தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலகின் கவனத்தை ஈர்த்த பிரித்தானியாவே! உன்னை போற்றுகின்றோம்!! வணங்குகின்றோம்!!!


உலகின் கண்களும் காதுகளும் கடந்த சில நாட்களாக பிரித்தானியா என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டை நோக்கியே இருந்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் அங்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள்.

அதற்கு அடுத்த காரணிகளாக அமைந்தவை பிரிட்டன் அரசாங்கமும் அங்கிருந்து ஒளிபரப்பாகும் சனல்-4 தொலைக்காட்சிச் சேவையுமே ஆகும்.

ஈழத்தமிழர்கள் மீதான கொடிதான நாகரீகமற்ற யுத்தத்தை ஏவிவிட்டு லட்சக்கணக்கான பொது மக்களையும் போராளிகளையும் கொன்றழித்ததுடன், உலகெங்கும் இருந்து பெற்ற கபடத்தனமான உதவிகள் மூலம் சதி செய்து விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் விடுதலை இயக்கத்தை அழித்துவிட்ட மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த அந்த விடயமே உலகை அந்த நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது என்று கூறலாம்.

இலங்கைக்கு எதிராக மட்டுமல்ல அந்த நாட்டின் ஜனாபதியாக முடிசூட்டிக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவிற்கும் எதிராக உலகெங்கும் உள்ள மனிதநேயமிக்க அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பான மனுக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் குழுவால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மகிந்த பிரித்தானியாவிற்கு விஜயத்தை ஆரம்பித்தார்.

ஏற்கெனவே திட்டமிட்டது போல பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அங்கு இயங்கிவரும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வழிநடத்தப்பட்டு மகிந்தாவின் வருகை தொடர்பான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்து படுகொலை புரிந்த அந்த பாதகனை பிரித்தானியாவில் வைத்து கைது செய்யும்படி அந்த நாட்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் மகிந்த அந்த நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்யவுள்ளதைப்பற்றியும் அவர்கள் முன்னறிவித்தல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பிரித்தானியாவிற்கு பயணம் செய்தார் மகிந்த. யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் விமான நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மகிந்தவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் மிகவும் நிதானமாக தங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்காக நமது பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் மக்களை உலகத் தமிழர்கள் பாராட்டுகின்றார்கள். பாராட்டுகள் அந்த மக்களுக்கு மட்டுமல்ல.

இன்னும் இருக்கின்றார்கள் இருவர் பாராட்டுக்கள் பெறுவதற்கு. முதலாமவர் பிரித்தானிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை பாராட்டுவதற்கு காரணம். நியாமான போராட்டத்தை விமான நிலையத்தில் விருந்தினர் பகுதியில் நடத்துவதற்கு அனுமதியளித்த அந்த அரசாங்கத்தையும் அதனோடு இணைந்த பொலிஸ் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

அடுத்தவர் யாரென்றால், சனல் -4 என்ற ஆங்கில மொழி மூலமான துணிகரமான தொலைகாட்சிச் சேவை.. இந்தச் சேவையில் தான் கடந்த சில நாட்களாக இலங்கை அரசாங்கம் தனது காடைச்; சிப்பாய்கள் மூலம் கட்டவிழ்த்து விட்ட கொலைவெறி ஆட்டத்தையும் அதனோடு ஒத்த போர்க் குற்றங்களையும் மிகவும் தெளிவான முறையில் ஒளிபரப்பி வருகின்றமை நமது மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. மேற்படி சனல்-4 தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பி வரும் கொடூரமான காட்சிகள் மூலம் உலகம் இலங்கை அரசின் கொடிதான போர்க்குற்றங்களை நேரடியாகக் காண்பது போன்ற ஒரு சாட்சியத்தைப் பெற்றுக் கொண்டது என்றே கூறவேண்டும்.

