தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

Showing posts with label திவாரி.. Show all posts
Showing posts with label திவாரி.. Show all posts

வாழ்க காங்கிரஸ்.

தேசத்தை வழிநடத்தும் காங்கிரசின் முன் மாதிரி- திவாரி.



தேசத்தின் விடுதலைக்கு காங்கிரசின் பங்கு முதற் கொண்டு, இன்று இந்திய காங்கிரசின் ஐஎஸ்வோ அக்மார்க் முத்திரை கொண்ட தானைத்தலைவி சோனியா. இந்தியாவுக்கு தன்னையே அற்பணிப்பு கொண்ட தியாக சீல அமைப்புதான் காங்கிரஸ்.

காந்தியின் தொப்பியின் அடையாளத்தோடு இன்னொரு தேச கடைமையை செய்துள்ளார் திவாரி. இவர் ஆந்திர மாநிலத்தின் கவர்னர். இவர்களின் வேலை மாநில அரசை கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது. சட்ட வடிவுகளுக்கு கையொப்பமிட கூடவே பாலியல் மசாஜ் செய்துவது இது கூடுதல் பணி ( Over Time ). அதுவும் ஒரு இளைஞனும் கூட நினைத்துப்பார்க்காத நீலப் பட ரேஞ்சில் 3 பெண்களுடன் பாரத தாய்க்கு பூசைகளை செய்துள்ளார்.

ஊடகங்களில் செய்திவந்தபோது வழக்கமாக சித்தரிக்கப்பட்டவையாக கவர்னர் திவாரி கூறினார். இப்போது உடல் நலம் கருதி பதவி விலகுவதாக கூறியுள்ளார்.

இவருக்கு வயது 86. இந்தவயதில் காங்கிரசின் வழித்தோன்றலின் ஆசையை பாருங்கள்?.

2009 ஆண்டில் உள்ள நவீன நுட்ப உதவியால் இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த வயதில் இவர் என்ன என்ன செய்து இருப்பார்.

முதலாளித்துவ அரசு கட்டமைப்பின் அசிங்கங்களே. திறைமறைவு செயல்கள் அம்பலமாகும் போது புதிய கதைகளை முளைக்கும்.

வாழ்க காங்கிரஸ்.

ஜெய் ஹோ.

ஏ.ஆர். ரகுமான் ஸ்டெயிலில் கத்துவோம்

ஜெய் ஹோ.

ஜெய் ஹோ.

ஜெய் ஹோ.

....பகலவன்....