் இடையில் அல்லவா சுமந்தாய் - ஏனோ
இன்றோ பயம் என்னை சுமக்கிறது .....

அம்மா நீ இல்லாத இவ்வுலகில்
எங்கும் எனக்குள் ஒரு தனிமை !
என்னையே என்னால் உணரமுடியவில்லை - ஏனோ
என்னுள் நான் உன்னை உணர்ந்ததாலோ!

அம்மா என்ற ஒரு சொல்லில் முடிந்தவளே,
என் அத்தனை சொற்களுக்கும் நீயே உயிர் மூச்சு !
யாரோ அம்மா என்று கூறும் ஒரு வார்த்தையை
என் செவிகள் கேட்க்கும் பொழுது - ஏனோ
எனக்குள் நீ சிரிக்கிறாயம்மா !

நீ துடைத்து ஏறிந்தது என் வறுமை என்றாலும்
நீ இல்லாத என் வாழ்வில் என்றும் வெறுமை !
உன் மரணநாட்களில் நீ உணர்ந்த வலியை - ஏனோ
என் ஆயுள் முழுவதும் கொடுத்தாயம்மா !

நீ உனக்காக வாழ்ந்த நாட்களை விட
எனக்காக நீ உழைத்த நாட்கள் அதிகம்!
இதோ வாழ பயணிக்கிறேனம்மா ,
உனது கனவுகளை எனது இலட்சியமாக திரையிட !

என் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினாய்
ஆனால் என் கடைசி ஆசையை மட்டும் - ஏனோ
புரிந்து கொள்ளாமல் போனாயம்மா !
ஆமாமம்மா .... என் மரணப்படுக்கையின் தலையணை
உன் மடி என்று நினைத்தது தவறா !

என் அத்தனை எண்ணங்களுக்கும்
செயல் வடிவம் தந்தாயம்மா !
தினமும் நான் புரிந்துகொள்கிறேன் ,
கண்ணாடி முன் நான் நிற்கையில் ! என் உருவத்திற்கே
வடிவம் கொடுத்தவள் தானே நீ என்று !

அடுத்த ஜென்மம் என்பது மனித
சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றாலும் !
எந்த ஜென்மத்தில் என்னை மகனாக சுமந்தாயோ
அதே ஜென்மத்தில் என் தோள் மீது ,
உன்னை என் மகளாக சுமப்பேன் !

எத்தனை இரவுகள் உண்ணாமல் படுத்தாய்
என் பசியைப் போக்க !
எத்தனை இழிவுகளை சுமந்தாய்
எனது லட்சியங்களை தீயாக மாற்ற !

எத்தனை நாட்கள் நடந்தாய் கால் வலிக்க
என் பிறப்பின் அர்த்தத்தை கூட்ட !
எத்தனைப் போராட்டமம்மா உனக்குள்
என்னை போராளியாக மாற்ற !

எத்தனை வலிகளம்மா உனக்குள்
என் வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க !
எத்தனைக் கனவுகளம்மா உனக்குள்
என்னுள் சந்தோசத்தை மட்டுமே காண !

எத்தனைக் கண்ணீர் துளிகளை பரிசளித்தாய்
என்னை பக்குவப்பட்டவனாக மாற்ற !
எத்தனை எத்தனை சுமைகள் அம்மா உனக்குள்
என்னை நீ மகனாக சுமந்ததால் !

உன் மடியில் சாய்ந்து அழ துடிக்கிறேனம்மா
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு முன் !

எனது வாழ்க்கைப் பயணத்தில்
எத்தனை நாட்கள் நான் தனிமையில் நடந்தாலும்
என் தனிமை சொல்லும் உன் மரணத்தின் வலியை !

உன் நினைவுகளை சுமந்த படி பயணிக்கிறேன் ,
எதற்கு ஏன் என்ற கேள்விக்கு முன்
பயணத்தின் இறுதியில் என் லட்சியம் சொல்லும்!
உந்தன் இழப்பையம்மா !