இவ்வாறு உலகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் நியாயவிரும்பிகளை பிரித்தானிய இந்த வாரம் நன்கு கவர்ந்துள்ளது. அங்கு மகிந்தவிற்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் மிகவும் பலனளித்துள்ளன என்பதையே உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தனக்கு எதிரான பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை அறிந்த மகிந்த இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார். அதனை அறிந்த பிரித்தானியாவின் தமிழ் இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர் என்பதும் அங்கிருந்து கிடைத்த செய்தியாக அமைகின்றது.

பிரித்தானியாவில் மகிந்த மூக்குடைந்து போனது தொடர்பான தாக்கம் இலங்கையில் நன்கு பாதித்துள்ளது என்றே கூறவேண்டும். ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இலங்கையில் மிகுந்த கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டு மகிந்த தனது உரை ரத்து செய்யப்பட்டது குறித்து தான் மிகுந்த கவலை அடைவதாகவும் ஆனாலும் வேறு ஒரு மேடையில் விரைவில் தனது எண்ணங்களை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை அவருக்கு ஏற்பட்ட தோல்வியாகவே நாம் கருதலாம்.

அடுத்தது பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்கும் முகமாக பிரித்தானியாவில் முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து தனது நாட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் மகிந்த. இன்றைய நாள் தினசரிகளில் அந்த படங்கள் பிரசுரமாகியுள்ளன. பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு அமைச்சரோடு மகிந்த நின்று எடுத்த புகைப்படமே பெரிதாக அங்கு பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் மகிந்த மீதான பரிதாபமான பார்வையே ஏற்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் தனது சொந்த அண்ணராம் மனோ கணேசனை தவிக்க விட்டுவிட்டு மகிந்தவின் அரசாங்கத்தோடு சேர்ந்து அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் இணைந்து கொண்ட பிரபா கணேசன் இன்றைய பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஜனாபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்கள் என்று "குறை" சொல்லியிருக்கின்றார். கேவலம் ஒரு பிரதி அமைச்சர் பதவியை எதிர்பாத்து கொடிதான போர்க்குற்றங்கள் செய்த மகிந்தவின் கால்களைப் பிடித்தபடி உள்ள பிரபா கணேசன் புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களுக்கான காரணங்களை நன்கு அறிந்து கொண்டும் இவ்வாறு அறிக்கை விடுவது என்பது பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற விடயங்கள் எந்தளவிற்கு இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதையே நன்கு தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு பார்க்கும்போது பிரித்தானியா என்ற அந்த உன்னத நாட்டையும் அதனோடு இணைந்த அனைவரையும் ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமி;ழ் மக்களாகிய நாம் வாழ்த்த வேண்டும் வணங்கவேண்டும்.

தப்பி ஓட வழி தெரியாத ராஜபக்ச தப்பிக்க வைக்க விழி பிதுங்கிய காவல்த்துறை!

ஓக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள் மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு இடியென இறங்கியது தமிழ் மக்களின் போராட்டம் அவர் தங்கியிருந்த விடுதி அருகே நடைபெற இருக்கிறதெனும் செய்தி அதை அடுத்து இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.

அதனை அறிந்த இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்த்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர்.

அனைத்துப்பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்த்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.

அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கம் நாம் எவ்விதத்திலும் தடங்கள் ஏற்படுத்த மாட்டோம் எமது நோக்கம் மகிந்தவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாம் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்த்துறையின் பாதுகாப்போடு தூதுவராலயத்தில் இருந்து வெளியேறினார்கள்.

அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தொருவொன்றில் இருந்து மகிந்தவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

அதற்கிடையில் இன்று காலையில் பிரித்தனியாவில் உள்ள சிங்களவர்கள் என்ன செய்கின்றார்கள் என மகிந்த கடிந்துகொண்டமைக்கு அமைய தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக 15 முதல் 25 வரையான சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள் தமிழர்கள் வரத்தொடங்க இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனார்கள் சிங்களவர்கள்.

