தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

Showing posts with label அமராவதி அணை. Show all posts
Showing posts with label அமராவதி அணை. Show all posts

பாம்பாற்றில் தடுப்பணை: அமராவதி ஆற்றுக்கும் ஆபத்து! கேரள அரசின் அடுத்த அத்துமீறல்


தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராமல் இரு மாநில அரசுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் தலையில் இடிவிழுந்ததுபோல் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறது கேரள அரசு!

கேரளாவின் ஆணைமுடி சிகரத்தில் உற்பத்தியாகி, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக வரும் பாம்பாற்றை தடுத்து கோவில் கடவு என்ற இடத்தில் அணை கட்டப்படும் என அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அதற்காக 230 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது என்ற செய்திதான் திருப்பூர், கோவை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பையும், கோபத்தையும் உருவாக்கியதோடு, அம்மக்களின் உறக்கத்தையும் கெடுத்திருக்கிறது.

முதலில் உடுமலை அமராவதி அணையைப்பற்றி தெரிந்துகொள்வது நல்லது. காமராஜர் முதல்வராக வந்ததுமே கோவை, கரூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீர் ஆதாரங்களை தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படும்படி அணை கட்டித்தர வேண்டும் என காமராஜரிடம் கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை மட்டுமல்ல. பல கோடி ரூபாயையும் திரட்டிக் கொடுத்தார்கள். வியந்துபோன காமராஜர், ‘நீங்களாக முயற்சி எடுக்கும்போது, இந்த அரசு சும்மா இருக்காதுண்ணேன்’ என்று சொல்லி 90 அடி உயரமும், ஒரு கிலோமீட்டர் அகலமும் உள்ளபடி, நான்கு டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட அமராவதி அணையை 1958ம் ஆண்டு கட்டிக்கொடுத்தார்.

இந்த அமராவதி அணைக்கு நீர் ஆதார பகுதியாக, கொடைக்கானல் மலையிலிருந்து உற்பத்தியாகும் தேனாறு, வால்பாறை, டாப்சிலிப் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு மற்றும் கேரள மலைப்பகுதியில் உற்பத்தியாகி வரும் பாம்பாறு இவை அனைத்தும்தான் அமராவதி அணையை நிரப்பி வருகிறது. இந்த மூன்று ஆறுகளும் சிறு சிறு ஓடைகளையும், அருவிகளையும் இணைத்து வந்து அமராவதியில் கலக்கிறது.

இந்த அமராவதி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் கல்லாற்றில் தொடங்கி கரூர் வரையிலும் நேரடியாக 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், முப்பதுக்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்களும் பயன்பாட்டில் இருக்கிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்நாடியாக இருக்கும் அமராவதி அணைக்கு, 60 சதவிகிதத்திற்கு மேலான நீர் ஆதாரம் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் பாம்பாறுதான். இந்த பாம்பாற்றை கேரளா வனப்பகுதியிலேயே தடுத்து அணை கட்டிவிட்டால் அமராவதி அணைக்கு நீரவரத்து பெருமளவு குறைந்துவிடும். அதனால் பசுமையாக இருக்கும் அமராவதி ஆற்றின் பாசனப்பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக் கூடாது என்றுதான் விவசாயிகள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் வரிந்து கட்டிக்கொண்டு இடைவிடாத போராட்டங்களை நடத்திவருகிறது ம.தி.மு.க. பாம்பாறு பிரச்னை குறித்தும் களத்தில் இறங்கியிருக்கும் அக்கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பனிடம் பேசினோம். ‘‘அமராவதி அணையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதிக்குட்பட்ட ஆணைமுடி சிகரத்தில், பாம்பாறு தொடங்குகிறது. முழுவதும் கேரள வனப்பகுதியிலே பயணித்து வரும் பாம்பாற்றை தடுத்து கோவில்கடவு என்ற இடத்தில் அணை கட்ட ஜனவரி மாதம் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அமராவதி அணையின் தற்போதைய நிலைமையே மிகவும் மோசமானது. நான்கு டி.எம்.சி. கொள்ளளவு உள்ள அணைக்கு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்தால் மட்டுமே மூன்றுமுறை அணை நிரம்பி முப்போகம் விளையும். முப்போகம் என்பது உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான். அடுத்து திருப்பூர், கரூர் மாவட்டங்களில் எல்லாம் இருபோகம், அல்லது ஒரு போகம்தான்.