இப்படிக்கு
உன் மடி என்ற சிம்மாசனத்தின் மைந்தன்,

இராஜீவ் - கொலை அல்ல, மரணதண்டனை! கொளத்துர் மணி உரை

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில்,
பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது,
இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள்: மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் - காங்கிரஸ் முழக்கம்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு - மார்க்சிஸ்டு முழக்கம்; சகோதர யுத்தம், சர்வாதிகாரி - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
எதைக் காரணமாக வைத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேசவிரும்புகிறேன். நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது, நடந்தால் வலிக்கிறது, அசைந்தால் வலிக்கிறது. கீறிவிட்டு அதை ஆற்றவேண்டும். யாரும் நாம் முயற்சிக்கவில்லை. நாம் அந்தப்புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? எப்பொழுதும் சொல்வதுண்டு. ராஜீவ் காந்தி கொலையல்ல, மரண தண்டனை, அது கொலை என்ற சொல்லால் சொல்லக்கூடாது என்று ------- யார் அந்த ராஜீவ் காந்தி? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற நான், அதை விளக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறார்களா? அந்த இடத்தில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா, காங்கிரஸ் தலைமையில்? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள்? காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.
தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிடமொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப்பார்க்கிறான், இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் காங்கிரசுக்காரர்கள். காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமக்கு, தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஏதும் தடையமே காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.
ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழி தீர்மானம் வந்தபோது சரிபகுதி வாக்குகள், இந்திக்கு ஆதரவாக, இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள், காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை அளித்துத்தான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும், நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. இது கள்ள ஓட்டு போல, தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள். இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார், நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசினார் நேரு. பெரியார் சொல்லுவார், முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதியவர். ஆனால் அவர் சொன்னார், நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, 1951-யில் சொன்னவர், 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று. பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள் என்று கடிதம் எழுதியவர்.
இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டாக்டர் கால்வின் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதியவர். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.
நம்ம ராஜீவ் காந்தியைப் பற்றிப் பேசுவதானால் சொல்லுவோம். ராஜீவ் காந்தி யார்? ஒரு வேளாண்மை செய்பவனுக்கு, விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் அவன் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிர்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக்கொள்வோம், ராஜீவ் காந்தியும் எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.
அல்லது அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜானி என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டார். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்ப்போம், கட்டபொம்மன், சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று சொல்லுவான். இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமாக அல்ல. அறநெறிக்கு புறம்பானவன் என்பது ஹர்சரத் சிங் என்கிற இந்திய நாட்டின் படைத் தளபதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா(அல்லது இன் சிறீலங்கா)’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன,
நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகம் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம், அதைப் படித்துப்பாருங்கள். அதில் பல செய்தி, அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார். செப்டம்பர் 16-ஆம் நாள் அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். 14-க்கும் 15-க்கும் இரவில் சந்திக்க வருகிறார், சந்திக்கப் போகிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்குச் சொல்கிறான், அந்தச் செய்தியை தொலைபேசியில் சொல்கிறான். இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு என்று சொல்கிறான். அவர் மறுக்கிறார். நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் மேல் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் சொல்கிறார், தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார், மறுத்துவிடு என்று சொல்லிவிடு, முடியாது, அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு முடியாது என்று சொல்கிறார்,
இது நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது என்று அவன் சொல்கிறான். எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். நூல் வந்திருக்கிறது. இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. எனில் அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் அப்போது சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான், அவரை கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்.
ராஜீவ் கொலைக்கும் அப்படி பரிந்துரை செய்கிறது ஜெயின் ஆணையம். ஜெயின் ஆணையம் சொன்ன பரிந்துரையின் இடைக்கால அறிக்கை வந்தவுடன், முன்பு இருந்த தி.மு.க அரசையும் குற்றம் சொல்கிறது இவன் தான் ராஜீவ் காந்தி கொலைக்கு என்று, தி.மு.க. அமைச்சரவையில் இருந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்று காங்கிரசு சொன்னது. தலைமை அமைச்சர் அவர்களை நீக்க முடியாது என்று சொன்னார், அந்த இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் அமைக்கப்பட்ட ஆணையம் குற்றம் சொன்ன ஒருவரை தனது கட்சிக்கு பொது செயலாளராக நியமிக்கிறார். அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். அறிக்கையையே வைக்கவில்லை நாடாளுமன்றத்தில். தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி. ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போனவன், இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இவர் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்லத்தான் பயன்பட்டது. அந்த அமைதிப்படை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் 22 ஆண்களுக்கு பின்னடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் சொல்லுகிறார். சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்?
ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம். இந்த காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக உயிர்தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள்? இது வரை! இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்திய ------ கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா? சீன நாடு அங்கே கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்?

இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என்னாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தாய், இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நலனுக்கெதிராக நீ இருந்தாய். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய், நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், காரணம், ஒரு ராஜீவ் காந்திக்கு வருகிற ஏக்கம், ஆறாயிரம் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே, ஆயிரம் பெண்களுக்கு கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே, வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லி சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறான்.
கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவ்வளவு கூட்டு இருந்து, இவ்வளவு நாள் கட்சி நடத்துகிறாயே இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். அவர் மறப்போம் மன்னிப்போம், தன்னுடைய மகனைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் நிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம், ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் ஏற்று பிரபாகரன் சொன்னார், ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம், இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன் என்று சொன்னார். நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா? இப்படிச் சொல்லித்தானே ஆயுதங்களை கொடுத்தார், தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார், ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். இரக்கம் இருக்கிறவன், சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார், முத்துக்குமார் தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அறத்திற்கே அன்பு சார்ப என்ப என்று திருக்குறளை நினைவூட்டுகிறார், வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம். அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்,
எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா! நீ சொல்லுகிறது எல்லாம் எவ்வளவு, இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? பேசுகிறான். இலங்கையில் அடித்தவன் ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், கப்பற்படை வீரன் இந்நேரம் செத்துப் போயிருப்பான். அவன் கேட்டான் சொன்னான், நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது என்று சொன்னான். கேட்டாங்க அவனை, சொன்னான், அதை குற்றமென்று சொல்லவில்லை. ஆனால் அங்கே செத்திருப்பான் அல்லவா, இவங்க சொல்கிறான் அல்லவா, நாங்கள் ஆயுதம் கொடுக்கவில்லை என்றால் ஈரான் கொடுத்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும், இவன் கொடுக்கிறானோ கொடுக்கவில்லையோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் சொல்கிறோம், அவன் கனமாக அடித்த்திருந்தால் கொன்று இருப்பான், இங்கே கொல்லாமல் விட்டிருந்தால் பாகிஸ்தான்காரன் கொன்றிருப்பான், பஞ்சாப்காரன் கொன்றிருப்பான் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான் என்று சொல்கிறாயே, நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து அவன் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள், அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது, இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.
ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்களை, இலங்கைத் தமிழர்களை எப்படி வேண்டுமானால் இருக்கட்டும், எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களிப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம், ஆட்சி போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும் போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான். அவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றுதான் பொருள். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லிப் இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும்.
முதலில் சந்தேகிக்கனும், நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா? நாம் சந்தேகிக்கிறோம், ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி தொடுத்த யுத்தம். அந்த நாட்டிற்குப் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் இங்கு வந்தார்கள், அகதிகள் வந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம், 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாடிலிருந்து இந்த நாட்டிற்கு போரின் போது வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது. நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. 6 கோடி அப்போது என்றால், எழுபதுகளில், ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் 100 கோடி ரூபாயுக்கும் மேலாக தமிழர்கள் இன்னொரு நாட்டிலிருந்து பாதிக்கப்பட்ட வங்காளிகளுக்கு இங்கிருந்து பணம் திரட்டி அளிக்கிறோம். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டிய போது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு. எங்களுக்கு சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன், திபெத்திய அகதிகளை, நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், காண்கிரீட் கட்டிடத்தில், வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது, 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. கோகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத்தடுப்பதற்கு பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, தமிழன் இங்கு இருக்கிறான், அவன் திபெத்தியன் அவன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழன் நாட்டில் தமிழ் நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?
அவர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் இருக்கிறது. பலபேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழன் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டது தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப்பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். உள்ளேயிருக்கிறவர்களை. வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நம் அரசு செய்கிறதோ இல்லையோ நாம் யோசிக்கிறோம். இது நம் அரசாக இருக்க முடியுமா? சந்தேகம் வருகிறது நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.
ஏற்கனவே சொன்னேன், வெளி நாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்டான்? இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை, 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக அவர்கள் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம், அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றானே உத்தம் சிங். 21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் கொல்லப்பட்ட அடக்கம் செய்யப்பட்ட உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது. கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த பின்னாள் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார் விமான நிலையத்தில், மீதி எச்சங்களை வரவேற்பதற்கு. அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி போய் மலர்வளையம் வைத்தார். இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம், ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுத்தவன் காரணமானவனை. அங்கே போய் நம்ம ஆள்கள் சுட்டது துப்பாக்கியில் சுட்ட டயர் அல்ல, ஜெனரல் டயர் என்று சொல்லவில்லை நல்லா ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அவன் ரெஜினால்டு டயர், அவன் தளபதி, சுட ஆணையிட்டவனும் அதே பெயர் தான் மைக்கேல் டயர், நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினார்கள். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோகனும், அதனால எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைப் போய்த்தான் கொன்றான், ஜெனரல் டயரை. அந்த டயரைத் தான் சுட்டான். அது போல் ஈழத்தமிழன் எவனாவது கண்ணெதிரே தனது சொந்தங்களை அநியாயமாகக் கொன்றவனை, அங்கே சுட்டுக் கொல்றான், அந்த நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?
அதுதான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும், நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடு நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். எப்படி நாம் கருதுவது என்றால், நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான், நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், பாகிஸ்தானில் வங்காளிகள், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா என்று சட்டமன்றத்தில் பேசினார் டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே, அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர், அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல, அகில இந்திய கட்சி சார்பில் இருக்கிற தேசிய உணர்வு ஏன் நமக்கு இல்லை.
செல்வா அவர்கள் பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்கிறார். 1972-யில் வருகிறார். பெரியார் சொன்னார். ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை உதவ முடியும் நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம், இது வரை, இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.
நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், இபோழுதில்லை 1966-யில் சொல்லியிருக்கிறது, 1970-யில் சொல்லியிருக்கிறது. ஐ.நா மன்றத்தின் பிரகடனம் சொல்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், தன்னுடைய சுயநிர்ணய உரிமையை தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு என்பது தான் ஐ.நா வில் பிரகடனம். முதலாவது கூறு அதுதான். எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும். ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது, 1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்த போது, காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறேன், அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா மன்றம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். அதற்காகத்தான் முதல் கட்டமாக 20-ஆம் தேதி நாங்கள் நடத்துகிற போராட்டம் இந்தத் தமிழ் மண்ணில் தமிழ் மக்களின் உணர்வை மதிக்காத அவர்களிடம், பலவகைகளில் போராட்டம் நடக்கலாம், மாணவர்கள் ஒரு பக்கம், வழக்கரிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடக்கின்றன, பலவகையில். நான் தோழர்களிடம் எல்லாம் கேட்டேன், என்ன செய்யலாம் என்று அப்போது தான் சொன்னேன், இந்த வாரத்தில் பெரியார் முழக்கத்தில் கூட எழுதியிருக்கிறோம்.
நமது குத்தூசி குருசாமி --------- சத்திய மூர்த்தி பவன் என்பதால் சத்தியமூர்த்தி நமது நினைவிற்கு வரவேண்டும். சத்திய மூர்த்தியை குறித்து குத்தூசி குருசாமி ஒரு கட்டுரையை எழுதினார். அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு என்ற தலைப்பு. கட்டுரையில் எழுதினார், தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு, அப்பா, அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள் என்று எழுதினார்கள். அடுத்த வாரமே அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் சொன்னேன். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, அதோ காங்கிரசுகாரன் போறாங்கிறது ஒரு போராட்டம். அவனை அவமானப்படுத்த வேண்டும், வீதியில் நடக்கும்போது. வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம், எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி எடுக்க இருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.
தொடர்ச்சியாக அடிமைத்தனமாக இருந்த நாங்கள், அடிமை எப்படி ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள், அதற்கான முயற்சிகளும் பரப்புரைகளும் நடக்கட்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை

ஆண்ட இனமே மண்டியிட்டு சாக துணிந்து விடாதே!

ஆண்ட இனமே
மண்டியிட்டு சாக துணிந்து விடாதே!

இமயத்தை தொட்டவனும் நீ தான்
சூழ்ச்சிகளை தோற்கடித்தவனும் நீ தான்!

நீ பிறந்த தஞ்சையில் சாயாத கோபுரம்,
அங்கே உன் இனத்தின் கோபுரமே சாய்ந்து விட்டதடா !

பிச்சை பாத்திரத்தை தூக்கும் முன் துணிந்தெழு
துணிந்தவனுக்கு பிச்சை பாத்திரமும் ஆயுதம் தான்!

எத்தனை எத்தனை அரசியல் நாடகங்கள்
தமிழா நீ ரசிக்க அல்ல
உன் தமிழச்சிகளின் கற்பை சூறையாட!

அரசியல் தர்மத்தில் அநாகரிகமே மேலோங்க
என் பிறப்பின் தர்மத்தில் நாகரிகத்தை தேடுகிறேன்!

அழியாத நினைவுகளை விட
அழிக்கப்பட்ட நம் இனம் சொல்லும்
விடுதலையின் வேட்க்கையை !

வாழ்வே வழி இல்லாத நம் இனம்,இனி
சோற்றில் கை வைக்க முடியாது ,என
நினைத்து விட்டான் போலும்,புரிந்துகொள்
புலி பசித்தாலும் புல்லை திண்ணாது!

நிற்காத நதிகளும் இல்லை,
உருகாத பனி மலைகளும் இல்லை,
வா தோழா எழுவோம் இயற்கைக்கு முரண்பட்டு!

கம்பனாய் இருந்தால் கவி பாடி இருப்போம் ,
வள்ளுவனாய் இருந்தால் திருக்குறள் இயற்றி இருப்போம்,
எங்களை மாற்றி விட்டிர்கள் புயலாக!
இதோ புறப்பட்டு விட்டோம் இனி புலியாக!

கம்பன் காவியத்தில் வாலி வதையடா,
நீங்கள் செய்வதோ எம் இனத்தின் வாலிப வதை!

எம் தலைவன் இறந்து விட்டான்???,சந்தோஷப்படாதே
பல ஆயிரம் தலைவன் பிறந்து விட்டானடா!

ஈழத் தாயே கண் கலங்காதே,
இதோ புறப்பட்டு விட்டோம் ,
உனக்கும் என் தமிழ் தாய்க்கும்,
உள்ள உறவை வெளிகாட்ட!
தாயே நீங்கள் சுடர் விட தாயராகுங்கள்,
நாங்கள் சுட்டு தள்ள தயாராகி விட்டோம்!

பிணம் திண்ண பக்சேக்களே,
தமிழனின் எச்சிலில் ஒளிந்த கருநாகமே,
இறையாண்மையை சொல்லி என் இனத்தை
இரையாக்கிய இத்தாலி அரசியே,
உலகுக்கெல்லாம் காலம் பதில் அளிக்கும்,
உங்களுக்கு நாங்கள் பதில் அளிப்போம்!
உங்களின் அத்தனை நாடகங்களுக்கும்
முடிவுரை எழுதப்போவது நாங்கள்தான்!

சினம் கொண்ட பாம்பு பதுங்கியதில்லை,
மூட்டிய தீ அனைவதுமில்லை,
பதில் சொல்ல காத்திருங்கள் இரண்டிற்க்கும்!

ஐயோ பதறுகிறது என் நெஞ்சு ,என் தமிழச்சி
ஒரு மார்பில் குழந்தைக்கு பால் கொடுக்க ,மறு மார்பில்
இறந்த தன மற்றொரு குழந்தையை வாரி அணைக்கிறாள்!
இதுவன்றோ தமிழனின் பரிதாபம்!
கலங்காதே தமிழச்சியே!


பசி என்று வந்தவனுக்கு
விருந்தளித்த நம் இனம்,
இன்று
நம் பசிக்கு அடுத்தவனிடம்
பிச்சை எடுக்க வைத்தது யாரோ !


மாசு படிந்த வேசி கூட்டங்களுக்கு
தலை சாய்க்க மாட்டோம் !
என் இனத்தின் பிணத்தை திண்ண வேசிகளின்
தலையை எடுக்காமல் விட மாட்டோம்!
விழ்ந்தாலும் மாய்ந்தாலும்
நம் தாய் மண்ணை இழ்க்க மாட்டோம் !

ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு! நீ ஒன்றுபட்டால்

உன்னை மிஞ்ச ஆளில்லை !
உன்னை வெல்ல உலகமில்லை!


தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,

....மதன் ( பகலவன் ) ....

வருவோம் மீண்டும் புலியாக ! நீ அழிய காத்திரு சுனாமியாக !


தமிழா!


மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,

சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,

துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,

சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,

இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,

என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன் இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!

காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?

அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!

நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!

வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!

மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,

என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,

நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !

வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !

சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்


அன்புடன் தோழன்
....மதன் (பகலவன்) ....

புறப்படு உன் தமிழ் தாயை வாழ வைக்க!


தமிழா விடியலை தேடும் முன்

உன் பாட்டனின் தமிழை கண்டுபிடி !

வந்தாரை எல்லாம் வாழ வைத்தாய்
இன்றோ வந்தவனெல்லாம் ஏறி மிதித்தான்!

ஐயோ நெஞ்சு பொறுக்கவில்லையடி தமிழ் தாயே!
உந்தன் தமையன் பாரதி கண்ட தமிழகம் இதுவோ!

இந்த தமிழனிடம் மொழிப்பற்று இல்லை ! ஏனோ
என்றோ அவன் ஜாதிப்பற்றில் கலந்து விட்டான்,

அனல் அடிக்கும் அரசியல் குழப்பத்தில்
இவன் கதிர் வீச்சாக இல்லையே !

என் மானமுள்ள தமிழ் தாயே !
நீ வேண்டாம் நாளைய சன்னதிக்கு!இந்த
கேடுகட்ட வேசிகளிடம் நீ அடிபட வேண்டுமா!

ஏனோ உன்னை விற்க தயாராகி விட்டான்!
மொழிப்பற்றே இல்லாத இனத்திற்கு நீ என் தாயே?

எரிகிறது மணம்! புலம்புகிறது நாக்கு!
கூசுகிறது செவி! வெதும்புகிறது கண்கள்!
ஐயோ இதுவன்றோ என் இனத்தின் கேவலம்!

மானமிக்க என் தமிழ் சாதியே கேள்,
காவிரியும் பாலாறும் முல்லைபெரியரும் யார்?
உன் விருந்துக்கு வந்த சம்மந்திகள் போலும்!இல்லையடா
உன் தாய் தமிழ் உறவுகள்,உன் உறவுகளை
தொலைத்து நீ இன்னும் எதை தேடுகிறாய் !

விழுதுகளின் வீரியம் உனக்கில்லை !
ஏனோ நீ ஈரம் இல்லாதவன்!

பாரதியின் புலமை உன்னிடம் இல்லை !
ஏனோ நீதான் அன்னியபட்டுவிட்டயே!

உன்னிடம் இன ஒற்றுமை இல்லை!
ஏனோ நீதான் வேற்றுமை சாதியாயிற்றே!

வள்ளுவனையும் பாரதியையும் மறந்து விட்டோம் !
ஏனோ உனக்கு கேடு கெட்டவன் தலைவன்!

தொன் மொழியை மறந்து விட்டாய் !
ஏனோ உன் தாய் மொழி அன்னியப்பட்டு போனது!

தமிழா அங்கிலம் பேசுவது குற்றமல்ல!ஆனால்
உன் தாய் தமிழுக்கு அங்கிலம் இணையல்ல!

அசினுக்கு முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
அசினின் இடையோ இடைத்தமிழ்!
அசினின் நடனமோ நாடகத்தமிழ்!
இதுவன்றோ என் இனத்தின் கேவலம் !

உன் பாட்டன் தமிழை வளர்த்தான் கடை சங்கம் வைத்து !
ஆனால் நீ வளர்க்கிறாய் அசினின் இடையை வைத்து !
என் தாயின் கர்பத்தில் களங்கம் ஏனோ !

தமிழா போதும் உன் சூத்திரம் !
இனிமேலும் உனக்கு இல்லையெனில் ஆத்திரம் !
நீயோ நாய் மூத்திரம்!

வானளவு உயர வேண்டிய இனம்
இன்று சுடுகாடு நோக்கி!
விண்ணளவு உயர வேண்டிய மொழி
இன்று செவிடன் காதில் ஊதிய சங்காக!

தீபம் கூட மேல் நோக்கி எரிகிறது!
உனது எண்ணங்கள் மேலோங்க மறுப்பது ஏன்?

உன் தாயை நேசிக்கும் நீ !உன்
தாய் தமிழை நேசிக்க மறுப்பது ஏனோ !

நமது அடையாளம் தமிழ் மட்டுமே!
அதையும் நீ தொலைத்தால் நாளை நடை பிணமே !

விழ்ந்தாலும் மாய்ந்தாலும்!
அடங்காது நம் தமிழ் பேச்சு !
வெந்தாலும் வெதும்பினாலும்
சாகாது நம் தமிழ் முச்சு !

பொருத்தது போதும் தமிழா!
புறப்படு உன் தமிழ் தாயை வாழ வைக்க!


சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்


அன்புடன் தோழன்
....மதன் (பகலவன்) ....

அனைவரும் தமிழராக ஒன்றுபட வேண்டும் !!!

அன்பார்ந்த தமிழ் உறவுகளே! இது எனது தனிப்பட்ட கருத்து.உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன் .இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.சிந்திக்க வேண்டுகிறேன்

இன்று நம்மினம் என்றும் இல்லாத வேதனையிலும், சோதனையிலும் தள்ளப்பட்டிருக்கின்றது. நம்மினத்துக்கு இன்று தான் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. சிங்கள இனவாத அரசு 250,000 தமிழீழ மக்களை வதைமுகாம்களிற் பணையக் கைதிகளாக்கி நாடகமாடுகின்றது. இதைச் சர்வதேசம் கண்டும் காணாமல் தெரிந்தும் தெரியாமல் வியாபார நோக்கோடு அணுகின்றது.
அன்பார்ந்த உறவுகளே, நம் விடுதலையை நாம் தான் போராடிப் பெறவேண்டும்.ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் .ஜாதி வாரியாக,மத வாரியாக ,கட்சி வாரியாக பிரிந்து கிடக்கிறோம்

இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...மேம்போக்காக பார்த்தால், இதற்கு யார் காரணம்...?

ஜாதி ,மதம்

தமிழ் நாட்டில் யாரும் ஜாதி, மதம் பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

பெயரில் இல்லை ... ஆனால் வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்
ஜாதி ,மதம் தமிழனின் குருதியில் கலந்து விட்டது.வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி,மத வெறி அதிகம்...