எதையாவது எப்படியாவது சாதிப்பேன் என பிரித்தானியா வந்திறங்கிய மகிந்தவுக்கு அவமானம் மேல் அவமானமே மிச்சமானது இனி மகிந்தவுக்கு பிரித்தானியா சீ சீ இந்தப் பழம் புளிக்குமே!.















ஊடகவியலாளர் இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி: இலங்கை அரசின் வெளிவராத கோரமுகம்





ஊடகவியலாளராகவும், நடனக் கலைஞராகவும் செயற்பட்ட இசைப்பிரியா இராணுவத்திடம் சிக்கி, கேணல் ரவிப்பிரியவின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவிபுரிந்தது கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.

அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் எமது தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதில் வருபவரே இசைப்பிரியா



இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே
“ இறுதிக்கட்டப் போரின் போது சிறீலங்கா இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட சிறீலங்கா படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்”
என்ற விடயம் அடங்கிய செய்தி உடனடியாக ஊடகங்களுக்கு பரப்பப்பட்டது.

இச்செய்தி நிராயுதபாணியாக நின்ற ஊடகவியலாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்க அவரை ஒரு ஆயுததாரியாக்க எதிரியால் திட்டமிடப்பட்ட பரப்புரை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக அவதானித்தால் அவர் ஒரு நிராயுதபாணி என்பதை உறுதிப்படுத்த முடியும்.

அதனாலேயே இந்தச்செய்தியில் திருத்தத்தைக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனைய ஊடகங்களையும் எதிரியின் திட்டமிட்ட சதித்திட்டத்தை கவனத்தில் கொண்டு வெளிவிடப்படும் ஒவ்வொரு செய்திகளையும் முழுமையான செய்திப்பகுப்பாய்வு செய்து கொள்ளுமாறு ஏனைய இணையத்தளங்களுக்கும் அறியத்தருகின்றோம்.

அவசியம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்

money வயிற்றை கட்டி, வாயை கட்டி ஒரு தம்மாத்தூண்டு வீட்டை வாங்கி விட வேண்டும் என்று வாழ்நாள் கனவை நிறைவேற்ற துடியாய் துடித்து, வங்கிப் படியேறினால், மாத சம்பளம் வாங்கும் அந்த மகாஜனத்தின் நம்பிக்கை எல்லாம் ஒரே நொடியில் பொய்த்துப் போய், அந்த சிறிய குடும்பத்தின் தலைவனின் குட்டிக் கோட்டை நொறுங்கியும் விடுகிறது.


காரணம், சொந்த வீடு வாங்கும் அளவுக்கு அவனுக்கு எந்த கதியும் இல்லை என்பதை, ஒரு வங்கி அதிகாரி நிர்ணயித்து விடுகிறார். அவர்கள் வைத்தது தான் சட்டம். வீடு வாங்குவதாகட்டும், கல்விக்கடன் தருவதாகட்டும், ஏன், அவசர தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் பர்சனல் லோனாகட்டும், நடுத்தர வர்க்கத்துக்கு வங்கி அதிகாரிகளிடம் இருந்து வரும் பதில் என்ன தெரியுமா? 'உங்களுக்கு நிரந்தர வேலை இல்லையே... வங்கியில் போடப்படும் சம்பளம் போதுமானதாக இல்லையே... என்பது தான்.


வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி, அதில் மாதாமாதம் சம்பளப்பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் சேமித்து, பத்தாம் தேதிக்குள், வாடகை, கரன்ட் பில், மளிகை பில், பேப்பர் பில், கடன் இருந்தால் அதன் தவணைத் தொகை என்றெல்லாம் கணக்கிட்டு, போதாக்குறைக்கு பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு என பிக்சட் டெபாசிட்டிலும் சொற்ப பணத்தை முதலீடு செய்து விட்டு, பத்தாம் தேததிக்கு பின் 'அப்பாடா... என்று திருப்தி அடைவது தான் மாத சம்பளம் வாங்கும், நடுத் தர வர்க்கத்தினரின் வாழ்க்கை.


ஆனால், இவர்களுக்கு கடனுதவி திட்டங்களை அரசு போட்டாலும், அதிகாரிகள் அதில் மண்ணைப் போட்டு விடுவது தான் இதுவரை நடந்து வருகிறது. அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த வங்கி அதிகாரிகள் இன்னொரு பக்கம், 'வலுத்தவர்களுக்கு வாரியிறைக்கும் பணியையும் செய்கின்றனர். சாலையில் லாரியை கைகாட்டி, ஐந்து ரூபாய் வாங்கும் டிராபிக் போலீசை தான் உங்களுக்கு தெரியும். கோட் சூட் போட்டுக்கொண்டு ஏசி அறைக்குள் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவது பற்றி இதுவரை யாரும் வெளிக்கொண்டு வரவும் இல்லை; வெளியே தெரியவும் இல்லை.


அரசு வீட்டுக்கடன் அமைப்பின் உயர் அதிகாரி சிக்கியது தான் பலருக்கும் பெரும் அதிர்ச்சி. அதோடு, அரிச்சந்திர வங்கி அதிகாரிகளின் தோலும் உரிக்கப்பட்டு விட்டது சி.பி.ஐ.யால். இவர்கள் செய்தது தான் என்ன என்று இன்னமும் கூட இந்த மகாஜனங்களுக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு  கேடித்தனத்தையும் கோட்டு சூட்டால் மூடி செய்துள்ளனர் இந்த 'ஹானஸ்ட் பிரபுக்கள்.


குறிப்பிட்ட நிதி ஆலோசனை நிறுவனத்தின் மூலம், நிதி நிறுவனங்களுக்கும், பில்டர்களுக்கும் மறைமுகமாக பல கோடிகளை கடனாக அள்ளித் தந்துள்ளனர். இதற்கு இவர்கள் பெற்றுக் கொண்டது, இந்த நிறுவனங்கள் போட்ட  பல லட்சம் லஞ்சப்பிச்சையும், கேளிக்கை சமாச்சாரங்களும்.


1. அர்ஷத் மேத்தா & 4,000 கோடி ரூபாய்
2. கேத்தன் பரேக் & 2,000 கோடி ரூபாய்
3. ஐபிஎல் மோசடி & 1,200 கோடி ரூபாய்
4. ஹவாலா மோசடி& 500 கோடி ரூபாய்
5. லாலு கால்நடை தீவன ஊழல் & 900 கோடி ரூபாய்
6. சத்யம் ஊழல் & 14,000 கோடி ரூபாய்
7. டெல்ஜி முத்திரைத்தாள் மோசடி & 20,000 கோடி ரூபாய்
8. காமன்வெல்த் போட்டி ஊழல் & 70,000 கோடி ரூபாய்


இந்த ஊழல்கள் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதில், இப்போது வீட்டுவசதி லஞ்ச ஊழலும் சேர்ந்து விட்டது.


மணி மேட்டர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற நிதி ஆலோசனை நிறுவனம் மும்பையில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் பிற அரசுடமை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுத்து பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொடுக்கும் Ôஇடைத்தரகர் சேவைÕ செய்து வந்தது. கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப இதற்கு கமிஷன் தொகையை வாரி வழங்கும். கடன் பெற தகுதி இல்லாத பெரிய நிறுவனங்கள்கூட வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது என்றால் வங்கி அதிகாரிகளை அந்த அளவுக்கு கவனித்துள்ளது.


வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் பெரும் தொகையை கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுத் தரும். கடன் வாங்கிக் கொடுத்ததற்கு பெரும் தொகையை கமிஷன் பெற்றுக் கொள்ளும். இந்த முறையில்தான் லஞ்சம், ஊழல் நடந்துள்ளது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் இடைத்தரகர் செயல்பாட்டின் மூலம் ணீ1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்து இருக்கலாம் என்று சிபிஐ கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: எல்.ஐ.சி. செயலாளர் (முதலீடு) நரேஷ் கே.சோப்ரா, எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர், பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஆர்.என். தயாள், மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் சர்மா, இதே நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சுரேஷ் கட்டானி, சஞ்சய் சர்மா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை பொது மேலாளர் வெங்கோப குஜ்ஜால் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கட்டுமான நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கடன் தர பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க், எல்.ஐ.சி. மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உட்பட பல அரசு வங்களின் உயர் அதிகாரிகள் இடைத்தரகராக செயல்பட்ட மணி மேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து லட்சக் கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஜலந்தர், டெல்லி மற்றும் மும்பையில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக 5 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.


ஹவுசிங் கடன் முறைகேடு தொடர்பாக வங்கி, எல்.ஐ.சி. உயர் அதிகாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடன் முறைகேடு விவகாரம் நிதி மோசடி அல்ல. இது லஞ்சம், ஊழல் தொடர்பானது என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. பூர்வாங்க விசாரணையில் இது லஞ்சம், ஊழல் சம்பந்தப்பட்டதுதான் என்று சிபிஐயின் சிறப்பு இயக்குனர் பல்விந்தர் சிங் தெரிவித்தார்.


எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட செய்தி, கடந்த 24ம் தேதி பங்கு சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்கு சந்தையில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் பங்கு மதிப்பு 18.32 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு மதிப்பு 8.02 சதவீதம், மணி மேட்டர்ஸ் பங்கு மதிப்பு 19.99 சதவீதம் குறைந்தது. மணி மேட்டர்ஸ் பங்குகளை பெரிய அளவில் முதலீட்டாளர்கள் விற்றனர்.


சிபிஐ பிடியில் சிக்கிய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர் குர்கான், புறநகர் பகுதியில் பிளாட் ஒன்று வாங்கியுள்ளார். பிளாட் விலையில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும், தேவையான பணத்தையும் மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சர்மாவிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ணீ45 லட்சம் லஞ்சமாக நாயர் பெற்றுள்ளார்.


இதற்காக, டி.பி. ரியாலிட்டி, பாஷ்மினா லிமிடெட், மந்திரி ரியாலிட்டி, சிங்ருன் லிமிடெட், என்டர்டெய்ன்மென்ட் வேர்ல்டு, இந்தூர் சிட்டி டெசரர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன் பெற உதவியுள்ளார். சிபிஐயின் இந்த குற்றச்சாட்டை நாயரின் வக்கீல் மறுத்துள்ளார். நாயர் நிறுவனத்தின் தலைவர் தான், கடன் தொகையை அவர் நேரடியாக அனுமதிப்பது இல்லை. ஒரு கமிட்டிதான் கடன் தொகையை அனுமதிக்கிறது என்று கூறியுள்ளார்.


மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் பொதுமேலாளர் பி.என்.தயாள் ணீ25 லட்சத்தை ராஜேஷிடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதற்காக அஷாபுரா மினிசெம் நிறுவனம் பெரும் தொகையை கடன் பெற உதவியுள்ளார். பிஜிஆரின் 200 கோடி மின் திட்டத்துக்கும் ஓபிஜி குழுமத்தின் ணீ300 கோடி திட்டத்துக்கும் உதவி செய்வதாக ராஜேஷிடம் தயாள் வாக்குறுதி அளித்திருந்தார் என்றும் சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.


இதேபோல், எல்.ஐ.சி.யின் செயலாளர் (முதலீடு) கே.சோப்ரா ணீ16 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார். அடானி, ஜே.பி. ஹைட்ரோ, ஜே.எஸ்.டபிள்யு. பவர், ராலிங்கர், பான்டலூன், அடலைட், எம்டெக் ஆகிய நிறுவனங்களுடன் எல்.ஐ.சி.யின் தொடர்பு, செயல்பாடுகள் குறித்த தகவல்களை மணி மேட்டர்ஸ் நிறுவனத்துக்கு சோப்ரா தந்துள்ளார்.