அமராவதி ஆற்றை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய நிலங்கள் மட்டுமல்ல, உடுமலையை ஒட்டியே 13 காகித தொழிற்சாலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட இதர தொழிற்சாலைகள் உள்ளன. கேரள அரசாங்கம் தன்னிச்சையாக நீதிமன்றத்தின் ஆணையைக்கூட மதிக்காமல் பாம்பாறு பயணித்து வரும் காந்தலூர் பகுதியிலும், கோவில் கடவிற்கு அருகிலும் இரு செக் டேம்களை கட்டி தண்ணீரைத் தேக்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதைக்கூட நாம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மலைப்பகுதியிலே 230 கோடி ரூபாய் செலவில் அணையைக் கட்டி நமக்கு வரும் நீரை தேக்கி மின் உற்பத்தி செய்யப்போகிறார்களாம். இதெல்லாம் நம்முடைய அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது. ஆனால், கேரள அரசாங்கம் நம்மை சட்டை செய்யாமல் மத்திய அரசின் அனுமதியைப் பெற முயற்சிக்கிறார்கள். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் முல்லைப் பெரியாறு அணையைத் தாரைவார்த்து கொடுத்ததைப் போல, பாம்பாற்றையும் கொடுத்துவிட்டு, செழிப்பான கொங்கு மண்டல மக்கள் குடிநீருக்குக் கூட கையேந்தி நிற்க வேண்டிய நிலை வந்துவிடும்’’ என்றார் ஆதங்கமாய்.

தென்னை வாரியத்தின் துணைத்தலைவரும், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவருமான செல்லமுத்துவிடம் பேசினோம். ‘‘கோவில் கடவு பகுதியில் கட்டப்படும் அணையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரை மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு மலைகளைக் குடைந்து டனல் அமைத்தும், 80 மீட்டர் அகலத்திற்கு பைப்களை அமைத்து தினமும் 40 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் போவதாக, கேரள அரசு தெரிவித்துள்ளது.

மின்சாரம் தயாரித்துவிட்டு தன்ணீரை மீண்டும் கீழேதானே விடுவார்கள். அதனால் நமக்கு நீர்வரத்து பாதிக்காது என்று நினைக்கக் கூடாது. அந்தத் தண்ணீரை அப்படியே திருப்பி பன்னாட்டு குளிர்பான நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதனால் நமக்கு பாம்பாறு மூலம் கிடைக்கின்ற தண்ணீர், முழுமையாகத் தடைபட்டுப்போகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கேரள அரசாங்கம் இந்த அணையைக் கட்டுவதே முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்கவும், தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்து பணம் ஈட்டவும்தான். நம்மைப்போல அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கி பாசனம் செய்ய அவர்களுக்கு வறட்சியான பூமி கிடையாது.

பாம்பாற்றைத் தடுத்து அணையைக் கட்டிவிட்டால் திருப்பூர், கரூர் மாவட்டங்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதுபோல், அமராவதியின் கிழக்கு கரையோர திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளும் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் விளையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் மஞ்சள் விவசாயம் முழுவதும் பட்டுப்போகும். பாம்பாற்றின் நடுவே அணை கட்டுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசும் அனுமதி தரக் கூடாது என விவசாயிகள் சங்கம், பாசன சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சேர்ந்து, வரும் பிப்ரவரி 6ம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்தப்போகிறோம்’’ என்றார் செல்லமுத்து.

முல்லைப் பெரியாறு கேரளத்திற்கும், காவிரியை கர்நாடகத்திற்கும், பாலாற்றை ஆந்திரத்திற்கும் தாரைவார்த்து கொடுத்ததைப்போல், பாம்பாற்றை பறிகொடுத்துவிடாமல் தடுக்கவேண்டும் என்பதே அமராவதி அணையை நம்பியிருக்கும் லட்சோப லட்சம் தமிழர்களின் வாழ்வாதார எதிர்பார்ப்பு!

தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

தமிழா மலையாளி உனக்கு வைக்கும் அடுத்த ஆப்பு அமராவதி - பிச்சை எடுக்க தயாராகி விடு ....

தமிழா மலையாளி உனக்கு அடுத்த ஆப்பு வைக்க துவங்கி விட்டான் .நீ வருத்தப்படாதே தமிழா நீ மானாட மயிலாடபார்த்து கொண்டே இரு. கடைசியில் உனக்கு --- கழுவ கூட தண்ணி இல்லாம நாற போற.

வட தமிழகத்தின் பாலாறு ஆந்திராவின் சுழச்சியால் ஆறே இல்லாமல் போய் விட்டது.முல்லை பெரியாறு மலையாளியின் சூழ்ச்சியில் வறண்டு போக காத்துக்கொண்டு உள்ளது.காவிரி கர்நாடகாவிடம் தமிழனின் பிச்சை பாத்திரமாக மாறி போய் விட்டது.விருதுநகர் மாவட்டத்தின் ஆணைமலை கேரளாவின் அரசியலால் அது வறண்ட பூமியாகவும் மாறி அந்த மண்ணின் மக்களே அதை மறந்து போய் வாழ்கின்றனர்.இதோ அடுத்து மலையாளி ஆரம்பித்து விட்டான்.இந்த முறை அவன் கை வைத்து இருப்பது கொங்குச் சீமையின் அமராவதி .

