தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இது எங்க ஊரு - வேலூர் கோட்டை (Vellore Fort)


வேலூர்க்கு நிறைய பெருமையான விஷயங்கள் இருந்தாலும் அதில் ரொம்ப பெருமையான விஷயமா நான் கருதுவது இந்த கோட்டைய தான்.


சிறு குறிப்பு:
1560ல் - சின்ன பொம்ப நாயக்கால் கட்டபட்டது (விஜயநகர பேரரசு)
1650ல் - பிஜபூர் சுல்தான் கைபற்றினார்.
1676ல் - மராட்டியர்கள் கைபற்றினார்கள்.
1708ல் - தௌலத்கான் (டெல்லி) கைபற்றினார்.
1760ல் - பிரிட்டிஷ்கரர்களல் கைபற்றபட்டது.
1806ல் - முதல் சிப்பாய் கலக்கம் நிகழ்ந்தது.





கருப்பு மேல எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு அதனாலதான்
முதல் படம் கருப்பு வெள்ளை. ஆங்கிலேயர்கள் காலத்துல எடுத்த படம்.



இது இப்போ எடுத்த படம்.
கோட்டையோட ஒரு பகுதி படம்




இதுதான் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின்
நுழைவாயில் (சிறு பாலம்)



இன்றும் இந்தியாவுல இருக்குற கோட்டைகளில் அகழியில்
எப்போதும் தண்ணி இருக்குற கோட்டை இதுதாங்க.
அகழில முதலைகளும் இருக்குறதா சொல்றாங்க.
சமிபத்துல சுற்றுல துறை இங்கு படகு சவாரி செய்ய வசதி செஞ்சிருக்காங்க.




இந்த கோட்டை இரண்டு கட்ட பதுகாப்பு அரண் கொண்டது
இந்த சுவர் இரண்டாவது வரிசை.




போர் வீரர்கள் தங்குவதற்கான அறைகள் போகும் வழி



நேர்த்தியான கட்டட கலையின் சிறந்த சான்று.
அருமையான கண்கானிப்பு கோபுரங்கள்.



கண்கானிப்பு கோபுரத்தின் உட்புற தோற்றம்.
அதுக்கு கீழே ஓய்வு அறை.



இரண்டாம் நிலை அரண்னில் இருந்து கோட்டை அகழி தோற்றம்.



அகழியை எத்தனை கோனத்தில் இருந்து பார்த்தாலும் அழகுதான்.



1806ல ஆங்கிலேயரால் போட்ட வரைபடம் இதுதாங்க.
இந்த ஒரு விசயத்துலதான் நாம நிரைய இழந்திருக்கோம்.



கோட்டைக்குள்ள இருக்குற கோயில் (ஜலகண்டீஸ்வரர்)
விஜயநகர பேரரசின் சிறந்த உதாரணம்.



கோயிலோட மொத்த தோற்றம்.



கோயிலோட முன்புற தோற்றம்.



இதுதாங்க அழகிய சிற்ப மண்டபம்.



என்ன சொல்ல...............



இப்ப சொல்லுங்க எங்க ஊரு எப்படி இருக்கு.



ரெண்டுத்துல எதுங்க அழகு?



இன்னொரு கருப்பு வெள்ளை படம்.



அதேதூண் இல்லீங்க இது பக்கத்து தூண்.
இன்னும் இதுபோல நிறைய இருக்கு.



இதுதான் ரெண்டு விலங்கு ஒரே சிற்பத்தில்.

....மீண்டும் சந்திப்போம்....