லாவாசா நிறுவனம் கடன் பெற சாதகமாக செயல்பட மும்பை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் இயக்குனர் மணிந்தர்சிங் ஜோகர் (சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்) 30 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதேபோல், புதுடெல்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் பாங்க்கின் துணை பொது மேலாளர் வெங்கோபா குஜ்ஜால் 20 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ராஜேஷின் வாடிக்கையாளர் ஒருவருக்கு ணீ50 கோடி கடன் பெற உதவி செய்துள்ளார். இவ்வாறு மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐயின் வக்கீல் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

தலையங்கம் :கனி மொழி , ரத்தன் டாட்டா , ராசாத்தி அம்மாள் , ராசா கூட்டணி - ரத்தன் டாட்டா என்றொரு பித்தலாட்டக்காரன் ?


கீழே வந்துள்ள இன்றைய செய்தியை பாருங்கள் . இவர்தான் சென்னையில் இயங்கும் வோல்டாஸ் அலுவலக கட்டிடத்தை , ராசாத்தி அம்மையாருக்கு  வாங்கி கொடுத்து அதற்க்கு பதில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக கூடாது என்று காய் நகர்த்தி வெற்றி கண்டவர் . (2009)






ராசாத்தி அம்மையாருக்கு இவர் கொடுத்த , கையூட்டு ,உறுதி மதிப்பு ஊழலில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பெரும் . (கட்டிடம் மற்றும் கட்டபோகும் கட்டிட இடங்கள் உட்பட).






இந்த லஞ்ச பணத்தை கொடுத்துதான் நீர ராடியாவின் பித்தலாட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தவர் ரத்தன் டாட்டா.






இதற்க்கு , ராசாத்தி அம்மையாருக்கு மட்டும் 600  கோடி ரூபாய் கொடுத்துள்ளார் , நீரா ராடியாவிர்க்கு அறுவது கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். ராசாவிற்க்கு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.   ஆனால் அதற்கும் கட்டாயம் ஒரு  தொலை பேசி பதிவு வெளியில் வரும் , அல்லது இப்போது மத்திய அரசு வைத்து கொண்டு அதை மறைக்கலாம்.




இது தகவல் தொழில் நுட்பம் என்ற ஒரு மத்திய அரசின் துறைக்கு டாட்டா கொடுத்த லஞ்சம் . இது எல்லாம் போக , டாட்டா எங்கெங்கெல்லாம் தொழில் செய்கிறாரோ அந்த அனைத்து துறைகளையும் மத்திய அரசு சரியாக விசாரிக்குமானால், டாட்டா வினால் மட்டும் இந்தியாவிற்கு  எந்த அளவிற்கு  நட்டம் என்பதை நாம்  கணக்கிடலாம்.






இப்படி TATA விற்கு  சாதகமாய் ஒரு அமைச்சர் என்றால் , ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாய் எத்தனை அமைச்சர்கள் எத்தனை வேலைகளை இப்படி முடித்து கொடுதுள்ளார்களோ ?





இப்படி எத்தனை துறை அமைச்சர்கள் , அவரவர்களிற்கு ஏற்ற  அல்ல்லது அவர்களிற்கு சாதகமாய் லஞ்சம் கொடுக்கும் தொழில் அதிபர்களிற்கு இந்தியாவை அடகு வைத்துள்ளார்களோ ?





இதில் ஒரு கேள்வி வரும் , தயாநிதி மாறன் அமைச்சராக வந்திருந்தால் டாட்டாவின் பித்தலாட்டம் எடுபடாதே ? என்று .






தயாநிதி மாறன் வந்திருந்தால்,  மாறன் குடும்பமே நேரடியாக இந்த தொழிலை செய்திருக்கும். குடும்ப தொழிலாக  2g  மாறி இருக்கும்.





இங்கு தலைப்பிற்கு வருவோம் , இதே டாட்டா  ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது,  பத்து வருடங்களிற்கு முன்னர் , விமான துறை சேவையை துவங்க முற்சித்தாராம் ஆனால் அப்போது விமான துறை அமைச்சராக இருந்த ஒருவர் 12  கோடி ரூபாய் கேட்டதால் , லஞ்சம் கொடுத்து தமது  நிறுவனம் அப்படி தொழிலை துவக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் விமான துறையில் டாட்டா இறங்குவதையே தவிர்த்ததாகவும் சொன்னார்.







அப்பப்ப எப்படிப்பட்ட பெரிய புளுகு வார்த்தைகள் அது..  12  கோடி கொடுக்க மறுத்த டாட்டா ஏன் ராசாத்தி அம்மாளுக்கு 600  கோடி ரூபாயை கொடுத்துள்ளார் ?





எப்படி இவரின் 12  கோடி லஞ்ச வார்த்தைகளை நம்புவது ?   அது  பொய்யாக இருக்கும் என்று சொல்ல வில்லை . அதுவும் உண்மையாகத்தான் இருக்கும் ஆனால்  அதை சொன்ன டாடா உத்தமன் இல்லை என்பதை ஒரு மாததிக்குள் இன்னொரு நிகழ்வு வந்து நிரூபித்துள்ளது.






இந்தியா தொழில் அதிபர்களின் பிடியில்தாம் உள்ளது என்பதை இந்த ஊழல் நிகழ்வுகள் தெளிவாக காட்டுகின்றன. அதனால்தாம் அரசியலில் இறங்கும் ஒருவனும் தொழில் அதிபராக ஆசைபடுகிறானோ?







படிக்க வேண்டிய செய்தி இங்கே , படியுங்கள் வாசகர்களே :




New Delhi, Nov 29


Mr Ratan Tata, Chairman of Tata Group, on Monday moved the Supreme Court claiming that his right to privacy was violated due to the leakage of his alleged discussions with corporate lobbyist Ms Niira Radia and others. Mr Tata demanded a probe into the leakage of the tapes allegedly containing his conversations, adding it should be ensured that there is no further leakage of tapes, if any, with the Government.






Ms Radia's public relations firm has been handling corporate communications for the Tata Group. The conversations, already reported by a section of the media, allegedly also relate to the 2G spectrum allocation imbroglio. Mr Tata is being represented by the law firm Karanjawala & Co and senior advocate Mr Harish Salve. The petition referred to the Fundamental Rights guaranteed by the Constitution, including an individual's right to privacy, and said this right of Mr Tata had been violated.





POINTS OF PETITION



Mr Tata did not object to telephone tapping if it was solely for investigation into irregularities, but said no private conversation in these tapes should be made public.


Though the petition said Mr Tata does not intend to `quarrel' with the Government, it added that using the alleged conversations other than for investigations was wrong.


The petition, which sought to make the Union of India a respondent in the matter, said it was the Government's responsibility to ensure that the citizens' right to privacy was not violated. The petition referred to the guidelines laid down by the apex court in the Peoples' Union for Civil Liberties (PUCL) case where it was observed that telephone tapping amounts to a serious invasion of an individual's privacy and is susceptible to abuse.


The petition also cited the PUCL case to say that such evidence should be destroyed after six months of completion of investigations. Sources in Karanjawala & Co confirmed that the petition was filed in the apex court, but declined to share a copy or its contents saying the court may object to the petition being out in the public domain even before it has applied its mind to it. However, the sources confirmed that the contents on the same lines. The matter is likely to come up for hearing on Tuesday.



CPIL RETALIATES



Meanwhile, Supreme Court advocate Mr Prashant Bhushan told Business Line that his client the NGO Centre for Public Interest Litigation (CPIL) would file a petition to intervene in the matter stating that there is no breach of privacy in the case as the public interest far outweighs the privacy angle. He said even according to the Right to Information Act, such information cannot be withheld if the public interest is greater than someone's right to privacy. He said even if a person has deliberately leaked out such information, he/she should be considered a whistleblower.