அரசியல் புச்சாண்டிகளின் கேடியம் இந்த இளிச்சவாய தமிழ்ர்கள் ,.ஜாதி என்பது ஒரு மனிதனின் சுயமரியாதையாக இருக்க கூடாது,அனைவரும் சகோதரர்களே என்று சொல்லிய தலைவர்களின் சிலையை வைத்து சண்டைப் போட்டுக் கொண்டு உள்ளோம் .

ஜாதிக்கு ஒரு அரசியல் கட்சி தேவையா ?

தமிழ்நாட்டின் எல்லா முடுக்குகளிலும் ஜாதி அமைப்புகள் தேவையா?

ஜாதி வாரியாக பார்த்து ஓட்டுப்போடுவது தேவையா?

இன்றைய சமூகத்திற்க்கு இந்த சாபக்கேடு எங்கிருந்து வந்தது ?


1.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

2.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

3.ஜாதி,மத கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...

4. வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...

5 . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

6 . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் ( exhibition) பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...


இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு பெரியாரும் காமராசரும் தெரியும்,இவர்களின் சிர்திருத்தம் என்னாயிற்று . ஏன் நாம்தான் ரஜினியையும் நமிதாவையும் தூக்கி வைத்து கொண்டாடுகிறோமே!
இதற்க்கு மேலும் நாம் பொருத்து இருந்தால் நாளைய சன்னதி நம் முகத்தில் எச்சில் துப்பும் .


அனைவரும் தமிழராக ஒன்றுபட வேண்டும்,

காவிரி என்றால் தரமுடியாது என்கிறான் .பாலாறு என்றால் இல்லை என்கிறான் .முல்லை பெரியார் என்றால் ஏறி மிதிக்கிறான் .ஏன் இந்த அவல நிலமை.நாம் என்ன தரம் கெட்டவர்களா? இப்படி மதத்தாலும் ஜாதியாலும் கட்சியாலும் பிரிந்து எதை சாதித்தோம் ? நமது ஒற்றுமையை முப்பது ஆண்டுகள் முன்பே காட்டி இருந்தால் ஈழ்ம் மலர்ந்து இருக்கும்.
அம்மாவாசைக்கும் (ஜெயலலிதா) அறைமுட்டைகும் (கருணாநிதி) மாற்றி மாற்றி ஓட்டு போட்டு பழாய் போனோம் ,இனிமேல் எவனாவது ஓட்டுகேட்டு வந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு தமிழனை காப்பாற்ற சொல்லுங்கள்.ஏழு கோடி மக்கள் கொண்ட நாம் முன்று லட்சம் மதிப்புள்ள நம் தாய் தமிழ் உறவுகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் அதை விட நமெக்கென்ன கேவலம் இருக்க போகிறது .நாளைய உலகம் நம்மை எட்டப்பன் பரம்பரை என்று சொல்ல வேண்டுமா இல்லை வீரமிக்க பிரபாகரன் பரம்பரை சொல்ல வேண்டுமா ! தமிழா நம் மொழிப்பற்றை காட்ட மறுத்து போதும்.

நம்மால் செய்ய முடியும் ,இந்த கருத்தை மற்றவர் நாலு பேரிடம் சொன்னாலே போதும்.


இளைய சமுதாயம் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.
பொருத்தது போதும் தமிழா ,எழுந்து வா தமிழா நெருப்பாய்,இருந்தது போதும் செருப்பாய்.நாளைய தமிழிழம் நமக்கே .........



சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்


அன்புடன் தோழன்
....மதன்.....

இது எங்க ஊரு - வேலூர் கோட்டை (Vellore Fort)


வேலூர்க்கு நிறைய பெருமையான விஷயங்கள் இருந்தாலும் அதில் ரொம்ப பெருமையான விஷயமா நான் கருதுவது இந்த கோட்டைய தான்.


சிறு குறிப்பு:
1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)
1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.
1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.
1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.
1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.
1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.





கருப்பு மேல எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு அதனாலதான்
முதல் படம் கருப்பு வெள்ளை. ஆங்கிலேயர்கள் காலத்துல எடுத்த படம்.



இது இப்போ எடுத்த படம்.
கோட்டையோட ஒரு பகுதி படம்




இதுதான் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின்
நுழைவாயில் (சிறு பாலம்)



இன்றும் இந்தியாவுல இருக்குற கோட்டைகளில் அகழியில்
எப்போதும் தண்ணி இருக்குற கோட்டை இதுதாங்க.
அகழில முதலைகளும் இருக்குறதா சொல்றாங்க.
சமிபத்துல சுற்றுல துறை இங்கு படகு சவாரி செய்ய வசதி செஞ்சிருக்காங்க.




இந்த கோட்டை இரண்டு கட்ட பதுகாப்பு அரண் கொண்டது
இந்த சுவர் இரண்டாவது வரிசை.




போர் வீரர்கள் தங்குவதற்கான அறைகள் போகும் வழி



நேர்த்தியான கட்டட கலையின் சிறந்த சான்று.
அருமையான கண்கானிப்பு கோபுரங்கள்.



கண்கானிப்பு கோபுரத்தின் உட்புற தோற்றம்.
அதுக்கு கீழே ஓய்வு அறை.



இரண்டாம் நிலை அரண்னில் இருந்து கோட்டை அகழி தோற்றம்.



அகழியை எத்தனை கோனத்தில் இருந்து பார்த்தாலும் அழகுதான்.



1806ல ஆங்கிலேயரால் போட்ட வரைபடம் இதுதாங்க.
இந்த ஒரு விசயத்துலதான் நாம நிரைய இழந்திருக்கோம்.



கோட்டைக்குள்ள இருக்குற கோயில் (ஜலகண்டீஸ்வரர்)
விஜயநகர பேரரசின் சிறந்த உதாரணம்.



கோயிலோட மொத்த தோற்றம்.



கோயிலோட முன்புற தோற்றம்.



இதுதாங்க அழகிய சிற்ப மண்டபம்.



என்ன சொல்ல...............



இப்ப சொல்லுங்க எங்க ஊரு எப்படி இருக்கு.



ரெண்டுத்துல எதுங்க அழகு?



இன்னொரு கருப்பு வெள்ளை படம்.



அதேதூண் இல்லீங்க இது பக்கத்து தூண்.
இன்னும் இதுபோல நிறைய இருக்கு.



இதுதான் ரெண்டு விலங்கு ஒரே சிற்பத்தில்.

....மீண்டும் சந்திப்போம்....


அன்னை தெரேசா


'தனி மனிதனாக ஒருவன் உலகையே நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்து இருப்பவனை மட்டும் நேசித்தால் கூடப் போதுமானது!'

- அன்னை தெரசா



வானம் வசப்படுமே என்ற இந்தத் தொடரில் எந்த வரலாற்று மாந்தரை முதலில் அறிமுகம் செய்வது என்று நான் யோசித்த போது இந்த உலகிற்கு இன்று அதிகம் தேவைப்படுவது எது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து விட்டோம். மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, ராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும், நேசமும், பாசமும், கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் - இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை தெரேசா. ஆம் அன்போடு இந்தத் தொடரைத் தொடங்குவோம்.

1910ம் ஆண்டு ஆக்ஸ்ட் 27ம் தேதி யூகோஸ்லாவியாவில் Agnes Gonxha Bojaxhiu என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்தக் குழந்தை விளங்கும் என்பது அப்போது அதன் பெற்றோருக்குத் தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னிகாஸ்த்திரியான பிறகு அவர் சகோதரி தெரேசா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

1929ம் ஆண்டு ஐனவரி ஆறாம் தேதி தமது 19வது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரேசா. அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண். சுமார் 17 ஆண்டுகள் Loretta கன்னிமார்கள் குழுவில் சேர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய போது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் மிக மோசமான நிலையில் வாழ்ந்தோரின் நிலையும் ஆதரவின்றி மாண்டோரின் அவலமும் அன்னையின் மனத்தைப் பிழிந்தன.

1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி ஓய்வுக்காக இந்தியாவின் டார்ஜீலிங் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். நலிந்தோருக்கும் நோயாளிகளுக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு Loretta கன்னிமார்கள் குழுவிலிருந்து விலகினார்.

கல்கத்தாவின் மிக ஏழ்மையான சேரிகளுள் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் வந்து சேர்ந்தார். அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் ஐந்து ரூபாயும் மனம் நிறைய அன்பும்தான். கடுமையான வறுமையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரேசா 1950ல் Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் Nirmal Hriday என்ற இல்லத்தைத் திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசிக் காலத்தில் கருணை இல்லமாகச் செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களிலிருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 000 ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியைத் தந்தது அன்னையின் இல்லம். சுமார் 19 000 பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர். ஆனால் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் தங்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடன் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலைக் கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும்; என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் கதறியழுது வாரி வழங்கினார்.

1953ல் ஓர் அனாதை இல்லத்தையும் 1957ல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரேசா.

பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.

தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். 1962ல் அவருக்குக் குடியுரிமை வழங்கிக் கெளரவித்தது இந்தியா.

அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரேசா போன்றவர்களை எண்ணித்தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற பாடலை ஔவையார் எழுதியிருக்க வேண்டும்.

நாம் அன்னை தெரேசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை; நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோரிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் அந்த வானம் வசப்படும்.