தமிழ்நாட்டின் நதிநீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.

கேரளா நமக்கு எதிராக காரியம் செய்துகொண்டிருக்கிறது.நம்மை பகைப்பது பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை.ஆனால் இங்கே நம் முதல்வர் அவர்களை பகைக்க தயாராக இல்லை.வெறும் கடிதம் மட்டும் ஒப்புக்கு எழுதி தன் கடமையை முடித்துக்கொள்வார்.ஏனென்றால் இது அவர் வீட்டு பிரச்சினை அல்ல.துரோகம் எங்கிருக்கிறது புரிகிறதா?

யார் இந்த அமராவதி ?


http://thatstamil.oneindia.in/img/2010/01/12-amaravathi-dam200.jpg

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. 1956-ஆம் ஆண்டு இந்த அணை நீர்ப்பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.


அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழக -கேரள எல்லையான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ.230 கோடி செலவில் புதிய அணைகட்ட கேரள அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்து உள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டர் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக்கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.


ஜனவரி 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல்துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மின்சாரம் தயாரிக்கத்தான் அணைகட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.


ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப்பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி ஆகும். இதனால் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாலைவனமாகி விடும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து உள்ள, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்.


தொடக்கத்திலேயே இதைத்தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது. முல்லைப்பெரியாறு பிரச்சினையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சினையிலும் செய்து விடக்கூடாது .

மத்திய அம்மைச்சருக்கும்,பிரதம மந்திரிக்கும் கடிதம் எழுதி உள்ளேன் இதை பற்றி என்று வெகு விரைவில் நம் முதலவர் அறிக்கை விடுவார்.அதையும் இந்த சொரணை இல்லாத மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் ..

....pagalavan....



இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா?

செய்தி ஒன்று :

இலங்கைத தமிழர்கள் துயரத்தில் உள்ள இந்நேரத்தில் தமிழக மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமெண்ட் தலையங்கம் :

இடையில் தமிழர்கள் தீபாவளியை அமர்களமாய் கொண்டாடிவிட்டார்கள் , திருமா அப்போது அதை மறந்து விட்டாரா அல்லது ஈழ விடயம் தலைப்பு செய்திகளில் வரவில்லையா ?
....................................................................................................................................................................

செய்தி இரண்டு :

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கமெண்ட் தலையங்கம் :

ஜனநாயகத்தின் மாண்பு எல்லா மட்டத்திலும் பின்பற்றப்படவேண்டும், இதற்க்கு நீதிபதிகளும் விலக்கல்ல. அவர்கள் துறையை பற்றியது எனினும் இந்த தீர்ப்பு வரவேர்க்கபடவேண்டியதுதான்.
....................................................................................................................................................................

செய்தி மூன்று :

ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்தியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும், அவர் பாதுகாப்பு கருதி தனது பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று மாலை சிட்னி அருகேயுள்ள கூகி கடற்கரைக்குச் சென்றபோது அவரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இத்தகவலை அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தான் 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் இதுவரை இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் போலீஸôர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கமெண்ட் தலையங்கம் :

இந்தியர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் தாக்கபடுவது தவறுதான், ஆனால் இந்த செய்தி பெரும் முக்கியத்துவம் ராமேஸ்வரம் மீனவ தமிழன் இலங்கையினால் சுட்டு கொல்லப்படும்பொழுது , பெறப்படுவதில்லையே என்பது தமிழன் என்ற முறையில் ஒவ்வொருவரும் அவர்களின் இந்திய மீதான உரிமையினை எடை போட்டு பார்க்க வேண்டும்.
....................................................................................................................................................................

செய்தி நான்கு:

கேரளாவின் புதிய ஆணை பற்றி (முல்லைபெரியார் இல்லை ) வைகோ அறிக்கை.தமிழ்நாட்டின் நதிநீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. 1956-ஆம் ஆண்டு இந்த அணை நீர்ப்பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.


அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழக -கேரள எல்லையான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ.230 கோடி செலவில் புதிய அணைகட்ட கேரள அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்து உள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டர் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக்கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.


ஜனவரி 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல்துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மின்சாரம் தயாரிக்கத்தான் அணைகட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.


ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப்பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி ஆகும். இதனால் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாலைவனமாகி விடும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து உள்ள, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்.


தொடக்கத்திலேயே இதைத்தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது. முல்லைப்பெரியாறு பிரச்சினையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சினையிலும் செய்து விடக்கூடாது என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமெண்ட் தலையங்கம் :

இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா?